Saturday 30 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சேலம் மாநகரம் ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த S.அஜ்ஜி தர்ஷினி(15) மற்றும் S.தேஜி தர்ஷினி(16) ஆகியோர்கள் 29.05.2020-ஆம் தேதி தங்களது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ATM சென்றுள்ளனர், அங்கு ஏற்கனவே யாரோ ATM-ஐ பயன்படுத்தி விட்டு ரூ.10,000/- பணத்தை எடுக்காமல் சென்றுவிட்டனர்.அது தங்களுடைய பணம் அல்ல என அறிந்த சிறுமிகள் அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டி சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு இன்று 30.05.2020-ஆம் தேதி வந்து சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்,சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.P.தங்கதுரை மற்றும் சேலம் மாநகர துணை ஆணையாளர் குற்றம் மற்றும் போக்குவரத்து திரு.S.செந்தில் ஆகியோரிடம் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க வலியுறுத்தினர். இந்த சிறுவயதிலேயே பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மையாக செயல்பட்ட சிறுமிகளை காவல்துறை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டி பரிசும் வழங்கினர்.

No comments:

Post a Comment