Friday 31 March 2017

உ.வே.சா. நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


புனித வெள்ளி திருநாள் சந்திப்பு அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.
2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், "நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்" என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.
3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.
4.VIJAY, SUN டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி VIJAY, SUN டிவிக ளோ அல்லது பெற்றோர்களோ சிறிதும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.
சகோதர, சகோதரிகளே இதை பாரக்கும் நம் வீட்டு குழந்தைகளும் ஆபாசத்தின் வலையில் விழ அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் இந்நிகழ்ச்சி தடை செய்ய பட வேண்டும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக!
நம்மால் செய்ய முடிந்து இதை தடுக்க எந்த முயற்சியையும் செய்யாமல் குழந்தைகளுக்கு எதிரான இந்த உளவியல் தாக்குதலை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம்.
இந்த சிறுப்பெண்கள் பாடும் காதல் பாட்டுகள்,குத்துப் பாடல்கள்,விரசா வரிகள் - சே ரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை!
இந்த குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பாளர் கள் பாட வைத்த வக்கிரப் பாடல்கள் சில.
1.நேத்து ராத்‌த்தீரி அம்மா.
2.வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
3.கல்யாணம்தான் கட்டிட்டு ஓடி போலாமா
இன்னும் நிறைய விரல்கள் டைப் அடிக்க மறுக்கின்றது.
இதை பெருமையுடன் அப்பனும் ஆத்தாளும் உட்கார்ந்து பார்ப்பதுதான் வேதனை.
இந்த பதிவு உங்கள் மனதிற்கு நியாமாக பட்டால் இதை தயவு செய்து பகிரவும்,

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எல்லாம் அம்மா கையில்
-------------------------------------
மானிக் சர்க்கார் பேச்சில் இருந்து:
அதிக மார்க் வாங்கிய மாணவ செல்வங்களுக்கு என் கையால் சர்டிபிகேட் கொடுக்க சொன்னார்கள். கொடுக்கும்போது அவர்களின் மார்க்கை பார்த்தேன். எல்லாரும் 100க்கு 98, 95, 93 எடுத்திருக்கிறார்கள். அபாரம்.
நான் இவ்வளவு மார்க் எடுத்தது கிடையாது. 90 பக்கமே போகவில்லை. அப்போது அது அபூர்வம். இன்றைக்கு எல்லாமே டாப் மார்க்தான். அப்படி எடுத்தால்தானே மெடிக்கல், இன்ஜினியரிங், லா காலேஜ் சேர முடியும்.
நிறைய நிறைய டாக்டர்கள், இன்ஜினியர்கள், ஆடிட்டர்கள், சயின்டிஸ்டுகள், தலைவர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். திறமையானவர்கள், சாதனையாளர்கள்.
நல்ல மனிதர்கள்தான் குறைந்து கொண்டே போகிறார்கள்.
அவர்களை எப்படி உருவாக்குவது? அதிலே ஏன் நாம் கவனம் செலுத்தாமல் விடுகிறோம்? வல்லவர்களின் அளவுக்கு நல்லவர்களும் நமக்கு தேவை அல்லவா?
இதுதான் பெண்களின் மகத்தான பங்களிப்பை சுட்டிக் காட்ட வேண்டிய இடம். நான் அனுபவத்தில் தெரிந்து கொண்டதை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்தான் முதல் டீச்சர். உலகத்தை குழந்தைக்கு அறிமுகம் செய்பவளே அவள்தான். அம்மா அப்பா என மனிதர்களை அடையாளம் காட்டுவதில் இருந்து மகனோ மகளோ உலகத்தின் அத்தனை விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள ஆசானாக விளங்குவது அந்த தாய் மட்டுமே.
ஒவ்வொரு தாய்க்கும் நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான். அறிவாளியாக, திறமைசாலியாக, வல்லவனாக மட்டும் பிள்ளைகளை வளர்க்காதீர்கள். நல்லவர்களாக வளரவும் பழக்குங்கள்.
சொந்த தாய் தந்தையை மட்டும் குழந்தைகள் மதித்தால் போதாது. மற்ற தாய் தந்தையரையும் மதிக்க வேண்டும். சக மனிதர்களை மதிக்க வேண்டும். நம்மைவிட மற்றவர்கள் ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் மீது வைக்கும் மரியாதையும் அன்பும் ஒருபோதும் குறைந்துவிடக் கூடாது.
மதம், ஜாதி, மொழி, செல்வம், பிறப்பு உள்ளிட்ட எந்த வேறுபாட்டையும் கருத்தில் கொள்ளாமல் சக மனிதர்களை சமமானவர்களாக மதித்து அன்பு காட்டும்படி தாய்மார்கள் தமது பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
பொய் சொல்லாதே, பொறாமை கொள்ளாதே, பேராசை படாதே, குற்றம் புரியாதே, நேர்மையாக நட, மனிதர்களை நேசி, நாட்டை நேசி, நல்ல விஷயங்களுக்காக சிரமங்களை சகித்துக் கொள்ள மட்டுமல்ல, அவசியமானால் தாய் நாட்டுக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் அளவுக்கு நாட்டுப் பற்றையும் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும். நாடு நன்றாக இருந்தால்தானே நாம் நன்றாக வாழ முடியும்.
இதையெல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஒரு தாய் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவளுக்கு தானாகவே வரும் இந்த பாடமெல்லாம். அதிலும் இந்த தமிழ்நாட்டு தாய்மார்கள் எவ்வளவு அக்கறையுடன் தமது பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
தொண தொண என்று ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் குழந்தைகளை திட்டாதீர்கள். நீங்கள்தானே டீச்சர். உங்களிடம் கேட்காமல் யாரை கேட்கும் அது? சரியான பதில் தெரிந்தால் சொல்லுங்கள். தெரியவில்லை என்றால், மகனே நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது. ஆனால் மாலைக்குள் நான் விசாரித்து உனக்கு சொல்கிறேன் என பதில் சொல்லுங்கள். சொன்ன மாதிரி செய்யுங்கள். தவறான பதிலை மட்டும் சொல்லவே சொல்லாதீர்கள்.
ஏனென்றால் நீங்கள் சொல்லும் பதில்தான் குழந்தை வளர்ந்து பெரியவனாகி முதியவனாகி சாகும்வரையிலும் அதன் நினைவில் இருகும். தவிர எந்தக் குழந்தைக்கும் தாய் உசத்தி. என் அம்மா சொன்னால் அது தப்பாக இருக்காது என்று அவை நம்பும். அந்த நம்பிக்கையை வீணடிக்க வேண்டாம். தயவு செய்து உங்கள் ஏனைய பிரச்னைகளால் ஏற்படக்கூடிய கோபத்தை குழந்தை மேல் காட்டாதீர்கள்.
பள்ளிக்கூடத்தில் சேர்த்ததும்குழந்தை மீதான கடமை முடிந்து விடுவதாக பல பெற்றோர் நினைக்கிறார்கள்.இல்லை. அது தவறு. பள்ளியில் இருக்கும் நேரத்தைவிட அதிகமாக குழந்தை இருக்குமிடம் வீடு என்பதால் உங்கள் கடமை முடிந்துவிடவில்லை, தொடரவே செய்கிறது.
படி படி மார்க் எடு என்று மட்டுமெ சொல்லிக் கொண்டிராமல் உங்கள் நடத்தை மூலமாக நல்ல விஷயங்களை உணர்த்துங்கள். ஏதாவது ஒரு வகையில் நம்மைவிட வசதி வாய்ப்பு குறைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள், காயம் பட்டவர்கள் கஷ்டங்களோடு போராடும்போது வேடிக்கை பார்த்தபடி கடந்துபோக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்காதீர்கள். கஷ்டப்படும் மக்களின் பிரச்னையை தீர்க்க முடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு உதவி செய்து கைதூக்கிவிட வழி காண தூண்டுங்கள்.
இயலாதவர்களுக்கு உதவுவது பெரிய பேறு. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், அவ்வாறு உங்கள் உதவியால் ஒரு ஏழை புன்னகைக்கும்போது அதுதான் கடவுளின் சிரிப்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் மனதில் பதிய வையுங்கள்.
பொருட்கள் அனைத்தையும்விட மனிதனின் மதிப்பு பெரிதாகும். மனிதர்களை மதிக்கவும், வேற்றுமைகளை இயல்பாக எடுத்துக் கொள்ளவும் கற்றுக் கொடுங்கள். மனிதர்களை பிரிக்கும் எந்த ஒரு வழியையும் அவர்கள் கற்றுக் கொள்ள அனுமதிக்காதீர்கள்.
மேலும் மேலும் வேறுபாடுகளை அடையாளம் கண்டு மனிதர்களுக்கிடையே பிளவுகளை அதிகமாகும் போக்கு எனக்கு கவலி அளிக்கிறது. இதை தடுத்து நிறுத்த நாம் தவறினால் நாகரிகமே அழிந்து போகும். அப்புறம் நாமெல்லாம் எங்கே வாழ முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.
பெற்ற தாய்க்குபிறகு டீச்சர்களுக்குதான் இவ்வாறு நல்ல மனிதர்களை உருவாக்கும் பொறுப்பும் ஆற்றலும் உண்டு. புனிதமான இந்த தொழிலை முழுமையாக பயன்படுத்தி நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் கடமையை அவர்கள் தொடர வேண்டுகிறேன்.
புத்தகங்களும் மதிப்பெண்களும் முக்கியம்தான். ஆனால் நல்ல வாழ்க்கைக்கு அவற்றைவிட அதிகம் தேவைப்படுவது நல்ல எண்ணங்களும் ஆரோக்யமான பார்வையும்தான். எவர்வின் போன்ற பள்ளிகள் அந்த பணியை அக்கறையுடன் செய்தால் நமது இந்தியா உலகில் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட மிக உயர்ந்த இடத்தை நிச்சயமாக அடைந்தே தீரும்.
உங்கள் அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
உங்கள் அன்பான வரவேற்புக்கு ஆத்மார்த்த நன்றி.

மனிதத்தேனீயின் தேன்துளி



Thursday 30 March 2017

அம்பேத்கர் பிறந்த நாள் விழா அழைப்பிதழ்


மகிழ்வோர் மன்றம் 13ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭
🙋🏻‍♂போராட்டம் தான் வாழ்க்கை என்றால், போராடத் தயங்காதே.
🙋🏻‍♂வேலை வாய்பிற்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவியும் ஊக்கமும் அளிக்கா விட்டாலும் பரவாயில்லை, அவ நம்பிக்கை அளிக்கும் படி அவர்களிடம் பேசாதீர்கள்.
🙋🏻‍♂நம் வாழ்வில் முன்னேற நம் இரு கைகளை விட தேவை இன்னொரு பெரிய கை. அதுவே "நம் 'big' கை".
*நம்பிக்கை.*
🙋🏻‍♂காலம் நமக்குப் பல விஷயங்களை உணர்த்த முயற்சி செய்கிறது. நாம் தான் அதை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இல்லை.
🙋🏻‍♂நாம் எதையும் எளிதாக பெற்றுவிட முடியாது. நம்மால் பெறமுடியாத அளவிற்கு எதுவும் இல்லை.
🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭
*வாழ்க வளமுடன்*
*_நல்லதே நடக்கும்_*

மனிதத்தேனீயின் தேன்துளி



Wednesday 29 March 2017

மனிதத்தேனீ சிறப்புரையாற்ற உள்ள விழா


Madurai Mani Paper 29.03.2017 Page 4


Makkal Kurual - Paper 29.03.2017 Page 5


அழகப்பச் செட்டியார் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


யுகாதித் திருநாள் விழா




முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மிக நீண்ட பதிவு ஒ௫ விவசாயி கண்ட வெற்றி
விவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன இந்திய விவசாயி குடிவாடா நாகரத்தினம் நாயுடு; விவசாயம் மூலம் கோடீஸ்வரர் ஆனவர். இவரிடம் நேர்காணல் செய்த ஒரு நிருபரின் அனுபவம் படித்து பாருங்கள். இந்திய விவசாயிகள் இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய செய்தி இருக்கிறது. படித்ததில் பிடித்ததால் இங்கு பகிர்கிறேன்.
ஒரு விவசாயிடம் பேட்டி எடுப்பதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரம் நான் பயணிப்பது இதுதான் முதல் முறை. நானென்ன நான்! ஒரு மாநில முதல்வரே இவரது பண்ணை விஜயத்தை ஒரு நாள் நிகழ்ச்சியாக வைத்திருக்கும் போது; ஆந்திர அரசு இவரைப் பற்றிய பாடத்தை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு சேர்த்திருக்கும் போது; அமெரிக்க ஜனாதிபதியே இவரை தேடி இந்தியா வந்திருக்கும் போது நான் எம் மாத்திரம்!
நான் ஹைதராபத்தில் இறங்கிய போது அவர் அங்கு இல்லை. டெல்லியில் இருந்தார். தேசிய அளவில் நடைபெறும் சாதனை விவசாயிகள் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அவருக்கு அன்று பாராட்டும் 10 லட்சம் பணமும் ரொக்கமாக அளிக்கப்படுகிறது. அந்த நிகழ்சிக்காக அவர் அங்கு போயிருக்கிறார். திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகும் என்றார்கள். இரண்டு நாட்களாக ஹைதரபாத்தை சுற்றி திரிந்தேன். மூன்றாவது நாளில் அவர் வீட்டில் போய் நின்றேன். வசதியான வீடு!
செழிப்பான பணத்தில் கட்டியது என்பதை வீட்டின் தோற்றமே காட்டியது. காலிங் பெல்லை அழுத்தி காத்திருந்தேன். நான் யாருக்காக இத்தனை கி.மீ. பயணித்து வந்தேனோ அவர்தான் கதவை திறந்தார். அந்த மாமனிதரின் பெயர் குடிவாடா நாகரத்தினம் நாயுடு.
இந்த பெயர்தான் மதுரையிலிருந்து ஹைதராபாத் வரை என்னை அழைத்துக் கொண்டு போனது. தில்சுக் நகரில் உள்ள கெளதம் நகர் காலனியில் அவர் வீடு இருந்தது. வீடு முழுவதும் விருதுகள் அலங்கரித்து நின்றன. 336 விருதுகள், 9 சர்வதேச விருதுகள் என்று வீடு கொள்ளா பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.
தென்னாப்பிரிக்காவில் கொடுத்த விருது
என்னை வரவேற்ற அவர் முதலில் அவரது வீடு முழுவதையும் சுற்றிக் காண்பித்தார். பாத்ரூம் பிட்டிங்க்ஸ் கூட எங்கிருந்து வரவழைத்தது என்று சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு இதையெல்லாம் செய்கிறார் என்று தெரியவில்லை.
"வீட்ட முழுசா பாத்துட்டீங்களா..! எப்படி இருக்கு..?"
"ஒரு டாக்டரோட வீடு மாதிரி 'ரிச்'சா இருக்கு..!"
"அதுக்காகத்தான், வீட்ட சுத்தி காண்பிச்சேன். ஒரு விவசாயி, டாக்டர் மாதிரியோ என்ஜினியர் மாதிரியோ ஏன் வாழ முடியாது? அவர்களும் வசதியாக வாழ முடியும் என்பதுதான் எனது கான்செப்ட். இதை மற்ற விவசாயிகளுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகத்தான், உங்களுக்கு வீடு முழுவதும் சுத்திக் காண்பிச்சேன். இந்த வீடு கூட என்ஜினியர் உதவியில்லாமல் நானே டிசைன் செய்து வடிவமைத்து கட்டியதுதான்" என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக கொடுத்தார்.
அவர் சொன்ன மாதிரியே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் குடி இருக்கும் கௌதம் காலனி கூட வசதியானவர்கள் வாழும் இடம்தான். மேற்கொண்டு அவர் பேசியதிலிருந்து...
"நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம் பாலகிருஷ்ணபுரத்தில்தான். எனது தாய்தந்தையரும் விவசாயிகள்தான். பள்ளிப்படிப்பை எனது சொந்த ஊரில் முடித்து விட்டு கல்லூரி படிப்பிற்காக சென்னை ரயிலேறினேன். அங்கு 'டிப்ளமோ இன் எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங்' படித்து முடித்தேன். அதன்பின் அண்ணா சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன். நல்ல வேலை, நல்ல சம்பளம். ஆனாலும் என் மனம் நிலை கொள்ளவில்லை. என் நாட்டமெல்லாம் விவசாயமாகவே இருந்தது.
மனைவி மகளுடன் நாகரத்தினம்
விவசாயத்தில் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னை தூங்க விடாமல் செய்தது. இரண்டு வருடங்களில் வேலையை விட்டு விட்டு ஹைதராபாத் வந்தேன். அதற்குள் திருமணமும் முடிந்தது. கையில் சேமித்து வைத்திருந்த பணத்திற்கு ரெங்காரெட்டி மாவட்டத்தில் தரமதி பேட்டை என்ற இடத்தில் 17 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். கரடுமுரடான பாறைகள் நிறைந்த அந்த இடம் விவசாயத்திற்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள். துணிந்து வாங்கினேன். என்னிடம் இருந்த பணத்திற்கு அப்படிப்பட்ட நிலம்தான் கிடைத்தது. முழுவதும் தரிசாக கிடந்த அந்த நிலத்தை வளமாக்கி விளைவிக்க போராடினோம்.
நாகரத்தினத்தின் பசுமையான வயல்
“நான், எனது மனைவி சத்யவதி, எனது தாயார் மூவரும் இரவு பகலாக கடினமாக உழைத்து தரிசு நிலத்தை தங்கம் விளையும் பூமியாக மாற்றினோம். இப்போது எனது நிலத்தில் ஊட்டி, கொடைக்கானலில் வளரும் பூச்செடிகளையும், காபி செடிகளையும் கூட வளர்க்க முடிகிறது. அந்தளவிற்கு வளமிக்க மண்ணாக நிலம் மாறியுள்ளது. விவசாயி என்பவன் எதையும் வெளியில் காசு கொடுத்து வாங்கக் கூடாது என்பதுதான் எனது எண்ணம்.
அவனுக்கு வேண்டிய உணவை அவனே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். நான் விவசாயத்திலே சம்பாதித்து, அதிலே சாப்பிட்டு, அதிலே வருமானமும் பார்க்கிறேன். நான் ஒரே வகையான பயிர்களை நிலம் முழுவதும் வளர்ப்பதில்லை. கலப்பு பண்ணை முறையில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறேன்.
'திருந்திய நெல் சாகுபடி' முறையில் நெற்பயிர்கள்
2003-ம் ஆண்டு இந்தியாவில் 'திருந்திய நெல் சாகுபடி' முறையை முதன்முதலாக பயன்படுத்தி ஒரு ஹெக்டேருக்கு 15.4 டன் நெல்லை உற்பத்தி செய்து சாதனைப் படைத்தேன். இதுநாள் வரை இதுதான் அதிக விளைச்சலுக்கான சாதனையாக உள்ளது. என்னை பின்பற்றி அடுத்த ஆண்டு ஆந்திராவில் உள்ள 10,500 விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில், பயிரிட்டார்கள். இதற்காக பல இடங்களுக்கு சென்று பேசினேன். வெளிநாடுகளில் இருந்தும் என்னை அழைத்தார்கள்.
இந்த நிலையில்தான் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி எனக்கொரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தார். அதற்காக எனது நிலத்துக்கு அருகில் தற்காலிக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைத்து, எனது பண்ணையில் ஒருநாள் முழுவதும் இருந்தார். ஒரு சாதாரண விவசாயியை தேடி மாநில முதல்வர் வந்தது அதுதான் முதல் முறை.
அந்த நிகழ்ச்சிக்கு பி.பி.சி., சி.என்.என். தொலைக்காட்சி முதற்கொண்டு இந்தியாவின் முன்னணி பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் ஒரு மாதத்திற்கு நீங்கள் எவ்வளவு சம்பாதித்தீர்கள்? என்று கேட்டார். இதன்மூலம் தனது ஆட்சியில் விவசாயிகள் மிக நன்றாக இருப்பதாக பத்திரிகையாளர்கள் மூலம் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதுதான் அவர் எண்ணம்.
நான் வருமானத்தை சொல்லவில்லை. மாநிலத்திலே மிக அதிகமாக சம்பளம் வாங்கும் அரசு அதிகாரியை விட நான் அதிகமாக சம்பாதிக்கிறேன். நிம்மதியாக இருக்கிறேன் என்றேன்.
அதற்கடுத்த ஆண்டு 2006ல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தார். அவர் தனது நிகழ்ச்சியில் என்னை சந்திப்பதையும், ஒரு நிகழ்ச்சியாக வைத்திருந்தார். எனது விவசாய முறையை அறிந்த அவர், ஒரு விவசாயி, ஒரு விஞ்ஞானியை விட மேன்மையானவர் என்றார். என்னை அமெரிக்கா வரும்படி அழைத்தார். 'எனது சேவை எனது தாய் நாட்டுக்கே' என்ற கொள்கையில் உறுதியாக இருந்த நான் அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன்.
இந்த அலங்கார மலர் ஒன்றின் விலை ரூ.250
நான் பிழைக்க முடியாமல், பிழைக்கத் தெரியாமல் விவசாயத்திற்கு வரவில்லை. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே விவசாயத்திற்கு வந்தேன். இந்த 17 ஏக்கர் நிலத்தை ரூ. 3.4 லட்சத்திற்கு வாங்கியபோது என்னிடம் வேறு எந்த பணமும் இல்லை. இன்றைக்கு எனது சொத்தின் மதிப்பு 17 கோடி ரூபாய். விவசாயம் மூலமே இந்த வருமானம் வந்தது. என்னால் முடியும்போது மற்ற விவசாயிகளாலும் முடியும். என் சொத்து மதிப்பை பகிரங்கமாக வெளியிடுவதற்கு காரணமே, விவசாயம் நஷ்டம் தரும் தொழில் என்று விவசாயிகளே நினைக்கிறார்கள். திட்டமிட்டு பயிரிடுங்கள் பூமித்தாயைப் போல் அள்ளிக் கொடுப்பவள் யாரும் இல்லை. அதற்கு நானே உதாரணம்.
இயற்கை ஒத்துழைத்தால் உணவு உற்பத்தி செய்வது வெகு சுலபம். பெரும்பாலான விவசாயிகள் விளைவிப்பதோடு தங்களின் கடமை முடிந்ததாக நினைக்கிறார்கள். இங்கு சந்தைப்படுத்துவதுதான் கடினம். அதை சரியாக செய்தாலே போதும். விவசாயம் பணம் கொட்டும் ஒரு தொழிலே தான்.
வாட்டி எடுக்கும் வெயிலில் கூட காப்பி செடி
எனது நிலத்தில் இதுவரை செயற்கை உரங்கள். பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தியது இல்லை. அதனால் மண் வளம் மிக நன்றாக இருக்கிறது. எந்த வகை செடியையும் என்னால் இதில் வளர்க்க முடியும். விளைபொருட்களை நேரடியாக மக்களிடம் விற்கிறேன்.
வசதியானவர்கள் திருமணத்தில் தோரணமாக தொங்கவிடப் படும் அலங்கார மலர்
எனது பொருட்களின் உற்பத்தியைவிட தேவை அதிகம் இருக்கிறது. அதனால் 20 கிலோ அரிசி கேட்பவர்களுக்கு 10 கிலோதான் கொடுப்பேன். இயற்கையான முறையில் விளைவித்த பொருள் என்றால் மார்க்கெட்டில் விலை அதிகம். நான் அதிக விலைக்கும் விற்பதில்லை. ஒரு கிலோ அரிசி ரூ.45 என்றால், எனது விலை ரூ.47 ஆகத்தான் இருக்கும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்வதால் இதுவே எனக்கு நல்ல லாபம். ஆர்கானிக் முறையில் விளைந்த பொருள் சாதாரண விலைக்கே கிடைப்பதால் வாடிக்கையாளருக்கும் லாபம்.
பெரும்பாலான விவசாயிகள் ஒரே தடவையில் பணக்காரர் ஆகவேண்டும் என்று பயிரிடுகிறார்கள். ஒரே பயிர் பயிரிடக்கூடாது. விவசாயி பலவகை பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். நான் 75 வகையான பொருட்களை உற்பத்தி செய்கிறேன். மாங்காய் மரங்களில் மட்டும் 35 வகைகள் உள்ளன. பெரிய இடத்து திருமணங்களில் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த அலங்கார மலர்களில் 40 வகையை இங்கு பயிரிட்டுள்ளேன். இந்த வகை மலர் ஒன்று ரூ.250 வரை விலை போகும். முகூர்த்த காலங்களில் இதன் விற்பனை நல்ல லாபத்தை தரும். இதுபோக மலர்களை பொக்கே செய்து அனுப்புவேன். இது சீஸன் வருமானம். தேங்காயை அப்படியே விற்றால் லாபம் குறைவு. அதனால் தேங்காய் எண்ணெய் எடுத்து அதை விற்றால் லாபம் அதிகம். தேங்காய் நாரை உரமாக போட்டு விடுகிறேன். இதனால் இரட்டிப்பு லாபம். இது மாத வருமானம்.
எனது பண்ணையில் 12 பசுமாடுகள் வைத்துள்ளேன். எந்த மாட்டிற்கும் நோய் வந்து ஊசியோ மருந்தோ கொடுத்ததில்லை. இயற்கையாக அது எவ்வளவு பால் கொடுக்குமோ அதை மட்டும் நாம் எடுத்துக் கொண்டாலே போதும். மாடுகளில் மற்ற மருத்துவ செலவுகள் எதுவும் வராது. பால் மூலம் தினசரி வருமானம் வரும்.
பள்ளிமாணவர்களுக்கு பாடம் எடுக்கும் நாகரத்தினம்
ஒரு விவசாயிக்கு தினசரி வருமானம், வார வருமானம், மாத வருமானம், 6 மாதத்திற்கு ஒரு முறை வருமானம், ஆண்டு வருமானம் என்று ஐந்து வகையான வருமானங்கள் உண்டு.
அதை சரியாக திட்டமிட்டு செய்தாலே போதும். யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. நான் வங்கிக் கடனாகவோ அரசாங்க மானியமாகவோ ஒரு பைசா கூட பெற்றதில்லை. இது சுயமரியாதை அதிகம் கொண்டதொழில். விவசாயி பிச்சைக்காரனில்லை. ஒரு டாக்டர், என்ஜினீயரைவிட விவசாயி என்று சொல்வதில் பெருமையடைகிறேன்” என்று கூறி தனது தோட்டத்துக்கு என்னை அழைத்துப் போனார். அங்கு பள்ளி மாணவ-மாணவிகள் இவருக்காக காத்திருந்தார்கள்.
உணவு உற்பத்தியாகும் இடத்தை பார்வையிடும் மாணவிகள்.
"மாணவர்களுக்கு விவசாயம் சம்பந்தமான விழிப்புணர்வு தருவதை எனது கடமையாக வைத்துள்ளேன். இதுவரை 35 ஆயிரம் மாணவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். நகரத்தில் வளர்ந்த இன்றைய தலைமுறையினரிடம் அரிசி எங்கிருந்து வருகிறது? என்று கேட்டால் சூப்பர் மார்க்கெட் என்று பதிலளிப்பார்கள். அவர்களுக்கு அரிசி உருவாகும் இடத்தையும், ஒரு விவசாயி எத்தனை சிரமப்பட்டு அதை உருவாக்குகிறான் என்பதும் தெரிந்தால்தான் விவசாயத்தின் அருமை தெரியும். வருங்காலத்தில் அதை அழியவிடாமல் பாதுகாப்பார்கள்" என்று கூறும் நாகரத்தினம் பற்றி ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ஒரு பாடமாக ஆந்திர அரசு வைத்துள்ளது.
தலைவர்களைப் பற்றி தான் பள்ளிக்கூட மாணவர்கள் படிப்பார்கள். ஆனால் விவசாயம் அதைவிட முக்கியம் என்று உணர்ந்த அரசு இதைச் செய்திருக்கிறது. பாடப்புத்தகத்தில் இடம் பெற்றதாலே ஏராளமான மாணவர்கள் நாகரத்தினத்தை நேரில் வந்து சந்தித்து செல்கிறார்கள். வாழும்போதே மற்றவர்களுக்கு பாடமாக வழிகாட்டியாக அமையும் அதிர்ஷ்டம் சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அந்த அதிர்ஷ்டம் நாகரத்தினத்திற்கும் கிடைத்திருக்கிறது.
வைர வியாபாரியின் மகன் யுவேஷ் நாகரத்தினத்தைப் பற்றி தெரிந்த பலரும் அவரை விவசாயத்திற்கான மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் அப்படி ஒருவர்தான் யுவேஷ். ஹரியானாவைச் சேர்ந்தவரான இவரது குடும்பத் தொழில் வைர வியாபாரம். இவர் நாகரத்தினத்தைத் தனது தந்தை என்றே சொல்கிறார். அவர் மூலம் விவசாயத்திற்கு ஈர்க்கப்பட்ட யுவேஷ் பகலில் விவசாய வேலைகளையும், மாலையில் தனது குடும்பத் தொழிலான வைர வியாபாரத்தையும் பார்த்து வருகிறார். இப்படி பலருக்கும் மாபெரும் உந்து சக்தியாக நாகரெத்தினம் நாயுடு இருந்து வருகிறார் என்பது விவசாயத்துக்கே பெரிய விஷயம்தான்.
நாகரத்தினத்தின் மார்கெட் உத்தி மிகவும் வித்தியாசமானது. தனது தோட்டத்தில் விளையும் வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கைக்காய் முதலியவற்றை தினமும் பறித்து வந்து தனது வீட்டு வாசலில் வைத்து விடுகிறார். அதன் அருகே ஒரு பேப்பரில் காய்கறிகளின் விலையை எழுதி வைத்து, பக்கத்திலே ஒரு உண்டியலையும் வைத்து விடுகிறார். வேண்டியவர்கள் அவற்றை எடுத்துக் கொண்டு அதற்கான தொகையை உண்டியலில் போட்டு விடுகிறார்கள். இதற்காக ஆட்கள் யாரும் இருப்பதில்லை.
எல்லாமே இயற்கை முறையில் விளைவிப்பதால் 10 கி.மீ. தொலைவில் இருந்து கார் எடுத்து வந்து வாங்கிப்போகும் வாடிக்கையாளர்களும் இவருக்கு உண்டு. இவரது பண்ணையில் இருந்து வரும் பால் ஆர்கானிக் என்பதால் அதற்கும் வரவேற்பு மிக அதிகம்.
எல்லோர் மனதிலும் தோன்றும் கேள்வியே எனக்கும் தோன்றியது. "உண்டியலில் விற்ற பொருளுக்கு சரியாக பணம் வந்துவிடுகிறதா..?" என்று கேட்டேன். "நாம் அவர்களை நேர்மையாளர்களாக நம்பினால் அவர்களும் அப்படியே நடந்து கொள்ளவார்கள். இங்கு நம்பிக்கைதான் முக்கியம்!" என்றார்.
இவரைத் தேடி ஒரு மாநில முதல்வர் வந்ததற்கும் அமரிக்க ஜனாதிபதி வந்து அவர் நாட்டுக்கே அழைத்ததற்கும் காரணம் இப்போதுதான் தெரிந்தது.
நாகரத்தினம் பெரிய கோடீஸ்வரர். அவர் நினைத்தால் பி.எம்.டபிள்யு. காரையே வீட்டு முன் நிறுத்தலாம். ஆனால், அவரிடம் ஒரு டூவீலர் கூட கிடையாது. எங்கு போவது என்றாலும் பொது வாகனத்தையே பயன்படுத்துகிறார். ஏனென்று கேட்டால், "அவைகள் சுற்றுச்சூழலை பாழ் படுத்துகிறது. கூடுமான வரை நான் பூமி மாசு படுவதை தள்ளிப் போடப் பார்க்கிறேன்." தீர்க்கதரிசியாக கூறினார்.
ஒரு மாபெரும் மனிதரை சந்தித்த திருப்தியோடு அவரிடமிருந்து விடைப்பெற்றேன்.
மென்மேலும் சாதனை சிகரங்களை எட்ட நாமும் வாழ்த்துவோம்!
விவசாயம் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு நாகரத்தினத்தை தொடர்பு கொள்ளலாம். தமிழிலேயே பதிலளிப்பார்.
குடிவாடா நாகரத்தினம் நாயுடு
ஹைதராபாத்.
மொபைல் : 094404-24463
(Shared)

மனிதத்தேனீயின் தேன்துளி