Saturday 30 April 2016

ஜவகர்லால் நேரு நினைவு தினம் அழைப்பிதழ்


சி.பா.ஆதித்தனார் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அன்பே சிவம்
மற்றவரை மதிப்பதே மனிதாபிமானம்
😨😨😨😨😨😨😨😨😨😨
காலையில் வாக்கிங் செல்லும் போது யாரோ முகம் தெரியாத ஒருவரை இடித்து விட்ட அவன், மன்னிச்சுடுங்க என்று மன்னிப்பும் கேட்டான் அதற்க்கு அந்த மனிதர் இல்ல சார் நான் தான் தெரியாம இடிச்சிட்டேன் தப்பு என் மேல தான்னு மன்னிப்பு கேட்டார். அடுத்த நொடி இருவரும் அங்கிருந்து விலகி விட்டனர்.
அடுத்து....
வாங்கிங் முடிச்சு வீட்டுக்கு வந்து ஆபிஸ் போக நேரம் ஆச்சு. பரபரன்னு அப்ப தான் நாம பறப்போம். அப்படி அவர் கிளம்பும் போது தன்னுடைய சாக்ஸ் எங்கேயோ வச்சிட்டு தேடிட்டே அவர் மனைவியிடம் ஒரு கத்து கத்தரார். அத துவச்சு எங்க தான் வைப்பியோ தெரியல. தினமும் தேட வேண்டி இருக்குன்னு அவர் சொல்லி முடிக்கறதுக்குள்ள அந்த அம்மா அவர் தோள் மேலேயே இருந்த அந்த சாக்ஸை எடுத்துக் கையில கொடுக்கறாங்க.
வீட்ல இருந்து வெளிய வரும் போது ஆபிஸ்ல இருந்து போன். "எங்க இருக்கீங்க சார். அந்த இன்கம் டாக்ஸ் பைல் எங்க தான் வச்சிட்டு போனீங்க. இன்னைக்கு file பண்ணியாகணும் பொறுப்பா வைங்கன்னு சொல்லிட்டு தானே போனேன். ஒரு மணி நேரமா தேடறேன் கிடைக்கல" உடனே இவர் சார் உங்க டேபிள் மேலயே வச்சி இருக்கேன் சார் நீங்க
தேட கூடாதுன்னு. சாரி சார் அத உங்க கிட்ட சொல்லி இருக்கணும்ன்னு அதுக்கும் அவர் தன்னை விட்டுக் கொடுத்து மன்னிப்பு கேட்டார். சரி சரி உடனே ஆபிஸ் வரப் பாருங்க என்று சொல்லி அந்த போன் துண்டிக்கப் பட்டது.
எந்த உறவுமுறையும் இல்லாத யாரோ ஒருவரை லேசா அதுவும் தெரியாம இடிச்சதுக்கே நாம மன்னிப்பு கேட்கிறோம்.
நாம தான் இவங்க வாழ்க்கை நாம இல்லைன்ன இவங்க இல்லை என்று இருக்கும்
உறவுகளோடு கொஞ்சம் அன்பாக இருந்தால் தான் என்ன.
ஆபிஸ்ல நாம இல்லன்ன அந்த இடத்தில வேற யாரோ ஒருவர் நிச்சயமாக வந்து விடுவார். ஆனா உங்க பிள்ளைங்களுக்கு நீங்க தானே அப்பா என்ற ஸ்தானத்தை கொடுக்க முடியும். பெற்றோருக்கு அன்பான மகனாக, மனைவிக்கு ஆசையான கணவராக, பிள்ளைகளுக்கு பாசமான அப்பாவாக ஒரு முறை வாழ்ந்து தான் பாருங்களேன்.
அனைவருக்கும் ஏதோ கஷ்டங்களும் அதன் கவலைகளும் இருக்க தான் செய்யும். கவலைகள் இல்லாதவங்க இந்த உலகத்துல யாரும் இல்லை. தானாகவே வந்த கஷ்டங்கள் தானாகவே சென்று விடும்.
வாழும் வாழ்க்கை ஒரு முறை தான் அதை சந்தோஷமாக வாழலாமே.
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

மனிதத்தேனீயின் தேன்துளி



Friday 29 April 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

" நீங்கள்.....!
நீங்கள் விரும்பினால்" ….............
உங்கள் விருப்பத்திற்கு வாழ்க்கையை வளைக்கலாம்.
உங்கள் கனவுகளை உண்மையென ஆக்கலாம்.
உங்கள் உறுதியினால் சிரமங்களைக் கடக்கலாம்.
உங்கள் எல்லைகளை நீங்களே உடைக்கலாம்.
தடைகளைச் சீர்செய்து தடமாக மாற்றலாம்.
வீழ்ச்சிகளைத் தடுத்து வெற்றிகளை ஈட்டலாம்.
வீணாகும் நேரத்தைப் பயனுள்ளதாக்கலாம்.
வேண்டாத பழக்கங்களை வினாடிக்குள் நீக்கலாம்.
பகைவர்களை மிக நல்ல நண்பர்களாக மாற்றலாம்.
பழைய தோல்விகளின் பாரங்கள் நீங்கலாம்.
எத்தனை இழந்தாலும் இழந்த பொருள் மீட்கலாம்.
என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்.
கேள்விகளுக்குப் பதில்கள் உங்களிடமே கிடைக்கலாம்.
கேள்விகளுக்குப் பதில் சொல்ல சாதனைகள் படைக்கலாம்.
தேவைகள் பெருகும்போது வரவுகளும் பெருக்கலாம்.
வியர்வை செலவழித்து வெற்றிகள் குவிக்கலாம்.
மௌனத்தைப் பதிலாக்கி விமர்சனங்களை வீழ்த்தலாம்.
குழப்பங்களை இல்லாமல் செயல்திட்டம் வகுக்கலாம்.
கவனத்தைக் குவிப்பதனால் காரியத்தில் வெல்லலாம்.
வெற்றியிலே தேங்காமல் அடுத்த செயல் ஆற்றலாம்.
விவாதங்கள் ஒவ்வொன்றும் தீர்வு நோக்கிச் செல்லலாம்.
முடக்கவரும் எதிர்ப்புகளை முன்கூட்டித் தடுக்கலாம்.
மாற்றங்கள் ஏற்பதனால் ஆதாயம் காணலாம்.
ஏமாற்றம் வந்தாலும் தொட்டதைத் தொடரலாம்.
நல்லதே நடக்கும் , வாழ்க வளமுடன் .

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு நாள் தந்தையை ஒரு உயர்தர ரெஸ்ட்டோரண்டுக்கு அழைத்துச் சென்றான் மகன்.
தந்தையோ வயது முதிர்ந்தும் கொஞ்சம் இயலாமலும் இருந்தார்.
அவர் சாப்பிட்டுகொண்டிருக்கும் போது பலவீனமாக இருந்ததால் சோற்றுப் பருக்கைகளும் உணவுத்துண்டுகளும் அவரது சட்டை ஜீன்ஸ் மேலும் தரைமேலும் விழுந்து கொண்டிருந்தது.
பக்கத்திலிருந்து சாப்பிடுவோர் இதைப்பார்த்து தங்கள் முகத்தைச் சுழித்துக் கோணல்மாணல் ஆக்கி மகனைப்பார்த்து முறைத்துக்கொண்டு இருந்தனர்.
ஆனால் மகனோ மிகவும் அமைதியாக அப்பா சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.
இருவரும் சாப்பிட்டு முடித்ததும் மகன் எந்தத் தயக்கமும் இல்லாமல் தனது தந்தையை ஓய்வு அறைக்கு அழைத்துச்சென்று அவரது முகத்திலும் ஆடையிலும்
ஒட்டி இருந்த உணவுப்பருக்கைகளை துடைத்துக் கழுவி, அவரது தலையை வாரி அவரது கண்ணாடியையும் துடைத்து அவருக்கு மாட்டினான்.

இருவரும் ஓய்வு அறையில் இருந்து வெளியில் வர ரெஸ்ட்டோரண்ட் மிக அமைதியானது.
மகன் கவுண்டருக்குச் சென்று பில்லிற்கு பணம் செலுத்தி தனது தந்தையை கவனமாக அழைத்துச் செல்ல தயாரானான்.
அப்போது அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் எழுந்து “எதையாவது விட்டுவிட்டுச் செல்கிறீர்களா” என்று கேட்டார்.
மகனோ “இல்லையே
நான் எதையும் மிஸ்பண்ணவில்லை” என்றார்.
அதற்கு அந்த மனிதர் “இல்லை நீங்கள் இங்கு சிலதை விட்டுவிடுச் செல்கிறீர்கள்; இளையோருக்கு ஒரு பாடத்தை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள் அத்தோடு எல்லாப் பெற்றோருக்கும் நம்பிக்கையை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள்”. என்றதும் அந்த ரெஸ்ட்டோரண்டே மிக அமைதி ஆனது.
மிகப்பெரிய மதிப்பு என்னவென்றால் எம்மை கவனமாகப் பார்த்துக்க ண்ட வயது முதிர்ந்தோரை நாமும் கவனமாகப் பார்த்துக்கொள்ளும் திறமைதான்.
எமது பெற்ற்றோரும் முதியோரும் தங்களது வாழ்வின் நேரத்தை, பணத்தை, நிபந்தனையற்ற அன்பை எமக்காகத் தியாகம் செய்ததோடு எம்மை மிகுந்த மரியாதையோடு பார்த்துக்கொண்டார்கள்.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீ சிறப்புரையாற்ற உள்ள நிகழ்ச்சி


மகிழ்வோர் மன்றம் 133ஆம் மாதக் கூட்டம் அழைப்பிதழ்


மனிதத்தேனீயின் தேன்துளி



Tuesday 26 April 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இப்படி வாழ்ந்து பார்க்கலாமே...
*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.
*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.
*'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.
*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.
*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.
*ரகசியங்களைக் காப்பாற்று.
*புதிய நண்பர்களைத் தேடிக்கொள்: பழைய நண்பர்களை மறந்துவிடாதே.
*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.
*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.
*தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி
*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.
*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.
*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.
*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.
*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.
*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.
*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.
*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.
*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.
*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.
*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.
*'எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே..!!

உ.வே.சாமிநாதய்யர் நினைவு தினக் கூட்டம் பானர்


மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மறை நீர் (Virtual water)
பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?
மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.
ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.
புத்திசாலி நாடுகள்!
நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.
இது இந்திய நிலவரம்!
முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.
மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்
வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.
சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.
ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.
பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.
தண்ணீருக்கு எங்கு கணக்கு?
ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.
இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.
மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.
நாம் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு இது.
உங்களின் அனைத்து குழுக்களுக்கும் பகிர்வு செய்யுங்கள்.

Monday 25 April 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சேகர் தன் கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்க வந்தான், வந்தவன் சென்னையிலே தங்கியதால் நாகரீகம் ரொம்ப முற்றி அல்ட்ரா மாடர்னாக வாழ்ந்து வந்தான்..
ஒரு நாள் திடீரென்று அவனுடைய அம்மா கிராமத்தில் இருந்து அவன் தங்கும் பிளாட்டிற்கு வந்து விட்டாள்.
வந்தவள் சேகரும் ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டாள்.
அம்மா கேட்டாள் "யாரு இது?
சேகர் சொன்னான் "என் ரூம்மேட்மா".
அம்மா "அப்படீன்னா?"
"ரூம்மேட்னா கூட வசிக்கிற பொண்ணு, நீ சந்தேகப்படுகிற மாதிரி வேற ஒன்னும் இல்லம்மா, வீட்டை மட்டும் தான் ஷேர் பண்ணுறோம்..
அவ தனி பெட்ரூம், நான் தனி பெட்ரூம் "
அம்மா மறுநாள் கிளம்பி கிராமத்திற்கு போய் விட்டாள், இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய ரூம்மேட் சொன்னாள் ;
"உங்கம்மா வந்து போனதில் இருந்து சமையல் ரூமில் இருந்து தோசை கரண்டியைக் காணலை,
ஒரு வேளை உங்கம்மா எடுத்துப் போயிருப்பாங்களோ?"
சேகர் சொன்னான் "தெரியலை, எங்க கிராமத்து வீட்டுல வேற போன் இல்லை நான் எதுக்கும் லெட்டர் போட்டு கேக்கிறேன் "
அவன் அம்மாவுக்கு கடிதம் எழுதினான்.
அன்புள்ள அம்மா நான் நீங்கள் இங்கே இருந்த தோசை கரண்டியை எடுத்தீங்கன்னு சொல்லலை எடுக்கலைன்னும் சொல்லலை, ஆனா ஒண்ணு மட்டும் உண்மை, என் வீட்டுல இருந்து நீங்க போனதுக்கு அப்புறம் தோசை கரண்டியை காணவில்லை.!
சில நாட்கள் கழித்து அம்மாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது.. அதை சேகர் பிரித்து படித்தான்.
அன்புள்ள மகனுக்கு நான் நீ உன் கூட வசிக்கிற பொண்ணோடு நீ தப்பா இருக்கறேன்னு சொல்லலை இல்லைன்னும் சொல்லலை ஆனா ஒண்ணு மட்டும் உண்மை,
அவள் அவ பெட்டுல தூங்கி இருந்தா இந்நேரம் அந்த தோசை கரண்டியை கண்டு
பிடிச்சு இருப்பா.
செத்தாண்டா சேகரு..😜😜...

Malai Murasu Paper 25.04.2016 page 4


மனிதத்தேனீயின் தேன்துளி





முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் coldroom அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.
உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...
இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தார் அவர்.
அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி .வந்தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான். சந்தோஷத்தில் அவனை கட்டி தழுவிக்கொண்டார்.
அவனிடம் "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டார்.
"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர்.
இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை.உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்கள் கண்டு பிடிச்சேன் ..." என்றான்
ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம் தானே நண்பர்களே.🙏🙏

மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

யார் குற்றம்
பிரதம மந்திரி காபீட்டு திட்டம்
உண்மையிலேயே நல்ல திட்டம்
ஆனால் இங்கு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் 
எத்தனை வங்கி அதிகாரிகளுக்கு தெரியும்
மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்
சென்றவாரம் என் வங்கிக்கு சென்று இருந்தேன்
அப்போது ஒரு ஏழைப் பெண்மணி தன் மகனுடன் வந்து இருந்தார்
தன் கணவர் இறந்து விட்டதாகவும் அவர் கணக்கில் இருக்கும் 5000 ரூபாயை எடுக்க
அதற்கான சான்றிதழ்களுடன் வந்து இருந்தார்
வங்கி மேனேஜர் எல்லாவற்றையும் பார்த்து விட்டு பணம் கொடுக்க அனுமதித்தார்
அந்த மேனேஜர் என் நண்பர் தான்
அந்தப் பெண் அங்கிருந்து பணம் பெறப் போகும் போது அந்த மேனஜர் மீண்டும் பாஸ்புக்கை வாங்கி பார்த்து விட்டு உன் கணவர் 7000 கடன் வாங்கி இருக்கிறார் எனவே நீ தான் 2000 கட்ட
வேண்டும் என சொல்ல அந்த பெண் அழுது விட்டார்.
உடனே நான் அந்த பாஸ் புக்கை வாங்கி பார்த்தேன் அதில் கடன் இருப்பது தெரிந்தது
அதை தவிர மேலும் ஒன்றும் தெரிந்தது
அந்த கணக்கில் இந்த காப்பீட்டு திட்டத்திற்காக 12 ரூபாய் டெபிட் செய்யப்பட்டு இருந்தது
இதை நீங்கள் பார்க்கவில்லையா இந்த பெண்ணிற்கு 2 லட்சம் வருமே என்று சொன்னது ம்
மனிதர் பதறிவிட்டார்
சார் அந்த பெண்ணின் கணவரிடம் அந்த காப்பீட்டு திட்டபடிவங்களில் கையெழுத்து வாங்கினீர்களா இல்லை என்றால் எப்படி இந்த பணம் அவர் nominee க்கு கிடைக்கும் என்றவுடன்
அவர் தலையில் கை வைத்து கொண்டார்
பிறகு அந்த பெண்ணை அழைத்து 7000 வாங்கிக் கொள்ள அனுமதித்தார்
அந்த பெண்ணுக்கு 2 லட்சம் கிடைக்குமா என்பது தெரியவில்லை
இது தான் இன்றைய நிலை
எனக்கு தெரிந்து பெரும்பாலான வங்கிகள் இதை செய்யவில்லை
பணத்தை மட்டும் டெபிட் செய்து கணக்கு காட்டிவிட்டார்கள்
இதைப் பற்றி Indian Bankers Association க்கு கடிதம் எழுதி இருக்கிறேன்
ஒரு அரசு அதன் நல்ல திட்டங்களை கொண்டு வரத் தான் முடியும்
அதை செயல்படுத்தவேண்டிய வங்கிகள் தூங்கினால் என்ன செய்வது
இன்று காலை Modi Parishad என்ற அமைப்பு இந்த காப்பீட்டு திட்டத்தை பற்றி பதிவிட்டிருந்தது
அதை படித்தவுடன் இந்த நிகழ்வை நான் பதிவு செய்கிறேன்
இப்போது சொல்லுங்கள் இது யார் குற்றம்
நம் நாட்டில் ஆந்திராவில் இந்த திட்டத்தை பற்றிய பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது
பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதை மக்களிடம் கொண்டு செல்லலாமே..
Forwarded as received

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான்.
இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??” என்று பிரார்த்திக்கிறேன்.
ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன.
தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்..
இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை தேற்றிக்கொண்டான்.
ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.
பட்ட காலிலே படும் என்பது போல… எது நடக்ககூடாதோ அது நடந்துவிட்டது. இவன் தங்குவதுகென்று இருந்த ஒரே குடிசையும் வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன. அதை பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாம் போய்விட்டது. இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய்விட்டது.
“இறைவா… என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ என்னவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே… இது தான் உன் நீதியோ…?” என்று கதறி அழுகிறான்.
மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் தீவை நோக்கி அது வந்துகொண்டிருந்தது.
“அப்பாடா… நல்ல வேளை… ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம். யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.” என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான்.
கப்பல் சிப்பந்திகள் இவனை, லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள்.
தான் இங்கே தீவில் மாட்டிக்கொண்டிருப்பது எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்…. யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம்” என்கிறார்கள் அவர்கள்.
அப்போது இறைவன் குடிசையை எரித்த காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான்.
அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.
வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டுவிடுகிறோம். நம்மை காக்கவே அவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். அவன் தரும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்துகொண்டால், எதைப் பற்றியும் அலட்டிகொள்ளவேண்டியதில்ல!

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ)
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17140 ஜூனியர் அசேசியேட்ஸ், ஜூனியர் அக்ரிகல்சர் அசேசியேட்ஸ் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ)
பணியிடம்:
தமிழ்நாடு, இந்தியா முழுவதும்
காலியிடங்கள்:
17140
பணிகள்:
1. Jr. Associate - 10726
2. Jr. Associate Special Recruitment Drive for filling up of Backlog vacancies - 3218
3. Jr. Associate Special Recruitment Drive for Tura, Meghalaya and Kashmir Valley & Ladakh - 188
4. Jr. Agriculture Associate - 3008
தகுதி:
ஜூனியர் அசேசியேட்ஸ் - மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் அக்ரிகல்சர் அசேசியேட்ஸ் - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்திலிருந்து விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழில்கள் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.04.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதிய அளவு:
ரூ. 11,765-31,540
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வுஇ நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்:
For General/OBC Candidates Application Fee is - Rs.600/-
For All Other Candidates (ST/SC/PWD/Ex-s) Application Fee is - Rs.100/-
தேர்வு மையங்கள்:
சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாகhttp://www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் 25.04.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் பதிவு தொடங்கும் தேதி:
05.04.2016
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
25.04.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
https://www.mediafire.com/?cqdaqtcj93b4g45
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
http://ibps.sifyitest.com/sbijacmar16/index.php

Saturday 23 April 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


Malai Murasu Paper 23.04.2016 page 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவனித்தார்.வாகனங்கள் செல்லும்போது அந்த பெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.
அந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார்.
என் பெயர் தயாளன் நீங்கள் காரில் உட்காருங்கள் நான் டயர் மாத்தி கொடுக்கிறேன் என்று டயரை கழட்ட ஆரம்பித்தார்.சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார் .
அந்த பெண்மணி உங்களுக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டார்.நான் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன் ,அதில் இருந்து வரும் பணமே எனக்கு போதும்.நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம் என்றார்.
நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே.நீங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றால் வேறு யாராவது ஒரு நபர் கஷ்டத்தில் இருக்கும்போது என்னை நினைத்து பாருங்கள், அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றார்.
உதவி செய்வது என்பது ஒரு சக்கரம் மாதிரி சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.நான் உங்களுக்கு உதவி செய்தேன் நீங்கள் வேறு யாருக்காவது கஷ்டத்தில் இருக்கும்போது உதவி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு தயாளன் நடக்க ஆரம்பித்தார்.
அந்த பெண்மணி தயாளனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு காரை எடுத்து கொண்டு சென்றார்.வழியில் தலைவலி எடுப்பது போல் இருக்கவே அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.
டீக்கடை பார்ப்பதற்க்கு ரொம்பவே பரிதாபமாக இருந்தது,உள்ளே இருந்து ஒரு பெண் வந்து என்ன வேண்டும் அம்மா என்று கேட்டார்.வயதான பெண்மணி டீ கடையில் வேலை செய்யும் பெண்ணை பார்த்தார், அந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதை அவரிடம் பேசி தெரிந்து கொண்டார்.
குடிக்க டீ கொண்டு வாம்மா என்றார்.தயாளன் சொன்னது அவருக்கு நினைவு வந்தது.அந்த அம்மா டீ குடித்துவிட்டு 5000 ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்து விட்டு சென்று விட்டார்.
டீ கடையில் வேலை செய்த பெண் காபி டம்பளரை கழுவி வைத்து விட்டு வந்தார். டேபிளில் கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அதை எடுத்து கொண்டு அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க ஓடினார்,அதற்குள் கார் கிளம்பி சென்று விட்டது.
கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்து விட்டு, கையில் அந்த வயதான பெண்மணி விட்டு சென்ற பணத்தையும் எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றார்.
பிரசவ செலவுக்கு என்ன செய்ய போகிறோம் என்று புலம்பி கொண்டு இருந்த தன் கணவருக்கு இந்த பணத்தை காட்ட வேண்டும் என்று அருகில் சென்றார்.ஆனால் மிகுந்த அசதியால் தூங்கி கொண்டு இருந்தார் நம்ம தயாளன்.
”எதை நாம் செய்கிறோமோ, அதுவே நமக்கும் நடக்கும்”.

மனிதத்தேனீயின் தேன்துளி



மனிதத்தேனீயின் தேன்துளி



Thursday 21 April 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்...இது ஒரு பழமொழி... ஆனால்... இது ஒரு மருத்துவக் குறிப்பு.
இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது...
பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.
பழமொழியின் பொருள்:
நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல்... தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம், ஆயுளும் வளரும்
தமிழ் வாழ்க.

Dinamani Paper 21.04.2016 page 3


பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம் News & Photos





மனிதத்தேனீயின் தேன்துளி



Wednesday 20 April 2016

திருத்தேரோட்ட பக்தர்களுக்கு நீர்மோர் - விசிறி வழங்கும் விழா News & Photos





முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

💥கடுங் கோடைக் காலத்தில் நம்மைப் பாதுகாக்கும் தோழன்தான் நுங்கு. தவிருங்கள artificial cool drinks, 🍦🍨🍧 ice cream ஐட்டங்களை!
🌸பனைவெல்லம், பனங்கற்கண்டு,
பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து
கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே
மருத்துவ குணம் வாய்ந்தவை.
🌸நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து,
கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம்,
பொட்டாசியம், தயாமின்,
அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற
சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
🌸நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி,
உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம்.
🌸நுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும்.
இதனால் சாப்பிட பிடிக்காமல்
இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும்.
🌸மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு
இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து.
🌸சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக
எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும்
தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச்
சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.
🌸ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
🌸நுங்கில் அந்த்யூசைன் எனும் ரசாயனம்
இருப்பதால் பெண்களுக்கு மார்பகப்
புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.
🌸வெயில் காலத்தில் அம்மை நோய்கள்
வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு
சக்தியைத் தரும்.
இந்த செய்தியை உங்கள் குடும்ப மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும்...

மனிதத்தேனீ சிறப்புரையாற்றிய இலக்கிய சந்திப்பு News & Photos