Monday 11 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

திருமிகு இராமன் செட்டியார் புகழ் வாழ்க!
பிறந்தநாள் 11.05.20
அகவை 99
அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள்
குறள் எண் 0067
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
இந்தக் குறளை நடைமுறை வாழ்வாக்கி
வாழ்ந்தவராம் ராமனை வாழ்த்து.
குறள் 70:
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
மகனும் தந்தை பெயரை உயர்த்தும்
மகனாக வாழ்கின்றார் சாற்று.
இல்லறத்தில் வள்ளுவத்தின் நல்லறத்தைப் பின்பற்றி
உள்ளத்தில் மாசின்றி நல்லொழுக்கப் பண்புடன்
இவ்வுலகில் வாழ்ந்தவர் நற்புகழ் வாழியவே!
இந்நாளில் வாழ்த்தி வணங்கு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்

No comments:

Post a Comment