Wednesday 29 September 2021

புத்திக் கொள்முதல்.

 புத்திக் கொள்முதல்.

ஒருமுறை செல்வந்தர் ஒருவரின் வீட்டின் தொலை பேசிக் கட்டணம் மிக அதிகமாக வந்தது. 'நான் நம்ம வீட்டு தொலைபேசியைப்
பயன்படுத்துவதே இல்லை. எல்லாவற்றிற்கும் அலுவலகத் தொலைபேசியைத் தான் பயன்படுத்துவேன். ஆனாலும் இவ்வளவு தொகை வந்திருக்கு. யார் இதற்குக் காரணம்?' என்று யோசித்துக் கொண்டு தன் மனைவி யிடம் கேட்டார் குடும்பத் த‌லைவ‌ர்.
'நானும் அலுவலகத் தொலை பேசியை மட்டும பயன்படுத்துகிறேன். எனக்குத் தெரியாது' என்று அவர் மனைவியும் கூறிவிட்டு, மகனிடம் கேட்குமாறு கூறினார். ’நான் வீட்டுத் தொலைபேசியைத் தொடுவதே இல்லை. எனக்கு அலுவலகம் கொடுத்திருக்கும் கைத்தொலைபேசி யில்தான், நண்பர்களிடம்கூடப் பேசுவேன் என்றார் மகன்.
‘நாம் யாரும் பயன்படுத்தலைன்னா எப்படி இவ்வளவு கட்டணம் வந்துள்ளது’ என தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அந்த வீட்டு வேலைக்காரரோ, 'ஐயா, நானும் உங்களைப் போல் எப்போதும் நான் வேலை செய்யும் இடத்திலுள்ள என்னோட அலுவலகத் தொலைபேசி மட்டுமே பயன்படுத்துகிறேன்' என்றார். குடும்ப உறுப்பினர்கள் திகைத்து நின்றனர்.
அந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்வதைத்தான் அவரும் செய்திருக்கிறார். சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்குப் புரிவதே இல்லை, வேறொருவர் நமக்கு அதை செய்யும் வரை.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 47 இல் தடம் பதிக்கும் அருமை இளவல், ஹரிணி குரூப்ஸ் உரிமையாளர், ஹரிணி ரியல் எஸ்டேட், ஹரிணி கார் வாஷ், அலைன்மென்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பேராற்றல் மிக்க தொழிலதிபர், துடிப்பான இளைஞர் கண்டரமாணிக்கம் கேஆர். தியாகராஜன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

பழநி முருகன் தண்டாயுதபாணி கைகளின் ரகசியம்!

 பழநி முருகன் தண்டாயுதபாணி கைகளின் ரகசியம்!

பழநி முருகன்
ராஜ அலங்கார காட்சியை சற்று கூர்ந்து கவனித்தால் ஐயாவின் வலது கையில் தண்டாயுதம் இருக்கும்.
இடது கையை கவனித்தால் அதை ஐயா இரண்டு விதமாக வைத்து இருப்பார்.
சில காட்சிகளில் உள்ளங்கை கீழ் நோக்கியும் சில காட்சிகளில் மேல் நோக்கியும் கைகள் இருக்கும்.
பக்தி மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் அனைவரும் இடது கை இடுப்பில் வைப்பது போல் உள்ள அதாவது உள்ளங்கை கீழ் நோக்கி இருக்கும் காட்சியை கொண்ட தண்டாயுதபாணி முருகனை வைப்பதே சிறப்பு!


*ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.*

 *ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.*

இராமாயணத்தில் முக்கிய அங்கமாக திகழ்பவர் அனுமன் தான்.
வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும்.
அனுமனுக்கு வெண்ணெய் காப்பை சார்த்தி வழிபடுவதனால் கஷ்டங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகி விடும். தாம்பூலம் என்னும் வெற்றிலையை மாலையாக கட்டி அணிவித்து சனிக்கிழமை அனுமத் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கி நலம் பெறலாம்.
அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள். வெற்றி கிடைத்திட திராட்சைப் பழம் படைத்து வழிபட வேண்டும். அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து அனுமனின் அருள் பெறலாம்.
அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றை பெறலாம்.
திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழன் அன்று வெற்றிலை மாலை சார்த்தி வழிபட வேண்டும். புதியதாக துவங்கிய (காரியம்) வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சார்த்தி வழிபடலாம்.
*ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.*
இராமாயணத்தில் முக்கிய அங்கமாக திகழ்பவர் அனுமன் தான்.
வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும்.
அனுமனுக்கு வெண்ணெய் காப்பை சார்த்தி வழிபடுவதனால் கஷ்டங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகி விடும். தாம்பூலம் என்னும் வெற்றிலையை மாலையாக கட்டி அணிவித்து சனிக்கிழமை அனுமத் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கி நலம் பெறலாம்.
அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள். வெற்றி கிடைத்திட திராட்சைப் பழம் படைத்து வழிபட வேண்டும். அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து அனுமனின் அருள் பெறலாம்.
அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றை பெறலாம்.
திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழன் அன்று வெற்றிலை மாலை சார்த்தி வழிபட வேண்டும். புதியதாக துவங்கிய (காரியம்) வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சார்த்தி வழிபடலாம்.

Tuesday 28 September 2021

பகிர்ந்து கொள்ளும் பக்குவம்.

 பகிர்ந்து கொள்ளும் பக்குவம்.

மற்றவர்களை எடை போடுவதில் நாம் எப்போதுமே முதலாவது இடம்தான். ஒருவரைப் பற்றியோ!, ஒரு செயலைப் பற்றியோ!, நன்கு ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமல் ஒரு முடிவுக்கு வருவது வேடிக்கையானது.
தொழிலுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்குமே இது பொருந்தும். கவர்ச்சிகரமாக தொலைக்காட்சியில் வெளியாகும் விளம்பரத்தைப் பார்த்து, அந்தப் பொருள் தரமானது என நம்பிவிடுகிறோம்...
ஒருவரைக் குறித்து இப்படியெல்லாம் எடைபோடுவது சரிதானா...? வேற்று நபர்களை விட்டு விடுவோம். நம் குடும்பத்தில் இருப்பவர்கள், நெருங்கியவர்கள், நண்பர்கள் மேலேயேகூட பல நேரங்களில் நமக்கு தவறான எண்ணங்கள் வந்துவிடுகிறது...
நமது வாழ்க்கையை நாம் ஆழமாக பார்க்ககின்ற போது
அடுத்தவர்களின் வாழ்க்கையை நாம் மேலோட்டமாகத்தான் பார்க்கின்றோம், ஒரு முறையேனும் மற்றவர் எதிர்கொள்ளும் சூழ்நிலையைப் புரிய முயற்சிப்பதே இல்லை...
மற்றவர்களின் தோற்றத்தை எடை போட்டே பழக்கப்பட்ட நாம் ஒரு முறையும், அவர்கள் நிலையிலிருந்து அவர்களை எடைபோடவும் நாம்முனைந்தது இல்லை. மற்றவர் வாழும் சூழ்நிலைகள் நாம் கடந்து வந்த அதே பாதைகளில் இல்லை என்பதை முதலில் நாம் உணர வேண்டும்..
இலண்டனிலிருக்கும் ஒரு பூங்கா. முதியவர் ஒருவர் தன் பேத்தியை அழைத்துக்கொண்டு அங்கே அடிக்கடி வருவார். அவளுடன் கதைகள் பேசுவார். விளையாடுவார். அவள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொல்வார்...
அன்றைக்கு அந்த முதியவர் தன் பேத்தியை அழைத்துக்கொண்டு அங்கே வந்திருந்தார். அவள் கையோடு எடுத்து வந்திருந்த பந்தைக் கொண்டு இருவரும் சிறிது நேரம் விளையாடினார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகிலேயே சாலை இருந்தது...
சற்று தூரத்தில் வண்டியில்வைத்து ஒருவர் ஆப்பிளை விற்றுக்கொண்டு போவதை அந்தச் சிறுமி பார்த்தாள். உடனே!, ``தாத்தா... எனக்கு ஆப்பிள் வேண்டும் ’’ என்று சொல்லி, ஆப்பிள் வண்டியைக் கைகாட்டினாள்.
முதியவர் ஆப்பிள் வியாபாரியைக் குரல் கொடுத்துக் கூப்பிட்டார்...
அவர் நின்றதைப் பார்த்துவிட்டு, பேத்தியை அழைத்துக்கொண்டு சாலைக்குப் போனார். முதியவர் தன் சட்டைப் பையில் கைவிட்டுப் பார்த்தார். அன்று அவர் அதிகமாகப் பணம் எடுத்து வந்திருக்கவில்லை. ஆனால்!, அவரிடமிருந்த பணம் இரண்டு ஆப்பிள்களை வாங்குவதற்குப் போதுமானதாக இருந்தது...
இரண்டு ஆப்பிள்களை வாங்கி, தன் பேத்தியிடம் கொடுத்தார். பேத்தி ஆப்பிள்களை வாங்கிக்கொண்டாள். கைக்கு ஒன்றாக, இரண்டையும் பிடித்துக்கொண்டாள்.
ஆப்பிள்காரர் நகர்ந்ததும் முதியவர் பேத்தியிடம் கேட்டார்...
"கண்ணு...!, இரண்டு ஆப்பிள் இருக்கிறதே... ஒன்று நீ சாப்பிடுவாயாம். மற்றொன்றை தாத்தாவுக்குத் தருவாயாம். எனக் கூற, ’’இதைக் கேட்ட அடுத்த கணம் அந்தச் சிறுமி ஒரு கையிலிருந்த ஆப்பிளை ஒரு கடி கடித்தாள்...
முதியவருக்கு இதைப் பார்த்ததும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் அடுத்துப் பேச வருவதற்குள் அந்தச் சிறுமி மற்றொரு கையிலிருந்த ஆப்பிளையும் கடித்துவிட்டாள்...
பெரியவருக்குக் கோபம் முட்டிக் கொண்டு வந்தது. பேத்திக்கு மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும், தன்னிடமிருப்பதைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற குணம் எப்படி இல்லாமல் போனது என்று வேதனைப்பட்டார்...
பேத்தியைத் தன் மகள் இப்படி பேராசைக்காரியாக வளர்த்திருக்கிறாளே என்கிற வருத்தம் வந்தது. அவர் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்துபோனது.
அப்போது பேத்தி தன் இடது கையிலிருந்த ஆப்பிளை நீட்டினாள். "தாத்தா இதைச் சாப்பிடுங்க...!" இதுதான் நல்லா ருசியா, இனிப்பா இருக்கு. உங்களுக்குத்தான் இனிப்புப் பிடிக்குமே!’’முதியவர் பேச்சிழந்து போனார். பேத்தியை வாரியணைத்து முத்தங்கள் பொழிந்தார்...
ஆம் நண்பர்களே
இப்படித்தான் நாமும் அவசரமாய் மற்றவரை எடை போட்டு விடுகிறோம். அவர்களது சூழ்நிலையை கருத்தில் கொள்வதே இல்லை. ஓர் நபரைப் பார்த்து, அவரின் நடவடிக்கைகளைப் பார்த்து சட்டென்று அவர் குறித்த ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.
காணும் காட்சிகளை வைத்து மற்றவர்களை எடை போடாமல், அடுத்தவர்களுக்கும் நம்மைப்போல ஆயிரம் தொல்லைகள், இடர்பாடுகள் இருக்கும் என்பதை உணர வேண்டும்.
ஆம்!, பிறரைப்பற்றி விமர்ச்சிக்கும் முன்னால் நாம் அவரிடத்தில் இருந்து இருந்தால் நாம் என்ன செய்து இருப்போம் என்று எண்ண வேண்டும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு


 

Monday 27 September 2021

சுயமாக முடிவுகளை எடுங்கள்.

 சுயமாக முடிவுகளை எடுங்கள்.

இந்த உலகில் வெற்றியை நோக்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சோதனைகள் ஏற்படும். அப்படி சோதனை செய்வதில் முக்கியமான ஒன்று தான் *மனம்.*
வாழ்வில் முன்னேறும் போது நிறைய பேர் என்னென்னவோ சொல்வார்கள். இதில் அதிகம் நம்மைப் பற்றிச் சொல்பவர்கள் யார் என்று பார்த்தால், குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது ஆசிரியர்கள் தான். இவர்கள் சொல்வது நமது நலத்திற்காகவே இருக்கட்டும். ஏன் நாம் எதை விருப்பப்பட்டு செய்தாலும் மூக்கை அறுப்பது போல் நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் மனதை தளர விடாமல், தன் எண்ணத்தில் மட்டும் முழு கவனத்தைக் கொண்டு வாழ்வை மேற்கொண்டால், வெற்றியை நிச்சயம் அடையலாம்.
எப்போதும் மற்றவர்கள் கூறுவதை கேட்காமல், உங்கள் உள்ளம் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் உள்ளம் என்ன சொல்கிறதோ, அதைச் செய்யுங்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதால், வெற்றியை அடைய முடியாது. ஆகவே உங்கள் மனம் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு, அதன் படி நடக்க வேண்டும். உதாரணமாக, உங்களுக்கு ஏதேனும் ஒரு புதிய விஷயங்களைச் செய்யும் போது, மற்றவர்கள் முடியாது என்று நினைப்பதைக் கூட, நீங்கள் முழு கவனத்தோடு செய்து முடிப்பீர்கள்.
எந்த நேரத்திலும் நீங்களே முடிவெடுங்கள். இதுவரை சிறுவயதில் உங்களுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் முடிவெடுப்பார்கள். இப்போது நீங்கள் வளர்ந்து விட்டீர்கள். இந்த நேரம் தான் நீங்கள் சுயமாக உங்கள் முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம். எப்போதும் எதையும் செய்ய முடியவில்லை என்று மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்காமல், பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், நினைத்தால் மட்டும் போதாது, சுயமாக முடிவு எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
இது தான் மிகவும் முக்கியமான ஒன்று. மேலே சொன்னது போல், வாழ்க்கையில் முன்னேறும் போது தோல்விகளைச் சந்தித்து தான் ஆக வேண்டும். அதற்காக அந்த தோல்விகளையே மனதில் வைத்துக் கொண்டு வாழ்க்கையில் இருக்க கூடாது. "தோல்வி தான் வெற்றியின் முதல் படி". தோல்விகளைச் சந்திக்க சந்திக்க தான் மனம் தெம்பாக, அனைத்தையும் எதிர்த்து நின்று, தைரியமாகச் செல்ல முடியும். இதனால் வெற்றியையும் எளிதில் அடைய முடியும்.
மேற்கூறியவாறெல்லாம் நடந்து வந்தால், வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைவதோடு, வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கும் வரலாம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய மணமக்கள்.

 வாழிய மணமக்கள்.

இன்று இரவு மதுரை தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற அருமை நண்பர், நமது கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடி, எழுத்தாளர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக் கண்காணிப்பாளர், பொறியாளர்
கோ. ஏகாம்பரம் அவர்களின் மகன் கிஷோர் குமார் - நதியா
திருமண வரவேற்பில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம். மலரகம் சந்திரன், தியாக தீபம் அ. பாலு தம்பதியர், சீ. கிருஷ்ணமூர்த்தி, பி. பன்னீர்செல்வம், பி. தங்கமணி, ரெ. கார்த்திகேயன் மற்றும் காந்தி கிராம பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர். த. ரவிச்சந்திரன், அரவிந்த் ஸ்நாக்ஸ் உரிமையாளர் ஆர். தின்னப்பன் உள்ளனர்.
வாழிய மணமக்கள் பல்லாண்டு.






ஆணவம் நீக்கும் பைரவர் :

 ஆணவம் நீக்கும் பைரவர் :

திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
பிரம்ப லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஒதிக் கொண்டிருப்பார். இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
இங்கு பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் சகல செல்வங்களையும் பெற்று வாழலாம்


பயிற்சியே பயனளிக்கும்.

 பயிற்சியே பயனளிக்கும்.

ஒரு சாதாரணத் திறமையை, வலிமை பொருந்திய ஆற்றலாக மாற்றுவது பயிற்சி. தெரு முனைகளிலே நாம் அனைவருமே கிரிக்கெட் அல்லது கால்பந்து ஆடிவிடலாம். ஆனால் அதை அடுத்த நிலைக்கு முன் நகர்த்துவது எது?
ஓடத் தெரிந்த ஒரு கோடிப் பேர்களில் ஒலிம்பிக்ஸில் ஓடுபவரை, பயிற்சி மட்டும்தான் தீர்மானிக்கும். பயிற்சி எடுத்துக் கொள்ளாததால் பலபேர் பாத்ரூம் பாடகர்களாகவே விளங்குகிறார்கள். எழுதும் திறமை இருந்தால் போதாது. பயிற்சி ஒன்றே ஒருவரை எழுத்தாளராக மாற்றும். சாதாரணமான பேச்சுத் திறமையை தகவல் தொடர்பு ஆற்றலாக மாற்றுவது எது? இன்னும் பொதுப்படையாகச் சொன்னால், ஒரு தனி மனிதனின் எளிய திறமையை, தொழில் முறைத் திறனாக (Professional Efficiency) உருவாக்கிக் காட்டுவதே பயிற்சி ஆகும்.
வளர்ந்து வரும் புதிய கார்ப்பரேட் சூழலில் (Corporate Culture), பணிபுரியும் அனைவருக்கும் அவ்வப்போது சிறப்புப் பயிற்சி முகாம்கள் (Special Training Camps)
அளிப்பது பணித் திறனை அதிகரிக்கின்றது என்று கண்டுபிடித்துள்ளனர்.
தொடர்ந்து பயிற்சி செய்யும் போது அதிலே தேக்க நிலை வந்துவிடக் கூடாது. அதையும் தாண்டிச் செல்லும் துணிவும் ஆர்வமும் வேண்டும். கபில்தேவ், தோனி போன்ற விளையாட்டு வீரர்கள் முதலில் பேட்ஸ் மேன் என்றுதான் பெயர் பெற்றார்கள். ஆனால் அந்தத் துறையிலே மட்டும் நிற்காமல் ஆல் ரவுண்டர் என்ற சிறப்பையும், பிற துறைப் பயிற்சிகளின் மூலம் பெற்றார்கள்.
கல்வி பயிலும் போதும், பணியில் சேர்ந்த பிறகும், மற்றவரை விட அதிகமாக என்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணுபவர்களே முன்னேற்றம் காண விழைபவர்கள். அவர்கள் முழுமை தரும் பயிற்சி முறைகளை என்றும் கைவிட மாட்டார்கள்.
உங்கள் தனித்துவத்தைக் காட்டி வாழ்வில் வெற்றிச் சிகரங்களைத் தொட, பயிற்சியே பற்றுக்கோடாகும்..
முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இடைப்பட்ட முதன்மைப் பாலம் பயிற்சியே.
Krishna Raman, Bsraja Raja and 1 other

மனிதத்தேனீயின் தேன்துளி


 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவைப் போற்றுவோம்


 

Saturday 25 September 2021

பாராட்டி மகிழ்வோம்.

தனது கடுமையான உழைப்பாலும் நேர்த்தியான பணிகளாலும் கடந்த கால் நூற்றாண்டுகளாக வணிகம் மற்றும் பல்துறை விளம்பரத்தில் தனி முத்திரை பதிக்கும் நமது நண்பர், சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், நெற்குப்பை இராம்குமார் சிங்காரம் அவர்களுக்கு நேற்று சென்னை ஐ டி சி சோழாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் டைம்ஸ் ஆப் இந்தியா விருதினை திரைப்பட நட்சத்திரம் சிம்ரன் வழங்கினார். தமிழகத்தில் இந்தத் துறையில் விருது பெற்ற ஒரே நிறுவனமும் இவரது கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேசன்ஸ் மட்டும் என்பது கூடுதல் சிறப்பு. தொடரட்டும் சாதனைச் சரித்திரம். - மனிதத்தேனீ


துளசியும் பெருமாளும்

 துளசியும் பெருமாளும்

🌿🙏*
👑பெருமாள் கோவிலில் துளசி வழிபடக் காரணமும்,துளசியின் அதி அற்புத சக்தியும்👑
🪴மகா விஷ்ணுவிற்கு உகந்த
பொருட்களில் முதலிடத்தில் இருப்பது துளசியாகும்.
🪴பெருமாள் கோவில்களிலும் துளசியை தனியாக பூஜையும் செய்வார்கள்.
🪴மேலும் பல்வேறு பிணிகளுக்கு
துளசி மிகச் சிறந்த மருந்தாகவும்
பயன்படுத்துகின்றனர்.
🪴துளசியின் வேறு பெயர்கள் பிருந்தா,
பிருந்தாவனி,
விஸ்வபாவனி,
புஷ்பசார,
நந்தினி,
கிருஷ்ண ஜீவனி,
விஸ்வ பூஜிதா.
🪴துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி.துளசியின் தாவரப்பெயர் சேக்ரட் பேசில் பிளான்ட்.
🪴துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.சங்காபிஷேகத்தில் துளசி சங்கு,
துளசி,
சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மகா ஞானியாகும் பாக்கியமும்,முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
🪴சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது.
🪴சிவபெருமானுக்கு பிடித்த அபிஷேகங்களில் உயர்ந்தது
சங்காபிஷேகம்.
🌱கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின்
அம்சமாக சுதர்மரும்,லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள்.இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள்.
🌱ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார்.
🌱இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க
வேண்டியதாயிற்று.
🌱அதே போல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள்.மாதவியின்
மகள் தான் துளசி.
🌱சங்கசூடனும்,துளசியும் திருமணம் செய்து
கொள்கிறார்கள்.பின்
கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும்,சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது.
🌱இதனால் சங்கசூடன் விஷ்ணுவுடனும்,துளசி
மகாலட்சுமியுடனும் மீண்டும் கலந்து விட்டார்கள்.
🌱இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும்,லட்சுமியும்
வாசம் செய்வதாக கூறப்படுகிறது.
🌱கிருஷ்ண பகவான் பாமா,ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். 🌱இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும்,ஆழமான பக்தியும்
கொண்டிருந்தாள்.அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து
வந்தாள்.
🌱ஆனால் பாமாவோ,விஷ்ணு தன்னை மார்பில் சுமந்திருப்பதாலும்,கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும்,தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமையாக்கி கொள்ள நினைத்தாள்.
🌱இதற்காக கண்ணனை,துலாபார தராசு தட்டின் ஒரு புறமும்,மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள்.ஆனால் தராசு சமமாகவில்லை. 🌱அப்போது அங்கு வந்த ருக்மணி,கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என
வருந்தி,கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்த போது தராசு சமமாகியது.
🌱கண்ணன் புன்முறுவலுடன்,நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும்.
🌱நான்,எனது என்ற அகந்தையை ஒழித்து,உண்மையான பக்தியுடன் என்னை சரணடைபவருக்கே நான்
சொந்தம்,என்றார்.
🌱தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து வணங்கினாள் பாமா.
🪴துளசியின் ஒரு இதழ்,பொன் பொருள் போன்றவற்றைவிட உயர்ந்தது என்பதை நிருபித்தார் கிருஷ்ணனர்.
🪴எனவே,தான் இவ்வளவு சிறப்பு வாய்ந்த
மகாலட்மியின் அம்சமான துளசியை உலகில் உள்ள அனைத்து பெருமாள்
திருக்கோவில்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வழிபடுகின்றனர்.
*🙏ௐ நமோ நாராயணா

எந்நாளும் நன்னாளே

 எந்நாளும் நன்னாளே

ஒவ்வொரு நாளும் வெற்றிகரமானதாக இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமானதாக இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.. ஆனால் கடந்து சென்ற நாட்களில் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு வரும் நாட்களை வசந்தமாக்குங்கள்.
எல்லா நாட்களும் வெற்றி நாளாக வேண்டும் என்று நாம் நினைப்பதில் தவறில்லை. ஆனால் ஒருவேளை அது அவ்வாறு இல்லாவிட்டால் மகிழ்ச்சியான நாட்களை எண்ணி நம்மை நாமே திடப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு நாளையும் சிறப்பானதாக்க நம்முடைய முயற்சி அவசியம்.
தோற்ற நாட்களை எண்ணி வருந்தாமல் வெற்றி பெற்ற மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு போராட வேண்டும். தோற்றுப் போன நாட்களை எண்ணி நேரத்தை விரயம் செய்யாமல் அதை எப்படி வெற்றியாக மாற்ற முடியும் என்று சிந்தியுங்கள். தவறுகளைத் திருத்திக் கொண்டு வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.
இரவு தூங்குவதற்கு முன் இறைவனிடம் இந்த நாள் எனக்கு இனிதே நிறைவுற்றது எதிர்வரும் நாளும் எனக்குச் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று வேண்டுங்கள். மனதின் எண்ணங்களுக்கு என்றுமே சக்தி அதிகம். மறுநாள் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை வரிசைப்படுத்துங்கள். அதை எவ்வாறு திறம்பட முடிப்பது என்று திட்டமிடுங்கள்.
காலையில் எழுந்தவுடன் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். வேலைகளை விரைவாக முடித்து வெற்றி காண்பீர்கள். நிச்சயம் அந்த நாள் வெற்றி நாளாக இருக்கும். வெற்றியும் தோல்வியும் உங்கள் கையில் தான் உள்ளது. திட்டமிட்டுத் திறம்பட உங்கள் வேலையைச் செய்தால் வெற்றி நிச்சயம்.
எல்லா நாளும் மகிழ்ச்சிப் பொங்க வேண்டுமெனில் அயராத முயற்சியும் திட்டமிடலும் முயற்சியும் தேவை. வெற்றி வேண்டுமா போட்டுப் பாருங்க எதிர்நீச்சல். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. தோல்விகளைத் தூக்கிப் போடுங்கள். வெற்றி நாளை நினைத்து வீறுநடை போடுங்கள். நீங்கள் நினைத்தால் எல்லா நாளும் இனிய நாளே.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


உடுமலை நாராயண கவி பிறந்த நாள்


 

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றுவோம்


 

வித்தியாசமான அம்மன் திருக்கோலம்*

 வித்தியாசமான அம்மன் திருக்கோலம்*

* காரைக்குடியில் உள்ள கொப்புடையம்மன் கோவிலில், மூல விக்கிரகம் கிடையாது. உற்சவர் விக்கிரகமே மூலவராக வழிபடப்படுகிறது.
* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் அருகில் உள்ளது பராஞ்சேரி. இங்கு பள்ளிகொண்ட கோலத்தில் துர்க்கை அம்மனை தரிசிக்கலாம்.
* திருவெண்காட்டில் பிரம்மனுக்கு ஞானம் அருளும் சக்தியாக, ‘பிரம வித்யாம்பிகை’ என்ற பெயரில் அம்பாள் வீற்றிருக்கிறார்.
* மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் துர்க்கை அம்மனுக்கு தனிக் கோவில் அமைந்துள்ளது.
* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில், எட்டுக் கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் உள்ள துர்க்கை அம்மனை தரிசனம் செய்யலாம்.
* திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் பெரியநாயகி அம்மன் சன்னிதி மலை அடிவாரத்திலும், கனககிரீஸ்வரர் சன்னிதி மலைக்கு மேலேயும் அமைந்திருக்கிறது.
* கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில், சயன கோலத்தில் அம்மன் காட்சி தருகிறாள்.
* திருவாரூர் தியாகராஜர் கோவிலில் முருகப்பெருமானின் தலையை தடவிய நிலையில் நீலோத்பலாம்பாளையும், கால்மேல் கால்போட்ட கோலத்தில் கமலாம்பாளையும் தரிசிக்கலாம்.
* திருவெண்காட்டில் உள்ள புதன் தலத்தில், திருஞானசம்பந்தரை இடுப்பில் தூக்கி வைத்த நிலையில் பெரியநாயகி அம்மன் காணப்படுகிறாள்.
* காஞ்சிபுரத்தில் உள்ள ஆதி காமாட்சி ஆலயத்தில், லிங்கத்தின் பாணத்தில் அம்மன் வடிவம் காணப்படுகிறது. இதனை ‘அர்த்தநாரீஸ்வர லிங்கம்’ என்கிறார்கள்.
* கும்பகோணம் அய்யவாடி பிரத்தியங்கிரா ஆலயத்தில், சிம்ம முகத்துடன் அம்மன் அருள்பாலிக்கிறார்.

Friday 24 September 2021

திருச்சிற்றம்பலம்

 திருச்சிற்றம்பலம்

இறைவனை வணங்கும்போது சிலர் கைகளை தலைக்குமேல் தூக்கி வணங்குகிறார்கள். சிலர் கைகளைக் குவித்து முகத்திற்கு அருகில் வைத்து வணங்குகிறார்கள்.
எது சரியானது?
இரண்டுமே சரியானது தான். ஒரு விரலால் கன்னத்தில் தட்டிக் கொண்டும், ஆள்காட்டி விரலை மடக்கி வாயில் வைத்து "ச்' கொட்டியும் வணங்கும் இன்றைய நாகரிகத்தில், கைகளைக் கூப்பி வணங்குபவர்களை முதலில் நாம் வணங்கலாம்.
கரம் குவித்தல், சிரம் குவித்தல் என இரண்டையுமே மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறுகிறார்.
தாங்கள் முதலாவதாகக் கூறியது சிரம் குவித்தலையும், இரண்டாவதாகக் கூறியது கரம்குவித்தலையும் சாரும்.
கரம் குவித்து வணங்கினால் சுவாமி சந்தோஷப்பட்டு கேட்டதைத் தருகிறார்.
சிரம் குவித்து வழிபட்டால் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்தி விடுவார்.
சிவபுராணத்தில்,
"கரங்குவிப்பார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க; சிரங்குவிப்பார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க'' என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.
சிவ சிவ
விஜியலஷ்மி


நிம்மதி நிலைத்திட.

 நிம்மதி நிலைத்திட.

தன்னிறைவு என்ற வார்த்தையில் உள்ள அர்த்தத்தை நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும், பட்டுக்கோட்டையில் ஒரு நிலமும்,சென்னை ஜார்ஜ் கோட்டைக்கு பக்கத்தில் ஒரு பலமாடி கட்டிடமும் இருந்தால்தான் தன்னிறைவு என்று எண்ணக் கூடாது,ஒருவர் உயிர்வாழ என்ன அடிப்படைத் தேவைகள் அது எந்த சிரமும் இல்லாமல் பூர்த்தி ஆகுதோ அதனைதான் தன்னிறைவு என்று கொள்ளவேண்டும்.
அடிப்படை வசதிகளைப் பெற பணம் முக்கியம்தான். ஆனால் அதுவே வாழ்க்கையாகி விடாது. ஒருவருக்குப் பணம் வந்தவுடனேயே பாதுகாக்க வேண்டிய அவசியமும் வந்து விடுகிறது. அதனால் பல சமயங்களில் நிம்மதி போகிறது.
ஒரு ஊரில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர், ஒரு சிறிய வீட்டைக்கட்டி அமைதியாக வாழ்ந்துவந்தார், நிம்மதியான தூக்கமும் இருந்தது, திடீரென அவருக்கு ஒரு பணக்காரர் வந்து , இறைவன் என் கனவில் வந்து இந்த வைரக்கல்லை உங்களிடம் கொடுக்கச் சொன்னார், அதை ஒப்படைப்பது என் கடமை எனவே இதை ஏற்றுக்கொள்ளுங்கள், மனிதனுக்குத் தலை,கால் புரியவில்லை சந்தோசமாக பெற்றுக்கொண்டார் ஆனால் அதனை பெற்றுக்கொண்ட நாள் முதல் அதனை எப்படி பாதுகாப்பது என்ற சிந்தனையிலயே அவர் தூக்கம் மறந்து நிம்மதி இழந்து பேயாக மாறிப்போனார்..
இவ்வாறுதான் நாம் வாழ்க்கையும் கொடுத்ததை கொண்டு நிறைவடையாமல், மேலும் எடுத்துக் கொள்ள நினைக்கிறது, நிம்மதியை அணைக்கின்றது,ஆகையால்
தன்னிறைவு தன்னம்பிக்கை தரும், வாழ்க்கையைச் செழிப்பாக்கும்.

மனிதத்தேனீயின் தேன்துளி