Saturday 23 May 2020

நம்ம மதுரை முத்துவின் மனிதாபிமானம்.


நாடு முழுவதும் உள்ள அசாதாரண சூழ்நிலையில் சாதாரண மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களை ஆறுதல்படுத்தும் வண்ணம் தனது நட்பு வட்டத்தின் மூலம் ரூ எட்டு லட்சம் மதிப்பில் 1000 பேருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கியும், தனது சொந்தச் செலவில் 500 பேருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கியது அறிந்து நெகிழ்ந்தேன்.
கடந்த 60 நாட்களாக நிகழ்ச்சி இல்லை, முழு வருவாய் இழப்பு, அண்மையில் அவரது தந்தை அரசபட்டி ராமசாமி அவர்கள் இறைவன் திருவடி அடைந்தார். இப்படி உள்ள சூழலில் தன்னோடு பணியாற்றும் சக கலைஞர்களின் தேவை மற்றும் இங்குள்ள மக்களுக்கு இந்த உதவியைச் செய்துள்ளது நமது தமிழர்களின் ஈரமான உணர்வுகளை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
நாம் புகழ்பெற்றுள்ளோம், நாம் மக்களால் போற்றப் படுகின்றோம் என்பதெல்லாம் வந்து போகும் மகிழ்ச்சி. ஆனால் இது தான் உண்மையான மகிழ்ச்சி.
வாழிய நகைச்சுவை நாவரசு மதுரை முத்து, வாழிய அவரது நற்குடும்பம்.
வணக்கத்துடன் - மனிதத்தேனீ

No comments:

Post a Comment