Wednesday 31 October 2018

தினபூமி மதுரை 31.10.2018 பக்கம் 8


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


தவறான செய்தி, தவறான வழியில்..

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*இயற்கை* *வாழ்வியல்* *முறை*
🍏🍏🍓🍓🍋🍋
*ஆறுவகைச்* *சுவை* *என்ன* *என்ன*
🍒🍒🍒
*காரம்* :
உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் :
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு ஆகியவற்றில் அதிகப்படியான காரச்சுவை உள்ளது.
🥒🥒🥒
*கசப்பு* :
உடம்பிலுள்ள தேவையில்லாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தியைக் கூட்டும். சளியைக் கட்டுப்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் :
பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் கசப்பு சுவை மிகுதியாய் உள்ளது.
🍓🍓🍓
*இனிப்பு* :
உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் :
பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
🍇🍇🍇
*புளிப்பு* :
இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் :
எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
🍋🍋🍋
*துவர்ப்பு* :
இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் :
வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
*உப்பு* :
ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் :
🍐🍐🍐
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.🍓🍓🍓🍓🍓🍓
🍋🍋🍋🍋🍋🍋
*உடலில்* *உள்ள*
*எல்லாம்* *உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த*
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
🍇🍇🍇🍇🍇🍇
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*
*பவானி*
*ஈரோடு மாவட்டம்*
*செல் நம்பர்*
*6383487768*
*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மன உறுதியும் நற் சிந்தனையும்..
தேச நலன் காத்திட்ட சர்தார் வல்லபாய் படேல். ...
*👉 சுதந்திரப் போராட்டக் காலம். கலகம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 46 விடுதலைப் போராட்ட வீரர்களின் சார்பாக வெள்ளைக்கார நீதிபதி முன்பாக வாதம் செய்கிறார் அவர்.*
*👉 நடுவில் வழக்கறிஞரின் உதவியாளர் வந்து ரகசியமாக ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார்.*
*👉 அதைப் பார்த்துவிட்டு கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வாதத்தைத் தொடர்கிறார்.*
*👉 உணவு இடைவேளையில் நீதிபதி அவரை அழைத்து "அதென்ன காகிதம்?'' என்றுக் கேட்க..*
*👉 "என் மனவி இறந்துவிட்டதாகச் செய்தி சொன்ன தந்தி'' என்றார் அவர்.*
*👉 பதறிய நீதிபதி,"அப்படியே நிறுத்திவிட்டுச் சென்றிருக்கலாமே?'' என்று கேட்ட போது அவர் சொன்னார்,*
*👉 "உடனே நான் போவதனால் பிரிந்த உயிரை மீட்டு வர சாத்தியமில்லை. ஆனால் என் வாதத்தால் 46 உயிர்களை தூக்கு மேடைக்கு அனுப்பாமல் மீ்ட்க சாத்தியமிருக்கிறதே..''*
*👉 வியந்துபோன நிதிபதி 46 பேரையும் விடுதலை செய்தார்.*
*🙏 அந்த வழக்கறிஞர்:*
*🙏 சர்தார் வல்லபாய் பட்டேல்.*
*👉 இப்படியான அருமையான மனிதர்கள்*
*வாழ்ந்து சென்ற பூமி:*

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் வாழிய புகழ்


மனிதத்தேனீயின் தேன்துளி


கண்ணியமான விளக்கம், பாராட்டுக்கள்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மாண்பு மிகு நீதிபதிகளே... அரசியல்வாதிகளே....பெரும்பான்மை இந்து மக்களே....கொஞ்சம் பக்கத்து நாடுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்...
உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI).
இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்.
42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.
ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர்.
இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.
பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.
. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம்
கடைபிடிக்கபடுகிறது.
Nyepi day என்று சொல்கிறார்கள்.
2013ல் மார்ச் 12ம் தேதி இந்த மௌன தினம் வருகிறது.
ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது.
காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது.
பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும்.
யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.
. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான்.
பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன.
புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.
பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை ‘வேஷ்டி’ தான்.
எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது.
இந்தியாவில் கூட சில கோவில்களில்தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும்.
பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது.
அதைதான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள்.
Parahyangan – Pawongan – Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.
Trikala Sandhya என்பது சூரிய நமஸ்காரம்.
அனைத்துப் பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்.
அதே போல மூன்று வேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும்.
பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள்.
இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே,
அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.
உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது,
பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது.
பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள்.
அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள்.
ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள்.
அதற்கு Subak System என்று பெயர்.
இங்கே நீர் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுபாட்டில் தான் இருக்கும்.
உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது.
இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.
பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை.
இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள்.
ராமாயணம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.
ராமாயணம் ஓலைசுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும்.
அனைத்து திருவிழாகளிலும் பாலி நடனம் ஆடுவார்கள்,
அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள்.
ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது.
அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை,
பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை.
இந்தோனேசியாவின் பாலி தீவில் ஹலுன்ஹன் (Galungan) என்ற விழா மிக சிறப்பாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது.
அந்த விழா படங்கள் சில,…
படித்ததில் பிடித்தது.(மீள்)
நன்றி ராஜப்பா தஞ்சை

Tuesday 30 October 2018

பரிதிமாற்கலைஞர் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


திரைக் கலைஞர் சிவகுமார் விளக்கம் கண்ணியமாக உள்ளது, மகிழ்ச்சி -மனிதத்தேனீ


மாலைமுரசு 30.10.2018 பக்கம் 5


பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருவிழா - கருத்தரங்கம்




முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மனம் என்பது என்ன?
மனமென்பது நினைவுகளின்
குப்பை தொட்டி.
அதில் கோடிக்கணக்கான
எண்ணங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
அவைகளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால்.
அவை அப்படியே கிடக்கும் .
நாம் வெளியில் நம் முன்னே உலாவும்
ஏதாவது ஒரு எண்ணத்தை கண்டு அதன் மீது
கவனத்தை செலுத்தினால். அது தொடர்பான
நம் மனதில் உள்ள எண்ணங்கள் ஒன்றொன்றாக
மேலே எழும்.
நாம் அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால்
அவைகள் மீண்டும் போய் உறங்கி விடும்.
அவ்வாறு நாம் செய்யாவிடில் அது வெளியே போய்
அது தொடர்பான எண்ணங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு
வலிமை பெற்று நம்மை ஆட்டி வைக்க தொடங்கும்.
அது பல தொடர் விளைவுகளுக்கு நம்மை ஆளாக்கி
நம் மனதின் அமைதியை கெடுத்துவிடும்
ஆகவே நாம் நம் மனதின் எண்ணங்களிடம் மிகவும் எச்சரிக்கையாக
இருக்கவேண்டும்.
எண்ணங்கள் தோன்றும்போதே அது என், எதற்க்காக தோன்றுகிறது
என்பதை விசாரித்து நாம் அது விரிக்கும் வலையில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க பழகவேண்டும்.
அவ்வாறு செய்துகொண்டுவந்தால்.நாம் எப்போதும் அமைதியாக
இருக்க முடியும்.
நாம் நம்மை மகிழ்ச்சியாக இருக்க எந்த காரணத்தைக் கொண்டும் எதிர்மறை எண்ணங்களுக்கு ஊக்கமோ. ஆக்கமோ அளிக்கக் கூடாது.
ஒரு எதிர்மறை எண்ணத்திற்கு நாம் முக்கியத்துவம் அளித்தால் அது புறத்தே உள்ள நம்மை சுற்றியுள்ள பல எதிர்மறை எண்ணங்கள் உடையவர்களோடு தொடர்பு கொண்டு நம்முடைய சக்தி எல்லாவற்றையும் கபளீகரம் செய்துவிடும்.
அதனால் நாம் கூடிய மட்டும் அது போன்ற சிந்தனை உள்ளவர்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும்.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சிந்திக்க வேண்டும்....
இளைய தலைமுறை.....
டெல்லியில் வாஜிராம் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வரும் ஈரோட்டை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் ஸ்ரீமதி கடந்த 7 மாதங்களாக டெல்லியில் உள்ள வாஜிராம் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அதன்பின் போலீசார் அங்கு இருந்தவர்களிடம் விசாரணையை தொடங்கிய போது கடந்த 15 நாட்களாக மாணவி ஸ்ரீமதி மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அதனால் அவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
என்னைப் பொறுத்த வரை இந்த பேரிழப்பு நம் கல்வி முறைக்குப் பெரும் சவால். அவள் தம் பெற்றோர்க்கு பேரிடி. நொறுங்கிப் போயிருக்கும் அவர்தம் இதயத்திற்கு இந்த உலகத்தில் மருந்துண்டா?
இந்த காவல்துறை, உடற்கூறு ஆய்வு, தற்கொலைக்கு முன்பு மாணவி ஸ்ரீமதி எழுதிய கடிதம், இனி வரும் அரசியல்வாதிகளின் உதவி விளம்பரங்கள், வழக்குப்பதிவு இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
காரண காரியங்களும் நமக்குத் தேவையில்லை.போன உயிர் போனது தான். இனி ஸ்ரீமதி என்ற அழகு தேவதை உலகத்தில் இல்லை. நினைக்கவே மனம் கனக்கிறது. முன் பின் பார்க்காத நமக்கே தாங்க முடியவில்லை என்றால் அந்தப் பெண்ணின் பெற்றோர் திடீரென்று கிட்டத்தட்ட உறைந்து போன நிலையிலிருந்து மாற இன்னும் வெகு காலம் பிடிக்கும் தானே. ஏன் இத்துணை போராட்டம் படிப்பிற்கு?
வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள தொடர்ந்து இதுபோல தற்கொலை செய்து கொள்வது தமிழக மக்களின் மனதில் அச்சத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளதே. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இது போல டெல்லியில் படித்து வந்த சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை, AIMS ல் டாக்டருக்குப் படித்த திருப்பூர் மாணவர் தற்கொலை என்று பட்டியல் நீள்கிறது. இதோடு நம் பெற்றோர் மற்றும் அந்த மாணவரின் கனவுகளும் சிதைகின்றது.
இரண்டு நாட்கள் துக்கத்தோடு முடிகின்ற விஷயமா இது ?
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே படிக்காத நம் தமிழக வியாபாரிகள் கூட கடல் கடந்து வாணிகம் செய்தவர்கள். இன்று இத்துணை தொழில் நுட்ப வளர்ச்சி, மற்றும் அனைத்து வசதிகளும் உள்ள இந்த நாளில் நம் குழந்தைகளால் பக்கத்தில் நம் நாட்டிற்குள்ளேயே இருக்கும் டெல்லியில் இருந்து ஏன் படிக்க முடியவில்லை என்பது பல கேள்விகளுக்கு இட மளிக்கிறது. அவற்றின் பின்னனிக் காரணங்களை இங்கே பதிவிட விழைகிறேன்.
1. நாட்டின் கலாச்சார சீரழிவு முதல் காரணம்.
2. பெற்றோரின் பேராசை- குழந்தைகளின் மேல் தங்களின் நினைவேறா கனவுகளை அழுத்துவது.
3.வாழ்வியல் சூழல் மாற்றங்களைக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்காமல் விடுவது.
4. மாணவ மாணவிகள் தங்களின் மன அழுத்தத்தை விட்டு வெளியே வர முடியா கல்விச் சுமையும், பாடத் திட்டங்களும்.
5. தங்களின் மனத்தை இலகுவாக வைக்கத் தெரியா பாங்கு.
6. சகிப்புத் தன்மையையும்,தைரியத்தையும் , தன்னம்பிக்கையையும் அளிக்காத கல்வி முறை.
7.பாதுகாப்பான வாழ்க்கைச் சூழல் இல்லாத நிலை.
8. இன்னும் அதிகமாக ,பெண் மாணவிகளின் கையறு நிலை.
9.கல்விக் கூடங்களின் பணப் பேராசைகளும், மெத்தனப் போக்கும்.
10. தக்க இடத்தில் கற்ற கல்வியால் அறிவைப் பயன் படுத்த முடியாத தற்போதைய அறிவு சாராக் கல்வி.
இப்படி காரணங்கள் பலப் பல.
நம் பரிதாப உணர்ச்சியோ, விவாதங்களோ போன உயிரைத் திருப்பித் தராது. ஸ்ரீமதியின் பெற்றோர் கண்ணீருக்கும் யாராலும் பதில் தர இயலாது. வேண்டாம் இந்த உயிர்ப் பலி கண்காணா இடத்தில். இதை விட கொடுமை பெற்றோர்க்கு வேறு எதுவும் இல்லை.
ஆக இனி ஒரு விதி செய்வோம். பெற்றோராகிய நாம் குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுப்பது மட்டும் கடமை அல்ல. வாழ்க்கையின் சவால்களை அவர்களே எதிர் கொள்ள கல்வியோடு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் எப்போதும் கற்றுக் கொடுக்க வேண்டும். படிக்க முடிந்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று படி. முடியவில்லையா வந்துவிடு என்று படிப்பைத் தவிர, உலகத்தில் வாழ்க்கையை வாழ ஆயிரம் வழிகள் உண்டு என்ற ஊக்கத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக எதற்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல என்ற தெளிவைக் கொடுக்க வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே அன்றி வாழ்வை மாய்த்துக் கொள்ள அல்ல - மானிடராய்ப் பிறப்பது அரிது : அதை ஒரு முறை வாழ்ந்து பார் என்று அவர்களோடு இருந்து இந்த பரந்த உலகத்தைக் காட்ட வேண்டும். அதுவே பெற்றோரின் தற்போதைய கடமை.
நன்றி லீலா ராம் பதிவு.

தீபாவளி இனிப்பு வழங்கி மனிதத்தேனீக்கு சால்வை அணிவித்த தருணம்.



மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத் தலைவர் எம். சுந்தரேசன், செயலாளர் வீர. சுப்பிரமணியன், நிர்வாகிகள் பழ. கண்ணன், ஏ. முருகப்பன், கவிஞர் சி. லெட்சுமணன் ஒரு இனிய சந்திப்பு. தீபாவளி இனிப்பு வழங்கி மனிதத்தேனீக்கு சால்வை அணிவித்த தருணம்.


Monday 29 October 2018

கவியரசு WhatsApp 29.10.2018

கவியரசு WhatsApp
29.10.2010.
கவி:10. அரசு:79.
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
இன்று உலக பக்கவாத தினம்.
இது மனிதனுக்கு உண்டாகும் நோய்களில் ஆபத்தானது. ரத்த நாளங்களில் அடைப்பு உண்டாகி, மூளையின் பாகங்கள் செயல் இழப்பதைதான் பக்கவாதம் என்கிறார்கள். எந்தவித முன் அறிகுறியும் இல்லாமல் வரக்கூடிய ஆபத்தான நோய் இது. அதனால்தான் இதை ஆங்கிலத்தில் ஸ்ட்ரோக் என்பார்கள். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத் தடை, ரத்தக் கசிவு போன்ற காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது. இதனால் உடலின் பாகங்கள் செயல்பாட்டை இழந்து அசைவின்றி போய்விடுகிறது. அதிக அளவு ரத்த அழுத்தம், தேவையற்ற கொழுப்பு பொருள்கள் உடலில் தேங்குவது போன்றவை தான் பக்கவாதம் வர துணை புரிகிறது.
இன்றைய தினத்தில் நம் மனதில் நினைவில் நின்ற கவியரசரின் பாடல் ஒன்று.
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ..
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ
சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ...
மாற்றம் காண்பதுண்டோ
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ..
கால்கள் இல்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா..
இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து
காதல் தரவில்லையா...
காதல் தரவில்லையா
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து
காதல் உறவாடுவேன்..
உயர் மானம் பெரிதென்று வாழும் குல மாதர்
வாழ்வின் சுவை கூறுவேன்
வாழ்வின் சுவை கூறுவேன்..
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
குறைவதுண்டோ..
படம்: தங்கமலை ரகசியம்
பாடல் : கவியரசர்.
🚺🚺🚺🚺🚺
🙏🏿..கண்ணன்சேகர்.

நாளை காலை நடைபெறும் நமது விழா.. .


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

திரைப் பாடல்களில் வாழ்க்கைக் கலையைக் கற்றுத் தந்த கவியரசர்....
காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலினின் மேலே*
எவ்வளவு நாகரிகமான , நாசுக்கான , மென்மையான வரிகள் ...
இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா இந்த காலத்தில் என்று மலைக்க வைக்கும் வார்த்தைகள் ...
அந்த வரிகள் மென்மையாக இருந்தும் பார்க்கும் பார்வையில் ஒருவர் கொச்சை படுத்தி இருக்கலாம் ...
காம கணைகளை கண்கள் மூலம் அள்ளி வீசி இருக்கலாம் ...
ஆனால் நம்மவர் கண்ணதாசன் வரிகளுக்கு அமரத்துவம் வாங்கி கொடுத்தார் ...
அதை சொல்லும் விதம் , அதில் அடங்கியுள்ள பெருமை , ஆண்மை என்ற கர்வம் அதே சமயத்தில் பெண்மையை மதிக்கும் பார்வை , அவள் அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறாள் என்று கண்களில் தேக்கும் ஏக்கம் எல்லாமே அரை நொடியில் ...
*அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே*
நானும் உனக்கு சற்றும் இளைத்தவள் அல்ல ...
நீயோ எனக்கு உன் பரிசை பரந்து விரிந்து இருக்கும் இந்த கட்டிலின் மேலே தந்தாய் ...
அதற்கு நான் உயிர் கொடுத்தேன் உடல் கொடுத்தேன் , பேசும் சக்தி கொடுத்தேன் , பரிசு ஒரு சின்ன தொட்டிலுக்குள் அடங்கி விட்டது என்று எண்ணாதே ...
அந்த பரிசுக்கு விலை ஏதும் இல்லை என்கிறாள் துணைவி ...
நாணம் ஒரு புறம் பெருமை ஒரு புறம் அதே உணர்ச்சிகளில் அந்த பரிசை பார்க்கிறாள் ...
அந்த பரிசும் அவர்கள் இருவரையும் பார்த்து சிரிக்கிறது ...
பெண்மையை மதிக்கும் ஒருவனுக்கும் ஆண்மையை ஆதரிக்கும் ஒரு பெண்ணுக்கும் பரிசாக வந்ததை எண்ணி பெருமை படுகிறது ...
முழு பாடலை அலச வேண்டிய அவசியம் இல்லை ... இந்த இரண்டு வரிகள் போதும் ...
எங்கிருந்தோ என் நினைவுகளை தொந்தரவு செய்ததைப்போல் சில பாடல் வரிகள் காற்றில் இருக்கும் அசுத்தத்துடன் பறந்து வந்தன ...
கல்யாணம் தான் பண்ணிக்கிட்டு .... பிள்ளை குட்டி பெத்துக்கிட்டு ....
கைகள் என்னை கேட்காமல் ஓடிச்சென்று என் இரு காதுகளையும் பொத்திக்கொண்டன ...
கண்கள், தான் சேர்த்து வைத்த உப்பு நீரை கீழே கொட்டிக்கொண்டிருந்தன ...
வாய் மட்டும் ... அந்த நாளும் வந்திடாதா என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தன ....😰😰

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

விரல் நுனியில் அன்னைத் தமிழ்..
வாட்ஸ் ஆப்பில் புதிய ஆப்
வாட்ஸ் ஆப்பில் அழகிய தமிழ்
கைவலிக்க இனி தமிழில் டைப் செய்ய வேண்டாம்
தமிழ் எழுத தெரியவில்லையே என்ற கவலை வேண்டாம்
தமிழ் டைப்பிங் கஷ்டம் என்பது இனி இல்லை
ஆச்சரியம், அருமை
எழுத்துப்பிழை இல்லாமல் தமிழில் வார்த்தைகள்
நீங்கள் பேசினாலே தமிழில் அதுவாகவே டைப் ஆகிறது
வழி
play Store செல்லவும்
Gboard app என டைப் செய்து download செய்யவும்
உடனடியாக வாட்ஸ் ஆப் போகவும்
வழக்கம்போல இருக்கும் கீபோர்டு சற்றே வித்தியாசமாக தெரியும்
தமிழ் கீ போர்டை செலக்ட் செய்யவும்
கீபோர்ட் மேலே வலதுபுறம் பச்சை கலர் மைக் இருக்கும் அதில் பேசக்கூடாது
அந்த பச்சைக் கலர் மைக்குக்கு கீழே கருப்பு கலரில் சின்ன மைக் இருக்கும்
ஜஸ்ட் அதை பிரஸ் செய்துவிட்டு கையை எடுத்துவிடலாம்
speak now என வரும்
நீங்கள் பேசினால் உடனே தமிழில் டைப் ஆகும்
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்
தூய தமிழில் பேச வேண்டும்
செய்தி வாசிப்பாளர்களை போல தெளிவாக பேசினால் வார்த்தை மாறாமல், பிழை இல்லாமல் அச்சு அசலாக நீங்கள் டைப் செய்தது போலவே வரும்
முயற்சி செய்து பாருங்கள்
குறிப்பு
ஆன்ட்ராய்டு மொபைலில் மட்டுமே வேலை செய்யும் என நினைக்கிறேன்
Input language ல் தமிழ் செலக்ட் செய்ய வேண்டும் அதில் gboard ஐ செலக்ட் செய்ய வேண்டும்
நீண்ட பதிவு போல இருக்கும்…ஆனால் செய்து பார்த்தால் இரண்டே நிமிடம்தான்
இனி ஆங்கிலத்தில் வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்புவதை தவிருங்கள்
ஏற்கனவே இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்… ஆனால் இவ்வளவு எழுத்துப்பிழை இல்லாமல் நான் இதுவரை கண்டதில்லை
நன்றி
திரு லெட்சுமணன் செட்டியார்

காவியக் கவிஞர் வாலி பிறந்த நாள் வாழிய அவர் புகழ் -மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


தினத்தந்தி இளைஞர் மலர் 13.10.2018 பக்கம் 4


மனிதத்தேனீயின் தேன்துளி


அரு. சுப்பிரமணியன் - வள்ளியம்மை மகன் அருணாசலம் - மீனா ருக்மணி பெண் அழைப்பில்

இரவு நடைபெற்ற எனது சகலை கொத்தமங்கலம் அரு. சுப்பிரமணியன் - வள்ளியம்மை மகன் அருணாசலம் - மீனா ருக்மணி பெண் அழைப்பில் புதுவயல் வீர. வள்ளியம்மை ஆச்சி அவர்களுடன் பிள்ளைகள், சகோதரர்கள், மாப்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள். மகிழ்வான தருணம். - மனிதத்தேனீ


அரு. சுப்பிரமணியன்- வள்ளியம்மை மகன் அருணாசலம் - மீனா ருக்மணி மணவிழாவில் - மனிதத்தேனீ

இன்று காலை நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற எனது சகலை கொத்தமங்கலம் அரு. சுப்பிரமணியன்- வள்ளியம்மை மகன் அருணாசலம் - மீனா ருக்மணி மணவிழாவில். உடன் அலமேலு சொக்கலிங்கம், மற்றும் எனது ஆச்சி சொ. விசாலாட்சி, அண. ரேவதி. வாழிய மணமக்கள்.. - மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

படித்தேன்... இரசித்தேன்... பகர்ந்தேன்...
*வாழ்க்கை* *என்பது* *என்ன* ?
இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை என்பதுதான் என்ன..?
உயிரோடு இருப்பதா?மகிழ்ச்சியாக இருப்பதா?பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?
தோல்விகளில் கற்றுக் கொள்வதா? வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?தன்னலமற்ற அர்ப்பணிப்பா?
இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில்உள்ளோம்.
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம்.ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப் படுத்துகிறது., காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது.
வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லா விட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது.
ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
அப்படி கற்றுக் கொண்டவன் வெற்றியடைகிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.
நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது.
ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது.
அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது.
அப்போது வாழ்க்கை வெறுமை ஆகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.
நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.
அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும்.
நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும்.
நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறி விடுவோம்.
ஆம்.,நண்பர்களே..,
நம்மைவிட உடலில் பலசாலி யானை
நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை
நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.
இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம்.
காரணம் நாம் மட்டுமே மனோபலம் கொண்டவர்கள்
நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான்.
அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது......
நன்றி மாதவி ஆர்.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

________________________________
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....
________________________________
ரிஷிகள் ஏழு...
அகத்தியர்,
காசியபர்,
அத்திரி,
பரத்வாஜர்,
வியாசர்,
கவுதமர்,
வசிஷ்டர்.
________________________________
கன்னியர்கள் ஏழு...
பிராம்மி,
மகேஸ்வரி,
கௌமாரி, வைஷ்ணவி,
வராகி,
இந்திராணி,
சாமுண்டி
________________________________
சஞ்சீவிகள் ஏழு...
அனுமன்,
விபீஷணர்,
மகாபலி சக்கரவர்த்தி,
மார்க்கண்டேயர்,
வியாசர்,
பரசுராமர்,
அசுவத்தாமர்.
________________________________
முக்கிய தலங்கள் ஏழு....
வாரணாசி,
அயோத்தி,
காஞ்சிபுரம்,
மதுரா,
துவாரகை,
உஜ்ஜைன்,
ஹரித்வார்.
________________________________
நதிகள் ஏழு...
கங்கை,
யமுனை,
கோதாவரி,
சரஸ்வதி,
நர்மதா,
சிந்து,
காவிரி.
________________________________
வானவில் நிறங்கள் ஏழு...
ஊதா,
கருநீலம்,
நீலம்,
பச்சை,
மஞ்சள்,
ஆரஞ்சு,
சிவப்பு.
________________________________
நாட்கள் ஏழு...
திங்கள்,
செவ்வாய்,
புதன்,
வியாழன்,
வெள்ளி,
சனி,
ஞாயிறு
________________________________
கிரகங்கள் ஏழு...
சூரியன்,
சந்திரன்,
செவ்வாய்,
புதன்,
குரு,
சுக்கிரன்,
சனி.
________________________________
மலைகள் ஏழு...
இமயம்/கயிலை, மந்த்ரம்,
விந்தியம்,
நிடதம்,
ஹேமகூடம்,
நீலம்,
கந்தமாதனம்.
________________________________
கடல்கள் ஏழு..
உவர் நீர்,
தேன்/மது,
நன்னீர்,
பால்,
தயிர்,
நெய்,
கரும்புச் சாறு.
________________________________
மழையின் வகைகள் ஏழு...
சம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)
ஆவர்த்தம் - நீர் மழை
புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை
சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)
துரோணம் - மண் மழை
காளமுகி - கல் மழை
நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)
________________________________
பெண்களின் பருவங்கள் ஏழு...
பேதை,
பெதும்பை,
மங்கை,
மடந்தை,
அரிவை,
தெரிவை,
பேரிளம் பெண்.
________________________________
ஆண்களின் பருவங்கள் ஏழு.
பாலன்,
மீளி,
மறவோன்,
திறவோன்,
விடலை
காளை,
முதுமகன்.
________________________________
ஜென்மங்கள் ஏழு...
தேவர்,
மனிதர்,
விலங்கு,
பறவை,
ஊர்வன,
நீர்வாழ்வன,
தாவரம்.
________________________________
தலைமுறைகள் ஏழு
நாம் -
முதல் தலைமுறை
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி -மூன்றாம் தலைமுறை
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை
பரன் + பரை - ஏழாம் தலைமுறை.
________________________________
கடை வள்ளல்கள் ஏழு...
பேகன்,
பாரி,
காரி,
ஆய்,
அதிகன்,
நள்ளி,
ஓரி.
________________________________
சக்கரங்கள் ஏழு...
மூலாதாரம்,
ஸ்வாதிஷ்டானம்,
மணிபூரகம்,
அனாஹதம்,
விஷுத்தி,
ஆக்னா,
சகஸ்ராரம்.
________________________________
கொடிய பாவங்கள் ஏழு....
உழைப்பு இல்லாத செல்வம்,
மனசாட்சி இலாத மகிழ்ச்சி,
மனிதம் இல்லாத விஞ்ஞானம்,
பண்பு இல்லாத படிப்பறிவு,
கொள்கை இல்லாத அரசியல்,
நேர்மை இல்லாத வணிகம்,
சுயநலம் இல்லாத ஆன்மிகம்.
________________________________
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு...
ஆணவம்,
சினம்,
பொறாமை,
காமம்,
பெருந்துனி,
சோம்பல்,
பேராசை.
________________________________
திருமணத்தின் போது அக்னியை சுற்றும் அடிகள் ஏழு ...
முதல் அடி.. பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.
இரண்டாம் அடி.. ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
மூன்றாம் அடி.. நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.
நான்காவது அடி... சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.
ஐந்தாவது அடி....
லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்.
ஆறாவது அடி...
நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.
ஏழாவது அடி... தர்மங்கள் நிலைக்க வேண்டும்.
சிவ சிவா...