Saturday 29 June 2019

கருமுத்து தியாகராசர் நினைவு தினக் கூட்டம்


வெளிப்படையான வாலி...

வெளிப்படையான வாலி...
" சினிமா என்பதே அணா பைசா கணக்குதானே. நானும் கண்ணதாசனும் சமகால கவிஞர்கள். ஒரு ஆண்டு நான் 45 படங்களுக்கு பாட்டெழுதினேன். அவர் 24 படங்களுக்குத்தான் எழுதியிருந்தார். அதற்காக அவரை விட நான் பெரிய கவிஞன் என்று எண்ணிக் கொள்ளவும் இல்லை.
அவர் என்னை போட்டியாளன் என்று சொல்லிக் கொள்ளவும் இல்லை. சொல்லப்போனால் எந்த சபையிலும் என்னை அவர் விட்டுக் கொடுத்ததே இல்லை. அதுதான் கண்ணதாசனின் பெருந்தன்மை!
பல பாடல்கள் இன்றைக்கும் எது கண்ணதாசன் எழுதியது, எது வாலி எழுதியது என்று தெரியவில்லை என ரசிகர்கள் கூறுகிறார்கள். இது உங்களை வருத்தப்பட வைத்திருக்கிறதா ? "
" இல்லை. தங்கத்தோடுதானே என்னை ஒப்பிட்டார்கள். தகரத்தோடு இல்லையே! கண்ணதாசன் பாடல்களுக்கு இணையாக என் பாடல்களைச் சொல்கிறார்கள் என்றால்…
அதைவிட ஒரு பெருமை உண்டா. நண்பர்களே- உங்களில் பலர் கண்ணதாசன் உயிரோடு இருந்த காலத்தைப் பார்க்காதவர்கள். அந்த நாளில் இருந்தவர்கள் இப்படிச் சொல்ல மாட்டார்கள் ! "
- கவிஞர் வாலியின் பேட்டியிலிருந்து .
நன்றி லெட்சுமணகுமார் ராஜு


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌷 எல்லாம் இன்பமயம் 🌷*
*🧩🌷🧩மகரயாழ்🧩🌷🧩*
*🧩🌷🧩கோபம் வந்தால் சிரியுங்கள்😆*
கோபத்தை நிர்வகிக்கத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் என்பதைப் பட்டியல் எடுத்தால், அதில் இடம்பெறுபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்கள், சில எளிய வழிகள் மூலம் அதைச் சமாளிக்கலாம்.
🌷🧩🌷🧩🌷
*அமைதி… அமைதி!*
கோபம் உச்சத்தில் இருக்கும்போது எதையும் பேச வேண்டாம். கோபம் தணிந்து மனம் அமைதியானதும், அது தொடர்பான கருத்தைத் தெரிவியுங்கள். இந்த அணுகுமுறை யாரையும் பாதிக்காமல் உங்கள் கருத்தை வெளிப்படுத்த உதவும்.
🌷🧩🌷🧩🌷
*உடற்பயிற்சி*
நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். ஜாகிங், மூச்சுப்பயிற்சி போன்ற இலகுவான உடற்பயிற்சிகள் கோபத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
🌷🧩🌷🧩🌷
*பேசுவதற்கு முன் சிந்தியுங்கள்!*
கோபத்தில் ஏதாவது பேசிவிட்டு, பிறகு வருந்திக் கொண்டிருப்போம். இது போன்ற சூழலை வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்திலாவது எல்லோருமே கடந்து வந்திருப்போம். கோபம் வரும்போது எதையும் யோசிக்காமல் சட்டென்று வார்த்தைகளை விடுவதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு நன்றாகச் சிந்தித்துப் பேச வேண்டும்.
🌷🧩🌷🧩🌷
*காரணம் கண்டறியுங்கள்!*
எதற்காகக் கோபம் வந்ததோ, அதன் ஆணிவேரைக் கண்டறிந்து அதை நீக்க வேண்டும். அதன் மூலம் மீண்டும் அதே பிரச்னை நிகழாமல் தடுக்கலாம். கோபம் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு தராது; அது பிரச்னையை மேலும் தீவிரமாக்கும் என்பதை உங்களுக்கு நீங்களே அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
🌷🧩🌷🧩🌷
*காழ்ப்புணர்ச்சி வேண்டாம்!*
எதிர்மறை உணர்வுகள் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பிறர் மீதான காழ்ப்புணர்ச்சியை விட்டுவிட்டு மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மன்னிக்கும் குணம் மற்றவருடன் ஆரோக்கியமான நட்பை வளர்ப்பதுடன் மன அழுத்தம், எதிர்மறை உணர்வுகளை அண்ட விடாது.
*🌷🧩🌷மகரயாழ்🌷🧩🌷*
*மனசே ரிலாக்ஸ்!*
கோபம் கட்டுங்கடங்காத நிலையில் இருக்கும்போது, மனதை ரிலாக்ஸ் செய்வதற்கான உத்திகளைக் கையாளுங்கள். மூச்சை இழுத்துவிடலாம்; ‘கூல் டவுண்’ போன்ற வார்த்தைகளை அடிக்கடி சொல்லலாம்; தண்ணீர் அருந்தலாம். `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம்போலச் சிரித்துக்கொண்டே இருக்கலாம்.
🌷🧩🌷🧩🌷
*குட்டி பிரேக்*
மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கும்போது உங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். பிடித்த உணவை உண்பது, கடற்கரையில் நடைப்பயிற்சி செய்வது என உங்களுக்குப் பிடித்தவற்றைச் செய்யலாம். அன்றாட வேலைப்பளுவுக்கு இடையே சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வது மனதை லேசாக்கி, கோபத்தைத் தடுக்கும்.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை*
_திடக்கழிவு,_
_திரவக்கழிவு,_
_வாயுக்கழிவு,_
_சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் *மருத்துவக்கழிவு,*_
இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான,
சுவையான முறை.
*வெந்நீர்*
+
*எலுமிச்சை சாரு*
+
*தேன்*
*செய்முறை
*********
ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும் !
கொதிக்க வேண்டியதில்லை !
நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும் !
ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும் !
3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, பின் அருந்தவும் !
காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும் !
எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான
உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் !
*வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும் !*
வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம் !
*உணவாகவும்,*
*மருந்தாகவும்,* செயல்புரியும் உன்னத இயற்கை பானம் !
பி . கு :
***
சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம் !
சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து, சுவைத்து உட்கொள்வதால், தேனில் உள்ள குளுக்கோஸ் தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து நன்மை மட்டுமே செய்யும் !
மேலும், "தேன்" நாக்கிற்கு இனிப்பு, உடல் உறுப்புகளுக்கு கசப்பு !
சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பது வடிகட்டிய "மூட நம்பிக்கை"!
தொடர்ந்து அருந்துவதால் "அல்சர்" எனும் மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை, சொல்லாமல் ஓடிப்போகும்.......!
- சித்தர்களின் குரல்
மொழஉடலின் மொழி
1. உடல் - உணவை கேட்கும் மொழி - பசி
2. உடல் - தண்ணீரை கேட்கும் மொழி - தாகம்
3. உடல் - ஓய்வை கேட்கும் மொழி - சோர்வு, தலைவலி
4. உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.
5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்
6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி - வாய் கசப்பு மற்றும் பசியின்மை
7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி
8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி
9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி
10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை
11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்
12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்
13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்
எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.
நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.
நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.
நம் உடலை நேசிப்போம்.....நன்றி...

நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அதிகாலை 3:45 மணி அளவில் ஸ்ரீ அத்தி வரதர் திருக்குளத்திலிருந்து வெளியே எழுந்தருளிவிட்டார். பொதுமக்கள் சேவை 1-Jul-2019 முதல்




Friday 28 June 2019

சுப்பிரமணிய சிவா நினைவு தினக் கூட்டம்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மிகச் சிறப்பாக வழி நடத்தும் மோடி;அமெரிக்க அதிபர் புகழாரம்..
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தொடங்கி இருநாள்கள் நடைபெறுகிறது. இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்,அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபே மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோரை ஒசாகா நகரில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது:
தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ள இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ஆகிய இருவருக்கும் வாழ்த்துகள்.
இந்தியாவில் திரு நரேந்திர மோடி அவர்கள் முதன்முறையாக ஆட்சியமைத்த போது பல்வேறு எதிர்ப்புகள் இருந்தன. ஆனால், அவை அனைத்தையும் இன்று சுமூகமாக ஒரே பாதையில் இணைத்து திரு மோடி அவர்கள் மிகச் சிறப்பாக வழிநடத்துகிறார். இது அவரின் சிறப்பான வழிநடத்தும் திறனை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.இதை உலக நாடுகளின் தலைவர்கள் பின் பற்ற வேண்டும்.
இந்தியா, ஜப்பான் தலைவர்கள் தங்கள் நாடுகளில் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்கள். நமது நாடுகள் சிறந்த நண்பர்களாக உள்ளன. இதுபோன்ற ஒரு நட்பு இதற்கு முன்பு கூட இருந்ததில்லை. இதை நான் உறுதியுடன் கூறுவேன். பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணைந்து செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
பின்னர் நரேந்திர மோடி பேசியதாவது:
ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியா என்றால் (நாடுகளின் முதல் எழுத்தை குறிக்கும் விதமாக) ஜெய் (வெற்றி) என்று அர்த்தம். இது என்றுமே வெற்றிக் கூட்டணி. ஈரான், 5ஜி தொழில்நுட்பம், நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் பாதுகாப்புத்துறை ஆகிய 4 முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.
J appan
A merica
I ndia
JAI வெற்றி.. இது இந்தியாவுக்கு வெற்றி.இனியும் தொடரும்.தொடர வாழ்த்துக்கள்.
நன்றி ராஜப்பா தஞ்சை

தினபூமி மதுரை 28.06.2019 பக்கம் 9


தினத்தந்தி மதுரை 28.06.2019 பக்கம் 17


கவியரசரும்--சின்னப்பதேவரும்.

28-6-2019--சிறப்புக் கட்டுரை
கவியரசரும்--சின்னப்பதேவரும்.
நான் அறிந்தவற்றை உங்களுடன் பகிர்கிறேன்
-
இவர்கள் இருவருக்குமிடையே அபரிமிதமான நட்பு..அதை நட்பு என்று சொல்வதை விட அற்புதமான பந்தம் என்றே சொல்லலாம். கவிஞர் எந்த கடவுள் படங்களையும் வணங்கமாட்டார்--கண்ணனைத் தவிர..ஆனால் எங்காவது வெளியூர் செல்ல நேரிட்டால் தேவர் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் உள்ள முருகன் படத்தை வணங்கி விட்டுத்தான் செல்வார். சின்னப்ப தேவர் அவர்கள் தயாரித்த தெய்வம் படத்திற்கு பாடல் எழுத வந்து இருந்தார் கவிஞர். வழக்கம் போல் காட்சியை விளக்கி விட்டு மதுரை சோமு பாடுகிறார். குன்னக்குடி வைத்தியநாதன் இசை மருதமலை முருகனைப் பற்றி ஒரு நல்ல பாடல் வேண்டும் என்று சொல்லி விட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டார்.
மருதமலை மாமணியே முருகைய்யா
தேவரின் குலம் காக்கும் வேலைய்யா--என்ற பல்லவியை உரக்க பாடினார் கவிஞர். அதைக் கேட்டு உள்ளே இருந்து வேகமாக வந்து கவிஞரின் கையை பிடித்துக் கொண்டு நெகிழ்ந்து போனார் தேவர்
தேவரின் குலம் காக்கும் வேலய்யா--என்ற வரிகளே அதற்கு காரணம்.
-
கவிஞரின் ஒவ்வொரு பெண்களின் திருமணத்தின் போதும் தேவர் அவர்கள் முன்னின்று நடத்தியுள்ளார். 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த கவிஞரின் மகள் திருமதி ரேவதி ஷண்முகத்தின் திருமணத்திற்கு மண்டபம் கிடைக்கவில்லை. கவிஞருக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டையில் கவிதா ஹோட்டல் வளாகத்தில் மண்டபதைக் கட்ட முடிவு செய்தார் கவிஞர். அதற்கு தேவர் அவர்கள் பண உதவி செய்தார். நட்பின் காரணமாகவும், நன்றியை காட்டும் விதமாகவும் அந்த மண்டபத்திற்கு தேவரின் பெயரை சூட்டினார். தேவர் திருமணமண்டபம் 1978ஆம் ஆண்டு மார்ச் மாதம் எங்கள் திருமண வரவேற்பும் இங்குதான் நடந்தது.
-
1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ந் தேதி கவிஞரின் இன்னொரு மகனின் திருமணம் இனிதாக நடந்து முடிந்தது. ஆனால் தேவர் அவர்கள் உடல்நலக்குறைவால் கலந்து கொள்ளமுடியவில்லை
மாலை வரவேற்பு நிகழ்ச்சி. அன்றையதினம் மதியம் தேவர் இறைவனடி சேர்ந்துவிட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவு கவிஞருக்கு பெரும் அதிர்ச்சி. கவிஞரின் குடும்பத்தினருக்கு பெரும் இழப்பு. கதறி அழுதபடி புறப்பட்டு சென்றார் கவிஞர். மாலை நடக்கவிருந்த திருமணவரவேற்பும் ரத்து செய்யப்பட்டது. அதிலிருந்து மீண்டு வர சில நாட்கள் ஆகியது. அந்த அளவு அவர்கள் நட்பில் ஒரு பிணைப்பு. இன்று தேவர் அவர்கள் பிறந்த நாளில் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
நன்றி
நன்றி மீனா காந்தி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அமைதியான மனம் பெற வழி முறைகள் ...
1.கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள் !
பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவயே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம்.
2.மறக்கவும்... மன்னிக்கவும் !
இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள்.
3. பாராட்டுக்காக ஏங்காதீர்கள் !
உலகம் தன்னலம் பார்ப்பவர்களால் நிரம்பப்பட்டது. அவர்கள் எந்த காரியமும் அன்றி மற்றவர்களை புகழ மாட்டார்கள். இன்று உங்களால் ஏதேனும் ஆக வேண்டுமென்றால் உங்களை போற்றுபவர்கள், நாளை உங்களை கண்டு கொள்ள மாட்டார்கள். நீங்கள் அதிகாரத்தில் இல்லையென்றால் உங்கள் முந்தைய சாதனைகளை மறந்து உங்களிடம் குறை கூறுவார்கள். இதற்காக நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?. நீங்கள் வருத்தப்பட வேண்டிய அளவுக்கு அவர்கள் பாராட்டு ஈடானதல்ல. உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்யுங்கள். அதற்கான பலன் உங்களைத் தேடி வரும்.
4. பொறாமைப்படாதீர்கள் !
நாம் எல்லோருக்குமே பொறாமை எந்த அளவுக்கு மன நிம்மதியை சீரழிக்கும் என்று தெரியும். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் பதவி உயர்வு உங்களுக்கு வராமல் உங்கள் நண்பர்களுக்கு செல்லலாம். பல வருடங்களாக போராடியும் தொழிலில் நீங்கள் அடையாத வெற்றி புதியதாக தொழில் தொடங்கியோருக்கு கிடைக்கலாம். அதற்காக அவர்கள் மேல் பொறாமைப் படலாமா? கூடாது. ஒவ்வொருவருமே வாழ்க்கையில் அவர்களுக்கான நிலையை அடைவார்கள். மற்றவரை பொறாமைப்பட்டு வாழ்வில் எதுவும் ஆகப் போவதில்லை, உங்கள் மன நிம்மதியை இழப்பதைத்தவிர.
5. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுங்கள் !
தன்னந்தனியாக நின்று சூழ்நிலையை மாற்ற நினைப்பீர்களானால் நீங்கள் தோற்பதற்கான வாய்ப்புகளே அதிகம். அதற்குப் பதிலாக நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற வேண்டும். அவ்வாறு மாறுவீர்களானால் சுற்று வட்டாரம் உங்களை ஏற்று, உங்களுடன் ஒன்றி, உங்களுக்கு ஏற்றவாறு மாறத் தொடங்கும்.
6. தவிர்க்க முடியாத காயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் !
இது துரதிர்ஷ்டகரமான நிலைகளை சாதகமாக்கிக் கொள்ள உதவும் வழியாகும். நமது வாழ்நாளில் நாம் பல்வேறு வகையான சங்கடங்களை, வலிகளை, எரிச்சல்களை, விபத்துக்களை எதிர்க்கொள்ள நேரிடலாம். இவ்வாறான, நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிலைகளில், அவற்றுடன் நாம் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். விதியின் திட்டங்களை சில நேரங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதன் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், நம்மால் எந்த சூழலையும் எதிர் கொள்ளக் கூடிய பொறுமையையும், மனவலிமையையும், மன ஊறுதியையும் பெறலாம்.
7. செய்ய முடிவதையேச் செய்யுங்கள் !
இது எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது. பெரும்பாலான சமயங்களில் நாம் நம்மால் செய்ய முடிவதற்கு அதிகமான பொறுப்புகளை கவுரவத்துக்காக ஏற்றுக் கொள்ள முயலுவோம். முதலில் நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எது நம்மால் முடியும், எது நம்மால் முடியாது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதிகப்படியான சுமைகளை ஏற்றுக் கொண்டு,பின்பு ஏன் வருத்தப்பட வேண்டும்?. நம்முடைய வெளியுலக நடவடிக்கைக்களை அதிகரித்து கொண்டு நம்மால் உள்ளுக்குள் மன அமைதியை பெற முடியாது. நாம் நமது இயந்திரமயமான வேலைப் பளுவை குறைத்துக் கொண்டு, தினமும் சில நேரங்களை பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றில் செலவிட வேண்டும். இது நம்முடைய ஓய்வற்ற எண்ணவோட்டத்தை குறைக்கும்.
8.தினமும் தியானம் செய்யுங்கள் !
தியானம் மனதை சாந்தப்படுத்தி உங்களை தொந்தரவு செய்யும் எண்ணங்களிலிருந்து விடுதலை செய்யும். இதுவே மன அமைதியின் உட்சநிலையை அடைய உதவும். முயற்சி செய்து இதன் பலனை அடையுங்கள். தினமும் அரை மணி நேரம் முழுமையாக தியானம் செய்தால், மீதி இருப்பத்தி மூன்றரை மணி நேரமும் அமைதியை உணரலாம். தியானத்தை நேரத்தை வீணாக்கும் ஒன்றாக நினைக்காமல், அதைத் தினந்தோறும் செய்து வந்தால், அது அன்றாட வேலைகளில் நமது செயல் திறனை அதிகரித்து வேலைகளைச் சிறப்பாகவும் விரைவாகவும் செய்ய உதவும்.
நற்றுணையாவது நமச்சிவாயவே!
நன்றி கோனாபட்டு சுப்பு

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நிருபர் :
சிவாயநம -ன்னு, சொன்னா அபாயம் இல்லேங்கிறாங்களே...?
சிவாய நம-ன்னு, சொல்லி
ஆயிரம் வோல்ட் மின்சாரத்தை 
தொட்டா அபாயம் இல்லாமல்
போகுமா...?
கண்ணதாசன் :
நம்மோட முன்னோர்கள் எல்லாம், உன்னை விட மடையன்
இல்லே..! அவன் ஒன்னும் "சிவாய நமவென்று, மின்சாரம் தொடுவார்க்கு அபாயமில்லேன்னு சொல்லலை..!
சிவாய நமவென்று "சிந்தித்திருப்பார்க்கு அபாயம் இல்லேன்னுதான் சொன்னான்..!
அவன், சிந்தனையை சொன்னானே தவிர, செயலை
சொல்லலை..! சிந்தனை வேற, செயல் வேற, ஆனால், சிந்தனை ஒழுங்கானால், செயல் ஒழுங்காகும்..! சிந்தனை ஒழுங்கா இருந்தா, நீ ஏன் ஆயிரம்
வோல்ட்டை பிடிச்சி தொங்குறே..? தலையெழுத்தா..?
செயலை ஒழுங்குபடுத்த, சிவாய நம-ன்னு, சிந்தின்னானே தவிர,
சிவாய நமவென்று, கிணற்றில்
குதிப்பார்க்கு, அபாயமில்லேன்னா
சொன்னான்..?
எது நடக்குமோ, அதை மட்டும்தான் சொன்னான்..!
ஏன்னா, இது மாதிரி பின்னாடி ஏதாவது
வரும்னு, அவனுக்கு தெரியும்..!
அதனாலதான், அவன் ரிஸ்கே எடுக்கலை...!

Thursday 27 June 2019

மாலைமுரசு 27.06.2019 பக்கம் 4


மக்கள்குரல் மதுரை 26.06.2019 பக்கம் 7


தினமலர் மதுரை 27.06.2019 பக்கம் 1


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

Headset, இல்லாமல் பேசுகையில் முதலில் இடது காதில் வைத்துதான் பேசவேண்டும், இடது காதில் Mobile Phone, வைத்து பேசும் பழக்கம் மிகமிக நல்லது...
ஒற்றை காதிற்கு மட்டும் headset, அதாவது Bluetooth Headphone, அதிகம் பயன்படுத்த கூடாது, அது சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்...
கூட்ட நெரிசல், அல்லது போக்குவரத்து நேரிசல், போன்ற இடங்களில் உங்கள் Mobile.ல் சத்தம் அதிகமாக வைத்து Headset, கேட்கக்கூடாது...
10 வயதிற்கு குறைவான குழந்தைகள், மற்றும் கர்பினி பெண்கள், Headphone, பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்...
Headphone, பேசிக்கொண்டு Mobile Phone, உங்கள் இதயத்திற்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது, அதாவது சட்டை மேல் (பாக்கெட்) Mobile வைக்கவே கூடாது...
வெகு நேரம் Headphone பேசினால் சிலருக்கு காது வலி ஏற்படும்... Headphone Speaker.ல் மிருதுவான Spanch, பயன்படுத்தினால் காது வலி ஏற்படாது... Spanch, தனியாகவும் கடைகளில் கிடைக்கிறது...
உங்கள் Mobile.லில் Settings Egualizerல் Normal Mode வைத்து கேட்க வேண்டும்...
 Mobile Charging.ல் Headset, பயன்படுத்தவே கூடாது...
Mobile Phone.ல் அதிகம் பேசுகிறவர் காளான் அதிகமாக சாப்பிட வேண்டும்...
 Tv, Radio... போன்ற Electronic பொருகளின் மீது Mobile வைத்து Headset.ல் பேசக்கூடாது, நிச்சயம் காது செவிடாகிவிடும்...
நன்றி லெட்சுமணன் செட்டியார்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தியானம்! ஒலியில்லாத ஓர் ஓசை....
தியானம் என்பது எதையும் யாசிப்பது அல்ல. தனக்குள் மூழ்கி, தன்னைத்தானே அறிந்து கொள்வதே ஆகும்.
மௌனம் என்பது நிசப்தமான சங்கீதம்.இதை உணர்த்தும் ஒரு ஆன்மிகக் கதையை இங்கே பார்க்கலாம்.
அது ஒரு மிகப்பெரிய புத்த மடாலயம். அந்த மடாலயத்துக்குள் பிரமாண்டமான புத்தர் சிலை ஒன்று இருந்தது.
அந்த புத்தரின் சிலை கைகளை உயர்த்தி அருள் பாலிப்பது போல் இருக்கும்.
ஒரு வயதான துறவி தினமும் அந்த புத்த மடாலயத்துக்கு வந்து, புத்தரின் சிலை முன்பாக நீண்ட நேரம் அமர்ந்திருப்பார்.
அப்படி அமர்ந்திருக்கும் நேரம் முழுவதும், அந்தக் துறவியின் பார்வை எப்போதும் புத்தரின் முகத்தை நோக்கிய படியே இருக்கும்.
அந்த காட்சியைப் பார்ப்பவர்களுக்கு, அவர்கள் இருவருக்கும் ஏதோ ஓர் உரையாடல் நடப்பதைப் போலத் தெரியும்.
துறவி தினமும் வருவார், புத்தரின் முன்பாக நெடு நேரம் அமர்ந்து முகத்தை நோக்கியபடி இருப்பார். பிறகு எழுந்து சென்று விடுவார்.
இதனை அந்த மடாலயத்தின் தலைமை குரு கவனித்துக் கொண்டே இருந்தார்.
அன்றும் வழக்கம் போல் வந்த துறவி, தன்னுடைய செயல்களை சரியாகச் செய்து விட்டு எழுந்து செல்ல எத்தனித்தார்.
அப்போது அவரை எதிர்கொண்டார் மடாலயத்தின் தலைமை குரு.
ஐயா! உங்களை தினம் தோறும் நான் இங்கு பார்க்கிறேன். நெடுநேரம் தியானம் செய்கிறீர்கள். புத்தரின் முகத்தை நோக்கியபடியே இருக்கிறீர்கள். புத்தர் உங்களிடம் என்ன சொன்னார்?’ என்று கேட்டார்.
அதற்கு அந்தத் துறவி, ‘புத்தர் எப்போதும் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்’ என்றார் அந்த துறவி.
மடாலய குருவுக்கு ஒரே ஆச்சரியம். ‘அப்படியா! அது சரி.. அவரிடம் நீங்கள் என்ன சொன்னீர்கள்?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்.
நானும் எதுவும் சொல்ல மாட்டேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்’ என்றார் துறவி. அவரது பதிலில் இருந்து ஓர் உண்மையை அறிந்து கொண்டார் மடாலய குரு.
தியானம் என்பது எதையும் யாசிப்பது அல்ல. தனக்குள் மூழ்கி, தன்னைத் தானே அறிந்து கொள்வதே ஆகும்.
மெளனம் என்பது பேச்சை நிறுத்துவது என்பதல்ல. அது ஒரு நிசப்தமான சங்கீதம்.
இதைத் தான் பாரதியார், தனிமையுண்டு அதிலே சாரம் இருக்குதம்மா’ என்றார்.
எங்கும் நிசப்தம். மெளனம். முடிவில் சங்கமம்.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நல்ல தொடக்கம்...
ஐ.நா., சபையில் முக்கியமான அவையான, பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவிக்கு இந்தியாவை பாகிஸ்தான் ஆதரித்துள்ளது. இது பல நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய சர்வதேச அரசியல் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது.இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. சுழற்சிமுறை உறுப்பினர் : 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர்களாக ஐந்து நாடுகளை தேர்வு செய்வது வழக்கம்.
10 தற்காலிக உறுப்பினர்களில் 5 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி, புதிய நாடுகள் இணைவது மரபாக இருந்து வருகிறது. புதிதாக இணையும் நாடுகள் அடுத்த இரண்டாண்டுகளுக்கு இந்த பதவியை வகிக்கும்.இந்நிலையில், வரும் 2021 - 22ம் ஆண்டில் ஆசிய-பசிபிக் நாடுகள் சார்பில் இந்த இடத்தை பெறுவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளது. 55 நாடுகள் ஆதரவு : இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் சுழற்சிமுறை (தற்காலிக) உறுப்பினர் பதவியில் இந்தியா இடம்பிடிக்க பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட 55 ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு தர முன்வந்துள்ளன.ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், சீனா, இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், குவைத், கிர்கிஸ்தான், மலேசியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம் உள்பட ஆசியா-பசிபிக் பகுதியை சேர்ந்த 55 நாடுகளும் ஒருமனதாக முன்வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் இன்று தெரிவித்துள்ளார்.
பிஜேபி என்றால் அது இஸ்லாமியர்களுக்கு எதிரானக் கட்சி என்ற எண்ணம் அதிகமான இந்திய இஸ்லாமியர்களுக்கு உண்டு.குறிப்பாக தமிழக இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இந்த எண்ணம் நிச்சயமாக உண்டு..
ஆனால்.?உலக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட, திரு நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில்தான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கம் காட்டுகின்றன.
இத்தனை ஆண்டுகளாக இந்தியாவை எதிரிநாடாக கருதிய பாகிஸ்தானும், சீனாவுமே இந்தியாவை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு திரு நரேந்திர மோடி அவர்களின் ராஜதந்திரம் வெற்றி பெற்றுள்ளதை உலக நாடுகள் ஆச்சரியத்தில் பார்க்கின்றன.
நன்றி ராஜப்பா தஞ்சை

மனிதத்தேனீயின் தேன்துளி


இதுதான் கண்ணதாசன் எழுதிய முதல் கவிதை.

இதுதான் கண்ணதாசன் எழுதிய முதல் கவிதை.
புதுக்கோட்டையில் இருந்து வெளியான “திருமகள்” மாதமிருமுறை இதழில், 1945ல் வெளியானது. இதை எழுதும்போது கண்ணதாசனுக்கு வயது 18. அந்த வயதிலேயே அவருக்கிருந்த கவிதா மேதைமை வியக்க வைக்கிறது. அவர் பிறவி கவிஞன் என்பதற்கு இப்பாடல் ஓர் சான்று.
இன்று அவரது பிறந்தாள். காலத்தை வென்ற மகா கவிஞனை என்றும் நினைவுகூர்வோம்.
நன்றி அரவிந்த் சுவாமிநாதன்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இசைத் தமிழின் நினைவலைகள்..
26-6-2019--அறிவிப்பு பதிவு
பழம்பெரும் இசைக்கலைஞர் திரு தண்டபாணி தேசிகர் அவர்களின் நினைவுநாள் ஆகும்.
எம். எம். தண்டபாணி தேசிகர் (பிறப்பு: ஆகத்து 27, 1908 - சூன் 26, 1972) ஒரு தமிழிசைக் கலைஞர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். பல தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
-
வாழ்க்கைச் சுருக்கம்
தண்டபாணி தேசிகர் சென்னை மாகாணம் நன்னிலத்துக்கு அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடி என்ற ஊரில் முத்தையா தேசிகருக்கு மகனாகப் பிறந்தார். மாணிக்க தேசிகர், கும்பகோணம் ராசமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். தெருவெங்கும் திருப்பாக்களைப் பாடி, தேவாரப் பாடகாசிரியராக அமர்ந்திருந்த தண்டபாணி தேசிகரை பட்டினத்தார் திரைப்படம் அவரைச் சென்னைக்கு இழுத்து வந்தது. பட்டினத்தார், நந்தனார் உட்படப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
-
1952 தியாகராசர் ஆராதனை விழாவில் தண்டபாணி பாட அழைக்கப்பட்டார். அவரின் வழமை போல அவர் தமிழ்ப் பாட்டு ஒன்றோடு தொடங்கினார். பின்னர் அவர் தெலுங்கு, சமசுகிருத பாடல்களைப் பாடினார். இறுதியாக அவரின் வழமை போல தமிழ்ப் பாட்டோடு முடித்தார்.
-
நடித்த திரைப்படங்கள்
பட்டினத்தார் (1936)
வள்ளாள மகாராஜா (1937)
தாயுமானவர் (1938)
மாணிக்கவாசகர் (1939)
நந்தனார் (1942)
திருமழிசை ஆழ்வார் (1948)
-
விருதுகளும் பட்டங்களும்
சங்கீத சாகித்திய சிரோமணி பட்டத்தை 1951 ஏப்ரல் 3 ஆம் நாள் எம். பக்தவத்சலம் வழங்கிக் கௌரவித்தார்.
சங்கீத கலாசிகாமணி விருது, 1955, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (மிருணாளினி சாராபாய் தலைமை)
இசைப்பேரறிஞர் விருது, 1957[2]; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்
சங்கீத நாடக அகாதமி விருது, 1969[3]
-
நன்றி
அன்புடன்
நிர்வாகிகள்
நடுவர்கள் with Murugesh Balachandar and Others
நன்றி மீனாள் காந்தி

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஈராக் மலையில் ராமர்-அனுமான் சித்திரம்..
சிந்து சமவெளி நாகரீகம்-மெசபடோமிய நாகரீகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் இந்தியக் குழு ஈராக் பயணித்தது.
அப்போது ஈராக்கில் உள்ள தர்பந்த் ஐ பெலுலா ((Darband-i-Belula )) என்ற மலையில் கையில் வில் ஏந்தி, இடுப்பில் சிறிய வாள் செருகி, மேலாடை அணியாத நிற்பது போன்றும், அவரை ஒருவர் குனிந்து வணங்குவது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வணங்கும் சித்திரம் அனுமானையும், கம்பீரமாக நிற்கும் சித்திரம் ராமரையும் குறிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அந்தக் குழு இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை ஆய்வு நடத்தக் கோரியுள்ளது.
கிமு 2000-மாவது ஆண்டு காலத்திய சிற்பம் இது என ஈராக் தரப்பில் தெரிவிக்கிறது. அதன் மாதிரியை எடுத்து வந்து அயோத்தியில் ராமர் கோவிலில் வைக்க உத்தரப்பிரதேச அரசுக்கு அக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
தகவல் பாலிமர் செய்தி.
நன்றி ராஜப்பா தஞ்சை

Wednesday 26 June 2019

திருநகரில் கல்வித் திருவிழா






முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்
 அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்
 பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி
 இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்
பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்
 தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்
 மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.
 கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்
 பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.
 முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்
 எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்
 மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.
 மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.
 காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.
 டீ அதிகமானால் - உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்
 எலுமிச்சை அதிகமானால் - பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.
 எள்ளு அதிகமானால் - பித்தம் செரியாமை உண்டாகும்.
 உப்பு அதிகமானால் - எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்
 வெங்காயம் அதிகமானால் - தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்
 குங்குமப்பூ அதிகமானால் - மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.
 வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம்
கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்