Tuesday 31 January 2023

நலன்களைத் தரும் உண்மை.

 நலன்களைத் தரும் உண்மை.

பொய் சொல்வது எவ்வளவு தவறு என்று நினைக்கின்றோமோ, அதை விடப் பொய் என்று தெரிந்தும் நம்புவது மிகப் பெரிய தப்புத் தானே.
அதுபோல தவறு என்று தெரிந்தும் அதையே தொடர்ந்து செய்வதும் எவ்வளவு தப்பு.
ஆனால் அன்றாட வாழ்வில் அதைத்தான் நாம் செய்து கொண்டே இருக்கின்றோம்.
இப்படித் தான் பேராசையில் பல பொய்களை உண்மை என்று நம்பி ஏமாந்து கொண்டு இருக்கின்றோம், ப‌ண‌த்தையும் இழ‌ந்து கொண்டு வருகின்றோம்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனின் அப்பா ஆசையாக ஒரு செர்ரி மரத்தை வளர்த்து வந்தாராம்.
ஒருநாள் வாஷிங்டனுக்குப் புதிய கோடாலி ஒன்று கிடைக்க, அதைக் கொண்டு கண்ணில் படுகிற மரம், செடிகளை எல்லாம் வெட்டி எறிந்து இருக்கிறார்.
அவர் வெட்டித் தள்ளியதில் அப்பா வளர்த்த செர்ரி மரமும் ஒன்று. வெட்டப்பட்ட மரத்தைப் பார்த்து வாஷிங்டனின் அப்பாவுக்கு அதிர்ச்சி.
மரத்தை யார் வெட்டியது என அவர் எல்லோரிடமும் கேட்க, வாஷிங்டன், தனது தவறை தைரியமாக ஒப்புக் கொண்டாராம்.
உண்மை தெரிந்து கோபத்தில் ஏதேனும் செய்து விடுவாரோ என எல்லோரும் நடுங்கிக் கொண்டு இருந்தார்கள்.
வாஷிங்டனின் அப்பாவோ, அமைதியாகி இருந்தார். மகனை அழைத்து, ‘நான் கோபக்காரன்னு தெரிஞ்சும், நீ உண்மையை சொன்னே பார்த்தியா.அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சது.
செர்ரி மரம் வெட்டப் படாம இருந்து இருந்தா எனக்குக் கிடைத்து இருக்கிற மகிழ்ச்சியை விட, நீ உண்மை பேசியது எனக்குப் பெரிய மகிழ்ச்சி.” என்று மகனின் நேர்மையைப் பாராட்டினாராம்.
வாஷிங்டனின் மனத்தில் இது ஆழமாகப் பதிந்து போனது.
அதன் பிறகு,
தன் வாழ்நாளில் எந்தச் சூழலிலும் எத்தனை பெரிய செயலுக்கும் பொய் சொல்வதில்லை என்கிற தன் கொள்கையில் உறுதியாக இருந்து இருக்கிறார்.
*பொய் சொல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை;*
அது நாம் அறியாமலேயே நமக்கு எல்லா நலன்களையும் கொடுக்கும்.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


வழி உண்டு.

 வழி உண்டு.

நீங்கள் பறக்க வேண்டும் என்று முடிவெடுத்து
விட்டால் முதலில் உங்கள் மனதிலுள்ள சுமையை வீசி எறியுங்கள்.
அப்பொழுது தான் ஒரு பாரமும் இல்லாமல் நீங்கள் நினைத்த லட்சியத்தை அடைய முடியும்.
எத்தனை வலிகள் வந்தாலும், ஏதாவது ஒரு வழி உண்டு,
தட்டிய கதவுகள் தான் திறக்கப்படும். சிந்தனை முழுக்க வலியின் மேல் வைக்காமல் வழிகளின் மேல் செலுத்து.
விழிகளை மூடாது ஓயாது போராடிக் கொண்டேயிரு வெற்றி நிச்சயம்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும்
எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.
கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமே தூக்கம், எனவே
கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.
*உறவில் உரிமையைக்
கொடுங்கள். *
*வாழ்க்கையில் நம்பிக்கையைக் கொடுங்கள். *
*அன்பில் உண்மையைக்
கொடுங்கள். *
*நட்பில்
நேர்மையைக் கொடுங்கள் சந்தோஷம் தானாக அமையும். *

Monday 30 January 2023

நேர்மை என்பதே சுயமரியாதை.

 நேர்மை என்பதே சுயமரியாதை.

எல்லாருமே சந்தோஷமாக, திருப்தியாக,வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள்.
அதற்காக
அருமையான
ஆலோசனைகள் சிலவற்றை இப்போது கவனிக்கலாம்.
நாம் செய்கிற வேலையை சந்தோஷமாகச் செய்ய வேண்டும்.
கடினமாக உழைக்கிறவர் சந்தோஷமாக இருப்பார். ஏனென்றால், அவரால் தன்னுடைய தேவைகளையும், தன் குடும்பத்தாருடைய தேவைகளையும் கவனித்துக்கொள்ள முடியும். கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்குக்கூட உதவ முடியும். முதலாளியும் அவரை உயர்வாக மதிப்பார். இப்படிக் கடினமாக உழைக்கிறவர் தன்னுடைய வேலையை அவ்வளவு சீக்கிரத்தில் இழந்துவிட மாட்டார்.
நாம் நேர்மையாக இருந்தால் சுயமரியாதையோடு இருப்போம், எதைப் பற்றியும் அதிகமாகக் கவலைப்பட மாட்டோம், நிம்மதியாகத் தூங்குவோம். மற்றவர்களும் நம்மை நம்புவார்கள், நம்மிடம் மதிப்பு மரியாதையுடன் நடந்துகொள்வார்கள். இந்த நல்ல விஷயங்களை எல்லாம் நேர்மை இல்லாதவர்களால் அனுபவிக்க முடியாது. அவர்களுடைய மனசாட்சி உறுத்திக்கொண்டே இருக்கும். என்றைக்காவது ஒருநாள் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்திலேயே வாழ்வார்கள்.
பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
“பண ஆசையில்லாமல் வாழுங்கள். உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.”
சாப்பாட்டுக்கும், அத்தியாவசியமான மற்ற விஷயங்களுக்கும் நமக்குப் பணம் தேவை. ஆனால், “பண ஆசை” ரொம்ப ஆபத்தானது. பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பது, ஒருவருடைய நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சிவிடும்.
இதனால், மனிதனின் வாழ்க்கையில் பிரச்சினை வந்துவிடும், பிள்ளைகளோடு நேரம் செலவிட முடியாமல் போய்விடும், உடம்பும் கெட்டுவிடும். அதுமட்டுமல்ல, நேர்மை இல்லாத ஏதாவதொரு விஷயத்தைச் செய்வதற்கான ஆசை வந்துவிடலாம்.
மேற்கண்ட ஆலோசனைகளைக் கேட்டு நடக்கிற
ஒருவர் வாழ்க்கையில் “செய்வதெல்லாம் வெற்றி பெறும்”.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

மகாத்மா காந்தி நினைவைப் போற்றுவோம்


 

ஆழமான அறிவின் விதை.

 ஆழமான அறிவின் விதை.

சிந்தனையில் இருந்து தான் அறிவு தோன்றுகிறது. அது பண்பட்ட பல
கேள்விகளை எழுப்பி விடை காண வைக்கும்.
ஏன் எதற்கு எப்படி என்ற வினாவை எழுப்பி அறிவைப் பயன்படுத்தச் செய்யும்.
சிந்தனை இல்லாவிட்டால் உலகத்தில் இயங்குகின்ற சக்தியே இருக்காது. சிந்தனையின் மூலமே முன்னேற்றம் காண முடியும்.
ஒன்றைப் பற்றி தொடர்ந்து எண்ணிக் கொண்டு இருப்பதும், ஆராய்ந்து கொண்டிருப்பதும் தான் சிந்தனை.
இதன் மூலம் தான் செயலைச் செய்ய முடியும். சிந்தனை தான் நமது வாழ்வின் அடிப்படை.
வாழ்வே இதனால் தான் ஆக்கப்பட்டது.
நாம் அனுபவிக்கும் இன்பங்கள் எல்லாம் மனிதர்களுடைய சிந்தனையிலிருந்து பிறந்தது தான்.
அவர்களுடைய சிந்தனையே செயலாக மாறி
கண்டுபிடிப்புகளாகத் தோன்றின.
நாம் யாராக இருந்தாலும் எந்தத் தொழிலைச் செய்பவர்களாக இருந்தாலும் சிந்தனையை உயர்வாகக் கொண்டிருக்க வேண்டும்.
சிந்தித்துச்
செயல்படுவதின் மூலமே சிறப்பாக வாழ முடியும்.
சிந்தனை மட்டும் இருந்து செயலைச் செய்யாவிட்டால் அதனால் எந்தவிதப் பயனும் ஏற்படாது.
சிந்தனையில் தொடர்ந்து ஈடுபடும் பொழுது நம்முடைய அறிவு நாளுக்கு நாள் பெருகும்.
சிந்தனையே ஆழமான அறிவுக்கு வித்தாக அமையும். அந்த அறிவின் தன்மை வாழ்க்கையை வளமுடன் வாழ வழிகாட்டும்.
சிந்தனையிலிருந்து பயனுள்ள அறிவை வெளியில் கொண்டு வந்து செயலில் காட்டினால் தான் வெற்றி பெற முடியும்.
சிந்தனைப் பெருகும் போது அறிவு வளரும்.
அறிவு தெளிவு பெறும் போது மனநிலையில் வரவேற்கத் தகுந்த பல மாறுதல்களை உண்டு பண்ணும்.
அதன் மூலம் முன்பு செய்ய இயலாத' பல செயல்களைத் திறம்பட முடிக்க முடியும்.
நாம் விரும்புகின்ற ஒவ்வொரு சிந்தனையும் நமது விருப்பப்படியே அமையும். நாம் விரும்பாத எந்தச் சிந்தனையும் தானாகவே தோன்றாது.
நல்ல சிந்தனையை நினைக்க வேண்டிய அதிகாரமும் உரிமையும் நம்மிடம் இருக்கும் பொழுது எப்படி வெற்றி பெற முடியாமல் போகும்.
*ஒரு இலட்சியத்தை சிந்தனையிலே முளைக்க வைத்து விட்டு நன்றாக வேர் விட்டு வளரும் வகையில் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தாலே போதும்.
அது தானாகவே
வெற்றி பெற்று விடும்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Saturday 28 January 2023

சுறுசுறுப்பு எனும் கலை.

 சுறுசுறுப்பு எனும் கலை.

பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை. பிரச்சனை இல்லாத வாழ்க்கையும் இல்லை. அதே போலத் தீர்வுகள் இல்லாத பிரச்சனைகளும் இல்லை.
ஆனால் நாம் தான் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. சிலவேளைகளில் நாம் ஒன்றும் இல்லாத சிறுசெயல்கள் கூட பெரிய பிரச்சனையாகக் கருதுவதுண்டு.
அதைப் பற்றியே சிந்தித்து, சிந்தித்து கலங்குவதுண்டு. ஆனால், அவை மிகச் சிறிய செயலாக இருக்கும்.
முதலில் நாம் பிரச்சனைக்கு உள்ளேயே இருக்காமல், அதைவிட்டு வெளிவர வேண்டும்.
அதைத் தீர்க்கும் வழி பற்றி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். அதேபோல் உரிய பிரச்சனைக்கு, உரிய காலத்தில் முடிவெடுப்பது முக்கியமானதாகும். காலம் தாழ்த்தி எடுக்கும் முடிவுகள் பயனளிப்பது இல்லை.
அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு.அந்தத் தீவு மக்கள் மீன் உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
மீனவர்கள் படகை எடுத்துக் கொண்டு சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள்.
அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி விடும்.அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள் தான் மிக ருசியானதாக இருக்கும்.
ஆனால், மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்து விடும்.
மீனவர்கள் கையோடு, ஐஸ் கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள்.
ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை.
ஃப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர்.
இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர்த் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர்.
ஆயினும், அத்தனைப் பெரிய கடற்பரப்பில் நீந்திக் கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை.
இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று யோசித்தார்கள் மீனவர்கள்.. புதிதாக ஒரு வழி கண்டு பிடித்தார்கள்.
குட்டிச் சுறா மீன் ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.இந்தச் சுறாவிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த மீன்கள் எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி.
இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள் முன்பு இருப்பதையும் விட மிகச் சுவையானதாக இருந்தது.
*நாம் வாழ்கின்ற வாழ்க்கையும் அப்படித் தான். வாழ்க்கையை சுவைக்க கவலைகளோடே
இருக்கக் கூடாது.*
*சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.*
*பிரச்சனைகள் என்கிற சுறா இருந்தால் மட்டும் தான் வாழ்க்கை என்ற மீன்கள் சுவையானதாக இருக்கும்.*
*பிரச்சனைகள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம்,
சோம்பியே தான் கிடப்போம். *
*சுறுசுறுப்பாக ஓடி வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம். *

மனிதத்தேனீயின் தேன்துளி

 


நேற்று இரவு சேலம் கம்பன் கழகம் பொன்விழா முதல்நாள் நிகழ்வில் பல முறை பலத்த கரவொலி பெற்ற 52 நிமிடங்கள் தலைமை உரை ஆற்றிய மனிதத்தேனீ. உடன் அன்புச் சகோதரர்கள் வலையபட்டி கலையரசன், உலகம்பட்டி லேனா சுப்பிரமணியன், நெற்குப்பை சிடி. தியாகராஜன், செயலாளர் புலவர் ராமன். விரிவான செய்தி மற்றும் படங்கள் நாளை வரும்.





 

Friday 27 January 2023

*"முத்தமிழ் முருகப்பெருமானின் அற்புதமான விளக்கம் ஒரு சில துளிகள்"*

 *"முத்தமிழ் முருகப்பெருமானின் அற்புதமான விளக்கம் ஒரு சில துளிகள்"*

*சுப்ரம்மணியம்*
*சு+பிரம்ம+நியம் என்பதே சுப்ரம்மணியம் என்று சொல்லப்படுகிறது.*
🌸🌹🌸🌹🌻🔔🌻🌹🌸🌹🌸
*┈┉┅━❀•M.S.Vlr•❀━┅┉┈*
சு என்றால் உயர்வான அல்லது மேலான என்று பொருள். ப்ரம்மம் என்பது பரமாத்மா அதாவது சதாசிவத்தைக் குறிப்பது. நியம் என்றால் தோன்றிப் பிரகாசிப்பது அல்லது ஒளிர்வது. அதாவது சதாசிவத்தின் ஞானத்திலிருந்து(நெற்றிக்கண்) உதித்து ஞானமே வடிவாகப் பிரகாசிப்பவன் என்பது பொருள்.
எனவேதான் ஞான சூரியன் என்றும். சேந்தன் என்றும் கூறுவார்கள்.
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
தமிழர்களுக்கே சொந்தமான முருகன் வேறு தமிழ் வேறு அல்ல என்பது தமிழ் அறிஞர்கள் கருத்து.
12 தோள்களையும் 12 உயிரெழுத்தாகவும்,
18 கண்களை 18 மெய்யெழுத்தாகவும், 6 இன எழுத்துக்களை ஆறு முகங்களாகவும், ஃ என்ற ஆயுத எழுத்து வேலாகவும் குறிப்பிடுவார்கள்.
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
உலகில் தோன்றிய சித்தர்களுக்கெல்லாம் தலைவன் முருகனே. எனவேதான் சித்தநாதன் என்பார்கள்.
அதனால்தான் போகர் பழனியில் தங்கள் குலகுருவான சுப்ரமண்ய சித்தருக்கு நவபாசான சிலையைச் செய்து பிரதிஷ்டை செய்தார்.
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
அகத்தியர், அருணகிரி போன்றவர்களுக்கும் அவ்வளவு ஏன், சிவனுக்கும் கூட குருவாக முருகன் குருபரன் என்று சொல்லப்படுவதன் காரணம் அவர் பகுத்தறிவின் அடையாளமாக, மனிதனின் வடிவமாகவேத் திகழ்வதுதான்.
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
அவர் மூலமாகவே தமிழ் பூமிக்கு வந்தது என்பது ஆன்றோர் வாக்கு. காந்தத் தத்துவத்தை அடிப்படையாக வைத்தே ஸ்கந்தன் என்ற பெயர் வழங்கப்பட்டது.
சிவபெருமான் கொண்டுள்ள ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்களோடு அதோமுகமும் சேர்த்தே முருகனுக்கு ஆறுமுகம் என்று சொல்லப்படுகிறது.
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
அதாவது கீழ் நோக்கிய முகம் என்பது பொருள். சிவபெருமானின் உலகத்தை நோக்கிய முகமாகிய ஞானக் கண்ணாகிய நெற்றிக்கண்ணை தனது ஆறாவது முகமாகக் கொண்டவன் முருகன். எனவே முருகனின் தத்துவத்தை முழுவதும் உணர்ந்தவன் ஞானத்தை உணர்ந்தவனாவான்.
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
வேல் என்பது அறிவின் நிலையைக் குறிப்பது. கூர்மையாக, அகலமாக, ஆழமாக சிந்திப்பவன் உலகையே வெல்லலாம் என்பது நுட்பம். மனிதனின் ஆறு ஆதாரங்களும் ஆறு படைவீடுகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளன.
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ஆணவம், கன்மம், மாயை இந்த மூன்றையும் அடக்குபவன் ஞானத்தை அடையலாம் என்பதைக் குறிக்கும் விதமாகவே மயில், யானை, ஆடு இந்த மூன்றையும் அடக்கி வாகனமாக வைத்திருப்பதாகக் காட்டப்படுகிறது.
யோகத்தில் திளைத்து ஞானத்தை உணர்ந்தவனுக்கு முதுமை என்பதே கிடையாது என்பதை உணர்த்தவே குமரன் என்பார்கள்.
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
முருகு என்றால் அழகு என்பது பொருள்.
தமிழ் அறிஞர்கள் மு என்றால் மெல்லினமென்றும், ரு என்றால் இடையினம் என்றும், கு என்றால் வல்லினம் என்று அழகு தமிழில் குறிப்பிடுவார்கள்.
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
இவை சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று மண்டலங்களைக் குறிப்பதாகவும் சொல்வதுண்டு. சரவணபவ என்றால் நாணல் காட்டில் பிறந்தவன் என்று வடமொழிக்காரர்கள் கதை கட்டுவார்கள்.
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ஆனால் தமிழ் மொழியைப் பொருத்தவரை சரம் என்றால் மூச்சு அவணன் என்றால் திண்ணிய அல்லது பூரணமான, செல்வாக்கு உடைய என்று பொருள். அதாவது உயிர்களுக்கு மூச்சாக விளங்குபவன் என்றும், மூச்சை கவனித்து முறையாக சுவாசிப்பவர்களுக்குள் ஞானமே வடிவாகத் தோன்றுபவன் என்று பொருள்.
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
சதாசிவத்தில் சக்தி ஒடுங்கி நிற்கிறது. பிரபஞ்சத்தில் சிவ சொரூபம், சக்தி சொரூபம் என்று இரண்டு நிலைகளில் விளங்குகிறது. நாம் பெற்றுள்ள உடல் சக்தியின் சொரூபமாகும். அதற்குள் உயிராக விளங்கும் அறிவுப் பொருள் சிவ சொரூபமாகும். இந்த இரண்டையும் இணைத்து அதன் பயனால் மேன்மையடைவதையே திருக்கல்யாணம் என்று சொல்கிறார்கள்.
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
அவ்வேளையில் வடகோடு தாழ்ந்து தெற்கு உயர்வது என்று சொல்வது எதற்காகவென்றால், வடக்கு என்பது நம் தலைப்பகுதியைக் குறிப்பது,
அதாவது பரமாத்வை அடைவதற்கான அனைத்து விஷயங்களும் அடங்கிய பகுதி. ஞான வாசலே அங்குதான் உள்ளது. தெற்கு என்பது மனிதனை கீழ் நோக்கி அழுத்தி இந்திரிய சுகங்களில் அழுத்தி வைக்கும் உடல் பகுதியைக் குறிப்பது.
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
திருமணம் ஆனவர்கள் மனம் முழுவதும் இந்திரிய சுகத்தில் திளைத்து அதிலேயே உழன்று கொண்டிருப்பதால் அவர்கள் ஞானத்தை அடைய முடியாமல் போகிறது. இதையே வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது என்றார்கள்.
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
அதற்காகவே அகத்தீயான ஞானத்தை அனுப்பி அதை சமன் செய்ததாகச் சொல்வார்கள். அதாவது யோக நிலையில் உண்மையை உணர்ந்து அளவும் நெறி முறையும் கடைபிடித்தால் இரண்டு பகுதியும் சமநிலையில் திகழும்.
இதையே முருகனும் உணர்த்துகிறார். அவருக்கு இரண்டு சக்திகள். ஒன்று தெய்வயானை கிரியா சக்தி, இரண்டு வள்ளி இச்சா சக்தி. தெய்வயானை தேவர்கள் நிலையைக் குறிக்கும் கிரியா சக்தி. எனவேதான் அவளை தேவர்களின் அரசனின் மகளாகச் சொன்னார்கள்.
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
அதாவது மனிதர்களும் தேவர்களுக்கு நிகராக கிரியையாகிய மேலான செயல்களின் மூலம் தெய்வத்தை மணந்திடலாம் அதாவது இணைந்திடலாம் என்பதைக் குறிப்பவள் தெய்வயானை.
வள்ளியைப் பொருத்தவரை இச்சை அதாவது கடவுள் மேல் உண்மையான பற்று அல்லது அன்பு கொண்டு கடவளை மணந்திடலாம் அதாவது இணைந்திடலாம் என்பதை உணர்த்துகிறாள்.
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
ஆன்மீக அன்பு நெஞ்சங்களே...
இதில் மற்றொரு சூக்குமமான கருத்தும் உண்டு. குலத்தில் மேலானவர், கீழானவர் என்பதெல்லாம் கடவுளுக்கு முன் கிடையாது.
இது எப்பொழுதும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.!
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்களும் உண்மையான பக்தியின் மூலம் இறைவனை அடையலாம். அதாவது யோகத்தின் மூலம் ஞானமே வடிவான இறைவனை அடைவதைக் குறிப்பவள் தெய்வயானை. பக்தியின் மூலம் இறைவனை அடைவதைக் குறிப்பவள் வள்ளி. எனவே குலத்தில் தாழ்ந்தவர்கள் என்று சொல்லி பிற மனிதர்களை தன்னிடத்தில் வர அனுமதிகாதவர்களை இறைவன் தன்னிடத்தில் வர அனுமதிக்கமாட்டான்.
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
இது தெரியாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக பல இலட்சம் மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படாமலேயே இருந்தார்கள். தற்போதுதான் அந்த நிலை மாறியுள்ளது.!
அது முற்றிலும் தவறானது...
அனைவரும் சரி சமம் என எண்ண வேண்டும்.!
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
ஏனென்றால் தற்போது நடைபெறுவது அறிவின் காலம். அதாவது அறிவு இயல் காலம். விண்ணாகிய இறைவனின் காலம். அதுவே விண் ஞான காலம். கலிகாலத்தில் இறைவன் நியாயமான தீர்ப்பை வழங்க வருவார் என்பது இதைத்தான். இப்போதுதான் இறைவனின் நடுநிலையான ஆட்சி பேராற்றலின் ஆட்சி, பேரறிவின் ஆட்சி உலகில் நடைபெறுகிறது.
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
இதுவே சித்தம் உணர்ந்த சித்தர்களின் காலம். நாமும் அதை உணர்ந்து அறிவால் அறிவை அறிந்துணர்ந்து பேரறிவைப் பெற்று மேன்மை அடைவோமாக. உடலாலும், உயிராலும், மனதாலும் வலிமையாகத் திகழும் மனிதனின் அறிவின் சொரூபமே முருகனின் வடிவமாகும்...
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
முத்தமிழ் முருகப்பெருமானின் பற்றிய ஆன்மீக சிறப்பு தகவல்கள் மென்மேலும் தொடரும்...
உங்கள் அனைவருடைய ஆசிர்வாதத்துடன்...
*என் அப்பன் முருகனுக்கு அரோகரா*
*வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா*
*ஆறுபடை முருகனுக்கு அரோகரா*
🌸🌹🌸🌹🌻🔔🌻🌹🌸🌹🌸
*┈┉┅━❀•M.S.Vlr•❀━┅┉┈*
*முருகனின் புகழ் நாவினிக்க பாடுவோம்...*
*அனுதினமும் அவன் அருளைப் பெறுவோம்...*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*என்றும் இறைபணியில்...*
*M.சண்முக ஐயப்பன்.மும்பை*