Thursday 30 June 2016
முகநூல் தகவல் (மனிதத்தேனீ)
இதயத்தில் அடைப்பு உள்ளதா?... இதோ உடனே செல்லுங்கள் திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார். நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார். வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்க்களிலும் வைத்தியம். இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு மாறுகிறது. பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம் . தேவையுள்ளவர் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர் . மிக மிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அதிகமான அளவில் பகிர்ந்து உங்களுடைய நண்பர்களுக்கு இத்தகைய தகவல் சென்று சேர உதவுங்கள். இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே..... Sukumaran Vaidyans G A Pharmacy & Nursing Home. Neyyattinkara P.O., Thiruvananthapuram-695572,Kerala State. Phone :0471 2222364
Wednesday 29 June 2016
முகநூல் தகவல் (மனிதத்தேனீ)
🌴அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.
🌴ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.
🌴இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.
🌴மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.
🌴முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.
🌴கோபமடைந்த ஆசிரியை கேட்டபோது சொன்னாள்.
🌴நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
🌴வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்
🌴குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன் என்று.
🌴அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை கண்களில் நீர்ததும்ப சொன்னார்,
🌴“அன்பு என்றால் இதுதான்”.
🌴உங்களால் உலகிற்கு எதையேனும் இலவசமாகக் கொடுக்க முடியும் என்று நினைத்தால் அன்பைக் கொடுங்கள்.
🌴ஏனெனில் உலகம் அதற்குத்தான் அதிகமாக ஏங்கிக் கிடக்கின்றது.🙏
Tuesday 28 June 2016
முகநூல் தகவல் (மனிதத்தேனீ)
நிதர்சனமான உண்மை .
தன் குருவிடம் ஒருவர் கேட்டார்,
”என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள் நான் என்ன செய்வது?’
”என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள் நான் என்ன செய்வது?’
குரு சொன்னார், *அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்*
“என்னால் முடியவில்லையே”!
அப்படியானால் *அவற்றைக் கடந்து செல்லுங்கள்* “அதுவும் முடியவில்லையே!”
சரி! அப்படி யென்றால் *அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள்*
“குருவே! அதுவும் முடியவில்லை!”
குரு சொன்னார்,
“அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை, கடக்க முடியவில்லை, கண்டு சிரிக்க முடியவில்லை
என்றால் *அந்த அவமானங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர்* என்று அர்த்தம்
முகநூல் தகவல் (மனிதத்தேனீ)
வணக்கம் என் சகோதரனே..
நான்தான் ஸ்வாதி பேசறேன்.
நல்லாருக்கியா ? வீட்ல அப்பா அம்மா நலமா ?
உன் கல்யாணம் நல்லபடியா நடக்க என் வாழ்த்துக்கள்.
அப்புறம் மீனா வ (தங்கை) பத்திரமா பாத்துக்க அண்ணா.
பினம் தின்னி கழுகுகளிடம்.
ஏன் அண்ணா ? நான் பெண்ணா பிறந்தது தப்பானா ?
எதுக்குனா என்னை கொன்னாங்க.
எனக்கு வாழனமுனு ஆசை.
என் மகளுக்கு உன் மடியில் வச்சு காது குத்த ஆசைப்பட்டேன் .
ஆனா பாவிங்க என்னை கொன்னுட்டாங்களேனா?
ஒருத்தன் பொன்னுங்களை காமவெறிக்கு கூப்டேன்
வரலனு சொன்னா அதனால கொன்னேனு சொல்றான்.
வரலனு சொன்னா அதனால கொன்னேனு சொல்றான்.
இன்னொரு பக்கம் என் பொண்டாட்டி வேசி ஆடுனா பிடிக்கலை கொண்ணுட்டேனு சொல்றான்.
ஒரு பக்கம் என்னை அவ லவ் பண்ண முடியாதுனா கொன்னுட்டேனு சொல்றான்.
இன்னொரு பக்கம் என் குடும்பத்து பொன்னு இன்னொருத்தன லவ் பண்ணா அதனால கௌரவ கொலை பண்ணோம்னு சொல்றான்.
நீ.சொல்லுனா
பொண்ணுங்க ஆம்பளைங்க யூஸ் பன்ற மெஷினா ?
இன்னைக்கு நான் நாளைக்கு நம்ம மீனா லட்சுமி சீதானு ஒவ்வொரு பொண்ணா கொன்னுட்டே போவாங்களா அண்ணா?
உங்கள மாதிரி அண்ணணுங்க காப்பாத்துவீங்கனுதான் பஸ்ஸ்டாண்ட் ரெயில்வே ஸ்டேஷன் கல்லூரி அலுவலகம் வாரோம்.
அண்ணா
உன் தங்கச்சிக்கு உன் அக்காவுக்கு இப்படி ஒன்னு நடந்தா கைகட்டி வேடிக்கை பார்ப்பீங்களா அண்ணா..
நான் யாரோனு நினைச்சிட்டாங்க.
பரவாயில்லை அண்ணா .
நான் ஒரு பொண்ணா செத்தது கூட நல்லதுதான்.
பல பொண்ணுங்க ஆண் உருவத்தில் கோழையாக திரிவதை பார்க்கிறப்போ செத்தது தேவலாம்னு நினைக்கிறேன் அண்ணா..
எங்கேனா மனித உரிமை கமிஷன் .
எங்கேனா நீதிமன்றங்கள்.
தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யாத நீதிமன்றம்?
கமிஷன் வாங்கிட்டு போய்ட்டாங்களா ?
மாதர் சங்கம் சிம்பு பீப்சாங்க் பாடுனானு கொடி புடிஞ்சாங்களே..
இப்போ ஒரு பெண்ணே செத்து கிடக்கிறேன்.
எங்கே அந்த பீப்புகள் அண்ணா.
எந்த அரசியல் கட்சியும் கூட இதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கலயே அண்ணா..
நீயும் அப்படியே சுயநலமா இருந்துடாத அண்ணா.
அண்ணா புரட்சி எடு அண்ணா .
உன்னை நான் நாட்டை எதிர்த்து போராடுனு சொல்லல.
உண்மையில் நீ ஒரு நல்ல அண்ணண்ணா
இந்த ஐடியில் இருப்பது எல்லாமே ஆண்கள்தான்னா
நான் சொல்றத ஷேர் பண்ணுணா.
இது ஒவ்வொரு தமிழன் காதிலும் விழட்டும்.
அது குறைந்தபட்சம் என்னைப்போன்ற சுவாதிகளை காப்பாற்றும்.
இப்பொழுதாவது எனக்கு இதை கூட செய்யாமல் போனால் நீயும்
என்னை கொலை செய்த கூட்டத்தை சேர்ந்தவனுக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் அண்ணா.
நான் சுவாதி பேசுறேன் அண்ணா நம்ம சகோதரி ஸ்வாதி பொண்ணோட நிலம எல்லாருக்கும் தெரியும் .... ....இந்த மாறி பொது இடங்கள்ல எதுனா தப்பா நடந்தா உடனே என்னனு கேளுங்க,முடிஞ்ச அளவுக்கு அத தடுக்க பாருங்க.....தப்பு நடக்கற எல்லா எடத்துலேயும் நம்ம இருக்க முடியாது....ஆனால் நம்ம கண்ணு முன்னாடி இது போல ஏதாவது தப்பு நடந்தா தைரியமா இறங்கி அத தடுக்கனும் .....பொண்ணுங்களுக்கு ,நம்ம எல்லாரும் அப்பாவா,சகோதரனா ,காதலனா இருக்கணும்னு அவசியம் இல்ல ,ஒரு நல்ல நண்பனா, நல்ல தோழனா இருந்தாலே போதும் இந்த மாறி தப்புகல நம்ம கண்டிப்பா தடுக்கலாம். ...RIP ஸ்வாதி
Monday 27 June 2016
முகநூல் தகவல் (மனிதத்தேனீ)
நுங்கம்பாக்கம் ரெயில்நிலையத்தில் பட்டப்பகலில் அத்தனை பேருக்கு மத்தியில் ஒருவன் ஒரு பெண்ணை அரிவாளால் வெட்டி சாய்க்கிறான் என்றால் இதை என்ன சொல்வது?இந்த அளவுக்கு நம்மவர்கள் கொடூரமாகி விட்டார்கள் என்று சொல்வதா?இதை பார்த்த ஒருவர் கூட தப்பி ஓடிய அவனை பிடிக்கமுயலவில்லை.வேடிக்கை தான் பார்த்து இருக்கிறார்கள்.ஒரு பெண்ணின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா?இது நடந்த அதேநாளில் வெளியான இன்னொரு செய்தி திருமணமாகி 3பெண்களுக்கு தாயான பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒருவன் 4பேரையும் பெண்டாள நினைத்து அது முடியாமல்போனபோது அவர்களை கொலை செய்கிறான்.ஏன் இப்படி ?நாம் ஏன் இந்த அளவுக்கு நெஞ்சில் ஈரமில்லாதவர்களாகிப்போனோம்.நமது வளர்ப்பிலும்,சமூக கட்டமைப்பிலும் எங்கோ தவறு உள்ளது.அதை கண்டறிந்து களைய நமது சமூகவிஞ்ஞானிகள் முன்வரவேண்டும்.நமது பள்ளிப்படிப்பில் நீதி வகுப்பை ரத்து செய்தது தவறு.அதை திரும்ப கொண்டு வரவேண்டும்.அதே போல இலக்கிய வகுப்பையும் அறிமுகப்படுத்தவேண்டும்.இலக்கியம் மனித மனங்களை மென்மையாக்கும்.
Saturday 25 June 2016
Friday 24 June 2016
Thursday 23 June 2016
Subscribe to:
Posts (Atom)