Thursday 13 December 2018

டாக்டர் கா. காளிமுத்து - மனோகரி காளிமுத்து தம்பதியரின் மகன் அருள்மொழித் தேவன் - மீனாம்பிகை திருமண வரவேற்பு விழாவில்

இன்று இரவு மதுரையில் நடைபெற்ற முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர், நாவுக்கரசர், டாக்டர் கா. காளிமுத்து - மனோகரி காளிமுத்து தம்பதியரின் மகன் அருள்மொழித் தேவன் - மீனாம்பிகை திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மகிழ்ந்த தருணம்.
அண்ணன் கா. காளிமுத்து அவர்கள் நான் 1979 ல் பொது மேடைகளில் பேசத் தொடங்கிய காலத்தில் வெளிப்படையாகப் பாராட்டி மகிழ்ந்தவர். எங்கள் வளர்ச்சியை தன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ந்து பார்த்த மாமனிதா்.1993 ல் தொலைபேசியில் பேசுகிறபோது மனிதத்தேனீ பேசுகிறேன் என்று சொல்ல வேண்டும் என்று உரிமையுடன் சிறப்பாக உற்சாகப்படுத்தியது இன்றும் பசுமையாக உள்ளது.
மாப்பிள்ளை மற்றும் அவரது சகோதரி என்னைப் பார்த்த உடனே நீங்கள் ஆண்டு தோறும் அப்பாவை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதைப் பார்த்து மகிழ்வோம் என்றனர். புகழ்பெற்ற பெற்ற மருத்துவர் எம் ஏ சி எஸ். ராஜேந்திரன், துணை முதல்வர் ஓ. பி எஸ். மைந்தர் உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் வந்திருந்தனர்.
வாழிய மணமக்கள். - மனிதத்தேனீ



No comments:

Post a Comment