Tuesday 23 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தோல்விகள் சொல்லும் பாடம்
பத்தாவது முறையாகக் கீழேவிழுந்தவனைப் பார்த்துபூமி முத்தமிட்டு சொன்னதுநீ
ஒன்பது முறை எழுந்தவன் என்று”உண்மைதான்!
விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர, அழுவதற்கு அல்ல என்பதே தோல்விகள் நமக்குச் சொல்லும் பாடம்.
தடைப்படும் இடங்களில் தளராது வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப் போல விடாமுயற்சி உடையவனுக்கு வரும் துன்பமே துன்பப்பட்டு விலகிப் போகும். எருதினைப் போன்ற முயற்சி உடையவர்கள், தோல்விக்கே தோல்வி தந்து விடுவார்கள். நமது முயற்சிகளுக்கு தோல்விகள் என்றும் தடைபோடக் கூடாது. முன்னணிக்கு வந்தவர்களின் பின்னணிகள் எல்லாம், தோல்வியால் தான் சூழப்பட்டிருக்கும். தோல்விகள் இல்லாத வெற்றி யாருக்கும் சாத்தியப்படாது. வாழ்க்கை என்பது திரைப்படம் அல்ல, ஒரே பாடலில் முன்னேறி விடுவதற்கு!
தோல்வி தாங்கும் மனம்: தோல்வியே ஒருவர் அடைந்ததில்லை என்றால் அவர் புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர் என்று தான் அர்த்தம். நாம் நடக்கும் பாதை மலர் மீது அமைய வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதில் உள்ள ஒரு முள்ளைக் கூட மிதிக்கக் கூடாது என்று நினைப்பதில் அர்த்தமில்லை. வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியைத் தாங்கும் மனம் இருப்பதில்லை. தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றி தான் என்பதை உணரவேண்டும்.
தோல்வி என்பது நாம் செல்லும் பாதை சரியில்லை என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறது. அதை நாம் புத்திசாலித்தனமாக புரிந்து கொண்டு வேறு பாதையை ஆராய வேண்டும். வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம். ஏனெனில் வெற்றி சிரித்து மகிழ வைக்கும். ஆனால் தோல்வியோ சிந்தித்து வாழ வைக்கும். பெரும்பாலானோர் வாழ்வில் திருப்பு முனை என்பது தோல்வியின் வடிவில் தான் வந்திருக்கிறது. அவற்றை நமது மன உறுதிக்கு வைக்கப்பட்ட சோதனையாகவே நினைத்தால், தோல்விகளால் நமக்கு பயன் உண்டு என்பதை உணரலாம்.
பாடம் கற்கலாம்: நேற்றைய தோல்விகளிலிருந்து இன்றைய முன்னேற்றத்திற்கான பாடங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். மகரயாழ் தோல்வி என்னும் நேற்று மடிந்த வைக்கோல், இன்று நல்ல எருவாகி இருக்கிறது என்பதை உணர்ந்தால், தோல்வி என்பதை வரவேற்கலாம் அல்லவா!
விதையானது தாம் விழும் போதெல்லாம் மரமாக எழுவோம் எனும்போதும், இலை தாம் விழுந்தாலும் உரமாக ஆவோம் எனும் போதும், நாம் மட்டும் விழுவதற்குத் தயங்கலாமா? விழுவோம்! எழுவோம்!
நன்றி
பா.பனிமலர்,

மனிதத்தேனீயின் தேன்துளி


Monday 22 June 2020

ஊக்கம் தரும் ஆய்வு.....

ஊக்கம் தரும் ஆய்வு.....
சீனா... இந்தியாவிடம் சீண்டினால் இழப்பு சீனாவுக்கு தான். சர்வதேச மையம் ஆய்வு அறிக்கை.!!
என்ன தான் சீனா நிலப்பரப்பில் பரந்து விரிந்து இருந்தாலும் அதிக அளவில் ராணுவ வீரர்களை கொண்டிருந்தாலும் இந்தியாவிடம் இருக்கும் ராணுவ வீரர்களை சீனாவால் எதிர்கொள்ள முடியாது. அந்த அளவிற்கு இந்திய வீரர்கள் திறன் பெற்றிருக்கிறார்கள் என்று அமெரிக்காவில் உள்ள சர்வதேச ஆய்வு மையம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு கென்னடி அறிவியல் மற்றும் சர்வதேச பெல்பர் மையம் இந்தியா-சீனாவின் படை பலத்தை ஆய்வு செய்து உள்ளது.அதில் இரு நாடுகளிலும் உள்ள படை வீரர்களின் எண்ணிக்கை, விமானங்கள் மூலம் தாக்கும் திறன் போன்றவை விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளது
இறுதியாக போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு டோக்லாமில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து இந்தியாவும், சீனாவும் எல்லையில் வீரர்களை குவித்து வருகிறது. இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினாலும் எல்லையில் பதற்றம் குறையவில்லை. சீனாவின் அச்சுறுத்தல்கள் எல்லாம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும். ஏனென்றால் உலக அரங்கில் இந்தியா வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. சீன விவகாரத்தில் இந்தியா துணிவதற்கு தனது நாட்டின் ராணுவ நிலைப்பாட்டில் இந்தியா மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளது தான் முக்கிய காரணம்.
சீன படை பலத்தின் முன் இந்தியா சாதாரணமானது என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டு உள்ளது. இது முற்றிலும் தவறு. ராணுவ கட்டமைப்பு, தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் என்ற ஒட்டு மொத்த கணக்கீட்டில் சீனா முன்னணியில் இருக்கிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த கட்டமைப்புகள் அனைத்தும் பரந்து விரிந்த சீனாவின் எல்லையை பாதுகாக்க போதாது.போரில் வெற்றி என்பது வீரர்கள், ஆயுதங்களின் எண்ணிக்கையில் மட்டும் கிடைத்து விடுவதில்லை. மாறாக களத்தில் செயல்படும் திறனின் அடிப்படையில் அமைந்து உள்ளது.
அதன்படி சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் திறன் மிக சிறப்பாக உள்ளது. இந்திய-சீன போர் ஏற்பட்டால் அதில் தரைப்படை மற்றும் விமானப்படை தான் முக்கிய பங்கு வகிக்கும். இரு நாடுகளிலும் கடல் வழி தாக்குதல்கள் சாத்தியமில்லை.
தரைப்படை வீரர்களின் மொத்த எண்ணிக்கையை பொறுத்தவரை இரு நாடுகளும் சம எண்ணிக்கையில் தான் உள்ளன. ஆனால் இந்திய-சீன எல்லையில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கையில் இந்தியா தான் முன்னணியில் இருக்கிறது.
அதாவது சீனா தனது நாட்டை பாதுகாக்க 5 படைப்பிரிவுகளை ஏற்படுத்தி உள்ளது. அதில் இந்திய எல்லை அருகே நிலைகொண்டு இருக்கும் படை மேற்கு திடேட்டர் கமாண்டட் ஆகும்.இந்த படைப்பிரிவில் இருக்கும் சீன வீரர்களின் எண்ணிக்கை வெறும் 2 லட்சத்து 30 ஆயிரம் தான் உள்ளது. இவர்கள் மட்டுமே மலை பாங்கான அந்த பகுதிகளில் போரிடும் திறன் பெற்று இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள ராணுவம் அனைத்தும் இந்திய-சீன எல்லையில் தான் உள்ளது. அதாவது மொத்தம் 20 லட்சம் இந்திய வீரர்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்திய-சீன எல்லையில் இருக்கும் இடங்களை நன்கறிந்தவர்கள். மலை பகுதிகளில் போரிடும் திறன் பெற்றவர்கள். எனவே தரைப்படையில் இந்தியாவே பலம் பொருந்தி உள்ளது.
சீனாவின் மேற்கு திடேட்டர் கமாண்ட் பகுதியில் மொத்தம் 157 போர் விமானங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் இந்த பகுதியில் மட்டும் 270 போர் விமானங்கள் மற்றும் நிலப்பரப்பை அழிக்கும் 68 சிறிய ரக விமானங்களும் உள்ளன. அதன்படி விமானப்படையின் எண்ணிக்கையில் இந்த பகுதியில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. சீனாவின் ஜே-10 போர் விமானத்திற்கு இணையாக இந்தியாவில் மிராஜ் விமானங்கள் உள்ளன. போர் என்றால் இரு நாடுகளும் முதலில் விமான தளங்களை குறி வைத்தே தாக்குதல்களை தொடங்கும்.
அதன்படி இந்தியா தனது பகுதியில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் சீனாவின் எல்லை பகுதிகளில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் மிக எளிதாக தாக்கி விடும். அந்த சூழ்நிலையில் சீனாவின் உட்பகுதியில் உள்ள விமான நிலையங்களில் இருந்து இந்திய பகுதிகளை தாக்குவது சீனாவிற்கு பெரும் பிரச்சினையாக இருக்கும். ஒரு வேளை தாக்குதலை தொடங்கினால் கூட இந்தியா அதனை எளிதாக முறியடிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
சீனா இந்தியாவின் அனைத்து முக்கிய பகுதிகளையும் தாக்க 104 தாக்குதல்களை நடத்த வேண்டும். ஆனால் இந்தியாவின் 10 எண்ணிக்கையிலான அக்னி 3 ஏவுகணை மூலம் சீனாவின் அனைத்து முக்கிய பகுதிகளையும் இந்தியாவால் தாக்க முடியும். அதேபோல் அக்னி-2 ஏவுகணைகள் மூலம் இந்தியா மத்திய சீன பகுதி முழுவதையும் தாக்கும் திறன் கொண்டது. மிக முக்கியமாக 51 அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட ஜாக்குவார் விமானங்கள் மூலம் ஒட்டுமொத்த சீனாவின் திபெத் பகுதியை இந்தியா எளிதாக அழித்து விடும்.
இந்தியாவுடன் மோதல் ஏற்பட்டால் சீனா தனது நீளமான எல்லையில் உள்ள அனைத்து படைகளையும் ஒன்று திரட்ட வேண்டும். ஆனால் இந்தியாவிற்கு அப்படியல்ல, எளிதாக தனது படைகளை சீன எல்லையில் சேர்த்து விடும். ஏனென்றால் இந்தியாவின் படைகளில் அதிக சதவீதம் ஏற்கனவே சீன மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் தான் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய பலம். இந்தியா சீனாவை விட வலுவான நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளது.
குறிப்பு;மேலே அவர்கள் கூறிய,"சீனாவின் அச்சுறுத்தல்கள் எல்லாம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும். ஏனென்றால் உலக அரங்கில் இந்தியா வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. சீன விவகாரத்தில் இந்தியா துணிவதற்கு தனது நாட்டின் ராணுவ நிலைப்பாட்டில் இந்தியா மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளது தான் முக்கிய காரணம்.போரில் வெற்றி என்பது வீரர்கள், ஆயுதங்களின் எண்ணிக்கையில் மட்டும் கிடைத்து விடுவதில்லை. மாறாக களத்தில் செயல்படும் திறனின் அடிப்படையில் அமைந்து உள்ளது" இவைகள் 100% உண்மை.
வீரத்தில்,புத்திசாலிதனத்தில்,வெளிப்படை தன்மையில் நாம் உலகில் முன்னணியில் உள்ளதாக கூறும் இந்த ஆய்வு நமக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கிறது..
ஜெய்ஹிந்த்.
நன்றி ராஜப்பா தஞ்சை

'' கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்..''


`உங்களுக்கான வாய்ப்பு வரும் போது, நீங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம்’ ,,
நமக்குக் கிடைத்திருப்பது நல்ல வாய்ப்பு என்பதைப் புரிந்து கொள்ளாமல் நழுவ விடுபவர்கள், வெற்றியை நழுவ விடுகிறார்கள்.
சிலபேர் எனக்கு இப்போது நேரம் சரியில்லை.நேரம் வரும் போது அதுவே தானாக வந்து சேரும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்..
ஆனால் வந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களே வாழ்க்கையில் வெற்றி கொள்கிறார்கள்..
தொழிலிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு என்பது முக்கியத் தேவையாக இருக்கிறது.
வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கும், வெற்றிக்கும் இடையே தொடர்பு இருக்கிறது.
ஒரு அழகான இளைஞன் விவசாயி ஒருவனின் மகளை திருமணம் செய்ய விரும்பி அவனிடம் சென்று அனுமதி கேட்டான்.
அதற்கு அந்த விவசாயி அந்த இளைஞனைப் பார்த்து சொன்னான்.
இளையனே நீ என் மகளை மணக்க விரும்பினால்,நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன்.
அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும், என் மகளை மணமுடிக்க சம்மதிக்கிறேன் என்று சொல்ல அவனும் ஒத்துக் கொண்டான்.
மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது.முதலில் ஒரு மாடு வந்தது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அந்த மாடு சீறியபடி பாய்ந்து வந்தது.
அதைப் பார்த்த இளைஞன் வாலைப் பிடிக்கத் தயங்கி அடுத்த மாட்டைப் பார்க்கலாம் என்று விட்டு விட்டான்...
சிறிது நேரத்தில் அதை விடப் பெரிய மாடு வெளியே ஓடி வந்தது. பார்க்கவே பயங்கரமான தோற்றம்....
அவனைக் முட்டி மோதி கொல்வதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது. இளைஞன் அச்சப்பட்டு இதுவும் வேண்டாம் ...
மூன்றவதைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டான்.ஓடி வந்த ..மாடு அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடிச் சென்றது....
மூன்றாவது முறையாக கதவு திறக்க, அப்போது வெளியே வந்த மாட்டைப் பார்த்து இளைஞன் முகத்தில் புன்சிரிப்பு வந்தது.
அவன் வாழ்க்கையில் பார்த்ததில் இதுவே மிகவும் பலவீனமான மாடு. எலும்பும் தோலுமாய் பார்ப்பதற்கே பரிதாபமாக ஓட முடியாமல் ஓடி வந்தது.
இந்த மாட்டை விடக்கூடாது. .இதைத் தான் நான் பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன் வாலைத் தொடத் தயாராக இருந்தான்...
மாடு அருகில் வந்ததும், ஒரு தாவு தாவி மாட்டின் வாலைத் தொடப் போனான். ஆனால் அதிர்ச்சி அடைந்தான். ஆம்.அந்த மாட்டுக்கு வாலே இல்லை.
ஆம்.,நண்பர்களே.,
நமது வாழ்க்கையும் இப்படித் தான்.அது பல வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது. சில வாய்ப்புகள் எளிதாகத் தோன்றலாம். சில வாய்ப்புகள் கடுமையாக இருக்கலாம்....
ஆனால் எளிதானவற்றைக் கண்டு ஆசைப்பட்டு, மற்றது கடுமையாக உள்ளது என்று நம்பி அதைத் தவற விட்டால் (அதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும்) அந்த வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது.
ஆகவே, வாய்ப்புகளை பயன்படுத்துவதில் தான் உங்கள் திறமை இருக்கிறது.

மனிதத்தேனீயின் தேன்துளி


காரைக்குடி இளம் ஓவியர் ஆர்த்தி சபாபதிக்கு இணையத்தில் வாக்களித்து ஊக்குவிக்க வேண்டுகின்றோம். இன்று கடைசி நாள். தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழியாக வாக்களித்திடவும். [6/10, 10:31 AM] Muthayee Chockalingam: https://poll.app.do/tt-2906613 [6/10, 10:32 AM] Muthayee Chockalingam: Could you vote for Alamelu @Aarthi Sabapathy? You have to select her picture hanuman carrying sanjeevini and scroll to the bottom to hit send.


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

'வாழ்தல் என்பது ஒரு கலை
வெகு சிலருக்கு அது ஓர்
ஆனந்த அலை'
நீங்கள்தான் உங்கள் நண்பன்!
நம்முள் இருக்கும் ஜீவனில்
எல்லாம் இருக்கிறது.
* மகத்தான சக்தி இருக்கிறது.
* எதையும் சமாளிக்கும் இயல்பு இருக்கிறது
* தெரிந்துக்கொள்ளும் முன்
னேறும் ஆர்வம் இருக்கிறது
* அன்பும், கருணையும் இருக்கிறது
* இந்த ஜீவன் வாழ விரும்புகிறது -சாக அல்ல
* எல்லாவற்றையும் அனுபவிக்க விரும்புகிறது - அழுது புலம்ப அல்ல.
சுவாமி விவேகானந்தரும் 'உனக்குள் அளவற்ற ஆற்றலும் அறிவும் வெல்ல முடியாத
சக்தியும் குடிகொண்டுள்ளன. அவற்றை வெளியே ' கொண்டு வாருங்கள்' என்கிறார்.
எனவே உங்களை ஒருநண்பனாக நீங்களே தட்டிக்கொடுத்து அழைத்துச் செல்லுங்கள்.
உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்!
சிரித்து மகிழ்ந்து வாழ்ந்துவிடுங்கள்!
கோபமாக இருப்பதை
கோபத்தில் இருப்பவன் உணர்வதில்லை. துக்கமாக இருப்பதை துக்கத்தில் இருப்பவன் அறிவதில்லை.
வாழ்க்கை எனும் கடையில் உற்சாகம், நம்பிக்கை, வலிமை, ஆரோக்கியம், துடிப்பு, அன்பு, உண்மை, பரிவு, உதவி என்று பல நல்ல பழக்கங்களையும், பகைமை, பொறாமை, வெறுப்பு, கோபம், சுடுசொல், பொய் என்று பல அழுகிய பழங்களையும் அடுக்கி வைத்திருக்கிறார்கள். இதில் நீங்கள் எதை தேர்ந்தெடுத்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது உங்கள் கைகளில்!
.'என்னால் எதுவும் முடியும். எனக்குள் ஒரு மாபெரும் சக்தி குடிகொண்டிருக்கிறது. ஆண்டவன் என் அருகில் இருக்கிறார். நான் சரியான பாதையில் சென்று
கொண்டிருக்கிறேன்' என்கிற எண்ணங்கள் உள்ளத்தில் ஆழமாக வேர்விடும்போது அது நம்பிக்கையாக, வாழ்வின் லட்சியமாக உருப்பெறுகிறது.இவ்வாறு உற்சாகம், நம்பிக்கை, வலிமை இவற்றை வாழ்க்கையின் லட்சியங்களாக கொண்டால் உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்!.

மனிதத்தேனீயின் தேன்துளி


சர்வதேச யோகா தினம்


டீசல் பெட்ரோல் விலை உயர்வு கடும் கண்டனத்திற்கு உரியதாகும், மக்கள் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


SPRINT | படிக்கச், சிந்திக்க, பயன்பெற

SPRINT | படிக்கச், சிந்திக்க, பயன்பெற
வாராந்திர காணொளி |சனிக்கிழமை தோறும்
நான்கே நிமிடங்கள்....
முன்னணி நிறுவனமான இன்போசிஸ்..
பகுதி 1 - உங்கள் பார்வைக்கு: இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பெரிய நிறுவனத்தை பற்றி அச்சு அலசல்
பகுதி 2 - உங்கள் கவனத்திற்கு: நிதி, வர்த்தகம், வருமான வரி, சரக்கு மாற்றும் சேவை வரி (GST) பற்றிய அறிவிப்புக்கள் விளக்க உரையுடன்
பகுதி 3 - பங்குச்சந்தை, தங்கம், கச்சா எண்ணெய் , அந்நியச் செலாவணி, வாராந்திர ஏற்ற இறக்கம் , விளக்க உரையுடன்.
உரியவர்கள் பயன்படுத்தலாம், இதனை அனைவருக்கும் எடுத்துச் சொல்லும் சமூக அக்கறையுள்ள, பொருளாதார சிந்தனையுள்ள நமது சகோதரி தேவகோட்டை ஆடிட்டர்
எல். உண்ணாமலை அவர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன். - மனிதத்தேனீ

Saturday 20 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கரோனா காலத்திலும் ஆரோக்கியத்துடன்
இன்று
102 ஆது பிறந்தநாள் காணும் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பொன்னுமணியகாரர்.
உலகமே கொரனா தொற்றினால் பாதிப்புற்று வரும் வேளையில் அதுவும் முதியோர்கள் அதிகமானார் பாதிக்கப்படும் இச்சூழ்நிலையில் எவ்வித பதட்டமுமின்றி நோய்நொடியுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் தனது 102 வயதினை தொட்டுள்ளார் முதிய இளைஞர் பொன்னுமணியகாரர்.
இன்றும் திடகாத்திரமாக,மனோ வலிமையுடன் தனது மனைவி 87 வயதான கண்ணம்மாளுடன் தேவையம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்தில் வசித்து வரும் இவர் 1918 இல் பிறந்தார்.தனது அனைத்து அன்றாட பணிகளை தானே செய்து கொள்ளும் இவர் பள்ளிக் கல்வியை அரசுப் பள்ளியில் முடித்த இவர் பின்னர் குன்னூரிலுள்ள தனியார் பள்ளியில் சேர்பிக்கப்பட்டார்.
அப்போது அங்கு வந்து ஒருவாரம் தங்கியிருந்த காந்தியடிகளைச் சந்தித்து ஆசிபெற்றுள்ளார்.அப்போது காந்தியடிகளின் சுற்றுப்பயணத்திற்கு பொறுப்பேற்ற சுதந்திரப்போராட்ட தியாகியும்,ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய நிறுவனருமான தி.சு.அவினாசிலிங்கம் செட்டியாருடன் ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக அவருடன் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக பெரியநாயக்கன்பாளையத்தில் பூமிதான இயக்கம்,தீண்டாமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் ஈடுபட்டார்.
அப்போது வித்யாலயத்திற்கு வருகை தந்த வினோபாஜி,ஆச்சார்யா கிருபளானி,ஜெயபிரகாஷ் நாராயணன்,பாபு ராஜேந்திர பிரசாத்,லால் பகதூர் சாஸ்திரி,பத்வத்சலம்,காமராஜர்,சர்தார் வேதரத்தினம் பிள்ளை,சி.சுப்பிரமணியம் உள்ளிட்டோருடன் நெருங்கிப் பழகியவர்.காந்திய நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட இவர் நேபாளம் மற்றும் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சென்று கிராமப்புற வளர்ச்சிப்பணிகள் குறித்து அறிந்துள்ளார்.தனது ஆரோக்கியத்திற்கு சைவ உணவுதான் முக்கிய காரணம் என்று கூறும் இவர் 1960 முதல் நாயக்கன்பாளையத்தின் மணியகாரராக நியமிக்கப்பட்டார்.
அப்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அறம் அவர்களின் உதவியுடன் தொடக்க,உயர்நிலைப்பள்ளிகள்,சர்வோதயா இல்லங்களை கட்ட ஏற்பாடுகள் செய்துள்ளார்.கோவையில் விவசாயிகள் மாட்டுவண்டி போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டு சுமார் 1 மாதம் சிறைவாசம் அனுபவித்தார்.இந்திய சீன யுத்தத்தின்போது தனது பென்சன் தொகையை அரசுக்கே திருப்பித் தந்த இவருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பார்வை குறைபாடிற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இன்றும் தன்னை சந்திப்பவர்களை உடனடியாக கண்டுகொள்ளும் இவர் தனது வீட்டு வளாகத்திலே ஆதரவற்றோர் இல்லத்தையுடன் நடத்தி வந்தார்.இதில் படித்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று அரசின் பல்வேறு துறைகளில் உயர்பதவிகளில் உள்ளனர்.
தனது 102 வயதை தொடும் இவரிடன் தற்போதைய கரோனா நிலை குறித்து கேட்டபோது.கோவை மலேரியா நோய் பரவலால் பாதிக்கப்பட்டபோது அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.கோவையில் வசித்த பலர் அந்நோய்க்கு பயந்து பெரியநாயக்கன்பாளையத்தில் குடியேறினர்.பொதுவாக இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையை கடைபிடித்தால் கரோனா மட்டுமல்ல. எவ்விதநோய் கொடிய நோயும் நம்மை அண்டாது.குறிப்பாக புலால் மறுத்து,சிறுதானிய உணவுகள்,இயற்கை காய்கறிகள்,மஞ்சள்,கருமிளகு,சீரகம் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் எவ்வளவு வயதானாலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
முதியோர்களுக்கு மனோவலிமை முக்கியம்.மனதில் இளமையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.தனக்கு எந்த இடர்பாடும் நேராது என்ற தைரியம்,நல்ல உறக்கம்,தன்பணிகளை தானே குறித்த நேரத்திற்கு செய்தல் போன்றவை நம் உடலை நல்ல முறையில் பேணுவதற்கு உதவியாக இருக்கும்.வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் மட்டும் உண்டு.புகையிலை சேர்க்க மாட்டேன்.மற்றபடி எவ்வித கெட்டபழக்கங்களும் இல்லை.கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேல் பெ.நா.பாளையம் வட்டாரத்தில் உள்ள கிராமப்புற வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டேன்.அதுதான் எனக்கு மனநிம்மதி என்றார்.
பல்வேறு தொற்றுநோய்களினால் இளம் வயதினரே பாதிக்கப்படும் இந்த நவீன சூழ்நிலையில் இன்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையினால் 102 வயதிலும் நல்ல உடல் திறனுடன் இருக்கும் பொன்னுமணியகாரர் போன்றவர்கள் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாய் விளங்கத்தக்கவர்களே என்றால் அதுமிகையில்லை.
ஆசி பெறுவோம்.
- தினமணி விஜயகுமார்.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நாளை நடைபெறவுள்ள வளைய சூரிய கிரகணம், தமிழகத்தில் 34 சதவீதம் மட்டுமே தெரிய வாய்ப்பு உள்ளதாக கொடைக்கானல் வானியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் காலை 10:22க்கு ஆரம்பித்து பிற்பகல் 1:41 மணிக்கு கிரகண முடிவு பெறும் என்றும், நண்பகல் 11:59 மணிக்கு முழுமையான நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் அருகே உள்ள லே பகுதியில் 98 சதவீதம் சூரிய கிரகணம் தெரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*கவியரசு வாட்ஸ் அப்*
**************** ********
குறுஞ்செய்தி & வாட்ஸ் அப் சேவையில் 12வது ஆண்டு.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
20.06.2020 சனிக்கிழமை
⚫பின்னனி பாடகர் ஏ.எல்.ராகவன் சூன்-19 அன்று காலமானார்
நடிகை எம்.என்.ராஜம் அவர்களின் கணவரும் பிரபல பாடகருமான் ஏ.எல்.ராகவனின் திறமைக்கு பல பாடல்கள் அமைந்தன.
"பார்த்தால் பசி தீரும்" படத்தில் "அன்று ஊமைப் பெண்ணல்லோ" "நெஞ்சில் ஓர் ஆலயம்" படத்தில் பாடிய "எங்கிருந்தாலும் வாழ்க", இருவர் உள்ளம் படத்தில் "புத்தி சிகாமணி பெத்த புள்ள", வேட்டைக்காரன் படத்தில் "சீட்டுக்கட்டு ராஜா", பூவா தலையா படத்தில் "போடச்சொன்னா போட்டுக்கறேன்" என்று பல தனித்துவம் மிக்க பாடல்களை ரசிகர்கள் அன்றும், இன்றும் கேட்டு கொண்டே இருக்கின்றனர்.
〰️〰️〰 🏴🏴🏴〰️〰️〰️
கவியரசர் கண்ணதாசன் எழுதி, ஏ.எல்.ராகவன் பாடிய பாடல் ஒன்று.
🎶🎶
எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க...வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க..
இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க..
வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க..
ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க
எங்கிருந்தாலும் வாழ்க..
படம் : நெஞ்சில் ஒரு ஆலயம்
〰〰〰😷😷😷〰〰️〰
**கரொனா சிந்தனை!*
➰
தேனீர் கடைகளில்,
எப்போதும் சூடாகவே,
பேசப்படுகிறது
கரொனா வதந்திகள்!
〰️〰〰️〰️〰️〰️
🙏🏻கண்ணன்சேகர்
9698890108.
Chandran Pl

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மறப்போம்... மன்னிப்போம்..*
வெள்ளத்தின் அளவுப் படி மலர் உயர்வது போல, மனிதனின் உள்ளத்தில் தோன்றும் நல்ல
எண்ணத்தின் அடிப்படையில் உயர்வு பெறுகிறான்.
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அணைய துயர்வு
பொறாமை, ஆசை, கோபம், தீயசொற்கள் எனும் நான்குகேடுகளை விடுத்தால் அறம்
உருவாகும். அன்பும், பொறுமையும் முகிழ்ந்து அங்கே மறப்போம்,மன்னிப்போம் என்ற உன்னதமான பண்பு உருவாகும். எல்லாசமயங்களும் இப்பண்பையே மனித குலத்தில் உயர் பண்பாக கூறுகிறது. அறம் என்பது எழுதப்பட்டசட்டங்களில் இல்லை. கூறப்பட்ட மறைகளில் இல்லை. வாழும் வாழ்வின் ஆதாரத்தில் உள்ளது என்று இந்து சமயம் கூறுகிறது.
அன்பையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் அறியும் பண்பு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. மகரயாழ் இறைவன் அனைத்து உயிரிடத்தும், பெற்றோர் பிள்ளைகளிடத்தும், காட்டும் அன்பில் பிழைஇருக்காது. தவறே இழைப்பினும் மறந்து, மன்னித்து விடும் பண்பு
நிறைந்திருக்கும். அன்பு என்னும் அச்சாணியைப் பற்றினால்
மன்னிக்கும் குணம் தானாக வந்தடையும். ஒவ்வொரு குழந்தை யும் முதலில் காணும் உலகம்
பெற்றோர்கள். பெற்றோர்களிடம் இருந்து ஆதார பண்புகளை கண்டு அறிந்து கொள்கிறது. ஆகையால் பெற்றோரே குழந்தைகளுக்கு அன்பு எனும் காற்றை சுவாசிக்க கற்றுத்தர வேண்டும்.
மறப்போம், மன்னிப்போம் என்னும் பண்பை முன்னுறுத்தினால், நல்ல சமுதாயத்தை
உருவாக்கலாம். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறுவது போல், உயிர்களுக்கு உருகும் உள்ளம் இருந்தால், அங்கே ஊற்றுக் கண்ணாய் அன்பு சுரக்கும். உதடு எனும் கதவை, தேவையின்றி திறக்காமல் இருந்தால் பலஇன்னல்களிலிருந்து விடுபடலாம்.சகுனி, கூனி இருவருக்கும் மறப்போம் மன்னிப்போம் என்ற நற்குணங்கள் இல்லாமையாலும், பயனில்லா சொற்களைகூறியதாலும் இரு மாபெரும் யுத்தங்கள் ஏற்பட்டது.
திருமூலர் மனதில் உள்ளேவுள்ள மங்கல விளக்கு ஒளி பெற சினம் எனும் நெருப்பை விரட்ட வேண்டும் என்றார். காலச்சூழல், இடச்சூழல், புறச்சூழல் என பல சூழல்களினால் மனதில் பல இன்னல்கள் தோன்றினாலும் அன்பு எனும் குணம் விரிந்தால் போதும் மறப்போம் மன்னிப்போம் என்ற பண்பு மலரும்.மலரில் மணமும், காற்றின் அசைவும், பாலில் நெய்யும், கரும்பில் இனிமையும், பாடலில் பண்ணும், உறவில் வாழ்வும் போல மறப்பதில் மன்னிப்பும் அடங்கியுள்ளது.
முனைவர் ச.சுடர்க்கொடி