காரைக்குடி அரண்மனைப் பொங்கல் ஐயா அவர்களின் தாயார் திருமதி லெட்சுமி ஆச்சி அவர்கள் இறைவன் திருவடி அடைந்த இந்த நாளில் நெகிழ்வான இறுதிச் சடங்குகள்.
அருள்மிகு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி பாதயாத்திரை பக்தர்களை வழிநடத்தும் காரைக்குடி அரண்மனைப் பொங்கல் ஐயா அவர்களின் தாயார் இன்று காலை தங்கள் இல்லத்தில் இறைவன் திருவடி அடைந்தார்கள்.
நாடுமுழுவதும் உள்ள அசாதாரண சூழ்நிலையால் நாம் பங்கேற்க இயலாத நிலை, ஆனால் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பெருமக்கள் சமூக இடைவெளியுடன் சிறுகச் சிறுக வருகை தந்து தங்களது அஞ்சலியை செலுத்தி உள்ளனர்.
இது ஐயா அவர்களின் அயராத அர்ப்பணிப்புடன் கூடிய அறப்பணிகளுக்கு பழனியாண்டவர் பேரருள்.
தனது தாயை உலகத் தரமான மருத்துவம் மூலம் காத்திட முயன்றும் முடியவில்லை. ஆயினும் தனது கடமையை நெறியுடன் செய்து முடித்துள்ளார்கள்.
தனது தாயை உலகத் தரமான மருத்துவம் மூலம் காத்திட முயன்றும் முடியவில்லை. ஆயினும் தனது கடமையை நெறியுடன் செய்து முடித்துள்ளார்கள்.
ஊரே உயிர் பயத்தில் முடங்கிப் போய் உள்ள சூழலில் உறவுகளும் நட்பும், மெய்யன்பர்கள் சூழ, பங்கேற்று ஆறுதல் கூறி கடமையாற்றியது அறிந்து, இந்த மண்ணில் நன்றியுணர்வும் பண்பாட்டுப் பேரறிவும் வாழ்வதை உணர முடிகின்றது.
இது வளரும் தலைமுறைக்கு நினைவூட்டல், பதவி பணம் அதிகாரம் தாண்டி, அர்ப்பணிப்பும் அனைவரையும் மதிக்கும் ஆன்மீகத்தில் விளைந்தது என்பதை இறையருள்
பழ. லெட்சுமி ஆச்சி நமக்கு உணர்த்தியுள்ளார்.
பழ. லெட்சுமி ஆச்சி நமக்கு உணர்த்தியுள்ளார்.
வாழிய ஐயா அவர்களின் தாயார் லெட்சுமி ஆச்சி நினைவுகள்.
இரங்கலுடன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment