Saturday 29 September 2018

மதுரை முத்து டாக்டர் பட்டம் பெற்றமைக்குப் பாராட்டு விழா

29-09-2018 மாலை 6-30 மணிக்கு..
இன்று மாலை காந்தி மியூசியத்தில் நடைபெறும் ஆதரவற்றோர் நல நிதிக்காக கலைநிகழ்ச்சி, செந்தில் ராஜலெட்சுமி சிறப்பு கலைவிழா,நகைச்சுவை அரசர் நமது மதுரை முத்து டாக்டர் பட்டம் பெற்றமைக்குப் பாராட்டு விழா, மற்றும் பல கலைஞர்கள் கலக்கிடும் பல்சுவை நிகழ்ச்சி. மனிதத்தேனீ, வழக்கறிஞர் மோகன்குமார், மக்கள் மருத்துவர் பா. சரவணன் உள்ளிட்ட விருந்தினர்கள் சிறப்புரை. அனுமதிக் கட்டணம் உண்டு.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவிழா கருத்தரங்கம்


எங்கள் மதுரையில் காலையில் சிறு மழை -மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கலைஞரின் சாதுா்யமும் நகைச்சுவையும்....
I am sorry என்பதுதான் நோயாளியைக் காப்பாற்ற முடியாத டாக்டர்கள் அவரது குடும்பத்தினரிடம் சொல்லுகின்ற வார்த்தை. ஆனால், கலைஞருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களோ, அவரது குடும்பத்தினர்-கட்சி நிர்வாகிகள்-மருத்துவத்துறையினர் முன்னிலையில், “He was a fighter எங்களைவிட அதிகமாகப் போராடியவர் அவர்தான்” என்று கூறி, தங்களிடம் சிகிச்சை பெற்று இறந்த நோயாளிக்காக புகழ் வணக்கம் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
கலைஞருடன் அணுக்கமாக இருந்த அவரது குடும்ப மருத்துவர் கோபால், கலைஞர் குறித்த ஒரு புத்தகமே எழுதப்போவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். கலைஞருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் எழிலன் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில், சிகிச்சை நேரத்திலும் கலைஞரிடமிருந்து வெளிப்படும் சுவையான வார்த்தைகளைப் பல முறை பதிவிட்டுள்ளார். அதுபோலவே, புகழ் வணக்கம் நிகழ்வில், கலைஞருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் பலரும் கலைஞரின் சமயோசித அறிவையும், வார்த்தைகளையும் ரசித்துக் கூறியுள்ளனர்.
காவேரி மருத்துவமனையின் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ்: “கலைஞருக்கு டெஸ்ட்டுக்காக தொடை பகுதியிலிருந்து ரத்தம் எடுக்க வேண்டியிருந்தது. அதனால டாக்டர்கள் வேல்முருகன், முரளி மகேஷ்னு இரண்டு பேரை காவேரி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்புறோம். ரத்தம் எடுக்குறப்ப கொஞ்சம் சிரமமாவும் வலியாவும் இருக்கும்னு கலைஞர்கிட்டே சொன்னேன். உடனே அவர், காவேரின்னாலே வலியும் வேதனையும் இருக்கத்தான் செய்யும்னு சொன்னாரு.”
டாக்டர் மோகன் காமேஸ்வரன், “தூதுவளை இலையை கொஞ்சம் அதிகமா சாப்பிட்டதால அவருக்குத் தொண்டையிலே புண் வந்திடிச்சி. அது பற்றி விசாரிச்சேன். அதற்கு அவர், நாலு இலைதான் சாப்பிட்டேன். இந்தப் பாடு படுத்துது. இரண்டு இலையே படாதபாடு படுத்தும்போது, நாலு இலை படுத்தாதான்னு கேட்டாரு.
கதிரியல் நிபுணர் டாக்டர் இமானுவேல்: ஸ்கேன் எடுக்கும்போது அவர்கிட்ட நான், மூச்சை இழுத்துப் பிடிச்சிக்கணும். நாங்க சொல்லும்போது மூச்சை விட்டுடுங்க என்றேன். அதற்கு கலைஞர், மூச்சை விட்டுடக்கூடாதுன்னுதான் நான் டாக்டர்கள்கிட்ட வந்திருக்கேன். நீங்க மூச்சை விடச் சொல்றீங்களே என்றார். பேஷண்ட்கிட்ட வேற வார்த்தையில இதைச் சொல்லுங்கன்னாரு. இன்னைக்கு வரைக்கும் வேற வார்த்தை எனக்கு கிடைக்கலை.
பல் மற்றும் முகசீரமைப்பு டாக்டர் பாலாஜி: பல் சீரமைக்கும்போது வாயில ஒரு இன்ஜெக் ஷன் போடுவோம். அப்ப வலி தெரியாம இருக்கணும்ங்கிறதுக்காக, அய்யா.. நாக்கை கொஞ்சம் லூசா விடுங்கன்னு சொன்னேன். அதுக்கு கலைஞர், நாக்கை லூசா விட்டா, என்னை லூசுன்னு சொல்லிடுவாங்கய்யான்னாரு.
இப்படி கலைஞரின் மருத்துவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் அனுபவங்களை நேற்று புகழ் வணக்க நிகழ்ச்சியினை நடத்தி தெரிவித்தார்கள்.....
நன்றி சிதம்பரம் எஸ் வி

இனிய குரலில் எப்போதும் கேட்டு மகிழ்ந்திட அருமையான பாடல்.

நலமே விளையும்.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசு whatsapp
29.09.2018
💌இன்று உலக இதயம் பாதுகாப்பு தினம்
________________________
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
விளக்கைக் குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா?
வீட்டுக் குயிலை கூட்டில் வைத்தால்
பாட்டு பாடுமா பாட்டு பாடுமா?
(இதய வீணை தூங்கும் போது…)
மனதை வைத்த இறைவன் அதில்
நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும்
அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி
அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை
அடிமை செய்தானே...
உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது?
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது?
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது?
பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
படம் - இருவர் உள்ளம்
பாடல் - கண்ணதாசன்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

.............................................
"புன்னகை தந்த விடுதலை''..
.............................................
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட காலம்..
யூதரான ஹெலன் கெல்லரும் அவரது குடும்பத்தாரும் தூக்கிலிட வேண்டிய நேரம்..
அதற்கு உத்தரவு தர வேண்டிய அதிகாரி வந்து கையெழுத்து போட்டால் அடுத்த நிமிடம் தூக்குத் தண்டனை என்ற நிலை..
அந்த அதிகாரி வந்து சேர்ந்ததும் அவர் ஹெலன் கெல்லரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தார்..
அந்த அதிகாரி ஹெலன் கெல்லரை,குடும்பத்தோடு வேறு நாட்டுக்கு தப்பியோடசெய்தார்
காரணம் இதுதான்..அந்த அதிகாரி தினமும் சிறைக் கைதிகளை பார்ப்பதற்கு சிறைச்சாலை வருவார்..
அந்த நேரத்தில் எல்லாம் கெல்லர் அமைதியாக அந்த ஜெயில் அதிகாரியைப் பார்த்து புன்னகை செய்வாராம்.
ஆனால் அந்த அதிகாரி ஒருநாளும் திருப்பி புன்னகை செய்ய மாட்டாராம்..அன்று ஏனோ அந்த அதிகாரியின் மனதில் மாற்றம் ஏற்பட அந்த புன்னகைதான் காரணமானது..
''எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்..? என்பதை புரிந்து கொண்ட கெல்லர்,சாவதற்கு தயாராகிவிட்ட நிலையில் ,
வாழ்கின்ற காலத்தை ஏன் சோகமாக்கிட வேண்டும் என்ற தெளிவு ஹெலனிடம் இருந்தது.
இந்த நேர்மறையான எண்ணத்தின் வெளிப்பாடுதான் அவரது புன்னகை.
அந்த புன்னகையின் விலைதான் அவரது விடுதலை..
ஆம்.,நண்பர்களே..,
உங்களின் புன்னகை, மற்றவர்கள் மீது நீங்கள் வைத்து இருக்கும் உறவை மேலும்,வலுப்படுத்த செய்யும் மிகச் சிறந்த ஆயுதம்..
தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.🙏🏻💐

மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆன்மீக விழிப்புணர்வு மைய நிறுவனர், நமது நண்பர், மதுரை எக்சலண்ட் ஏ. ஹரிமாதவன் பணியைப் பாராட்டி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பரிசு வழங்கிய மகிழ்வான தருணம். பாராட்டி மகிழ்வோம் - மனிதத்தேனீ


Friday 28 September 2018

மக்கள்குரல் 28.09.2018 பக்கம் 5


மதுரைமணி 28.09.2018 பக்கம் 4


கவியரசு கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம்


தினபூமி மதுரை 28.09.2018 பக்கம் 8


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*சாணக்கியரின் முக்கியமான சக்ஸஸ் டிப்ஸ்*்:
*
🍃பல சமயங்களில் உங்களுடைய ஆற்றல் உங்களுக்கே தெரிவதில்லை. கை நிறையக் காசு வைத்திருக்கிறவன் மட்டும் பணக்காரன் அல்ல, நல்ல மூளை/சிந்தனைத்திறன், கடினமான உடல் உழைப்பு, எப்போதும் உற்சாகமாக சிரித்தபடி வேலை பார்ப்பது, நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்வது... இவை ஒவ்வொன்றும் பெரிய சொத்துக்கள்தாம்.
*
🍃ஜெயிக்க நினைப்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு நெகட்டிவ் குணங்கள்: ஆசை, கோபம் பொறாமை, தற்பெருமை, கர்வம், அதீத சந்தோஷம்
*
🍃 எதிலும் வெற்றி பெறுவதற்கு மூன்று வழிகள் உண்டு: நம் மூளைத் திறனைக் கொண்டு ஜெயிக்கலாம், நல்ல திறமைசாலிகளைக் கூட்டணி சேர்த்துக் கொண்டு ஜெயிக்கலாம், இவை இரண்டும் சாத்தியப்படாவிட்டால், வெறும் மன தைரியத்தைக் கொண்டே ஜெயிக்கலாம். உங்களுக்கு இதில் எது பொருந்தும் என்று யோசித்துப் பயன்படுத்துங்கள்.
*,🍃 எப்போதும் உற்சாகமாக இருக்க நான்கு விஷயங்கள் தேவை: முதலில், எதையும் எதிர்கொண்டு சந்திக்கிற தைரியம் வேண்டும். அடுத்து, நாம் இப்போது இருக்கிற நிலைமை போதாது, இன்னும் உயரத்துக்கு செல்லவேண்டும் என்கிற தவிப்பு வேண்டும். மூன்றாவதாக, ஒன்றைச் செய்ய நினைத்ததும் சட்டென்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்குகிற சுறுசுறுப்பு வேண்டும். கடைசியாக சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொண்டு வேறு பாதையில் முன்னேறுகிற சாமர்த்தியம் வேண்டும்.
🍃* உங்களுக்குப் போட்டிக்கு எவனாவது வருகிறானா? அந்த எதிரியை நசுக்கி எறிவதற்கு நீங்கள் இந்த விஷயங்களை அலச வேண்டும்:
1. நம்முடைய பலம் என்ன?
2. நாம் இருக்கும் இடம் சரியானதுதானா?
3. போட்டியாளனோடு மோதுவதற்கு இது பொருத்தமான நேரம்தானா?
4. நாம் அவனோடு மோதும்போது நமக்குப் பின்னாலிருந்து எவனாவது முதுகில் குத்த வாய்ப்பு உண்டா? 5. இந்தச் சண்டையால் எனக்கு ஏதாவது இழப்பு வருமா?
6. இந்தச் சண்டையில் ஜெயித்தால் எனக்கு வரப்போகும் லாபம் என்ன?
7. ஒருவேளை தோற்றுவிட்டால், வேறு என்ன புதுப் பிரச்னைகள் வரக்கூடும்? இந்த எட்டையும் யோசித்து, அதன்பிறகு மோதி செயல்படுங்கள்
🍃எதிரிகள் கிடக்கட்டும், நல்ல நண்பர்களை எப்படித் தக்கவைத்துக் கொள்வது? அவர்களுக்குக் கஷ்டம் வரும் நேரத்தில் கூட இருந்து உதவுங்கள். "*எப்பவும் நான் இருக்கேன்டா உனக்கு*' என்று நம்பிக்கை கொடுங்கள், அவர்கள் கவலையோடு உள்ளபோது புலம்புவதைக் காது கொடுத்துக் கேளுங்கள். வழிகாட்டுங்கள்.

தினத்தந்தி இளைஞர் மலர் 25.08.2018 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எண்ணங்களின் வலிமை🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார்.
வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர்.
இதைப் பார்த்த சமய குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார்.
அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.
பிறகு அந்த சமய குரு, இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும் என்றார் .
இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிடும் எனக் கூறினார்.
அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். சமய குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான்.
வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தைத ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்.
அதற்கு அந்த சமய குரு, இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள்,
மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன், நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களை அடித்து விடுவேன் என்றபடியே அடிக்கப் பாய்ந்தான்.
பதற்றமே இல்லாத அந்த சமய குரு, முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி?
இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார்.
நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, *'நல்லதையே நினை. நல்லதையே பேசு'* என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.
நாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை கொடுத்தது, நம் எண்ணங்களே!!!
எண்ணங்கள் அழகானால்...,,
எல்லாம் அழகாகும்..
வாழ்க வளமுடன் 🙏🏻

Thursday 27 September 2018

பெருந்தலைவர் காமராஜர் சிலம்பு செல்வர் ம.பொ.சி. நினைவு தினக் கூட்டம்


நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம் வாழிய புகழ் -மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கற்றதும் பெற்றதும்.....
சீனியர்களுக்காக சுஜாதா அசத்தலாக எழுதியது.......
எழுத்தாளர் சுஜாதா - 'கற்றது பெற்றதும்'
சீனியர் சிடிசன்களுக்கு அர்ப்பணம்
தனது 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 'கற்றது பெற்றதும்' பகுதியில் சுஜாதா அவர்கள் எழுதியது........
"மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது . இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்.
மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள்.
ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.
நான் யோசித்து, ''கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.
"எதுக்குப்பா?"
"தொடுங்களேன்!"
சற்று வியப்புடன் தொட்டார்.
"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசையுங்கோ!" என்றேன். ''இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன? என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.
"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து...
பாத்து..."
"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.
"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன். அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"
"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன்னீங்க. மறந்துட்டீங்க!" என்றேன்.
தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன.
ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது.
பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை.
'படையப்பா'வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகையின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.
மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள்.
இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்!
கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது.
ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!
டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது.
ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.
மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன்.
பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன.
ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன்.
சின்னவராக இருந்தால், 'பரவால்லை... நாம தப்பிச்சோம்!' என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, 'பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன்.
எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது.
Today I am alright, thank God!
ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன்.
நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன்.
வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises - படிப்படியான சமரசங்களால் ஆனது.
இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்...
முதலிடத்தில் உடல் நலம்,
மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது,
தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம்,
நல்ல காபி, நகைச்சுவை உணர்வு,
நான்கு பக்கமாவது படிப்பது,
எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன".
என்றும் உங்கள்
சுஜாதா.!

சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் வாழிய புகழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நல்ல எண்ணங்களை எப்படி வளர்த்துக் கொள்வது?
மனிதர்கள் சந்தோஷமாகவும், சந்தோஷமில்லாமல் இருப்பதற்கும் காரணம் அவர்களுடைய எண்ணம்தான். அவர்கள் மனதில் இருக்கும் எண்ணத்தை பொருத்துதான் அவர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி அல்லது கவலை இருக்கும். தோல்வியடைவது போன்ற எண்ணங்களும், கவலைகளும் மனதில் குடியிருந்தால் வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் ஒரு வெறுப்புதான் ஏற்படும்.
எப்போதும் நல்ல எண்ணங்களையே எண்ணுங்கள். நல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அவை உங்களுக்கு நல்லதையே கொண்டு வந்து சேர்க்கும். நீங்கள் உங்களை வலிமையானவராக நினைத்தால் வலிமையானவர்களாக மாறுவீர்கள். பலவீனமாக நினைத்தால் பலவீனமாகி விடுவீர்கள்.
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நான் தொடங்கிய காரியம் வெற்றியடையும் நிச்சயமாக தோல்வி அடையமாட்டேன். அப்படியே தோல்வி அடைந்தாலும் அந்த தோல்வி நிரந்தரமானது அல்ல. அந்த தோல்வி தந்த பாடத்தை ஆராய்ந்து நிச்சயம் அடுத்து வெற்றியடைவேன் என்று எண்ணிப் பாருங்கள். உடனே உங்கள் மனநிலை ஒரு மகிழ்ச்சிகரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு சந்தோஷமான எண்ணத்தில் இருப்பீர்கள்.
அதேபோல, கடமைகளை மனப்பூர்வமாகச் செய்தால் உரிமைகள் உங்களை தேடி தானாக வரும். கடமைகளை செய்யாமலே உரிமைகளை தேடினால் அவை கானல்நீர் போல் ஆகிவிடும். உரிமைகளை மட்டும் எண்ணிய எவரும் சமுதாயத்தில் மேன்மை அடைந்ததில்லை. கடமைகளை கருதியவர்களே உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் யாரும் தாழ்ந்தவருமில்லை, உயர்ந்தவருமில்லை. உயர்வு, தாழ்வு என்ற எண்ணத்தை நம்மிடம் இருந்து அகற்ற வேண்டும். நம்மைவிடச் சிலர் தாழ்ந்தவர்கள் என்று நாம் கருதும்போது நம்மிடம் தீமையே அதிகமாக நிறைந்திருக்கிறது. இந்த தீமையை நாம் ஒழிக்காவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.
எண்ணங்கள் ஏன் இப்படி தோன்றுகிறது ?
மற்ற உயிரினங்களை போலவே தன் உயிர் காப்பது, இரை தேடுவது, இனப்பெருக்கம் செய்வது என்ற அடிப்படையில்தான் மனித மூளையும் செயல்படுகிறது. இதிலிருந்து அடுத்தகட்டமாக மனிதனுக்கு மட்டும் மூளையில் தோன்றும் உணர்வுகள் அச்சம் மற்றும் கோபம். அதனால்தான் நம் மூளை இவை இரண்டையும் தேடிப் பிடித்து உள்வாங்கிக் கொள்கிறது.
மூளையின் முன்பகுதி நவீனமானது. பல ஆயிர வருடங்களின் பரிணாமத்தில் வந்த நிர்வாக மூளை அது. சிந்தனை, பகுத்தறிவு, திட்டமிடுதல், செயலாக்கம் என மனிதனின் முன்னேற்றத்துக்கு ஆதாரமான அனைத்தும் இங்குதான் செயல்படுத்தப்படுகின்றன.
அதனால் கூர்ந்து நோக்குவது, யோசிப்பது, புதிதாகப் படைப்பது, நகைச்சுவை, நம்பிக்கை எல்லாம் சற்று பக்குவமான மனநிலையில் மட்டுமே ஏற்படுபவை. அடிப்படை உணர்ச்சிகள் எதிர்மறையான கெட்ட எண்ணங்களை வளர்க்கும். பக்குவப்பட்ட உணர்ச்சிகள் நேர்மறையான நல்ல எண்ணங்களை வளர்க்கும்.
எதிர்மறை எண்ணங்கள் அச்சம், கோபம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை வளர்க்கும். நேர்மறை எண்ணங்கள் மகிழ்ச்சி, நம்பிக்கை போன்ற பக்குவப்பட்ட உணர்ச்சிகளை வளர்க்கும்! வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை. அதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் சிக்கல்கள் உள்ளன. நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவதில்லை. அதைப் பற்றி நாம் எண்ணும் எண்ணங்கள்தான் நம்மை துன்புறுத்துகின்றன.
நம்மால் நம் எண்ணங்களையும், உணர்வுகளையும் மாற்ற முடியும் !
மூளையும், மனமும் இசைந்து அற்புதங்கள் நிகழ்த்தலாம் !!
உடல் பலத்தினால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. ஆன்மபலமே வெற்றி தரும் !!!
நன்றி திரு லெட்சுமணன் செட்டியார்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசு whatsapp 27.09.2018
{பத்து ஆண்டுகளாக கவியரசு குறுஞ்செய்தியாக நடத்தப்பட்ட இந்த சேவை இப்போது கவியரசு வாட்ஸ் அப் என அனுப்ப படுகிறது.)
இன்று உலக சுற்றுலா தினம்
இந்த நாளை சிறப்பிக்கும் வகையில் கவியரசரின் பாடல் ஒன்று பார்ப்போம்.
உலகம்..
அழகு கலைகளின் சுரங்கம்
பருவச்சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
பூமியெங்கும் பூமேடை
பொங்கிப்பாயும் நீரோடை
மேகம் போடும் மேலாடை
மின்னல் வந்தால் பொன்னாடை
மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்
இள மாலையில் நான் அதைத் தரவேண்டும்
மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்
இள மாலையில் நான் அதைத் தரவேண்டும்
காலமே ஓடிவா காதலே தேடிவா
உலகம்..
அழகு கலைகளின் சுரங்கம்
பருவச்சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
இன்ப ஏக்கம் கொள்ளாமல்
எந்த நெஞ்சும் இங்கில்லை
இந்த எண்ணம் இல்லாமல்
எந்த நாடும் இன்றில்லை
உள்ள மட்டும் அள்ளிகொள்ளும்
மனம் வேண்டும்
அது சொல்லும் வண்ணம்
துள்ளிச்செல்லும் உடல் வேண்டும்
உள்ள மட்டும் அள்ளிகொள்ளும்
மனம் வேண்டும்
அது சொல்லும் வண்ணம்
துள்ளிச் செல்லும் உடல் வேண்டும்
காலமே ஓடிவா காதலே தேடிவா
உலகம்
அழகு கலைகளின் சுரங்கம்
பருவச்சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
படம் - உலகம் சுற்றும் வாலிபன்
பாடல் - கண்ணதாசன்

மனிதத்தேனீயின் தேன்துளி


Wednesday 26 September 2018

மதுரைமணி 26.09.2018 பக்கம் 4


நல்ல தமிழில் உணவுப் பெயர்...

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மலிவான நகைச்சுவையை மக்கள் ஏற்க மாட்டார்கள்....
நகைச் சுவை என்ற பெயரில் நரகலை அள்ளி வீசுகிறார்கள் நம் தமிழ் படங்களில்!
சமீபத்தில் வந்த’ சீமை ராஜா’ நகைச்சுவை வறட்சிக்கு நல்ல எடுத்துகாட்டு!
விவஸ்த்தையின்மை,அசிங்கம்,ஆபாசம்,மற்றவரை இழிவு செய்வது இவையே நகைச்சுவை என்பது பெரும்பாலான சினிமாகாரர்களின் புரிதலாகவுல்லது.
மூன்று பெண்டாட்டி வைத்துக் கொண்டு அம்மணமாக அண்டாவில் குளிப்பது,
ஓணான் மாதிரி வாயைப் பொளந்து அசிங்கமாக ஆபாசத்தை அர்சிப்பது,
கல்விக் கூடத்தில் தலைமை ஆசிரியரும், தலைமை விருந்தினரும் போட்டி போட்டுக் கொண்டு காமாந்திர சேட்டை பண்ணுவது..
இதெல்லாம் நகைச்சுவையல்ல, நரகல் சுவை..!
நரகல் சுவை பன்றிகளுக்கானது...
நகைச்சுவை ஆறறிவு மனிதனுக்கேயான தனிச் சிறப்பு!
உண்மையில் நகைச்சுவை என்பது ஒரு மேதமை!
நம் சினிமாக்களில் வெளிப்படுவதெல்லாம் பேதமை!
அஞ்சாமை,
அறிவுக் கூர்மை,
பாசாங்குத் தனங்களைத் தோலுரிக்கும் பட்டவர்த்தனமான நேர்மை,
பொய்மைகளை விலக்கி உண்மைகளை அடையாளப்படுத்தும் தேடல்,
அளப்பரிய மானுட நேயம்,
சமரசமற்ற ஆளுமைத்திறன்..
இதன் வழியே பீறிட்டு வெளிப்படுவதே நகைச்சுவை!
இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல்,எவ்வளவு தொழில்நுட்ப பிரமாண்டம் ஏற்பட்டும் பயனில்லை.
நண்பன் பத்திகையாளர் டி வி எஸ்சிடம் வறுத்தபட்டபோது சொன்னார், கண்ணன், இந்த மாதிரி படம் பார்க்கும் போது மூளையை கழட்டி வச்சுட்டு பார்க்கணும்னு சொன்னார்.
பார்க்கிறவங்க மூளையை கழட்டி வச்சிடணும்னா..
படம் எடுப்பவர்கள் மூளையை தூக்கி எறிஞ்சிட்டுத் தான் எடுப்பார்களோ...கொடுமை!
நன்றி திரு. சாவித்திரி கண்ணன், மூத்த பத்திரிகையாளர்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசு whatsapp 26.09.2018
{பத்து ஆண்டுகளாக கவியரசு குறுஞ்செய்தியாக நடத்தப்பட்டு இப்போது வாட்ஸ்
அப் மூலம் அனுப்ப படுகிறது.)
இன்று குழந்தைகள் கவிஞர் தேசிக விநாயகம்பிள்ளை நினைவு தினம் 1954.
இந்த தினத்திற்காக
கவியரசு எழுதிய பாடல் ஒன்றை
இங்கே காண்போம்.
செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
ரம்பம்மம் ராரம்பம் சம்சம்சம் ராரம்பம் ஓ ஓ ஓ வெண்ணிலவே
ரம்பம்மம் ராரம்பம் சம்சம்சம் ராரம்பம் வா வா வா வெண்ணிலவே
உள்ளங்கள் பேசட்டும் பிள்ளைகள் தூங்கட்டும்
வா வா வா வெண்ணிலவே
மஞ்சத்தில் மான் குட்டி கொஞ்சட்டும் கண் பொத்தி ஆராரோ ஆரிராரோ
செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
காலம் என்பது உன் வரவுக்காகக் காத்திருக்கும்
கனியைப் போன்றது நல் கனியைப் போன்றது
காலம் என்பது உன் வரவுக்காகக் காத்திருக்கும்
கனியைப் போன்றது நல் கனியைப் போன்றது
நாளை என்பது உன் நன்மைக்காகப் பூத்து நிற்கும்
மலரைப் போன்றது மலரைப் போன்றது
கண்மையின் வண்ணத்தில் உண்மைகள் மின்னட்டும் ஓ ஹோ ஹோ ஹோ உள்ளங்களே
தெய்வங்கள் கூடட்டும் தாலாட்டுப் பாடட்டும்
ஆராரோ ஆரிராரோ
செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே....
படம் சாந்தி நிலையம்
பாடல் கண்ணதாசன்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

காலை வ​ணக்கம்”. இந்த இனிய சொற்களுடன் இன்று காலை என்னைத் தனது பேருந்துக்குள் வரவேற்றார் எஸ்எம்ஆர்டி சேவை எண் 966-ன் ஓட்டுநர் திரு ஈஸ்வரன். பேராக், ஈப்போவைச் சேர்ந்தவர். வயது 53.
காலை வெயில் உண்டாக்கிய வேர்வை வெறுப்புடன் ​பேருந்தில் ஏறிய எனக்கு புன்னகை கலந்த அவரது தமி​ழ் வரவேற்பு அத்தனை இதமாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. பேருந்தில் ஏறும் ஒவ்வொரு தமிழருக்கும் காலை வணக்கமும் பிறருக்கு Good Morning​-ம் அவர் கூறுவதைப் புன்னகையுடன் கவனித்தேன்.
நேற்றுதான் Neither Civil Nor Servant என்ற நூலை வாசித்து முடித்தேன். சிங்கப்பூரின் தலைசிறந்த அரசாங்க ஊழியர்களுள் ஒருவராகக் கருதப்படும் திரு ஃபிலிப் இயோவின் அசாதாரணமான பணிகளைச் சித்தரிக்கும் அற்புதமான நூல். செய்யும் பணியை, அது எதுவாக இருந்தாலும், பற்றோடும் பரவசத்தோடும் செய்வதுதான் திரு ஃபிலிப்பின் தாரக மந்திரம். திரு ஃபிலிப் நம்பும் பற்றையும் பரவசத்தையும் இன்று நான் திரு ஈஸ்வரனிடம் கண்​டேன்.
பல மணி நேரம் பேருந்து ஓட்டுவது சுலபமான பணியல்ல. அதைச் செய்துகொண்டே பயணிகளை இனிமையுடன் வரவேற்கும் இவரைப் போன்றவர்கள் நமது அன்றாட அனுபவங்களுக்கு அர்த்தம் சேர்க்கிறார்கள்; நமது சொந்தப் பணிகளை இன்னும் எப்படி பற்றோடு செய்ய வேண்டும் என்பதற்கான உத்வேகத்தையும் தருகிறார்கள்.
இனிமையான பயண அனுபவத்துக்கு நன்றி திரு ஈஸ்வரன். 🙏
நன்றி அழகிய பாண்டியன்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உலகின் மிக அழகான விமான நிலையம் இதுதானோ?
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இந்தியாவின் 100வது விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் #நரேந்திர_மோடி திங்களன்று திறந்துவைத்தார். சிக்கிம் மாநிலத்தைப் போலவே, அதன் விமான நிலையமும் மிகவும் அழகானதாக உள்ளது.
இமயமலையில் அமைந்துள்ள சிறிய மாநிலமான சிக்கிமில், உலகின் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்ஜங்கா அமைந்துள்ளது. திபெத், பூடான் மற்றும் நேபாளம் ஆகியவற்றை சிக்கிம் எட்டு மலைப்பாதைகள் வழியாக இணைக்கிறது.
மாநிலத்தின் முதல் விமானநிலையமான பாக்யாங், தலைநகர் கேங்டாக்கிலிருந்து சுமார் 30 கி.மீ (18 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மலைப்பகுதியிலிருந்து செதுக்கப்பட்ட, "பொறியியல் அற்புதம்" இந்த விமானநிலையம் என்று சிலாகிக்கப்படுகிறது.
இந்திய-சீன எல்லையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், பாக்யாங் (Pakyong) என்ற கிராமத்தில், கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் உள்ள மலைப் பகுதியில் 201 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இரு முனைகளிலும் ஆழமான பள்ளத்தாக்குகளுடன் 1.75 கிலோமீட்டர் நீள ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்தும் இடங்கள் இரண்டையும், முனைய கட்டடம் ஒன்றையும் கொண்டுள்ள இந்த விமான நிலையத்தை ஒரே சமயத்தில் 100 பயணிகள் பயன்படுத்த முடியும்.
கட்டுமானப் பணி கடினமான நிலப்பரப்பு மற்றும் நிலையற்ற வானிலையால் "மிக்க சவாலுடனும், சிரமங்களை எதிர்கொண்டும் மேற்கொள்ளப்பட்டது" என்று இந்த விமான நிலையத்தின் ஓடு பாதையை கட்டமைத்த இந்திய நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பருவ மழை பொழியும் சிக்கிம் மாநிலத்தின் வானிலை, கட்டுமானப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்துள்ளது.
மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் உயர் நிலநடுக்கப் பகுதியான அங்கு பாறை சரிவுகளில் பணியாற்றுவது பொறியாளர்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்று.
ஆழமான பள்ளத்தாக்குகளில் 263 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட தளத்தின் மீதுதான், ஓடுபாதை உட்பட முழு விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான "வலுவூட்டப்பட்ட" சுவர்களில் ஒன்று இது என பஞ்ச் லாய்ட் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் நான்காம் தேதி முதல், பாக்யாங்கில் வர்த்தக விமான
நன்றி திரு லெட்சுமணன் செட்டியார் போக்குவரத்து தொடங்கும்.
பல சிகரங்கள், பனிப்பாறைகள் மற்றும் உயரமான ஏரிகள் என அற்புதமான இயற்கை பேரழகு கொண்ட தளங்களை தன்னகத்தே கொண்டுள்ள சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலாத் துறையை இந்த விமான நிலையம், மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பென்சில் ரகசியம்.......
வகுப்பில் படிக்கும் போது எனது ஓவிய ஆசிரியர் 2HB பென்சில் கொண்டு வந்து படம் வரையச் சொல்வார். அப்போது 2HB என்றால் என்னெவென்று தெரியாது. கடைக்குச் சென்று 2HB பென்சில் தாருங்கள் என்று கேட்பேன். கடைக்காரர் தரும் பென்சிலை எடுத்துப் பார்த்தால் அதில் HB என எந்த இடத்திலும் பொறிக்கப்பட்டிருக்காது.
கடைக்காரரிடம் இதில் HB என்று எதுவும் எழுதவில்லையே என்று கேட்டால், இது தான் 2HB பென்சில். வேணுமா? வேண்டாமா? என்று கத்திக் கொண்டே கேட்பார்.
நானும் வாங்கிக் கொண்டு வகுப்பறைக்கு வந்தால் ஓவிய ஆசிரியை இதுவா 2HB என்று முறைப்பார். எனக்கு வரைவதில் கொஞ்சம் ஈடுபாடு குறைவாக இருந்ததால் பென்சிலோடு கொண்ட தொடர்பு வகுப்பறையிலேயே முடிந்து போய்விட்டது.
முப்பது வருடம் கழித்து இப்போது எனது மகன் HB6 பென்சில் கேட்கிறான். அவனுடைய ஓவிய ஆசிரியர் இப்போது அவனை துரத்துகிறார். வாழ்க்கை வட்டம் என அவ்வப்போது நிரூபிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
இப்போது பென்சிலை தேடுவது என் மகனல்ல. நான். கடை கடையாய் அலைந்து பார்த்தேன். HB6 என்ற பென்சில் கிடைக்கவே இல்லை.
நடராஜ், அப்சரா, கேமல், மார்வெல், டிஷ்னி என வித விதமாக பென்சில்கள். சில பென்சில்களில் 1HB, HB2 , 4HB என சிறிய எழுத்தில் பென்சிலில் எழுதப்பட்டிருந்தது.
கடைசியாக இந்த HB எதைக் குறிக்கிறது என தேட ஆரம்பித்தேன். அப்போது தான் HB என்பது பென்சில் பயன்படுத்தும் கிராபைட்டின் அளவு கோல் என புரிந்து கொண்டேன்.
பென்சில் கிராபைட் மற்றும் களிமண் ஆகிய இரண்டையும் கலந்து செய்கிறார்கள். கிராபைட்டுடன் கலக்கும் களிமண் தான் பென்சிலின் blackness ஐ தீர்மானிக்கிறது.
இந்த களிமண் சாம்பல் நிறம் முதல் கறுப்பு நிறம் வரை இருக்கிறது. அதிக blackness வேண்டுமானால் கருமையான களிமண்ணையும், குறைவான blackness வேண்டுமானால் சாம்பல் நிற களிமண்ணையும் கிராபைட்டுடன் கலக்கிறார்கள்.
இது போல சேர்க்கும் களிமண்ணின் விகிதம் குறைவாக இருந்தால் அது softness ஐ தரும். அதிகமாக இருந்தால் hardness ஐ தரும்.
H என்பது பென்சிலில் இருக்கும் hardness ஐ குறிக்கிறது. B என்பது அதன் blackness ஐ குறிக்கிறது.
HB பென்சில் என்றால் கடினத்தன்மையும் கருமை அதிகமாகவும் இருக்கும். பொதுவாக எழுதுவதற்கு HB பென்சிலை பயன்படுத்துவார்கள்.
HH என்று குறிப்பிடப்பட்ட பென்சில் அதிக கடினத்தன்மையோடு இருக்கும். பொறியியல் வரைபடம் வரைபவர்கள் HH பென்சிலை பயன்படுத்துவார்கள்.
BBB என்று குறிப்பிடப்பட்ட பென்சில் அடர் கருமை நிறத்தில் எழுதும்.
1H6B பென்சில் அதிக கருமை எழுதுவதற்கு மிருதுவாகவும் இருக்கும்.
6H1B பென்சில் கருமை குறைந்து சாம்பல் நிறத்திலும் அதிக கடினத்தன்மையோடும் இருக்கும்.
H ன் மதிப்பு 1, 2, 3 என அதிகரித்துக் கொண்டே போகும். அது போல B ன் மதிப்பும் 1,2,3 என அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
ஒவியர்கள், பொறியியல் வரைவாளர்கள் தங்களின் தேவைகளின் அடிப்படையில் பென்சிலை தேர்ந்தெடுப்பர். கறுப்பு வெள்ளை படம் வரையும் போது விதவிதமான நிற பேதங்களை வேறுபடுத்திக் காட்ட விதவிதமான பென்சில்கள் தேவை.
இப்போது குழந்தைகள் நேரடியாக அலைப்பேசி அல்லது கணினியில் வரைய தொடங்கிவிட்டார்கள். இருந்தாலும் பென்சிலால் வரையும் போது கிடைக்கும் finishing கணினியில் வரையும் போது ஏற்படுவதில்லை.
இனி பென்சில் வாங்கும் போது எதற்காக பென்சிலை வாங்குகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கு தேவையான பென்சிலை கேட்டு வாங்குவோம்.🙏😊

மனிதத்தேனீயின் தேன்துளி


எங்கள் மாநகா் மதுரையில் மழை மகிழ்ச்சி -மனிதத்தேனீ


Tuesday 25 September 2018

கண்டுபிடிப்புகளின் நாயகன் டாக்டர் எஸ்.செந்தில்குமாருக்குப் பாராட்டு விழா




முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பொன்மனச் செம்மல்
எம் ஜி ஆருக்கு தர்ம சிந்தனையைக் கற்றுத்தந்த மாதரசி.........
M G R
#கொடைவள்ளல்
என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் அந்த வள்ளலுக்கும் வள்ளலாக ஒருவர் அதுவும் ஒரு பெண் இருந்திருக்கிறார் என்பதை படித்த பின் அறிந்து கொண்டேன்.
.
எம்.ஜி.ஆர். தனது ஆரம்ப காலத்தில் சென்னை யானைக்கவுனியில்தான் குடியிருந்தாராம்.
அது அவரது வாழ்வின் வறுமைக் காலம் ; அந்த வறுமைக் காலத்திலும் வாக்கிங் போவது அவரது காலை வழக்கமாம் !
போகும் வழியில் ஒரு பாட்டி, புட்டு சுட்டு விற்றுக் கொண்டிருப்பாராம்.
ஒரு நாள் காலையில் வாக்கிங் போய்விட்டு , அந்த பாட்டி அம்மாளிடம் புட்டு வாங்கச் சென்ற எம்.ஜி.ஆர். தன் கையில் இருந்த காசை எண்ணிப் பார்த்துவிட்டு , “ மறுநாள் வாங்கிக்கறேன்..” என்றாராம்.
“ஏன்..?” என்று பாட்டி கேட்டதும் , எம்.ஜி.ஆர். தயக்கத்துடன் சொன்னாராம் : “ பாட்டி.. நான் எனக்கு மட்டும் வாங்க வரவில்லை...என்னோடு இருக்கும் மூணு பேருக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால்..?”
“என்ன ஆனால்..?” என்று பாட்டி கேட்டாராம்.
“அவ்வளவு பேருக்கும் சேர்த்து வாங்கக் கூடிய அளவுக்கு என்னிடம் காசு இல்லை பாட்டி ” என்றுஉண்மையைச் சொல்லி விட்டாராம் எம்.ஜி.ஆர்.
.
எம்.ஜி.ஆர். முகத்தைப் பார்த்த பாட்டி என்ன நினைத்தாரோ...?
“பரவாயில்லே! நாளைக்கு வரும் போது காசு குடுப்பா...” என்று சொல்லி எல்லோருக்கும் சேர்த்து புட்டை பார்சல் செய்து எம்.ஜி.ஆர். கையில் கொடுத்தாராம் அந்தப் பாட்டியம்மா..!
எம்.ஜி.ஆர். இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
பாட்டி கொடுத்த பார்சலை வாங்காமல் எம்.ஜி.ஆர். ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்க , சிரித்துக் கொண்டே பாட்டி கேட்டாராம்:
.”என்னப்பா யோசிக்கிறே..?”
.
எம்.ஜி.ஆர். திடீர் என அந்தப் பாட்டியிடம் , அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறார் :
“ ஆமா...நாளைக்கு நான் காசு கொண்டு வராம உன்னை ஏமாத்திட்டா என்ன பண்ணுவே பாட்டி..?”
பாட்டி பதட்டமில்லாமல் சொன்னாராம் : “காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது... வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத் தீர்த்த புண்ணியம் வருது.. அது தருமக் கணக்குல சேர்ந்துடும்”
.
பாட்டியின் இந்தப் பதில் ,
எம்.ஜி.ஆரின் மனதில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்..?
நிச்சயமாக அந்தப் பாதிப்புதான் , பல நல்ல பண்புகளை எம் ஜி.ஆர். மனதில் பதிய வைத்திருக்கும்...!
சொன்னபடியே மறுநாள் தேடிச் சென்று அந்தப் பாட்டிக்கு கொடுக்க வேண்டிய காசைக் கொடுத்துவிட்டாராம் எம்.ஜி.ஆர்..!
.
பல வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர். முதலமைச்சரான பின் , அந்தப் பாட்டி பற்றி விசாரித்து தேடிச் சென்று உதவி செய்ததாக சில தகவல்கள் கூறுகின்றன.
.
இந்தப் பூமியிலே அந்தப் புட்டுப் பாட்டி எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை..!
.
ஆனால் எம்.ஜி.ஆரின் இறுதி மூச்சுவரை அந்தப் புட்டு பாட்டி , எம்.ஜி.ஆரின் இதயத்தில் வாழ்ந்திருப்பாள்...!
அதில் எனக்கு சந்தேகமே இல்லை...!!!

தினபூமி மதுரை 25.09.2018 பக்கம் 9


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌇ஆசையும் ஏக்கமும் செல்வத்தை சேர்க்காது. உழைப்பே செல்வத்தை தரும்.
🌇ஒரு சிலருக்கு நாம் சொல்லும் கருத்துகள் மிகவும் உபயோகமாக இருக்கும். நாம் சொல்வதின் படி கேட்டு நடந்து கொள்வார்கள். அவர்களுக்காகவேனும் நேர்மையாக நாம் நடந்து கொள்ள வேண்டும்.
🌇ஒருவருக்கொருவர் பிடிக்காமல் போவதற்கு அவரவர் நடத்தையே காரணம்.
🌇நீங்கள் சொன்னது சரியோ, தவறோ என எண்ணிக் குழப்பம் அடைய வேண்டாம். சரி என்பவர்களுக்கு சரியெனவும், தவறு என்பவர்களுக்கு தவறெனவும் நீங்கள் சொன்னது நிலைபெறும்.
🌇உலகம் எத்தனை சிறப்பு மிக்கது என்பதை நல்ல மனிதர்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்