Saturday 31 July 2021

காலத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள்.

 காலத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள்.

சில மணித்துளிகள்தானே என்று, மணித்துளிகள் அல்லது விநாடிகள் (நிமிடங்கள்) வீணாவதை காவனமின்றி விட்டுவிடக்கூடாது. மணித்துளிகளை வீணாக்குவது என்பது சிறிது சிறிதாக நமக்கான நேரத்தை வீணாக்கிக் கொள்கிறோம் என்பது பொருள்...
மணித்துளிகள்தாம் யுகங்களாக மாறுகின்றன. ஒவ்வொரு விநாடியும் வாழ்நாளில் விலைமதிக்க முடியாத ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும். அந்த மணித்துளிகளைப் பயனுள்ள வழியில் கழிக்க வேண்டும் (Every minute counts).அவசரமாக அல்ல, விரைவாகச் செயல்பட வேண்டும்...
சிலர் சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் சுற்றி வளைத்துப் பேசும்போதும், சூழ்நிலை அறியாமல் மிகவும் மெத்தனமாகப் பேசும்போதும் கேட்பவர்கள் எரிச்சல் அடைவார்கள்..
சில நேரங்களில் பொறுமை இழந்து நீங்கள் சொல்ல வந்தது என்ன...? அதை மட்டும் சொல்லுங்கள் என்று நேரடியாகக் கேட்டுவிடுவார்கள். தமது தேவையை ஒரு வரியிலோ ஒரு சொல்லிலோ சொல்லத் தெரியாதவர் – என்ன சாதிக்கப் போகிறார்...? அத்தோடு இத்தகையவர்களைச் சந்திக்க நேரும் போதெல்லாம் நேரமும் வீணாகின்றது...
நேரம் வீணாகின்றதே என்ற உணர்வால் உந்தப் படுகிறார்கள். இவரோடு வீணாக்கிய நேரத்தைச் சரிகட்ட பணிகளை விரைவுபடுத்தி உழைக்க வேண்டியுள்ளது...
தெளிவான எண்ணமுடைய மனிதன் காலத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறான். தெளிவில்லாதவன் வாழ்வில் திசை தெரியாமல் அல்லல்படுகிறான்...
நேரத்தின் பெறுமதியைப் பின்வரும் வாய்ப்புகளைச் சந்தித்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
🔹 தேர்வில் தோற்ற மாணவருக்கு ஒரு ஆண்டில் பெறுமதி என்னவென்று புரியும்...!
🔹 குறைப்பிரசவம் செய்த தாய்க்கு ஒரு மாதத்தின் பெறுமதி என்னவென்று புரியும்...!
🔹 வாராந்திர நாளிதழ் வெளியிடும் ஆசிரியருக்கு ஒரு வாரத்தின் பெறுமதி என்னவென்று புரியும்...
🔹 தொடருந்தைத் தவறவிட்ட பயணிக்கு ஒரு விநாடியின் பெறுமதி என்னவென்று புரியும்...!
🔹 விபத்திலிருந்து தப்பியவருக்கு ஒரு வினாடியின் பெறுமதி என்ன என்று புரியும்...!
ஓட்டப் பந்தயத்தில் தோல்வி அடைந்தவர்களை கேட்டுப் பாருங்கள், ஒரு வினாடியின் அருமையை..
குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய பணியை நீட்டித்துச் செய்பவர்கள், ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டியதை இரண்டு மணி நேரம் வரை செய்து கொண்டிருப்பவர்கள்...
இவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பது மட்டுமல்ல, இவர்கள் வாழ்க்கை சரிந்து கொண்டே போய் பின்னர் அழிந்தும் போய்விடும்...
இத்தோடு மறதி, சோம்பல், அளவுக்கு விஞ்சிய தூக்கம் இவை மூன்றும் சேர்ந்து கொண்டால் போதும் பின்னர் அந்த மனிதன் மீளவே முடியாது...
ஆம் நண்பர்களே
வளர்ந்த சமுதாயத்தின் அடையாளம் நேரத்தைச் சரியாக பயன்படுத்துவதுதான். இந்த வாரத்திற்குள் நமக்கு இறுதி முடிவு காத்து இருக்கிறது என்று நமக்கு முன் கூட்டியே தெரிந்து விடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன செய்வோம்...? முதன்மையான வேலைகளை எல்லாம் வரிசைப்படுத்தி விரைந்து விரைந்து செய்து முடிப்போம் அல்லவா...?!, ஆனால்!, உண்மை என்னவென்றால்நமக்கு முடிவு ஒரு வாரத்தில் இல்லை,ஒரு நாளில் இல்லை, ஒவ்வொரு மணித் துளியிலும் காத்து இருக்கிறது.
ஒவ்வொரு விநாடியிலும் காத்திருக்கிறது. எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம். அதனால் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில், சமுதாயத்திற்கு நன்மை தரும் வகையில் கழிப்பது கடமையாகும். வேலையை சரியான நேரத்தில் வழக்கம் போலவே செய்ய வேண்டும்.
இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து நேரத்தை வீணாக்கா வேண்டாம். இன்று!, உங்கள் கையில் ஒரு நாளைய 24 மணிகள் – 1440 நிமிடங்கள் -86,400 வினாடிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இவற்றை வீணாக்காமல் பயனுள்ள வகையில் செலவிடத் தயாராகுவோம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Friday 30 July 2021

எப்போது மகிழ்ச்சி கிடைக்கும்.

 எப்போது மகிழ்ச்சி கிடைக்கும்.

செருக்கு என்பது ஓர் தீயகுணம், அதுவே பல தீய விளைவுகளுக்குக் காரணமும் கூட. செருக்கில் விழுந்தவர்கள் என்றுமே உயர்ந்த நிலையை அடைய முடியாது...
செருக்கு யாரிடம் இருக்கிறதோ!, அவர்கள் மற்றவர்களிடமிருந்து அன்பு, நட்பு, பாசம் போன்றவற்றைப் பெற இயலாது, அவர்களுக்கு நல்லவற்றைச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். நல்லது சொன்னவர்களை அற்பமானவர்களாகக் கருதுவார்கள்...
செருக்கினை அழித்து, மற்றவர்களையும் மதித்து, அவர்களையும் அரவணைத்து, தன் வாழ்க்கைப் பாதையை சீராகக் கொண்டு சென்றால் அவர்களுக்கு வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிகள் கிடைக்கும். செருக்கின்மையே வாழ்க்கையின் வெற்றி. அந்த வெற்றியின் மறைபொருள்...
ஒரு அரசர், ‘யான் எனல்’ என்ற செருக்கு நிரம்பியவர். வேட்டைக்குச் சென்றபோது ஒரு துறவியை சந்திக்க நேரிட்டது. அவர் கண்களை மூடித் தியானம் செய்து கொண்டிருந்தார்...
அந்த துறவியைப் பார்த்து அரசன்..,
”நான் பல நாடுகளை வென்றவன், அது இது என்றெல்லாம் தன்னைப் பற்றிக் கூறிய அரசன், எல்லாம் தனக்கு இருந்தும் தான் ''நிம்மதி இல்லாமல்'' இருப்பதாகக் கூறி, தனக்கு எப்போது மகிழ்ச்சி கிடைக்கும் என கேட்டான்...
தியானம் கலைந்ததால் கண்விழித்த துறவி சற்றே சினமுற்று,
”நான் மரணித்தால்தான் உமக்கு மகிழ்ச்சி கிடைக்கும்". என்று கூறிவிட்டு மீண்டும் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்...
நான் எத்தனை பெரிய அரசன் என்னையே அவமானப் படுத்துகிறீர்களா...?” என்றபடி சற்றும் சிந்திக்காமல் துறவியை கொல்வதற்காக் கத்தியை உருவினார் அரசர்...
''மூடியே!, நான் என்றால், என்னைச் சொல்லவில்லை, ‘நான்’ என்ற இறுமாப்பு மரணித்தால்தான் உமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் ...
"யான் எனும் செருக்கு" என்பது, உன் கண்ணில் விழுந்த தூசு போன்றது. அந்த தூசியைச் சுத்தம் செய்யாமல் உன்னால் எதையும் காண இயலாது...
எனவே!, நான் என்னும் செருக்கு என்கிற தூசியை சுத்தம் செய்துவிட்டு உலகத்தைப் பாருங்கள்''” என்று விளக்கினார் துறவி.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு.

 வாழிய

பல்லாண்டு.
இன்று அகவை 71 இல் தடம் பதிக்கும் தமிழக அமைச்சர், எங்கள் குலதெய்வம் துவார் வள்ளிலிங்கம், அடைக்கம்மை அப்பத்தாள் வழிபடும் இலுப்பைக்குடிச் சகோதரர், அனைவரிடமும் அன்புடன் பழகும் அண்ணன் மாண்புமிகு
எஸ். ரகுபதி அவர்கள்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ



பயத்தின் உச்சத்தில் சீனா...* *வரலாறு காணாத மழை

 *பயத்தின் உச்சத்தில் சீனா...*

*வரலாறு காணாத மழை.*
இதன் காரணமாக The Gorges Dam முழுமையாக நிரம்பிவிட்டது.
நேற்று அந்த அணை இருந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டதில்...
அணையின் அஸ்திவாரங்கள் முற்றிலுமாக ஸ்திரமற்று போய்விட்டன.
அணையில் இருந்து வெளியேற்றும் உட்சபட்ச நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு 100 மடங்கு அதிகமாக இருக்கிறது.
உலகின் முன்றாவது மிகப்பெரிய ஆற்றின் நடுவே இந்த அணை கட்டப்பட்டுள்ளது,
உலகின் மிகப்பெரிய அணையும் இதுவே ஆகும்.
சொல்லப்போனால் ஒட்டுமொத்த சென்னையின் நிலப்பரப்பை விட பல மடங்கு பெரியது இந்த அணை.
இந்த அணை இப்போது பெய்யும் வரலாறு காணாத மழை மற்றும் நிலநடுக்கம் காரணமாக என்நேரமும் உடையலாம் என்பது திட்டவட்டமாக தெரிந்துவிட்டது.
ஒரு வேளை இந்த அணை உடைந்தால்....
4 முதல் 50 கோடி பேர் ஜலசமாதி ஆவார்கள் என்பது மட்டும் உறுதி.
வூஹான் மாகாணத்தை விட்டு அணைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தது சீனா.
எந்நேரம் வேண்டுமானாலும் The Gorges Dam உடையலாம் என்பதால்.
முதல் கட்டமாக 10 கோடி பேரை இடம் மாற்றுகிறது சீனா.
குறைந்த பட்சம் 5 கோடி இறப்பார்கள் என்பாதால், 20 கோடி பேரை பாதுகாப்பான மாநிலங்களுக்கு உடனடியாக பயணப்படுமாறு அறிவுறுத்தல்.
'இந்த அணையை கட்டாதே' என அன்று உலகமே கெஞ்சியது.
இன்று...
அவன் அழிவை அவனே தேடிக்கொண்டான்.
நொடிக்கு 36000 Cubic Meter நீரை திறந்து விட்டும். அணையின் நீர்மட்டம் குறைந்தபாடில்லை.
எவ்வளவு நீரை திறந்தாலும், திறந்து விடும் நீரின் அளவை விட அணைக்கு 100 மடங்கு நீர்வரத்து இருப்பதால்.
அணையை காப்பாற்றுவது சந்தேகமே.
கடைசி 1 மணி நேரத்தில் . 163Mtr இருந்து 23.Cmr. உயர்ந்து 163.23.Mtr ஆக உள்ளது.
அடுத்த 24. மணி நேரத்தில் Three Gorges அணை தனது முழுக்கொள்ளலவான 175.MTR அதாவது 600அடி உயரத்தை அடைந்து அணை நிரம்பி வழியும்.
பிறகு...
பாரம் தாங்கமல் அணை உடையலாம்.
தற்போது சீனாவுக்கு உள்ள ஒரே தீர்வு மழை நிற்க வேண்டும்.
ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கனமழை பெய்யும் என உலக வானிலை மையம் அறிவித்து விட்டது.
ஆதலால் உலகின் மிகப்பெரிய அணை உடைவது உறுதியானது.
- ரானா பிரதாப் சிங்
*'இயற்கையை மனிதன் விஞ்சினால்...*
*இயற்கை தான் இறுதி தீர்ப்பு வழங்குவான்*🙏🏻

Thursday 29 July 2021

வாழிய பல்லாண்டு


 

உண்மை அரங்கேறியது.

 உண்மை அரங்கேறியது.

பிறர் தன்னைப் புகழ வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தவறே அல்ல. ஆனால் வலுக்கட்டாயமாகப் புகழ வைப்பது ஓர் ஆக்கிரமிப்பு. புகழ் இருப்பதுபோலத் தோற்றம் ஏற்படுத்துவது அக்கிரமம். அது உண்மையான வெற்றியாகாது. இன்று வெற்றி பெறாமலேயே தங்களை வெற்றியாளர்களாகக் காட்டிக் கொள்ளப் பலர் விரும்புகிறார்கள்.
பலர் கூச்சமில்லாமல் பாராட்டுக்கும் புகழுக்கும் ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். மாலைகள் சூட மலர் பறித்துத் தருகிறார்கள். சுவரொட்டி ஒட்டக் கூழ் காய்ச்சுகிறார்கள். ஒரு விஷயம். புகழுக்கான தகுதி தனக்கு உள்ளது எனப் புரிந்து வைத்திருப்பது தலைமைப்பண்பு. ஆனால் புகழைப் பிறரிடமிருந்து ஜப்தி செய்வது அநாவசியம்.
விளக்குகிறேன்.
பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தமது உரைகளை உதவியாளருக்கு டிக்டேட் செய்கையில் சில இடங்களில் "கைத் தட்டல்' என்று குறிக்கச் சொல்லுவார். தன் வெற்றியைப் பற்றிய தீர்க்கமான தீர்மானம் அது. கைத்தட்டல் என்று குறித்துக் கொள்ளும்போது ஆரம்பத்தில் அவரது உதவியாளர் திகைப்படைந்தார். ஆனால் சர்ச்சிலின் கணிப்பு ஒருபோதும் பொய்யாவதில்லை என்பதைக் கண்டு பின்னர் அவர் வியப்படைந்தார். புகழத் தக்கவன் என்ற இந்தக் கணிப்பு தவறில்லை. ஆனால் கைத்தட்ட வேண்டிய இடத்தில் கைத்தட்ட ஆள் செட்அப் செய்திருந்தால் அசிங்கம்...அநாகரீகம். அப்படி ஜெயிக்காதீர்கள்.
தகுதி இருந்தும் செயற்கைப் புகழ் தேடுவது தவறு. தகுதியே இல்லாமல் வெற்றியாளனைப் போல் காட்டிக் கொள்வது தவறல்ல. போக்கிரித்தனம். அது ஆபத்தான அணுகுமுறையும் கூட.
புதுப் பணக்காரர்கள் நாலு காசுகளை வீசி எறிந்தால் புகழ்ந்து தள்ளத் தமிழ்ப்பேச்சாளர்கள் சிலர் தலையைச் சொறிந்துகொண்டு முன் வருகிறார்கள். இது கறுப்புப் புகழ். கள்ளத் தொடர்பு. கண்டிக்கத் தக்கது.
மீண்டும் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறேன். பாராட்டுக்கும் புகழுக்கும் தான் தகுதி உடையவன் என்ற தெளிவு, உங்களை உயர்த்தும். ஆனால் அதற்கான ஏற்பாடு உங்களைத் தாழ்த்தும். புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் மார்க் ட்வெயின் வாழ்க்கையில் அப்படி ஒரு சுவையான நிகழ்ச்சி.
அவருக்குப் பிரெஞ்சு தெரியாது. அந்தக் காலத்தில் பிரெஞ்சு என்பது ஒவ்வொரு ஆங்கிலக் கலைஞனுக்கும் சின்ன வீடு மாதிரி.
மார்க் ட்வெயினின் எழுத்துகளைப் பாராட்டி பாரீசில் ஒரு மிகப்பெரிய விழா நடந்தது. விழா நடந்த அதே பல்கலைக் கழகத்தில் தான் மார்க் ட்வெயினின் மகன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பிரெஞ்சு மொழி நன்கு தெரியும்.
மகனை அழைத்து ""எனக்குப் பிரெஞ்சு தெரியாது. பிரான்ஸ் மக்கள் மொழிப்பற்று மிக்கவர்கள். எனவே பேசுகிற எல்லோரும் பிரெஞ்சில்தான் பேசுவார்கள். நான் ஒரு முட்டாளைப் போல அங்கே இருக்க வேண்டியிருக்கும். ஆனால் எனக்குப் பிரெஞ்சு தெரியாது என்பது அவர்களுக்குத் தெரியக்கூடாது. எனவே நீ என் பக்கத்திலேயே இரு. எனக்குச் சைகை காட்டு. நீ சிரித்தால் நானும் சிரிப்பேன். முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டால் நானும் அப்படியே. சமாளித்துவிடலாம்.''என்றார் மார்க் ட்வெயின்.
ஆனால் விழா நடந்தபோது தர்மசங்கடம் ஒன்று நேர்ந்துவிட்டது. விழாவில் பேசியவர் மார்க் ட்வெயினை ஓஹோ என்று புகழ்ந்தபோது சபையே கைத் தட்டியது. மகனும் கைத்தட்டினான். அவனைப் பார்த்த மார்க் ட்வெயின் தன்னைப் புகழுகிறார்கள் என்று தெரியாமலேயே கை தட்டினார். சபை இதைப் பார்த்து சிரித்தது. இந்தச் சங்கடம் அடிக்கடி அரங்கேறியது. மகன் நெளிய ஆரம்பித்தான். பலர் இந்தக் கூத்தைப் பார்த்துச் சிரிக்கும்போது மகனாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மகன் சிரிக்கும் போதெல்லாம் ஒப்பந்தப்படியே மார்க் ட்வெயினும் சிரித்தார். மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். மகனுக்கு அவமானத்தால் வியர்த்துக் கொட்டியது.
அறைக்குள் திரும்பியதும் தந்தையிடம் கோபமாக ""என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்? உங்களை "ஆஹா, ஓஹோ' என்று புகழும்போது நான் கைத்தட்டாமல் இருக்க முடியுமா? நீங்கள் கைத் தட்டினால் அசிங்கம் இல்லையா? உங்களைப் பெரிய மகான் என்று ஒருவர் பாராட்டினார். நீங்கள் கையை உயர்த்திப் பிரமாதமாகக் கைத்தட்டுகிறீர்கள். என் சக மாணவர்கள் என்னை எப்படிக் கேலியாகப் பார்த்தார்கள் தெரியுமா? என்று சீறினான் மகன். அமைதியாக மார்க் ட்வெயின் சொன்னார். ""வருத்தப்படாதே...என் வாழ்க்கையில் இப்போதுதான் முதல் முதலாக நான் உண்மையாக நடந்திருக்கிறேன். நான் செய்ய விரும்பியதை இன்றுதான் செய்திருக்கிறேன். மேடைகளில் என்னைப் புகழும்போது பிறர் கைத் தட்டுகையில் நானும் கைத்தட்ட விரும்பியதுண்டு. ஆனால் மொழி புரிந்ததால் தட்டியதே இல்லை. முதல் முதலாக மொழி புரியாததால் தவறாக ஓர் உண்மை அரங்கேறிவிட்டது'' என்றார்.
ஓர் முக்கியமான உண்மை -தான் புகழத்தக்கவன் என்கிற தீர்மானம் பிறர் புகழும்போது ஏற்படவில்லை. எழுதும்போதே தனக்கு ஏற்பட்டது என்று புகழின் நுட்பமான ரகசியத்தை மார்க்ட்வெயின் புரியவைத்தார்.
அண்மையில் ஒரு கொடிய நிகழ்ச்சி. அண்மையில் என்னிடம் ஒருவர் தமது புத்தகத்தைப் பாராட்டி முன்னுரை தரும்படிக் கேட்டுக் கொண்டார். நான் விரும்பிய புத்தகங்களைப் படிக்கவே எனக்கு நேரம் கிடைக்காதபோது இதைப் படிக்கும் சுமை என் மீது திணிக்கப்பட்டது. எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு நேரம் இல்லை என மறுத்தேன். அவரோ ""படிக்கவே வேண்டாம்...சும்மா பாராட்டி ஒரு முன்னுரை கொடுங்களேன்'' என்றார். அநியாயமில்லாயா இது.
நாதஸ்வர மேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களைப் பற்றி ஒரு செய்தி உண்டு. அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்தபோது அவரை ஒரு நிருபர் பேட்டி கண்டார். ""நீங்கள் பெற்ற பாராட்டுகளிலேயே உயர்வானது இதுதானே'' என்றார். கொஞ்சம் யோசித்துவிட்டு ராஜரத்தினம் பிள்ளை சொன்னாராம். ""ஒரு கல்யாணத்திலே நான் நாகசுரம் வாசித்தபோது நரிக்குறவர் ஒருவர் வெளிச்சத்துக்கு கியாஸ் லைட் தாங்கிக் கொண்டு வந்தார். தோடி ராகம் வாசிக்கும்போது நான் ஒரு பிருகா அடிச்சேன். சந்தோஷத்தில் அந்த மனுஷர் கியாஸ்லைட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிச்சு "ஆஹா' அப்படீன்னார். அதுதான் எனக்குக் கிடைச்ச பாராட்டுகளிலேயே உசத்தி'' என்றார். ""இந்த ஜனாதிபதி விருது'' என்று நிருபர் இழுத்தவுடன்...""ஜனாதிபதி என்ன என் வாசிப்பைக் கேட்டுட்டா கொடுத்தார். எவனோ கொடுக்கச் சொன்னான்...எடுத்துக் கொடுத்தார். அவ்வளவுதான்'' என்று ஒரு போடு போட்டார்.
நிஜமான புகழ்...வெற்றியின் வேர். பொய்யான புகழ்...
தோல்வியின் தாய்.
புரிந்தவருக்கு வெற்றி வசப்படும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

கலைத் தந்தை கருமுத்து தியாகராசர் நினைவைப் போற்றுவோம் - மனிதத்தேனீ


 

மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்*

 *மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்*

பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது. மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*
S, T, R* என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.
S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS
ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் .
*ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*
மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை
*S T R* அதாவது,
*SMILE (சிரிக்க சொல்வது 😄),*
*TALK (பேச சொல்வது😲),*
*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)*
இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும் மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!
உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.
இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.
அதாவது, *அவருடை 👅நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*
அவர் தனது நாக்கை👅 நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*,
அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.
இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், *ஜாதி, மத* பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!!
*பகிர்வு*
உபயோகமானது எனக் கருதும் நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்வதை விட காபி பேஸ்ட் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Amudhan maheshvarma .

கேரள எல்லைகள் மூடப்பட வேண்டும் மிரட்டும் கோரோனா எண்ணிக்கை.

உள் குத்து வெளிக் குத்து.

 உலகின் எந்த மூலையிலும் எவனாக இருந்தாலும் பாதிரியார்களையும் சிஸ்டர்களையும் கைது செய்ய வாடிகனில் போப் ஆண்டவரின் அனுமதி பெற சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் மருமகளும் திமுக எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமாரின் மனைவியுமான மெர்சி செந்தில்குமார் கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக மந்திரியின் மகளும்,எம்எல்ஏ மனைவியுமான மெர்சி செந்தில்குமார் பேசியதாவது:
ஒட்டுமொத்த வாழ்க்கையையே சேவைக்காக அர்ப்பணிக்கிற பாதிரியார்கள், சிஸ்டர்களுக்கு நாம் என்ன மரியாதை கொடுக்கிறோம்?
கல்வியும் பகுத்தறிவும் பாதர்ஸும் சிஸ்டர்ஸும் வந்த பின்னர்தான் நமக்கு கிடைத்தது. பள்ளி, கல்லூரிகளில் அரசியலும் சட்டமும் சொல்லித்தரப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் பாதிரியார்கள், சிஸ்டர்கள் கைகளில் உள்ளது. இந்த கல்வி நிறுவனங்களில் துறவறம் பற்றியும் சொல்லி கொடுங்கள்.
துறவிகளாக வாழ்வது மிகப் பெரிய கடினமானது. உலகத்தில் இருக்கிற பாதிரியார்கள், சிஸ்டர்களை ஹீரோ ஹீரோயின்களைப் போல பார்க்க வேண்டியது அவசியம்.
இன்னொரு சட்டத்தை கொண்டுவரனும்னு தோணுது.. இனிமே இந்த உலகத்துல எவனாக இருந்தாலும் ஒரு பாதரையோ சிஸ்டரையோ அரெஸ்ட் பண்ணனும்னா வாடிகனில் போப் ஆண்டவரிடம் கேட்கனும். போப் ஆண்டவரிடம் கேட்காம அரெஸ்ட் பண்ணக் கூடாதுனு சட்டம் கொண்டுவரனும். துறவிகளாக இருப்பவர்கள் உலகம் முழுவதும் பணியாற்றுகிறவர்கள். இவ்வாறு மெர்சி செந்தில்குமார் பேசியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



ஆழ்ந்த இரங்கல். பழகுவதற்கு இனியவர், சிரித்த முகம், கொடுத்து மகிழ்வதில் பேரின்பம் காணும் நண்பர், சேலம் நகரத்தார் சங்கத்தின் தலைவர் குழ. கருப்பையா இன்று இரவு இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


 

Wednesday 28 July 2021

லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள். இதன் மூலம் மனம் ஒருமுகப்படுவதோடு, ஆர்வத்துடன் செயலாற்றவும் முடியும்.

 லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள். இதன் மூலம் மனம் ஒருமுகப்படுவதோடு, ஆர்வத்துடன் செயலாற்றவும் முடியும்.

ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. சாஸ்திரங்களைப் படிப்பதால் மட்டும் கடவுளை அடைந்து விட முடியாது.
கடவுளை அறிவது மட்டுமே வாழ்வின் நோக்கம். அதற்காகவே நாம் மண்ணில் மனிதர்களாகப் பிறந்திருக்கிறோம்.
நல்ல உணவு மனதில் நல்ல உணர்வுகளைத் தூண்டுகிறது.
குதிரைக்குக் கடிவாளம் போடாவிட்டால் அது நேரான வழியில் போகாது.
அதுபோல், விவேக வைராக்கியங்களாகிய கடிவாளங்களால் மறைக்கப்பட்டவனுடைய மனமும் தீய வழியில் செல்லாது.

நெகிழ்ந்து போன அன்பு.

 நெகிழ்ந்து போன அன்பு.

''அமெரிக்க பணக்காரர் ஒருவர் தன் தாயின் பிறந்த நாளன்று பரிசு வாங்க காரில் புறப்பட்டார்.
நகரின் பெரிய பூக்கடைக்கு சென்று, '' பூங்கொத்து என்ன விலை'' எனக் கேட்டார்.
''250 டாலர்'' என்ற உடன்
''இதை விட நல்லது இருக்கிறதா?'' என்றதும் வேறொன்றை எடுத்து, ''இந்தப்பூ ஆர்கிட் வகையைச் சேர்ந்தது. ஒரு வாரத்திற்கு வாடாமல் இருக்கும். விலை 500 டாலர்'' என்றார் கடைக்காரர்.
''நல்லது. இதையே பேக் பண்ணுங்க! உங்களிடம் 'கூரியர் சர்வீஸ்' உண்டா?'' எனக் கேட்டார்.
''இருக்கு சார்... அதற்கு 100 டாலர் கட்டணம்''
''வேண்டாம்... பூங்கொத்து இன்னிக்கே போயாகணும். என் தாயின் பிறந்தநாள். கூரியர் சர்வீசுல தாமதம் ஆயிட்டா போச்சு! எனக்காக ஒன்னு செய்யுங்களேன். இப்பவே ஒரு காரும், டிரைவரும் ஏற்பாடு செய்யுங்க. உடனடியாக பூங்கொத்தை இந்த விலாசத்தில கொடுத்திடுங்க'' என்றார்.
''ஏற்பாடு செய்றோம். அதுக்கு 300 டாலர் கொடுங்க''
''நோ ப்ராப்ளம்'' என்று சொல்லி பணம், முகவரியை கொடுத்து விட்டு கிளம்பினார் பணக்காரர்.
பரபரப்பான வேலைக்கு இடையிலும் தாயை மறக்காமல் பூங்கொத்து அனுப்புகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் காரில் ஏறப் போனார்.
ஐந்து வயது சிறுமி ஒருத்தி அழுதபடி வந்தாள்.
''குழந்தை...ஏன் அழறே?'' எனக் கேட்டார்.
''அங்கிள். எனக்கு ஒரு டாலர் பணம் தர முடியுமா''
'' தரேன். எதுக்கு நீ அழறே?''
'' இன்னிக்கு என் அம்மாவின் பிறந்த நாள். அவங்களுக்கு பிடித்த ரோஜாப்பூ வாங்கித் தரணும். அதுக்கு என்னிடம் பணம் இல்லை. நீங்க கொடுத்தால் ரோஜா வாங்கி கொடுப்பேன்.
அம்மா எனக்காக வெயிட்டிங். ப்ளீஸ் அங்கிள் ஒரு டாலர் தரலாமா''
''ஒரு டாலர் என்ன! 10 டாலர் தரேன் எடுத்துக்கோ!''
''வேண்டாம் அங்கிள். ஒரு டாலர் போதும்'' என்று வாங்கி கொண்டு சிட்டாக பறந்தாள் சிறுமி.
சாக்லேட் வாங்க தான் இப்படி கேட்கிறாளோ? என நினைத்தார் பணக்காரர். மெதுவாக காரில் பின்தொடரும்படி டிரைவரிடம் தெரிவித்தார். தெருவோர பூக்கடை ஒன்றில் ரோஜாப்பூ வாங்கினாள். சந்தோஷத்துடன் பூவை கையில் ஏந்தியபடி ஓடினாள்.
காரும் மெதுவாக தொடர்ந்தது. கடைசியில் ஒரு கல்லறையின் அருகில் போனாள். ரோஜா பூவை வைத்து, ''அம்மா...ஹாப்பி பர்த்டே! உனக்கு பிடித்த ரோஜா வாங்கி வந்திருக்கேன்'' என கல்லறையில் முத்தமிட்டாள்.
அதைப் பார்த்த பணக்காரருக்கு கண்ணீர் அரும்பியது. அப்போது டிரைவர், ''சார்...உங்களுக்கு மீட்டிங் போக நேரமாச்சே!'' என அவசரப்படுத்தினார். காரில் புறப்பட்ட பணக்காரர் பூக்கடையில் தான் வாங்கி வைத்த பூங்கொத்தை திரும்ப பெற்றுக் கொண்டு தாயைக் காண கிளம்பினார்.
வீட்டின் முன் கார் நிற்பதைக் கண்ட பணக்காரரின் தாய், கண்களைச் சுருக்கியபடி பார்த்தார். அம்மா என அழைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தவர், ''பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
அம்மா!'' என காலில் விழுந்தார்.
''உனக்கு இருக்கும் பல வேலையில், என்னைப் பார்க்க ஏம்பா வந்தே'' என்றார் தாய்.
''அன்பை வெளிப்படுத்துவது எப்படி என்பதை சிறுமி ஒருத்தி மூலம் கற்றுக் கொண்டேன். உயிரோடு இல்லாத தாயிடம் அவள் காட்டிய அன்பைக் கண்டு நெகிழ்ந்தேன். உங்களிடம் வாழ்த்து பெறுவதை விட பாக்கியம் எனக்கு வேறில்லை'' என்றார் பணக்காரர். மகனை அணைத்து முத்தமிட்டாள் தாய்.
பெற்றோரிடம் அன்பு காட்ட மறக்காதீர்கள்.
அவர்களை நேசித்தால் நம் வாழ்வு சிறக்கும்.

ஏமாற்றும் மனிதர்கள்.

 ஏமாற்றும் மனிதர்கள்.

எதார்த்தம் ஆனால் உண்மை..
பழகுவதில் நான்கு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்
1.எதிர்பார்த்தது எதுவோ அதற்காகவே பழகுவார்கள் கிடைத்ததும் சென்றுவிடுபவர்கள் மீண்டும் தேவைப்படும்போது வருவார்கள் 100 % சுயநல வாதிகள் இவர்கள்...!!
2.பலனை அடைவதற்காக சில நன்மையைச் செய்வார்கள் இப்படிப்பட்டவர்கள் கொடுப்பதற்க்கும் வாங்குவதற்க்கும் சரியாக இருக்கும்
அவரின் காரியத்தை நிறைவேற்ற நமக்கும் சில காரியம் செய்வார்கள் இப்படிப்பட்டவர்களிடம் தாராளமாக பழகலாம் ஆனால் இவர்கள் அனைவரிடமும் இப்படி பழக மாட்டார்கள்...!!
3.பலனை எதிர்பார்க்கவே மாட்டார்கள் அவர்களாகவே அனைத்தையும் செய்வார்கள் எதற்க்காக செய்கிறீர்கள் என்றால் நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள் என்பார்கள் அவர்கள் அன்பால் உங்களை திணறடிப்பார்கள்
இப்படிப்பட்டவர்களால்தான் நம் சமுதாயம் செழிக்கிறது இப்படிப்பட்டவர்களை உறவினராக நண்பனாக வைத்திருக்க குடுத்து வைத்திருக்க வேண்டும்...!!
4.யாருடனும் பழக்கம் அதிகம் இருக்காது ஆனால் அன்பு மிகுதியாக இருக்கும் அறிவும் அப்படியே அல்லது அன்பு செலுத்த தெரியாது இவர்களிடம் நாம் கேட்டால் பலன் அடையலாம்...!!
(உதாரணமாக தாத்தா பாட்டிகளைச் சொல்லலாம்) இவர்களிடம் பழகுவதற்கு தவம் செய்திருக்க வேண்டும்...!!
முதலாவதாக இருப்பவர்களால் தான் அதிகம் ஏமாற்றம் வருகிறது. இப்படி போலித்தன்மை வாய்ந்த மனிதர்களிடம் உங்களை எச்சரிக்கையாக இருந்து காத்துக் கொள்ளுங்கள். அவர்களை ஆராய்ந்து இனம் கண்டுகொள்ளுங்கள்...!!
மாற்றம் ஆரோக்கியமானதாக இருக்கலாம் ஆனால் ஏமாற்றம் என்றுமே ஆரோக்கியமற்றது...!!
மனிதனின் மாற்றத்தைப் புரிந்து கொள்ளுங்கள்...!!
வீணாக நம்பிக்கை வைத்து ஏமாறாதீர்கள்...!!
ஏமாற்றத்திலிருந்து மாற்றத்திற்கு வாருங்கள்...
நன்றி கோனாபட்டு சுப்பு

வாழிய பல்லாண்டு


 

தீய எண்ணம் கொண்டவர்களை ஒதுக்கி வையுங்கள்.

 தீய எண்ணம் கொண்டவர்களை ஒதுக்கி வையுங்கள்.

மனிதனிடம், மனமாக, பார்வையாக, சொல்லாக அல்லது எண்ணமாக வெளியேறும் அலை எந்த வகையாக இருப்பினும் அவ்வலை அவனுடைய தன்மைகள் அனைத்தையும் எடுத்துச் செல்கின்றது. ஒவ்வொரு மனிதனும் முன் அனுபவத்தினால் எற்பட்ட பதிவுகளின் மூலம் செயல் படுவதினால் அவனுடைய எண்ணம், சொல், செயல் அனத்தும் அவனுடைய பதிவின் அடிப்படையில் அமைந்து இருக்கும். அவனுடைய தன்மைகள் யாவும் அலை மூலமாக வெளிப்படுகின்றது.
ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நல்ல பதிவுகளையும், தீய பதிவுகளையும் பெற்று இருக்கின்றான். ஆகவே மனதின் நிலைமைக்கேற்ப அவனிடம் இருந்து வரும் எண்ணம் சில நேரங்களில் நேர்மையானதாகவும், சில நேரங்களில் முரண்பாடு உடையதாகவும் இருக்கின்றன.
இங்கு நேர்மையான அல்லது முரண்பாடான எண்ணம் அது சென்று அடையக்கூடிய பொருள் அல்லது மனிதனைப் பொறுத்து அமைவது இல்லை. அவை யாரிடம் இருந்து செல்கின்றனவோ அவர்களுடைய தன்மையைப் பொறுத்து அமைகின்றன. இந்த விஞ்ஞானத்தை, தத்துவத்தை அறிந்து கொள்ளாமல் நாம் எண்ணற்ற பதிவுகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை நன்றாக வேரூன்றச் செய்து கொண்டோம்.
தேவையற்ற தீய பதிவுகளை நாம் ஊக்குவிக்கும் பொழுது அது மேலும் ஆழமாகப் பதிந்து நம் குணங்களை தீய பதிவுகள் கட்டுப் படுத்துமாறு ஆகிவிடுகின்றன. நேர்மையற்ற முரண்பாடான எண்ணங்களை மாற்றி தீய பதிவுகளை களைவது சிறந்த ஆன்மீக முயற்சியாகும். தூய எண்ணம், சொல், செயல்களினால் இனிமையான நல்ல அலைகள் ஏற்படுத்தும் பயிற்சியினை (யோகா, தியானம், பிராணயாமம்) மேற்கொள்ள வேண்டும்.
ஒருவரை மனமுவந்து *வாழ்க வளமுடன்* என்று வாழ்த்துவதினால் ஏற்படும் நற்பயனை நாம் இங்கு தான் உணரமுடியும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

ச.கணேசன் நினைவைப் போற்றுவோம்


 

Tuesday 27 July 2021

நட்பில் பல நிலைகள்.

 நட்பில் பல நிலைகள்.

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது, நல்ல நட்பு இதயம் போல உங்களுக்கு தெரியாமலே உங்களுக்காகத் துடிக்கும்...
நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்க விடுவார்களோ அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள்...
நல்ல நண்பர்கள் உங்களுடைய மகிழ்ச்சியின்போது காணாமல் போனாலும், உங்களுடைய துயர வேளையில் உறுதியாக உங்களோடு இருப்பார்கள். தங்களைப் பற்றிய தற்புகழ்ச்சியை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய உரையாடலைக் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்பது நல்ல நண்பனின் அடையாளம்...
சட்டென்று வருபவர்களைத் தெரியாமல் நட்பாகிக் கொண்டால் அந்த நட்பு கேடாய்தான் முடியும். 'மனம் கனத்திருக்கிறது, பணம் எனக்கு தேவையாக இருக்கிறது. எனக்கு உன் உதவி தேவையிருக்கிறது' என்று உங்களிடம் உதவி கேட்டு வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள்...
நட்பின் அவசியத் தேவையே உதவுவதில்தான் இருக்கிறது. ஆனால்!, அத்தகைய சூழல்களில் 'மட்டுமே' உங்களைத் தேடி வரும் நண்பர்கள் தன்நலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்...
அதேபோல் பதவி ஆசையில் வரும் நட்புகள் நம்முடன் இருக்கும் உயிர் நட்புகளையே விரட்டச் சொல்வார்கள். அவர்கள் நல்லப்பாம்பின் நஞ்சு போன்றவர்கள்...
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ!, அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். நண்பனுக்கு இன்னொருவர் துரோகம் செய்து விட்டார்கள் என்றதும், அதை அறிந்து பொங்கி எழும் புனிதமான நட்பும் இந்த உலகத்தில் இருக்கிறது...
'உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா...? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா...? என்று பாருங்கள்...
எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள். சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.
ஆம் நண்பர்களே
உலகின் மிகச் சிறந்த தலைவர்கள் எல்லோருக்குமே மிக உரிமையோடு உறவாடும் ஒரு மிகச் சிறந்த நண்பர் இருந்திருப்பார். ஒரு நல்ல நண்பன் ஒரு சிறந்த மனிதனை உருவாக்குகிறான். ஒரு சிறந்த நட்பு நல்ல வாழ்க்கையை காட்டுகிறது.
உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா...?, மோசமானவர்களா...? என இப்போது அளவிடுங்கள். தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகுவதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது. நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே!, நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள்.
எதற்காகவும் பழகிய நட்புக்கு துரோகம் செய்யாதீர்கள். அதன் வலி தாங்க முடியாதது. எல்லோரும் நல்லவராய் இருக்க முடியாது. எனக்குப் பிடித்த மாதிரி மாறினால்தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்' என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.
Nalanthaa Jambulingam