Saturday 30 November 2019

விஸ்வநாத தாஸ் நினைவு தினக் கூட்டம்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

Dr ரம்யா post
🎷குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும்.
🎷குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.
🎷சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.
🎷இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.
குறிப்பு 1 :
கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.
குறிப்பு 2
ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
குறிப்பு 3 ;
ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.
குறிப்பு-4 :
வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
குறிப்பு- 5 :
மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
குறிப்பு- 6 :
கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.
குறிப்பு- 7 :
வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பாண்டித்துரைத் தேவர் நினைவு தினக் கூட்டம்


தினபூமி மதுரை 30.11.2019 பக்கம் 6


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

‘’விருப்பத்துடன் செய்தால்''
...................................
வேலைகளில் சின்ன வேலை, பெரிய வேலை என்று எல்லாம் எதுவுமே கிடையாது. விரும்பி செய்கிற வேலை, பிடிக்காமல் செய்கிற வேலை என்று இரண்டு தான் உண்டு.
ஒரு வேலையைக் கடினம் என்று நீங்கள் நினைக்கின்ற போதே அதை நீங்கள் விரும்பி செய்யவில்லை என்பது தான் அதற்கு அர்த்தம் .
அனுபவித்துச் செய்கிற எந்த வேலையையும் ஏனோதானோ என்று செய்தோம் என்று வெற்றி பெற்றவர்கள் யாரும் சொல்வதில்லை.
எழுத்தாளர் சுஜாதாவிடம்.,
இவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீர்களே .. உங்களுக்கு இது சிரமமாக இல்லையா “ என்று கேட்டதற்கு
''இதை வேலையாகச் செய்கிறவனுக்குத் தான் இது சிரமம்... நான் எனது விருப்பமாக இதைச் செய்கிறேன்” என்றார் .
வேலையை விருப்பத்தோடு செய்கிற யாரும் “மிகக் கடினம் ” என்று அங்கலாய்த்துக் கொள்வதில்லை. துன்பப்பட்டு உங்களை யார் அந்த வேலையை அப்படிப் பார்க்கச் சொன்னது?
இதே வேலையை விரும்பிச் செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்களே,. அவர்களிடம் அதை விட்டு விடலாமே.
ஒரு வேலையை விரும்பிச் செய்கிற போது உங்களுக்கு அதன் சிரமம் தெரிவது இல்லை .
விருப்பம் இல்லாமல் செய்கிற போது துன்பம் பல மடங்கு ஆகிறது .
நீங்கள் அழுதாலும்,, புரண்டாலும் ஒரு வேலையை நீங்கள் தான் செய்தாக வேண்டும் என்றால் ஏன் அதற்காக அழ வேண்டும்.?
உங்கள் வேலையைத் திறம்படச் செய்ய வேண்டும் என்றால் அதனை விரும்பி செய்பவராக நீங்கள் இருக்க வேண்டும்.
உங்கள் வேலையில் ஆர்வம் இல்லை என்றால் அதனைக் கற்றுக் கொள்ள இயலாது..
அதை மகிழ்வுடன் செய்தால் மட்டுமே நீங்கள் ஆசைப்படுவது உங்களுக்கு மிகவும் அருகில் வரும்...
ஆம்.நண்பர்களே..,
நாம் ஈடுபடுகின்ற எந்த செயலானாலும் உள் அன்போடும், பொறுப்பு,, கடமை உணர்ச்சியுடன் விரும்பிச் செய்தால் எந்தப் பணியையும் எளிதாகச் செய்யலாம் அந்தப் பணியில் வெற்றியும் அடையலாம்.🌹🙏🏻🌹

மனிதத்தேனீயின் தேன்துளி


Friday 29 November 2019

மூதறிஞர் ராஜாஜி நினைவு தினக் கூட்டம்


மாலைமுரசு மதுரை 29.11.2019 பக்கம் 5


தினமலர் மதுரை 29.11.2019 பக்கம் 3


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

Dr ரம்யா_post
வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.
2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.
3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.
4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.
5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.
உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.
6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.
7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.
8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.
9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.
உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.
10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.
11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.
12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து
*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
*இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*
*இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*
இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்... நமது நலனில் என்றும் உங்களுடன்...
✿✿✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்..✿✿✿....

Thursday 28 November 2019

கக்கன்ஜி நினைவு தினக் கூட்டம்


மக்கள்குரல் மதுரை 28.11.2019 பக்கம் 4


இந்திய அரசியல் சாசனம் விதைக்கப்பட்ட எழுபதாம் ஆண்டு சிறப்புக் கூட்டம்



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*இன்றைய மருத்துவ பலன் 28.11.2019. By VS Health Education. Madurai.**கடலை மிட்டாய் ஏன் சிறந்த ஸ்நாக்ஸ் தெரியுமா?*
🍕🍕🍕🍕
இன்று ஸ்னாக்ஸ் என்ற பெயரில் எதை எதையே வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் அது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று கூட யோசிப்பதில்லை! அதுமட்டுமல்ல முந்திரி பாதாம் பிஸ்தா இவற்றில்தான் சத்து அதிகம் என்றும் நினைக்கின்றோம். உண்மையில் உடலுக்கு அனைத்து நன்மைகளையும் அள்ளி தரும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய எளிய விலை குறைவான ஸ்னாக்ஸ் ஒன்று உள்ளது. அது நம்ம கடலைமிட்டாய் தான்.
இதில் கடலையும் வெல்லமும் சேர்ந்து ஒரு அருமையான சுவையான மற்றும் பல மருத்துவ நன்மைகளை நமக்கு அள்ளிக் கொடுக்கிறது. தொடர்ந்து இறுதிவரை பாருங்கள் உங்களுக்கே புரியும்.
பொதுவாக கடலையில் பித்தம் இருந்த போதும் அதனுடன் வெல்லம் சேர்க்கப்படும் பொழுது கடலை கூறிய பித்த சேர்க்கையை சீர் செய்துவிடும். அதுமட்டுமல்ல கடலையும் வெல்லமும் சேர்ந்து புரதம் இரும்பு செலினியம் மற்றும் பல சத்துக்களை கொண்ட ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் ஆக உருப்பெறுகிறது.
பொதுவாக கடலை மிட்டாயில் சேர்க்கப்படும் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட் நார்ச் சத்தும் கரையும் நல்ல கொழுப்பு
புரோட்டீன்
வைட்டமின்கள்
இரும்புச்சத்து
கால்சியம்
துத்தநாகம்
மாங்கனீஸ்
பாஸ்பரஸ்
பொட்டாசியம்
மற்றும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.
அதேபோன்று வெல்லத்தில் பல்வேறு சத்துக்களும் இரும்பு சத்தும் கால்சியமும் அபரிமிதமாக உள்ளது. மேலும் நிலக்கடலையில் உள்ள விட்டமின் பி உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது தசைகளின் வலிமைக்கும் இது உதவுகிறது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல இதிலுள்ள விட்டமின் பி 3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு நினைவாற்றலை அதிகரிக்க உதவும். எனவே கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.
அதேபோன்று நிலக்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனே அன் சாச்சுரேட் போலிக் அமிலம் போன்றவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது. அந்தவகையில் கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது இந்த நன்மைகளை இயல்பாகவே கிடைத்துவிடும். அதுமட்டுமல்ல நிலக்கடலையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் தான் உள்ளது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் நிலக்கடலையில் உள்ளது.
அதாவது இறைச்சி உணவுகளுக்கு நிகரான சத்துக்கள் இதில் கிடைக்கிறது. மேலும் வெல்லத்துடன் சேர்ந்து இதன் மருத்துவ நன்மைகள் மேலும் அதிகரிக்கிறது. அதேபோன்று நிலக்கடலையில் ட்ரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. இந்த செரட்டோன் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. எனவே இந்த கடலை மிட்டாயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அவசியம் சாப்பிட வேண்டும்.
அதேபோன்று நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியம். கருப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள் நீர்கட்டிகள் ஏற்படாதது. கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். அதிலும் இவர்கள் கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது அதன் பலன் இரட்டிப்பு அடையும்.
அடுத்து நிலக்கடலையில் உள்ள பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் உதவுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எழும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக்கொள்ளலாம். முக்கியமாக நிலக்கடலையில் உள்ள சக்திகள் ஆண்கள் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது. அந்த வகையில் இந்த கடலை மிட்டாய் அனைவருக்குமே மிகவும் சிறந்தது.
அதேபோல் நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. மேலும் இரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இது மிகுந்த நார்சத்து உள்ளது என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. பொதுவாக பாதாம் பிஸ்தா முந்திரிப்பருப்புகளில்தான் சத்துக்களை விட நிலக்கடலையில் சத்துக்கள் மிக அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
அதனால்தான் இது ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இதனுடன் வெல்லம் சேருவதால் நன்மைகள் நமக்குக் இரட்டிப்பாக கிடைக்கிறது. எனவே கெட்ட கொழுப்பில்லாத கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் அனைவருமே தினமும் சாப்பிட்டு வந்தால் பல உடல்நல நன்மைகள் எளிதாகப் பெற்றுவிட முடியும். எனவே நமது பாரம்பரிய உணவான கடலை மிட்டாயை இனி அடிக்கடி சாப்பிடுங்கள் நோய் இல்லாத வாழ்வை பெறுங்கள்.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பிரதிஷ்டைக்குப் பின் கற்சிற்பம் கடவுளாவது எப்படி..?
கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல.
கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள்.
சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது.
அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.
கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம்.
சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது "சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.
அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும்.
ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும்.
இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம்.
இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.
அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.
48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள்.
அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம்.
இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.
ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம்.
பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும்.
இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது.
எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.
சரி... ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும்.
நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும்.
தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும்.
அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும்.
அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.
6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள், பிரதிஷ்டைசெய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்..." என்றார்.
தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முறையைப்பற்றி சுந்தரேச சர்மா சிவாச்சாரியார் அவர்கள் கூறும்போது "இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப்பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள்.
இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள்.
பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது.
புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள்.
இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.
தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது.
அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது.
பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.
ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது" என்றார்.
கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை.
அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது.
மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன போலும்.
ஓம்நமசிவாய போற்றி.......
நன்றி பெரிசியப்பன் அழகப்பன்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏵அவரவர் வேலையில் கவனம் செலுத்தினால் புதுப் புது சாதனைகள் புரியலாம். அடுத்தவன் வேலையில் கவனம் செலுத்தினால் புதுப் புது வேதனைகள் அடையலாம்.
🏵பேசும் போது வார்த்தைகளை கட்டுப் படுத்தினால் சண்டை வராது. சாப்பிடும் போது வாயை கட்டுப் படுத்தினால் மருத்துவ செலவு வராது.
🏵செய்நன்றி என்பது பதிலுக்கு பதில் உதவி செய்வதல்ல, செய்ததை நினைத்து காலம் முழுவதும் அவருடன் உண்மையான நட்புறவுடன் இருப்பதே.
🏵எல்லாருக்கும் நல்லவங்க மாதிரி நடிக்கிறவங்களுக்குத் தான் இந்த உலகத்துல மதிப்பு. அவங்க தான் நிம்மதியா இருக்காங்க. உண்மையான நல்லவங்க தான் வேஷம் போட தெரியாம மனசு உடைந்து கஷ்டப் பட்றாங்க.
🏵தரம் குறைவானவர்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு நடப்பவர்களின் அறிவு செயலிழந்து போய் விடும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

மனிதத்தேனீயின் தேன்துளி


Wednesday 27 November 2019

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினக் கூட்டம்


மாமங்கம் ஏ.ராமநாதன் செட்டியார் பாராட்டு விழா 20.10.2019

வாழிய தங்கள் பணி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*தெய்வம் இருப்பது எங்கே*
*༺༻*
சித்த ஞானி ஒருவர் காசி நகர் நோக்கி நடந்து சென்று
கொண்டிருந்தார்.
உச்சி வெயில் தகித்தது. அவரால் நடக்க முடியவில்லை . ஒரு மரத்தின் நிழலில்
படுத்தார், நீண்ட தூரம் நடந்த களைப்பினால் அப்படியே கண் அயர்ந்து விட்டார்.
*༺༻*
சிறிது நேரத்தில் ஓர் இளைஞன் வந்து அவரைத் தட்டி எழுப்பினான்.
கண் விழித்துப் பார்த்தார் சித்த ஞானி.
"பெரியவரே! பார்த்தால் ஒரு சித்த ஞானி போல் தெரிகிறீர்கள். ஆனால் அறிவே
இல்லாமல் கடவுள் இருக்கும் திசை நோக்கிக் கால்களை நீட்டிப்
படுத்திருக்கிறீரே? புனித காசி நகரின் திசையல்லவா
நீர் கால்களை நீட்டியிருப்பது? இது கடவுளை அவமதிக்கும் செயலாகும்
என்று உமக்குத் தெரியாதா?" என்று கோபமாகக் கேட்டான் அந்த இளைஞன்.
*༺༻*
சித்த ஞானி அவனை அமைதியாகப் பார்த்தார்.
"தம்பி! நான் ஒரு சாதாரண மனிதன்தான். *இறைவன் எந்தத் திசையில் இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது.* *அவன் எந்தத் திசையில் இல்லை என்று நீ நினைக்கிறாயோ, அந்தத் திசை நோக்கி என் கால்களைத் திருப்பி விடு!"*
என்றார்.
இளைஞன் அப்போது தான் யோசித்தான்.
*'இறைவன் இல்லாத திசை எது?* எல்லாத் திசைகளிலும் தான் இருக்கிறான்.
அப்படியானால் இந்தப் பெரியவரின் கால்களை எந்தத் திசை நோக்கித்
திருப்புவது?"
நெற்றியில் அடித்தது போன்று நிமிர்ந்தான் இளைஞன்.
*༺༻*
'இறைவன் மனிதனுக்குத் தலையைப் படைத்தது போல் தான் கால்களையும்
படைத்துள்ளான். இந்த இரண்டு உறுப்புக்களில் எது உயர்ந்தது? எது தாழ்ந்தது?
இறைவன் கோபமடைவது எதில்?'
இளைஞன் நிமிர்ந்தான்.
அப்போது சித்த ஞானி, "அன்பனே! நான் ஒரு சித்தன் தான். நாங்கள் பாவம் எது,
புண்ணியம் எது என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. ஆனால்
*உள்மனம் ஏற்காதவற்றைச் செய்யக்கூடாது என்போம். இது தான் சித்த தத்துவம்!"*
என்றார்.
*༺༻*
*'கடவுள்' என்கிற சொல்லைப் போல் சர்ச்சிக்கப்படும் சொல் பிறிதில்லை. அதைப்போன்று சாந்தியும் நிம்மதியும் தருகிற சொல்லும் இல்லை* " (இலக்கியப் படகு,
ப.45) என்பது எழுத்தாளர் திருலோக சீதாராமின் மணிமொழி.
*༺༻*
கடவுள் எங்கே இருக்கிறார்? *"ஆலயங்களிலும், கோயில்களிலும், மட்டுமே ஆண்டவன் இருக்கிறான் எனில், ஆகாயத்திலும் பூமியிலும் அலைகடலிலும் இருப்பது யார்?"* என்பது கபீர் பெருமானின் பொருள் பொதிந்த
கேள்வி.
*༺༻*
கடவுள் எப்போது வருவார்? *"கடவுள் நம்மிடம் அடிக்கடி வருகிறார், ஆனால் பெரும்பாலும் அந்த நேரங்களில் நாம் வீட்டில் இருப்பதில்லை"* என்கிறது
ஃபிரான்ஸ் நாட்டுப் பழமொழி ஒன்று.
*༺༻*
கடவுள் எப்படிப்பட்ட இயல்பு கொண்டவர் தெரியுமா? *"மரத்தடியில் ஆளில்லாத போது தான், ஆண்டவன் தேங்காயை விழச் செய்கிறான்”* என்கிறது ஓர் அரேபியப்
பழமொழி.
*༺༻*
*"கடவுள் தம்மை நோக்கி வருபவனிடம் தாமே செல்கிறார்"* எனத்
தெளிவுபடுத்துகின்றது ஒரு ரஷ்ய நாட்டுப் பழமொழி.

மனிதத்தேனீயின் தேன்துளி


Tuesday 26 November 2019

மனிதத்தேனீ சிறப்புரையாற்ற உள்ள நிகழ்ச்சி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசு வாட்ஸ் அப்
குறுஞ்செய்தி & வாட்ஸ் அப் சேவையில் 11வது ஆண்டு.
26.11.2019
செவ்வாய்கிழமை
 
👉இன்று இந்திய அரசியலமைப்பு நாள்.
இந்நாள், 2015
நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாகவும், கொண்டாடப்படுகிறது.

கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று.
🎶கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ?..
அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைதது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால்
இரண்டு வருடம் ஜெயில் உண்டு.
கேள்வி பிறந்தது அன்று...
வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா?
மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
ஞானம் பிறந்து வானில் பறந்து
மீண்டு வந்தான் உயிர் கொண்டு
கேள்வி பிறந்தது அன்று..
குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும்
குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுவையாகும்
படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடமை
நல்ல மனமும் பிள்ளை குணமும் நமது விட்டின் தனி உடைமை
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
படம்: பச்சைவிளக்கு

🙏🏻கண்ணன்சேகர்
9894976159.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இந்திய அரசியல் சாசனம் விதைக்கப்பட்ட எழுபதாம் ஆண்டு இன்று....
அரசியல் சாசனம்.. நாட்டின் உயிர் நாடி..
நமக்கான சொந்த வீடு.. ஒவ்வொரு அங்குலத்தில் என்னென்ன அம்சங்கள் வேண்டும் என நாம் பார்த்து பார்த்துகட்டிய வீடு.
வாழ்வற்கு அதன் உள்ளே புகும்முன் எவ்வளவு பரவசமான நிலையை உணருவோம். அதைவிட கோடி மடங்கு நிகரானது, நம்மை நாமே ஆள்வதற்கு இந்திய அரசியல் சாசன சட்டத்தை தயாரித்து முடித்த தருணம்.
உலக நாடுகளில் அரசியல் சாசனத்திலேயே நம்முடையதுதான் மிக நீண்டது என்ற பெருமை உடையது. 12 உள்ளடக்கங்கள்..448 பிரிவுகள், 103 மூன்று சட்டத்திருத்தங்கள் என பல சிறப்புகளை கொண்டது.
இறையாண்மை, சமதர்தம், மதச்சார்பு, சுதத்திரம், ஜனநாயகம் போன்ற வர்த்தைகளின் பீடத்தின்மேல் எழுப்பப்பட்டதுதான் அரசியல் சாசனம்.
நம்மிலிருந்து பிரிந்த பாகிஸ்தானும் அரசியல் சாசனம் எழுதியது. ஆனால் பல முறை நொறுங்கிப்போயிற்று. ஜனநாயக ஆட்சிகளுக்கும் ராணுவ ஆட்சிகளுக்கு இடையே இன்னமும் அந்நாடு கட்டிப்புரள்கிறது
ஆனால் நம்முடைய அரசியல் சாசனம் இன்னமும் உயிர்ப்புடனேயே உள்ளது. மக்கள் ஆட்சியை காக்கிறது. காரணம், நம்நாட்டில் அரசியல் சாசனத்தை எழுப்பியவர்களுக்கு இருந்த அறிவுத்திறன், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் உள்ள அழுத்தமான பிடிப்பு, தொலைநோக்கு பார்வை. ஆகியவையே.
தமிழகத்தை சேர்ந்த அல்லாடி கிருஷ்ணமாச்சாரி ஐயர், என் கோபாலசாமி ஐயங்கார் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் ஏழு பேர் கொண்ட குழு சாசனத்தை தயாரிக்க ஆரம்பித்தது. குழுவிற்கே தலைமை என்ற பொறுப்பை ஏற்றவர் சட்டமேதை பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கார். குழுவில் இருந்த சில ஒத்துழைப்பு தராமல் பல காரணங்களை சொல்லி தாமதப்படுத்தியபோது அம்பேத்கார் ஓயாமல் உழைத்த உழைப்பு அன்றைய அரசியல் ஆச்சர்யம்
பல நாட்டு அரசியல் சாசனைங்களை அலசி ஆராய்ந்து எவையெல்லாம் நமக்கு அவசியம் என்று சுமார் மூன்றாண்டுகள் பாடுபட்டு ஷரத்துக்களை உருவாக்கியது அரசியல் சாசன குழு.
அப்படிப்பட்ட சாசனம் முழுமை பெற்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நாள் நவம்பர் 26, 1949. சரியாக இன்றோடு 70 ஆண்டுகள் ஆகின்றன.
அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டிய தலைவன், குடியரசு தலைவன். மத்திய அமைச்சரவை, அதற்கு தலைமை ஏற்கும் பிரதமர், ஆளுநர்கள், மாநில ஆட்சிகள். நீதிம்ன்றங்கள் என அனைத்துக்குமே உயிர் நாடி இந்த அரசியல் சாசனம் தரும் அதிகாரம்தான்.
சாசனம் படைக்கப்பட்டபின் அதில் ஜனநாயத்தின் விருப்பத்தின் பேரில் பல திருத்தங்களை இந்தியா கண்டுள்ளது. பட்டியலினத்தவர்க்கு இட ஒதுக்கீடு மொழிகள் அடிப்படையில் மாநிலங்கள் சீரமைப்பு , கட்சித்தாவல் தடை, வாக்குரிமை வயது 21 லிருந்து 18 ஆக குறைப்பு என நிறைய உண்டு.
அதே நேரத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க இந்திரா காந்தி 1975ல் மிசாவுக்காக அரசியல் சாசன சட்டத்திருத்தத்தில் கைவைத்த கருப்பு அத்தியாயங்களும் உண்டு.
1949ல் அன்றைய அரசிய்ல் சாசன நிர்ணய சபை உறுப்பினர்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர் ஒவ்வொருவரும், புதிதாய் தயாரிக்கப்பட்ட அரசியல் சாசன புத்தகத்தில் தனித்தனியாய் கையெழுத்திட் டார்கள்.
பிரேம் பெஹாரி நரைன் என்ற ஓவியரின் கைவண் ணத்தில் வரிக்கு வரி உருவாக்கப்பட்ட கைப்பிரதி புத்தகம் ஆது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் என இரு மொழி வடிவங்களில் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள். அவை இன்றும் நாடாளுமன்ற மைய நூலகத்தில் அது மிகுந்த பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளன.சில ஆண்டுகள் கழித்துதான் அரசியல் சாசனமே முழுமையாய் அச்சில் வடிக்கப்பட்டது.
இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன் உள்ளிட்ட எந்த மதத்தை சேர்ந்தவனாகட்டும். இந்தியன் என்று வந்துவிட்டால் ஒவ்வொருவருக்கும் அரசியல் சாசன சட்டம்தான் முதல் புனித நூல்.
இந்த அரசியல் சாசனம் அமுலுக்கு வந்த 1950 ஜனவரி 26ந்தேதியைத்தான் நாம் இந்தியாவின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம்.
இந்திய அரசியல் சாசன சட்டம். #HBD_70
நன்றி எழுமலை வெங்கடேசன்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மனிதர்கள் எல்லோரும் மோசமானவர்கள் இல்லை. சற்று வித்தியாசமாக உள்ளார்கள். இதைப் புரிந்து கொண்டால் மனிதர்களுக்குள் விரோதம் வராது.
🎈உங்களை நீங்களே நேசியுங்கள். தன்னை நேசிக்காத மனிதனால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியாது.
🎈குழப்பமான இடத்தில் தெளிவாக பேசுங்கள். பிரச்சினையான நேரத்தில் தீர்வு பற்றி பேசுங்கள். வருத்தமான சூழலில் ஆறுதலாய் பேசுங்கள். மன அழுத்தம் உள்ளவர்களிடம் உற்சாகப் படுத்தி பேசுங்கள்.
🎈உங்கள் வாழ்வில் எதை சரி செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களோ அதைப் பொறுத்துக் கொள்ள பழகி விடுங்கள்.
🎈அடுத்தவர்கள் வாழ்வதைப் பார்க்காதீர்கள். நாம் எப்படி வாழ வேண்டும் என்று பாருங்கள்.
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*மனம் என்னும் மாயாவி!*
*எப்போதும் தனக்கு சாதகமாகவே....*
*தீர்ப்புச் சொல்கிறது.*
*அப்பாவி என்று தன்னைத் தானே....*
*சொல்லிக்கொள்ளும் மனது...*
*தனக்கு மட்டுமே துயரம்...*
*தன்னை மட்டும் யாரும் நினைப்பதில்லை...*
*இப்படி சதா சர்வ காலமும் தடை போடுகிறது...*
*மண்டியிடுவதும்...*
*சண்டையிடுவதும்...*
*சலிக்காமல் செய்த படி...* *சர்வாதிகாரியாகிறது...*
*தூரமாகவும்...*
*அருகாகவும் மாற்றி மாற்றி...*
*உணர வைத்து ..*
*தன்னை மாயாவி என புகழ்ந்து கொள்கிறது...*
*இத்தனை இம்சைக்கும் நடுவில்...*
*இதயத்தில் ரோஜாக்களையும் நட்டு வைக்கிறது...*
*எது நீ என கேட்டால் மட்டும்....*
*எட்ட நின்று கேலி செய்து சிரிக்கிறது...*
*அடக்கி ஆள்வதுமியலவில்லை!*
*அடங்கிப் போதலும் சாத்தியமில்லை.*
*நண்பனாய்...*
*எதிரியாய்...*
*எப்போதும் என் மனது...*