Friday 30 June 2017

கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


சுப்பிரமணிய சிவா நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் இலவச மாலை நேர கல்வி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் - பரிசுகள் வழங்கும் விழா







Dinamani Paper 30.06.2017 Page 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)
















விகடன் பொக்கிஷம்
கழுகார் பதில்கள்!
வெற்றியையும் தோல்வியையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?
எம்.ஜி.ஆர் இதுபற்றிச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்கள் அவருக்கு வெள்ளிவிழா கண்டன. அப்போது நிருபர் ஒருவர், 'இதனை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., 'என்னைப் போன்றவர்களுக்கு வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். வெற்றியைக் கண்டு கொஞ்ச நேரமாவது அசந்து நின்றுவிட்டோமானால், பெரிய தோல்வி ஒன்று பின்னால் காத்திருக்கிறது என்று பொருள். அதேபோல், தோல்வியைக் கண்டு மலைத்து நின்றுவிட்டோமானால், எனக்காகக் காத்திருக்கும் வெற்றியையும் இழந்துவிடுவேன். வெற்றியையும் தோல்வியையும் உருவாக்கிக்கொள்பவன் நான் அல்ல. எனவே, அதில் பங்கு கேட்கவும் எனக்கு உரிமை இல்லை’ என்று சொன்னார். இந்த வாத்தியார் பாடம் போதுமே!

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா*
என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது.
அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... :
*1. எது இதமானது ?*
தர்மம்.
*2. நஞ்சு எது ?*
பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.
*3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?*
பற்றுதல்.
*4. கள்வர்கள் யார் ?*
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.
*5. எதிரி யார் ?*
சோம்பல்.
*6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?*
இறப்புக்கு.
*7. குருடனை விட குருடன் யார் ?*
ஆசைகள் அதிகம் உள்ளவன்.
*8. சூரன் யார் ?*
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.
*9.மதிப்புக்கு மூலம் எது ?*
எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.
*10. எது துக்கம் ?*
மன நிறைவு இல்லாமல் இருப்பது.
*11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?*
குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.
*12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?*
இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.
*13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?*
நல்லவர்கள்.
*14. எது சுகமானது ?*
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.
*15. எது இன்பம் தரும் ?*
நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.
*16. எது மரணத்துக்கு இணையானது ?*
அசட்டுத்தனம்.
*17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?*
காலமறிந்து செய்யும் உதவி.
*18. இறக்கும் வரை உறுத்துவது எது ?*
ரகசியமாகச் செய்த பாவம்.
*19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?*
துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !
*20. சாது என்பவர் யார் ?*
ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.
*21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?*
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.
*22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?*
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.
*23. செவிடன் யார் ?*
நல்லதைக்
கேட்காதவன்.
*24. ஊமை யார் ?*
சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.
*25. நண்பன் யார் ?*
பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.
*26. யாரை விபத்துகள் அணுகாது ?*
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்
அன்புடன்" பகிரவும் "அனைவரும் உயர.

மனிதத்தேனீயின் தேன்துளி


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா


Thursday 29 June 2017

டி.வி.ராமசுப்பையர் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


கவிஞானி வாலி நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எழுதத் தொடங்கும் போது " உ" என இடுவது தமிழர்களின் பெரு வழக்காக இருந்து கொண்டிருக்கிறது. தமிழில் உ என்பதைப் பிள்ளையார் சுழி எனப் பலரும் தவறாகக் கருதுகிறார்கள். உண்மை அதுவல்ல.
தமிழ் மரபில் உ என்பது உலகம் என்பதன் சுருக்கக் குறியீடு. தமிழர்கள் தமது சிந்தனை மரபை உலகளாவிய கண்ணோட்டத்தில் தான் பார்த்தனர். உலகியல் வழக்கோடும் உலக மேன்மைக்காகவும் பரந்த கண்ணோட்டத்தோடு தமது சிந்தனை மரபை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால் தான் தமிழில் தோன்றிய பெரும்பாலான இலக்கியங்கள் உலகம் என்னும் சொல்லை முதலாகக் கொண்டு அமைந்துள்ளன. திருக்குறளில் கூட, உலகு என்னும் சொல் முடிகிற முதல் குறளைக் கொண்டிருக்கிறது. நிலமும் பொழுதும் முதல் பொருள் என்கிறது தொல்காப்பியம்.
இப்பண்பாட்டியல் செய்கையைப் பார்ப்பனியம் பிள்ளையார் சுழியாகப் பறைசாற்றியது. அதாவது, பிள்ளையாரை வணங்கிய பின்பு காரியம் செய் என்னும் பார்ப்பனிய வழிபாட்டு மரபோடு நமது தமிழர் எழுத்தியல் பண்பாட்டு மரபையும் இணைத்து விட்டார்கள்.
ஆகவே , உ என்பது சமயக் குறியோ பிள்ளையார் சுழியோ அல்ல, உலகம் என்பதன் சுருங்கிய குறி. இதுவே தமிழரின் எழுத்துப் பண்பாட்டியலின் குறி என்பதைப் பரவலாக்கம் செய்திட வேண்டும்.
அக்காலத்தில் ஓலைச் சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினார்கள். தூவல்(பேனா), காகிதம் இல்லாத காலம் அது. அதற்கு ஏற்றாற்போல் ஓலை பக்குவப் படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். எழுத்தாணியும் கூர்மையுள்ளதாக இருக்க வேண்டும். இவை இரண்டும் சரியில்லை என்றால் எழுத முடியாது. பக்குவமற்ற ஓலை முறிந்துவிடும். கூர்மையில்லாத எழுத்தாணி ஓலையில் தகுந்தாற்போல் கீறலை விழச் செய்யாது. எனவே வளைவுக் கோடும், நேர்க்கோடும் சரியாக எழுத, ஓலையும் எழுத்தாணியும் தகுதியுள்ளதாக இருக்கிறதா? என்று முதலில் சோதிக்க வேண்டியது எழுத்தாளரின் கடமையன்றோ? அதன்படி ஓலையின் முகப்பில் ஒரு வளைவு கோடும், ஒரு நேர்க்கோடும் இழுத்து, ‘உ’ என்ற வடிவத்தை உண்டாக்குகிறார்.
இன்று நாம் எழுத ஓலைச் சுவடியைப் பயன்படுத்த வில்லையென்றாலும், அன்றுபோல் இன்றும் தமிழர்களாகிய நாம், இந்த உ இடுவது வழக்கத்தில் இருந்த வருகிறது.
நன்றி தி௫ ஏ ஆா் லெட்சுமணன்

மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

#டவுட் தனபால்
நிறைய பேருக்கு இந்த நிகழ்ச்சிய பத்தி முழுசா தெரிந்திருக்க வாய்ப்பில்ல !!! ஹிந்தில பல வருஷமா ஓடிட்டு இருக்குர நிகழ்ச்சி இப்போ தமிழ்நாட்டுக்கு வந்திருக்கு !!! 100 நாள்னு சொன்னாலும் அதோட சூட்டிங்க மிஞ்சி போனா பத்தே நாள்ல முடிச்சிடுவாங்க, அத அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர கணக்குல பிரிச்சு 100 நாளைக்கு ஒளிபரப்புவாங்க !!! என்னன்ன நடக்கனும் பேசனும்னு எல்லாமே முன்னடியே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு தான் சூட்டிங் தொடங்குமே !!!
ஒவ்வொருத்தரா மக்கள் ஓட்டு போட்டு வெளியேத்திட்டு இருப்பாங்க , ஆனா உண்மையிலேயே யாரு வெளியேரனும்னு முடிவு பண்ணிதான் அதுக்கு ஏத்த மாதிரி காட்சிகள் அமைக்க பட்டிருக்கும் !!! நிறைய சண்டைகள் , மோதல்கள், விவாதம், சச்சரவில் தொடங்கி காதல், கள்ளகாதல், பாலியல் தொல்லைகள் உட்பட நடப்பதுபோல் காட்சிகள் அரங்கேறும் !!! மக்கள் அதை கண்டு கொதித்தெழுந்து தவறு செய்தவனுக்கு எதிராக ஓட்டு அளித்து வெளியேற்றும்படி நடைபெறும் !!! சிலர் தாங்கலாகவே உள்ளே இருக்க முடியாமல் கோபத்தில் வெளியேருவதுபோல் வைத்து TRP ஏற்றுவார்கள் !!!
இளைஞர்களை கவர வீட்டினுள் கவர்ச்சியான அரைகுறை ஆடைகளையே அணிந்து வருவார்கள் நடிகைகள் !!! ஊரெங்கிலும் இதில் நடைபெறும் சம்பவங்களையே பேசுமாறு வைப்பார்கள் !!! இறுதியில் அவர்கள் முடிவு செய்தபடியே ஒருவரை மக்களே தேர்ந்தெடுத்ததுபோல் பரிசு வழங்கி அடுத்த சீசனுக்கான வேலைகள் தொடங்கி விடும் !!! இது எல்லாம் தானாக நடப்பதாக நம்பி இதுவரை அக்கம் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என பார்த்து வந்த மக்கள் , இனி இந்த வீட்டில் என்ன நடக்கிறது என பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் , அடுத்த சீசனுக்காக ஏங்கவும் செய்வார்கள் !!!
அடுத்தவர் வீட்டில் நடப்பதை மிகுந்த அக்கறை கொண்டு எட்டி பார்க்கும் நம் மன ஓட்டமே இந்த நிகழ்ச்சியின் உயிர் நாடி !!! அதை வைத்தே கலாச்சாரத்தை அழித்து காசு பார்க்கும் ஒரு கும்பல் !!! அதை கிண்டல் செய்கிரேன் என மீம்ஸ் போட்டு மக்களிடையே இன்னும் அதிகமாக பகிர வைக்கும் சில இளைஞர்கள் !!! முடிந்தால் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டு மக்களுக்கு புரிய வையுங்கள் !!! இந்த முறையாவது மீடியா TRP பசிக்கு பலி ஆகாமல் சாமர்த்தியமாக விழித்து கொண்டு மக்கள் பிரச்சனையில் தலையிடு தமிழா !!!🙏🙏

Wednesday 28 June 2017

காமராஜர் விழா அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற ஓர் அழகான கதை !
கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.
பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது .
ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது .
கடலை எப்படி வற்றவைப்பது?
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.
இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின.
இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.
அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.
மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.
உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.
உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.
நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.
முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின .
அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார்.
அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.
அன்பு நண்பர்களே .
எல்லையில்லா ஆற்றல் பெற்றவர்களே இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாப் பருவம்.
பருவத்தே பயிர் செய் என்பார்களே. இளமையில் வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும்.
எனவே விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள். வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உழைக்காத நேரம்தான் ராகு காலம். திட்டமிடுங்கள். ஒவ்வொன்றையும் திட்டமிட்டு உழைத்திடுங்கள்.

29ஆம் ஆண்டு கல்வித் திருவிழா


மனிதத்தேனீயின் தேன்துளி


நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி


விவேகானந்தர் நினைவு தினம் அழைப்பிதழ்


Tuesday 27 June 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கடவுள் வந்தார்...!
"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..
அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..
முதல் மனிதன் :
“எனக்கு கணக்கிலடங்கா காசும்,
பெரிய பிஸினஸும் வேண்டும்..!”
இரண்டாம் மனிதன்:
“நான் உலகில் சிறந்தோங்கி
பெரிய பதவியை அடைய வேண்டும்..!”
மூன்றாம் மனிதன் :
“உலப்புகழ் பெற்ற நடிகர் போல்
மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”
நான்காம் மனுஷி:
“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..!
உலகமே அதில் மயங்க வேண்டும்..!”
இப்படி..
இன்னும் ஐந்து பேரும்
தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!
கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!
பத்தாவது மனிதன் கேட்டான்:
“உலகத்தில்
ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும்
மன நிறைவோடும் வாழ முடியுமோ,
அந்த நிலை எனக்கு வேண்டும்..!”
ஒன்பது பேரும்
அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!
“ *மனநிம்மதி, மன நிறைவு*…
நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..?
விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?”
கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :
“நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!
நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு,
பத்தாவது மனிதனைப் பார்த்து :
"நீ இரு..!
நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..
சிறிது நேரம் கழித்து வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!
இப்போது,
அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!
கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்;
என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..!
துடித்தது..!
அவர்கள் விரும்பியது எதுவோ
அது கையில் கிடைத்த பின்னும்,
இன்னும் எதுவுமே கிடைக்காத
அந்த
பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!
நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!
தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..!
அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே,
அந்த இடத்திலேயே,
அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!
பத்தாவது மனிதன்,
கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..!
கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே
அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!
நாம்
*பத்தாவது* மனிதனா..?
இல்லை
*பத்தாது* என்கிற மனிதனா..?
முடிவு எடுங்கள்..
*எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.*
இனிமையான எண்ணங்களுடன்

மனிதத்தேனீயின் தேன்துளி


தினத்தந்தி பக்கம் 22 25-06-2017


Monday 26 June 2017

24.06.2017 மக்கள்குரல் இணையதள தொலைக்காட்சியில் மனிதத்தேனீ கண்ணதாசனின் 91...

Malai Murasu Paper 25.06.2017 page 5


Makkal Kurual -TRINITY MIRROR - Paper 25.06.2017 Page 6


Makkal Kurual - Paper 25.06.2017 Page 11


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எனக்கு வயிறு எரிகின்றது.
தமிழ்நாட்டில் எத்தனை பேருக்குத் தமிழில் தவறில்லாமல் எழுதத் தெரியும். இலக்கணம் தெரியுமா. இலக்கியம் தெரியுமா. ஐம்பெரும் காப்பியங்களின் பெயராவது தெரியுமா. .குறைந்தது 20 திருக்குறள் தெரியுமா. .தமிழைப் பற்றி என்ன தெரியும்.
நாளை ஏழரைக் கோடிப் பேருக்கும் மும்பையில் வேலை என்றால் ஓடி விடுவார்கள். வயிறு பற்றி எரிகிறது. ஒன்றுமே தெரியாமல் தமிழ் தமிழ் என்று கூவிக் கொண்டு. என்னால் ஒரு 2000 வட இந்தியர்கள் தமிழ் கற்றிருக்கின்றார்கள். நன்றாகப் பேசுவார்கள்.
கோவில்களைப் பற்றித் தெரியுமா. அவற்றின் ரகசியங்கள் தெரியுமா. மொழிப் பற்று இருக்கிறதா.
அதெல்லாம் விடுங்கள். தமிழில் 10 செய்யுள் மனப் பாடமாகத் தெரியுமா.
உண்மை நிலை தமிழ்நாட்டில் தமிழ் வாத்தியாருக்கு மதிப்பே இல்லை. திரைப்படங்களில் அவரைக் கேலி செய்கின்றார்கள். .
தமிழை வளருங்கள். அழிக்காதீர்கள்.

மனிதத்தேனீயின் தேன்துளி


ரமலான் வாழ்த்து


மனிதத்தேனீயின் தேன்துளி


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா


Saturday 24 June 2017

Makkal Kurual - Paper 24.06.2017 Page 4


Malai Murasu Paper 24.06.2017 page 4


கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா





முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கண்ணதாசன்-காலங்களில் அவன் வசந்தம்
கண்ணதாசன்
தமிழ் அன்னையின்
ஆண் வடிவம்
இன விடுதலையை
பாடியவன் பாரதிதாசன்
மன விடுதலையை
பாடியவன் கண்ணதாசன்
திரையிசைச்சித்தன்
பாடல்கள் மூலம்
தத்துவங்களை போதித்த
தமிழ்ப்புத்தன்
நாம் காற்றை சுவாசித்து
உயிர் வாழ்கிறோம்
காற்று கண்ணதாசனின்
கவிதைளை சுவாசித்து
உயிர் வாழ்கிறது
நீ
வார்த்தைகளிலிருந்து
கவிதை படைக்கவில்லை
வாழ்க்கையிலிருந்து
கவிதை படைத்தவன்
நீ
கவிமருத்துவன்
மக்களின் மனநோய்க்கு
உன் பாடல்களே மருந்து
உன்
கவிதைகளுக்கு
வாசனையுண்டு
பாதிமண்வாசனை
மீதி பெண் வாசனை
காலதேவனின் கண்கள்
உன்
கவிதைகள்
(கண்ணதாசன் பிறந்தநாள் விழாவில்
வாசித்த கவிதை)

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

📚📚
சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான்.அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார்.
அவனை அசைத்துப் பார்த்தார்.அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார்.
மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார்.குதிரைமீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்த குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது.
திகைத்துப் போனார் சாது. அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும்,இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு.
குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில தினங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்க போனார்.
அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான்.
சாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார்.திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான்.
சாது மெல்லச் சிரித்தார்.
"சொல்லாதே!" என்றார்.
திருடன் மிரண்டான்."எது?
என்ன?" என்று சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான்.
சாது சொன்னார்.
."குதிரையை நீயே வைத்துக்கொள்.
ஆனால்,நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே.
மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால்கூட உதவ முன் வரமாட்டார்கள்.
நான் இந்த குதிரையை இழந்ததால் எனக்கு ஏற்படும் இழப்பை பற்றி நான் கவலை படவில்லை.
காரணம், சில தினங்கள் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை நான் வாங்கி விட முடியும்.
தீயவன் நீ ஒருவன் தவறு செய்ய, நல்லவர்கள் பலருக்கு காலா காலத்துக்கும் உதவி கிடைக்காமல் உயிர் போககூடும்.
புரிகிறதா?"...
திருடனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
💎
குறுகிய லாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளைச் சிதைத்து விட கூடாது.
நன்றி தி௫ ஏ ஆா் லெட்சுமணன்

மனிதத்தேனீயின் தேன்துளி


மக்கள் குரல் இணையதள தொலைக்காட்சியில் மனிதத்தேனீ


Friday 23 June 2017

திருநகரில் கல்வித் திருவிழா





முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌼" ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம் . அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.. 
🌼 " அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே .
🌼 " கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது . 
🌼" கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன் , கிளியை பார்க்கும் வரை. . 
🌼 " அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா ? என்றது . 
🌼 " காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன் ,ஆனால் ஒரு மயிலை பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ? என்றது. 
🌼 " உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருக காட்சி சாலை சென்று மயிலை பார்க்க , அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் மயிலை பார்க்க காத்திருக்க , காகம் நினைத்தது ..ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி என்று . 
🌼 " அழகு மயிலே , உன்னை காண இவ்வளவு பேர் .. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிகொள்கிறார்கள் . 
🌼 " என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் , என்றது . 
🌼 " மயில் சொன்னது. அன்பு காகமே , நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று . 
🌼 " ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது . 
🌼 " இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில் , காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை .. 
🌼 " எனவே நான் யோசித்தது , நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே , என்றது . 
🌼" இதுதான் நமது பிரச்சினையும் ...
🌼" நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம் . 
🌼 " நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை . 
🌼 " அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை . 
🌼 " இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது . 
🌼 " ஒப்பீடுகளால் யாதொரு பயனும் இல்லை . 
🌼 " உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள் . 
🌼"உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது
🌼 "இறைவனின் படைப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றும் உயர்ந்தவை அவனிடத்தில்.💐