Saturday 28 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.*
"இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.!"
மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.
இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும் இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.
*ஒரு ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம், ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’*
டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப் பட்டிருந்தது இந்த வாசகம்... இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு.
அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.
*ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,*
*மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?*
வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில்தான் வெற்றி இருக்கிறது.
டீக்கடை வரியும் ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தினைத்தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம்தான் அதில் வித்தியாசம்.
*சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.*
*நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல் அதை செம்மைபடுத்தி பேசிப்பாருங்கள் வெற்றி நிச்சயம்.*
ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...
‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.
படித்ததில் பிடித்தது

மாலைமுரசு 28.04.2018 பக்கம் 4


மக்கள்குரல் 28.04.2018 பக்கம் 7


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உங்கள் மனம் உணர்வு பூர்வமாக இன்பத்தை அனுபவிக்க: உதவி தேவைப் படுபவர்களுக்கு உதவி செய்தல் நல்லது. இந்த நிமிசத்தில் வாழுதல். கடந்த கால கவலைகளையும் எதிர் கால பயத்தையும் ஒதுக்கி வைப்பது நல்லது.
மகிழ்ச்சி உங்களுக்குள் தான் இருக்கிறது. இருப்பவற்றுக்கு அக மகிழ்ந்து நன்றி கூறுங்கள். உங்கள் அகம் உணர்வு பூர்வமாக இன்பத்தை அனுபவிக்கும். நீங்கள் எதற்கு நன்றி கூறினீர்களோ அது மேலும் மேலும் அதிகரிக்கும்.
செயல் திறன் எப்போதும் பேரார்வம் மூலம் மட்டுமே வெளிப் படுமே தவிர மன அழுத்தத்தால் அல்ல . எப்போதும் உள்ளத்தின் உணர்ச்சியோடு செயலாற்றுங்கள். விரும்புவதை செயலாற்றுங்கள். செயலாற்றுவதை விரும்புங்கள். மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.
கிடைக்கவில்லையே என்று ஏங்கி அழுவது ஏக்கம். கிடைக்கவில்லையே என்று ஓங்கி உழைப்பது தன்னம்பிக்கை. முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை என்பது ஊக்கம்.
உலகம் நம்மிடமிருந்து தான் ஆரம்பமாகிறது. உலகத்தின் மையமாக நம்மைப் பொறுத்த வரை நாம் தான் இருக்கிறோம். எனவே எதையும் நம்மிடமிருந்து ஆரம்பிப்பது தான் நல்லது. நாம் மாறினால் உலகமும் மாறி விடும்.
எல்லாம் நன்மைக்கே
வாழ்க வளமுடன்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மோர் அமுதம்:
இந்த பதிவை படிக்க ஆகும் நேரம்: 3 - 5 நிமிடங்கள்.
உங்களால் நேரம் ஒதுக்கி படிக்க முடிந்தால் படியுங்கள். விருப்பப்பட்டால் உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்.
தெரிந்ததை சொல்லுங்கள் என்னும் மொழிக்கேற்ப பகிரப்பட்ட பதிவு இது.
தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம்.
‘இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்’ என இதை வர்ணிக்கிறது ஆயுர்வேதம்.
அன்றைய காலங்களில் வீடுகளில் வெயிலில் களைத்து வருபவர்களுக்கும் இல்லத்தினருக்கும் விருந்தினர்களுக்கும் அன்புடன் மோர் தருவது வழக்கம்.
இப்போது குளிர்பானங்கள் அருந்துவதே நாகரிகம் என்று மோர் அருந்தும் வழக்கம் குறைந்து விட்டது.
எத்தனை வண்ணங்களில் குளிர்பானங்கள் சந்தையில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா?
எந்தப் பக்க விளைவுகளும் தராத, அதிக நன்மைகள் உடலிற்கு வழங்கவல்ல மோரினால் கிடைக்கும்
மோரின் நன்மைகள்:
கோடையின் உஷ்ணத்தைத் தணிக்கவும் நோய் நொடிகளின்றி வாழவும் மோரைப் பருகுவோம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
மோரினால் கிட்டும் நன்மைகள்:
1. தயிரை விடச் சிறந்தது மோர். எளிதில் ஜீரணமாகக் கூடியது.
2.உடல் எடையைக் குறைக்கவல்லது, உணவு உண்ட பின் ஒரு குவளை நீர்மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.
3. பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப்படுத்தவும் வயிற்றுவலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.
4.மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து.
5. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.
6. மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும்.
7. வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான்.
8. நீர்க்கடுப்பைப் போக்கும் அருமருந்து, ரத்தசோகைக்கும் மோர் நல்லது!
9. நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு!
10. பால், மோ‌ர், பழ‌ச்சாறுக‌ள் அ‌ளி‌ப்பது குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் வள‌ர்‌ச்‌சி‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.
11. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு இரண்டு விதங்கள்: ஒன்று சாதாரணமானது, மற்றது கிருமியால் ஏற்படுவது.
12. வ‌யி‌ற்று‌ப் போ‌க்கு ஆகு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ஒரு நாளைக்கு 4 முறை மோர் கொடுக்கலாம்.
மோரை அ‌ப்படியே அ‌ளி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌க்‌கு‌ம் எ‌ன்று பய‌ப்படு‌ம் தா‌ய்மா‌ர்க‌ள், ‌சி‌றிய வாண‌லி‌யி‌ல் த‌யிரை லேசாக கொ‌தி‌க்க வை‌த்து ‌சி‌றிது ம‌ஞ்ச‌ள் தூ‌ள் கல‌ந்து சாத‌த்‌தி‌ல் ‌பிசை‌ந்து கொடு‌த்து வரலா‌ம்.
13.காமாலை நோயைச் சாந்தப்படுத்தும். எந்த விதமான பேதியையும் கட்டுப்படுத்தும்.
14.எளிதில் செய்து விடக் கூடிய மோரைக் குடும்பத்திலுள்ள அனைவரும் பருகிப் பயன் பெற வேண்டும்.
சரும‌த்‌தி‌ற்கு உக‌ந்த மோ‌ர்:
1. முக‌த்‌தி‌ல் த‌யி‌ர், பா‌ல் ஏடு தே‌ய்‌த்து வருவது தெ‌ரியு‌ம். சரும‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌நோ‌ய்களு‌க்கு மோ‌ர் ‌சிற‌ந்த மரு‌ந்தாக உ‌ள்ளது.
2. சரும‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தியை மோ‌ரி‌ல் நனை‌த்த து‌ணியை‌க் க‌ட்டு‌ப் போ‌ட்டு வருவத‌ன் மூல‌ம் சரும பா‌தி‌ப்பு ‌விரை‌வி‌ல் குணமடைவதை‌க் காணலா‌ம்.
3. தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
குறிப்புகள்:
வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்குத்‌ தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.
கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்.
ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது.
நீர் மோர் செய்யும் முறை:
தேவையானவை:
தயிர் – 1/2 கப்
தண்ணீர் – 1 ½ கப்
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)
மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு (2 கப் மோருக்கு. காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.)
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்- சிறிதளவு
வெந்தயம்- 4 (விரும்புவர்கள் சேர்க்கலாம்)
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும்.
தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய், பெருங்காயம், தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
சுவையான இந்த நீர்மோரை டம்ளரில் ஊற்றிப் பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
குறிப்பு: தயிர் மத்து இல்லாதவர்கள், வேறென்ன செய்ய ?
மிக்சியில் தயிரை இட்டு ஒரேயடியாக ஒட்டாமல் மூன்று முதல் ஐந்து வினாடிகள் விட்டு விட்டு ஒரு நிமிடம் வரை ஒட்டினால் மோர் தயார்.
மோர்க் குழம்பு செய்முறை:
தேங்காய் துருவல் - 1 1/2 மேசை கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
மேலே கூறியவற்றை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரிசி - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
இவை இரண்டையும் சிறிது நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அவித்த சேப்பங் கிழங்கு, அவித்த உருளைக் கிழங்கு, சுரைக் காய், வெண் பூசணி போன்ற நீர்க் காய்களில் ஏதேனும் ஒன்று எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை சிறிது போட்டு தாளிக்கவும்.
பின்பு அரைத்த விழுது, காய் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு, அரைத்த அரிசி, கடலை பருப்பு மாவு, உப்பு, மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி, மல்லித்தூள் 2 1/2 தேக்கரண்டி, சேர்த்து கொதித்ததும், மோர் 2 கப் சேர்த்து, மல்லித் தழை தூவி இறக்கவும்.
பி.கு: குழம்பு வைத்த பிறகு கடைசியில் தாளித்தால் மிகச் சுவையுடன் இருக்கும்.
220 மில்லி மோரின் கலோரி அட்டவணை:
1) கலோரீஸ்: 110
2) கொழுப்பிலிருந்து கிடைக்கும் கலோரீஸ்: 20
3) கொழுப்பு: 2.5 கிராம்
3.1) நிறைவுற்ற கொழுப்பு: 1.5 கிராம்
3.2) சிதையும் கொழுப்பு: 0 கிராம்
4) சிதையாக் கொழுப்பு: 10 மில்லி கிராம்
5) சோடியம்: 260 மில்லி கிராம்
6) கார்போ ஹைட்ரேட்: 13 கிராம்
7) இனிப்பு ( அ ) சீனி: 13 கிராம்
8) புரதம் ( அ ) புரோட்டின்: 9 கிராம்
மற்றும் விட்டமின் எ, விட்டமின் சி, கால்சியம்.
நன்றி திரு லெட்சுமணன்

மாநகா் மதுரையின் மாசி வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் தேரோட்டம்.



தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் நினைவு தினக் கூட்டம்




தினபூமி 28.04.2018 பக்க்ம 8


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வாழ்க்கை வாழ்வதற்கே🤷‍♂
முடி_கழிஞ்சது... நரம்பு வலிச்சது... முகம் பெருசா ஊதிடுச்சு!'' - புற்றுநோயிலிருந்து மீண்ட ஒரு சகோதரியின் கதை..
" 'யாரையும் பார்க்கப் பிடிக்கலை. என் முகத்துல யாரும் முழிக்காதீங்க. என்னை நானே வெறுக்கிறேன்' என்ற என்னுடைய குரல்தான் இந்த வீட்டுச் சுவர் முழுக்க ஒலிச்சுட்டு இருந்துச்சு. என் தோற்றமும் உடல் ஏற்படுத்திய வலியும் என்னைச் சுற்றியுள்ள அன்பானவர்களை அடையாளப்படுத்திச்சு'' எனத் தன்னம்பிக்கை ததும்ப பேசுகிறார் வைதேகி. புற்றுநோயிலிருந்து மீண்டுவந்துள்ள மங்கை அன்பான கணவர், குறும்புக்கார மகள் எனச் சராசரி குடும்பத் தலைவியாக சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்த வைதேகியின் வாழ்க்கை, 2014-ம் ஆண்டில் தடம் மாறியது. வலி மிகுந்த அந்த நாள்களைக் கண்ணெதிரே கொண்டுவருகிறார்.
''நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். படிப்பு முடிஞ்சதும் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. அங்கே என்னோடு வேலை பார்த்தவருடன் அற்புதமான நட்பு உண்டாகி, காதலாக மலர்ந்தது. இரு வீட்டுச் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. அடுத்த வருடமே அழகான தேவதை பிறந்தாள். காலையில் எழுந்து சுறுசுறுப்பாக வீட்டு வேலைகளை முடித்து, குழந்தையைப் பள்ளிக்குக் கிளப்பி, அலுவலகத்துக்கும் செல்லும் பல லட்சம் பெண்களைப் போன்றே என் வாழ்க்கையும் ஓடிட்டிருந்துச்சு. நான் எந்தக் காய்கறியையும் ஒதுக்காமல் சாப்பிடுவேன். ரொம்ப ஹெல்த்தியா இருக்கிறதா நம்பிட்டிருந்தேன். அந்த நம்பிக்கையில் கீறல் விழுந்துச்சு'' என்ற வைதேகி, கனத்த குரலில் தொடர்கிறார்.
''ஒருநாள் என் வலதுபுற கழுத்துல கட்டி மாதிரி இருந்துச்சு. தொண்டையும் பயங்கரமா வலிச்சது. காது, மூக்குத் தொண்டை நிபுணரிடம் காண்பிச்சு, மாத்திரைகளைச் சாப்பிட்டேன். ஒரு துளி வலிகூடக் குறையலை. ஃபேமிலி டாக்டரிடம் போனேன். எஃப்.என்.ஏ.சி பரிசோதனை செய்யச் சொன்னாங்க. அந்தப் பரிசோதனை முடிவில் கேன்சர்னு தெரிஞ்சதும் குடும்பமே நிலைகுலைஞ்சுப் போச்சு. 'lymphoma' என்ற வகை புற்றுநோய் இரண்டாவது கட்டத்தை எட்டியிருந்துச்சு. கீமோதெரபி, ஸ்டெராய்டு, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஊசிகள் என எல்லாமே கொடுத்தாங்க. அந்தச் சிகிச்சைக்கான பக்கவிளைவும் ஏற்பட்டுச்சு. தலைமுடியை கொத்துக் கொத்தாக இழந்தேன். நரம்புகள் பயங்கரமா வலிக்க ஆரம்பிச்சது. வயிறு ரொம்ப பசிக்கும். ஆனால், எதையுமே சாப்பிட முடியாது. நீர்ச்சத்தினால் முகம் ஊதிப்போகும். எடையும் அதிகமாக ஆரம்பிச்சது. கண்ணாடியில் என்னைப் பார்க்கவே பிடிக்கலை. பலமுறை கதறி அழுதிருக்கேன்'' என்றவர், சில நொடி மௌனத்துக்குப் பிறகு தொடர்ந்தார்.
''என்னைவிட அதிகமா என் பொண்ணு உடைஞ்சுட்டா. அப்போ எல்கேஜி படிச்சுட்டிருந்தா. ஸ்கூலில் எல்லாரையும் அடிக்கிறது, யார் பேச்சையும் மதிக்காததுனு அவள் பிஹேவியர் மாறிடுச்சு. ஃபோன் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணினாங்க. அப்போதான் என் பிரச்னையை மிஸ்கிட்ட சொன்னேன். அப்புறம் அவள் மேலே கேர் எடுத்து பார்த்துகிட்டாங்க. 'எங்க அம்மா வலிக்குனு அழறாங்க. அம்மாவைக் கட்டிப்பிடிச்சு நான் தூங்கவே முடியலை. பக்கத்து ரூம்லதான் தூங்கறேன்'னு மனசுல அடக்கி வைச்சிருக்குற எல்லா பாரத்தையும் மிஸ்கிட்டே சொல்லியிருக்கா. நான் மொட்டைத் தலையை மறைச்சுக்க தொப்பி போட்டுக்கிட்டதும் என் பொண்ணுக்குப் பிடிக்கலை. நான் பூ வெச்சுக்க முடியாததால், அவளும் வெச்சுக்க மாட்டா. அந்தக் காலகட்டத்தில் நானும் எல்லாரிடமும் கடினமாவே நடந்துப்பேன். அந்த நேரம் எப்படி ரியாக்ட் பண்றென்னே தெரியலை. என் கணவரும் குடும்பத்தாரும்தான் பார்த்துகிட்டாங்க. எனக்காக, என் கணவரும் மொட்டை போட்டுட்டு வந்தார். எல்லோரின் அன்புக்காகவது நான் சீக்கிரம் மீண்டு வரணும்னு நினைச்சுப்பேன்.
''நாலு மாசம் சிகிச்சையின் வலியை, ஒரு வருஷத்தும் மேலே அனுபவிச்சேன். அப்புறம் புது மனுஷியா வாழ ஆரம்பிச்சேன். சத்தான காய்கறிகளைச் சாப்பிட்டேன். உடம்பை ரொம்பவும் ஹெல்த்தியா பார்த்துகிட்டேன். கேன்சர் வந்துட்டாலே நாம செத்துப் போயிருவோம்னு நினைக்கக் கூடாது. அப்படி நினைச்சுட்டா அந்த வலியிலிருந்து மீண்டுவரவே முடியாது. முக்கியமா, மனக்குழப்பத்தை தவிர்க்கணும். வலி மிகுந்த காலகட்டத்தில் செத்துப்போயிடலாம்னு தோணும். வாழ்ந்து காட்டி மத்தவங்களுக்கு வழிகாட்டியாக இருக்கணும்னு நினைக்கணும். புற்றுநோய் எனக்கு நிறைய பாடங்களைக் கற்றுக்கொடுத்துச்சு. அன்பான நண்பர்களை அடையாளம் காட்டிச்சு. உறவுகளின் நம்பகத்தன்மையை உணரவெச்சது.
வைதேகி
இப்போ என் கூந்தல் நல்லா வளர்ந்துடுச்சு. எல்லோரை மாதிரி இயல்பா வேலைக்குப் போயிட்டு, வீட்டையும் கவனிச்சுக்கிறேன். என் பொண்ணு ரொம்ப சந்தோசமா இருக்கா. மொட்டைத்தலையோடு இருந்த நாள்களில் நான் பூ வைக்காததால் என் பொண்ணு இப்போவரை பூ வெச்சுக்கிறதில்லே. என் மேல இவ்வளவு பாசமா இருக்கும் மகளுக்காகவும் என்னை அதிகமா நேசிக்கும் கணவருக்காகவும் புதுசா வாழத் தொடங்கியிருக்கேன். அதோடு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைக கொடுத்து மனதளவில் திடப்படுத்த கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் செய்யறேன். என் வாழ்க்கை நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்திருக்கு. அதை நாலு பேருக்குக் கற்றுக்கொடுக்கிறேன்.
வாழ்க்கை வாழ்வதற்கே.
நாம நினைச்சால், சாவையும் ஈஸியா கடந்துடலாம்'' எனப் புன்னகைக்கும் வைதேகி முகத்தில் தன்னம்பிக்கையின் சுடர்.👍👏👏👏🌻
http://vaidehivc.blogspot.in/…/my-fight-against-dreadful-di…
நன்றி திரு லெட்சுமணன்

மனிதத்தேனீயின் தேன்துளி


Friday 27 April 2018

மாலைமுரசு 27.04.2018 பக்கம் 4


மதுரைமணி 27.04.2018 பக்கம் 4


உ.வே.சாமிநாதய்யர் நினைவு தினக் கூட்டம் பானர்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏪 வெற்றி வந்தால் பணிவு அவசியம். தோல்வி வந்தால் பொறுமை அவசியம். எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்.
🏪 சொல்ல முடியாமல் மனதில் மறைத்து வைத்திருக்கும் சில விஷயங்களை சொல்லாமல் இருப்பதே எல்லோர்க்கும் நல்லது.
🏪 விழுவதும் எழுவதும் தான் வாழ்க்கை ஏன் வீழ்ந்தோம், எப்படி எழுந்தோம் என உணர்ந்தால், ஏற்றமோ இறக்கமோ என்றும் வாழ்வின் மகிழ்ச்சி படிகளில் இருப்போம்.
🏪 எல்லா விதத்திலும் ஒத்துப் போவது நல்ல நட்பு, ஆனால் கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதைத் தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு.
🏪 மற்றவர்கள் பிரச்சனைகளை, கவலையை பகிர்ந்து கொள்ளும் போது முழுமையான அக்கறையுடன் கேட்டு ஆறுதல் கூறுவது தான் மனிதாபிமானம்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

இரண்டு லட்சம் பேருக்கு திருக்கல்யாண விருந்து





தினபூமி 27.04.2018 பக்கம் 8


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கோவிலில் மணி அடிக்க இனி மறக்காதீங்க....!
இந்த உண்மை தெரியுமா?
கோவிலில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்...!!
கோவிலுக்கு செல்லும் போது பொதுவாகவே சாமியை தரிசனம் செய்யும் போது கோவில் மணியை அடிப்பது வழக்கம் அல்லவா?
ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..எதற்காக கோவில் மணியை அடிக்கிறோம் என...
கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள்
கூறியிருக்கின்றனர்.
கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன்?
பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை அல்ல.
ஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயல்திறனை மேலோங்க செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணி இருக்கிறது.
கோவில் மணியின் ஓசை தனித்துவமாக கேட்பது ஏன்?
கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கும். அதற்கு கோவில் மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள் தான் காரணமாகும்.
கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.
கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.
அதனால் தான் கோவில் மணி சப்தம் கேட்கும்போதெல்லாம் ஒரு விதமான தனி பீலிங்க்ஸ் கிடைக்கும்.


மனிதத்தேனீயின் தேன்துளி


அன்னை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மாப்பிள்ளை வி௫ந்தில் 40000 நாற்பதாயிரம் பேருக்கு இன்று இரவு விருந்து இது மதுரையின் சிறந்த பணி. - மனிதத்தேனீ

அன்னை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மாப்பிள்ளை வி௫ந்தில் 40000 நாற்பதாயிரம் பேருக்கு இன்று இரவு விருந்து சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பழமுதிா்ச் சோலை தி௫வ௫ள் மு௫கன் பக்த சபை டிரஸ்ட் தலைவர் சாமுண்டி விவேகானந்தன் குழுவினர் ஏற்பாடு. மிக நேர்த்தியாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மகராஜ், மதுரைக் கல்லூரி வாரியத் தலைவர் என். எஸ். கிருஷ்ணன், பள்ளிச் செயலர் எஸ். பார்த்தசாரதி, மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் தொடங்கி வைத்தனர். எஸ். ஆர். எஸ். பிரதர்ஸ் சங்கரன், முன்னாள் செயலாளர் எம் எஸ் மீனாட்சி சுந்தரம், இல. அமுதன், சிவானந்த சீனிவாசன், தியாக தீபம் அ. பாலு, காவல் துறை ஏ சி மணிவண்ணன், கணேசன், ஏ. வி. பிரபாகரன், ஆடிட்டர் ஆதி சேசன்,சபை தலைவர் வி கே பாஸ்கர், வழக்கறிஞர் கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் வழங்கினர். நாளை காலை முதல் மாலை வரை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு வழங்கிட மதுரையில் உள்ள பெண்கள் மற்றும் பக்தர்கள் காய்கறிகளை தயார் செய்து உணவு வழங்க பணியாற்றி வருகிறார்கள். இது மாநகா் மதுரையின் சிறந்த பணி. - மனிதத்தேனீ



















Thursday 26 April 2018

மாலைமுரசு 26.04.2018 பக்கம் 7


மாலைமுரசு 26.04.2018 பக்கம் 5



தினத்தந்தி - இளைஞர் மலர் 14.04.2018 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


காளையார்மங்கலத்தில் சிறப்புப் பட்டிமன்றம்





தினபூமி 26.04.2018 பக்கம் 8


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

👉 பாலுக்கு துக்கம் கொடுத்தால் #தயிர் ஆகிறது.
👉 தயிருக்கு துக்கம் கொடுத்தால் #வெண்ணெய் ஆகிறது.
👉 வெண்ணெயை கொடுமை செய்தால் #நெய் ஆகிறது.
👉 பாலை விட தயிர் உயர்ந்தது, தயிரை விட வெண்ணெய் உயர்ந்தது, வெண்ணெயை விட நெய் உயர்ந்தது
.
👉 இதனுடைய அர்த்தம் என்னவென்றால்-- அடிக்கடி துக்கம்- சங்கடங்கள் வந்தாலும் கூட எந்த மனிதனுடைய நிறம் மாறுவதில்லையோ, சமூகத்தில் அவருடைய #மதிப்புஅதிகரிக்கிறது
.
👉 #பால் ஒரு நாளைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், பின் அது கெட்டுப் போய் விடும்.
👉 பாலில் ஒரு சொட்டு மோர் விடும் போது அது தயிர் ஆகிறது. அது இன்னும் 2 நாட்களுக்கு இருக்கும்.
👉 தயிரை கடையும் போது வெண்ணெய் வருகிறது. அது இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும்.
👉 வெண்ணெயை கொதிக்க வைத்தால் நெய் ஆகிறது. அது ஒரு போதும் வீணாவது இல்லை.
👉 ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள் ஒரு போதும் கெட்டுப் போகாத நெய் ஒளிந்து இருக்கிறது.
👉 உங்கள் #மனம் கூட அளவற்ற சக்திகளால் நிரம்பியுள்ளது. அதில் கொஞ்சம் நேர்மையான எண்ணங்களைப் போடுங்கள். தனக்குத் தானே சிந்தனை செய்யுங்கள். தன்னுடைய வாழ்க்கையை இன்னும் சரி பாருங்கள். பின் அப்பொழுது பாருங்கள். நீங்கள் ஒருபொழுதும் தோல்வியே காணாத பசுமையான மனிதனாக இருப்பீர்கள்.