Friday 31 March 2023

பங்குனி உத்திரம்! 05-04-2023

  பங்குனி உத்திரம்!

05-04-2023
(இந்த ஆண்டில் பங்குனி உத்திர திருநாள் ஏப்ரல் 05 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஏப்ரல் 04 ம் தேதி காலை 10.29 துவங்கி, ஏப்ரல் 05 ம் தேதி பிற்பகல் 12.09 வரை உத்திரம் நட்சத்திரம் உள்ளது. முதல் நாளே உத்திரம் நட்சத்திரம் துவங்கி விட்டாலும், பெளர்ணமியும், உத்திர நட்சரத்திரமும் இணையும் நாளே பங்குனி உத்திரமாக கருதப்படுவதால் ஏப்ரல் 05 ம் தேதியே பங்குனி உத்திரமாக கணிக்கப்பட்டுள்ளது. அன்று பெளர்ணமி திதி காலை 10.17 துவங்கி, ஏப்ரல் 06 ம் தேதி காலை 10.58 வரை உள்ளது.)
💥 பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று கடைபிடிக்கப்படும் விரதம் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
💥 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பனிரெண்டாவது மாதமான பங்குனியும், பனிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாளே பங்குனி உத்திரமாகும்.
💥 நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தை செய்யும்போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த நன்னாளில் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. தெய்வங்களின் திருமணங்கள் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.
💥 திருமணமாகாதவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்கு சென்று சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும். திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய நாளாக பங்குனி உத்திர நாள் விளங்குகிறது.
விரதம் இருப்பது எப்படி?
💥 பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். நாளை பங்குனி உத்திரம் என்பதால் விரதம் இருப்பவர்கள் இன்று இயல்பாக உண்பதைவிட குறைவாக உண்ண வேண்டும். மூன்று வேளை பழச்சாறு அருந்தலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் எடுத்துக் கொள்ளலாம். பங்குனி உத்திரத்தன்று காலையில் நீராடியதுமே விரதத்தை தொடங்கி விட வேண்டும். பகலில் ஒருவேளை மட்டுமே உண்ண வேண்டும்.
💥 மாலையில் முருகன், சிவன், பெருமாள் கோவிலுக்கு சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். சிவபெருமானுக்கும், உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து முடிக்க வேண்டும். இந்த விரதத்தால், விரைவில் திருமண யோகமும், செல்வச் செழிப்பும் உண்டாகும்.
💥 பிறகு ஒரு தம்பதியினரை அழைத்து வந்து அவர்களுக்கு பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும். சிவபெருமானையும், பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும்.
💥 அன்று முழுவதும் சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை படிக்கலாம். துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும்.
💥 மேலும், 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர் என்று விரத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
பலன்கள் :
💥 பங்குனி உத்திர நாளில் நம்மால் முடிந்த உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். இந்த நாளில் திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தால் திருமணம் கூடிவரும்.
💥 கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும், சிறந்த வேலையையும் பெற முடியும்.
💥 உத்தியோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
🙏 கு பண்பரசு

ஏற்றம் தரும்.

 ஏற்றம் தரும்.

“செய்வன திருந்தச் செய்” இது சாதனைக்கான தொடர்படி, என்ன செய்தாலும் சுயதிருப்தி முக்கியம். மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ விமர்சனம் செய்வார்களோ எனக் குழம்பவே கூடாது.
எண்ணித் துணிந்து செய்யும் செயல்கள் என்றும் நமக்கு ஏற்றத்தை மட்டுமே – அதாவது முன்னேற்றத்தை மட்டுமே தரும். இப்போதைய நிலைக்கு வருத்தப்படுவதால் பயன் ஏதுமில்லை. கிடைத்ததை ஏற்பதும், அதனை விரும்புவதும் மட்டுமே சாதனைக்கு நம்மை இட்டுச் செல்லும்.
மற்றவர்கள் நம்மைச் சாதனையாளர் எனப் பாராட்ட வேண்டும் எனக் காத்திருக்கக் கூடாது. உங்கள் ஈடுபாடு உங்களுக்கு மட்டுமே தெரியும். உங்களிடமுள்ள அபரிமிதமான, அளப்பரிய, அற்புத மனசக்தியின் மூலம் எதையும் சாதிக்க முடியும். அந்த மனசக்தி தான் ஆழ்மனம் என்பது. இதை உபயோகியுங்கள்.
ஆழ்மனக் காட்சிகள் அற்புதங்களை நிகழ்த்தும். நீங்கள் நம்புங்கள் நீங்கள் சாதனையாளர் தான். மீண்டும் ஒருமுறை படியுங்கள். உங்களாலும் சாதிக்க முடியும். சாதிப்பதற்காகவே பிறந்துள்ளீர்கள்,
வாழ்த்துக்கள்
.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு ரெ.கார்த்திகேயன் அவர்களுக்கு


 

Thursday 30 March 2023

மனிதத்தேனீயின் தேன்துளி


 

உள்ளது உள்ளபடியே.

 உள்ளது உள்ளபடியே.

"பெரும்பாலான மக்கள் தங்கள் முன்னோக்கின் வரம்புகளை உலகின் வாம்புகளாகக் கருதிக் கொள்கின்றனர். ஒருசிலர் அவ்வாறு நினைப்பதில்லை. அவர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என்று ஜெர்மானிய தத்துவவியலாளரான ஆர்துவர் ஷொபென்ஹவர் கூறியுள்ளார்.
இது ஓர் ஆழமான கருத்து *இக்கணத்தில் நீங்கள் பார்க்கின்ற வாழ்க்கைதான் உங்கள் எதிர்கால வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.* உங்கள் பயங்கள், குறைபாடுகள், தவறான அனுமானங்கள் ஆகியவற்றின் ஊடாக விஷயங்களை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கக்கூடும்.
நீங்கள் எந்தக் கண்ணாடிச் சன்னலின் ஊடாக உலகத்தைப் பார்க்கிறீர்களோ அந்தச் சன்னலின்மீது படிந்துள்ள கறைவயை நீங்கள் துடைத்து சுத்தப்படுத்திய பிறகு மீண்டும் அதன் ஊடாக நீங்கள் பார்க்கும்போது, முற்றிலும் புதிய சாத்தியக்கூறுகள் உங்கள் பார்வையில் படும்.
உள்ளது உள்ளபடியே நாம் உலகத்தைப் பார்ப்பதில்லை, மாறாக, நம்முடைய சொந்தக் கண்ணோட்டத்தின் ஊடாகவே நாம் அதைப் பார்க்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பல வருடங்களுக்கு முன்பு எந்த ஒரு மனிதனாலும் ஒரு மைல் துரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடிக் கடக்க முடியாது என்ற ஓர் உறுதியான நம்பிககை நிலவியது. ஆனால் ரோஜர் பேனிஸ்டர் அதை முறியடித்து, ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடிக் கடந்த பிறகு, ஒருசில வாரங்களுக்குள் ஏராளமானோர் அவர் செய்ததை போலவே செய்து சர்தனை படைத்தனர். ஏன் ஏனெனில் எது சாத்தியம் என்பதை ரோஜர் மக்களுக்குக் காட்டினார். அந்த நம்பிக்கையின் துணையுடன் சாத்தியமற்றதைப் பிறரும் சாத்தியமாக்கினர்.
உங்களை மட்டுப்படுத்துகின்ற நம்பிக்கை எது.
எவையெல்லாம் சாத்தியமற்றவை என்று உங்களை நீங்களே நம்ப வைத்திருக்கிறீர்கள்,
உங்களால் எவற்றையெல்லாம் பெற முடியாது எவற்றையெல்லாம் செய்ய முடியாது அல்லது உங்களால் யாராக ஆக முடியாது போன்றவை குறித்து நீங்கள் எவ்வளவு பொய்யான அனுமானங்களைக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் சிந்தனைதான் உங்கள் யதார்த்தத்தை உருவாக்குகிறது. உங்கள் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட விஷயம் நிகழாது என்று நீங்கள் நினைத்தால், அந்த இலக்கை யதார்த்தமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நீங்கள் ஒருபோதும் எடுக்க மாட்டீர்கள்.
இது சாத்தியமில்லை என்ற உங்களுடைய நினைப்பு உங்களை முழுவதுமாக ஆட்கொண்டுவிடும். உங்களிடம் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்ற குறைபாடுகள், நீங்கள் மாபெரும் சாதனைகளைப் படைக்க முடியாத விதத்தில் உங்கள் கைகளைக் கட்டிப் போடுகின்ற சங்கிலிகளாக ஆகிவிடும்.

வாழிய பல்லாண்டு ராம.வீரப்பன்


 

Wednesday 29 March 2023

சீராக வாழ வேண்டும்.

 சீராக வாழ வேண்டும்.

*‘‘விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி
செல்லும் உடல் கேட்டேன்’’*
- என்றான் மகாகவி பாரதி.
மனம் சொல்ல வேண்டுமாம்; உடல் ஆட வேண்டுமாம், மனம் ‘போ’ என்றால், உடல் போக வேண்டும். ‘ஐயோ, எல்லோரும் போகிறார்கள் நாம் போக முடியவில்லையே’ என்று மனது ஏங்க, உடம்பு போக முடியாமல் தள்ளாட, அந்த நிலைமை வருமானால், மனித வாழ்க்கையில் என்ன சுகம் இருக்கிறது அதனால்தான், ‘மனதை அடக்கி உடம்பை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்று நான் அடிக்கடி போதிக்கிறேன்.
நான் ஒரு போதகாசிரியன் அல்ல; உபந்நியாசியும் அல்ல; உலகை முற்றிலும் உணர்ந்தவனுமல்ல; துறந்தவனுமல்ல; என்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் பலவற்றையே இதுகாறும் நான் உங்களுக்குத் தொகுத்துத் தந்திருக்கிறேன். ஏனென்றால், வாழ்க்கையை இந்திய மக்கள் சுகமாக நடத்த வேண்டும். மலேசியாவிலேயோ, சிங்கப்பூரிலோ, மற்ற நாடுகளிலேயோ பார்க்கும்போது, இந்தியாவில் இருக்கின்ற அளவுக்கு நோயாளிகள் அங்கே இல்லை.
இங்கே உடல் நோயாளிகளைவிட, மனநோயாளிகள் அதிகம், கவலைப்படுபவர்கள் அதிகம். கஷ்டப்படுபவர்கள் அதிகம். வறுமைக் கஷ்டம் என்றால், ஏதாவதொரு பரிகாரம் தேட முடியும். ‘இனம் தெரியாத ஒரு துயரம் உங்களுக்குள்ளேயே மண்டிக்கிடக்கிறதே, என்ன செய்வேன்’ என்று அழுகிறவர்கள் அதிகம். அந்தத் துயரத்தாலே உடம்பு ஆட்டி வைக்கப்பட்டு மனதைக் கெடுத்துக் கொண்டவர்கள் அதிகம். இவர்களெல்லாம் ஒரு கட்டத்தில் சீராக வாழ வேண்டும்; துணிந்து வாழ வேண்டும்.
துணிச்சலோடு, எதையும் எதிர்த்து நிற்கின்ற தன்மையோடு, ‘‘வந்தோம்; பிறந்தோம்; வாழ்வோம்; சாவோம்!’’ என்று முடிவு கட்டிக்கொண்டு, வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாகும்.
‘வருவதைக் கண்டு மயங்காதே போவதைக் கண்டு கலங்காதே!’ பெரிய பதவி வருமானால், ‘எனக்கு மேல் எவன் பெரியவன்’ என்று திமிர் பிடித்து அலையாதே. பதவி போய் விடுமானால், ‘ஐயோ போய் விட்டதே!’ என்று அழாதே. வருவதும் போவதும் ஆண்டவனுடைய போக்குவரத்துச் சாலை விதி. ஆண்டவன் அதிலே டிராபிக் கமிஷனர். அவன் போட்ட உத்தரவின்படியே தான் சில விஷயங்கள் வருகின்றன; சில விஷயங்கள் போகின்றன.
ஆறு வயதிலேயே குழந்தைகள் இறந்துபோகின்றன; பதினாறு வயதிலேயும் இறந்து போகின்றன; போகின்ற குழந்தைகளுக்காக நாம் அழ முடிகிறதே தவிர, திரும்பிக் கொண்டு வரமுடிவதில்லை. நூறு வயது வரையில் சில பேர் வாழ்கிறார்கள்; ஏன் வாழ்கிறார்கள் என்பது நமக்குத் தெரிவதில்லை.
எல்லாம், எல்லாக் கதைகளும் எங்கே போய் முடிகின்றன எவனோ ஒருவன் இருக்கிறான்; ஏதோ ஒரு சக்தி இயங்குகிறது; அந்தச் சக்தியினுடைய கரங்களில் இருந்து அத்தனையும் புறப்படுகின்றன; திரும்ப அந்தக் கால்களிலேயே அவை போய்ச் சேர்ந்துவிடுகின்றன.
அந்த லயத்தை உணர்ந்துகொண்ட பின்னாலே, உடல் மறத்து, உள்ளம் மறத்துப் போய், ‘நாம் பிறந்தது ஆண்டவனை எண்ண, அடுத்தவருக்கு உதவ, நியாயமாக வாழ என்கிற எண்ணம் பிறந்து விடுகின்றது. அந்த நியாயத்தை மதித்து, ‘உன்னையே நீ அறிந்து’ உலகையும் அறிந்து, எல்லோருக்கும் வேண்டியவனாகவும், எல்லோருக்கும் நல்லவனாகவும், எல்லோரையும் புரிந்து கொண்டவனாகவும், எல்லோராலும் புரிந்து கொள்ளப் பட்டவனாகவும் வாழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.எல்லாம் வல்ல இறைவன், எல்லோர்க்கும் அருள்வானாக.
*கவியரசு கண்ணதாசன்*
*அர்த்தமுள்ள இந்துமதம்*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

இலக்கணம் மொழியைக் காக்கும் வேலி:

 இலக்கணம்

மொழியைக் காக்கும் வேலி:
1. ஸ ஷ ஜ ஹ க்ஷ ஸ்ரீ போன்ற எழுத்துகள் ஒரு சொல்லில் வருமானால் அவை தமிழ்ச்சொற்களல்ல.
எ.கா / சாஸ்வதம் விஷயம் ஜன்னல் ஹாஸ்யம் சுபிக்ஷம் ஸ்ரீலங்கா.
2. ரகர வரிசை எழுத்துகளை முதலெழுத்துகளாகக் கொண்ட சொற்கள் தமிழல்ல.
எ.கா /ரகசியம் ராத்திரி ரூபம் ரோடு.
தமிழில் முதலெழுத்தாக ரகரம் தோன்றாது.
3.லகர எழுத்துகளை முதலெழுத்துகளாகக் கொண்ட சொற்கள் தமிழல்ல.
எ.கா/ லட்சியம் லாபம் லேசு.
லகர எழுத்துகளும் தமிழ்ச்சொல்லுக்கு முதல் எழுத்தாகாது.
4.சகர வரிசை எழுத்துகளில் தொடங்கும் பிறமொழிச் சொற்கள்தாம் அதிகமாக இருக்கின்றன.
எ.கா/ சக்தி சாத்தியம் சாவி சரீரம் சீக்கிரம்.
ஒருசொல் சகர வரிசை எழுத்தில் தொடங்கினால் அது பிறமொழிச் சொல்லாக இருக்குமோ என்று ஐயுறலாம்.
ஆனால் தமிழ்ச்சொற்களும் சகர வரிசை எழுத்தில் தொடங்கும்.
எ.கா/ சோறு சொல் செரு சேர்.
5. மெய் எழுத்தை முதலெழுத்தாகக் கொண்ட சொற்கள் தமிழல்ல.
எ.கா/ ப்ரியா க்ரியை
தமிழில் தனி மெய்யெழுத்தில் சொற்கள் தொடங்குவதில்லை.
6.இரண்டு சொற்களுக்கு இடையில் புணர்ச்சி இலக்கணப்படி வல்லின ஒற்று (க் ச் த் ப்) பயன்படுத்தப்படாமல் எழுதப்பட்டால் அவை தமிழல்ல.
எ.கா / ஆன்மிக குரு , பூமி பூஜை ,அவ்விரண்டு சொற்களில் ஒன்றேனும் தமிழல்லாததாக இருக்கும்.
7.சொல்லின் முதலெழுத்தாம் குறில் எழுத்தை அடுத்து ர் என்ற மெய்யெழுத்து வந்தால் அச்சொல் தமிழில்லை.
எ.கா/ சர்க்கார் கர்ப்பம் அர்ச்சனை சர்க்கரை சொர்க்கம்.
8.ஒரு சொல்லின் கடைசி எழுத்து க் ச் ட் த் ப் ற் என வல்லின மெய்யாக இருந்தாலும் அது தமிழில்லை.
எ.கா/ ஆர்ச் பார்க் வோல்ட்.
9.ஒரு சொல்லின் எதிர்ச்சொல் அ என்ற எழுத்தைச் சேர்த்தால் கிடைக்கிறது எனில் அவ்விரண்டும் தமிழல்ல.
எ.கா/ சுத்தம்...அசுத்தம் , நியாயம்..அநியாயம்,சௌகரியம்..அசௌகரியம்.
10. ஏதேனும் ஒரு சொல்லின் முன்னொட்டாக நிர் துர் போன்றவை தோன்றினால் அவ்விரண்டும் தமிழல்ல.
எ.கா/ நிர்க்கதி துரதிர்ஷ்டம்.
11. யகர வரிசை எழுத்துகளில் யா என்ற நெடில் மட்டுமே சொல்லுக்கு முதல் எழுத்தாகும்.
எ.கா / யாழ் யானை.
பிற யகரம் தமிழில்லை .
எ.கா./ யவ்வனம் யுகம் யூகம் யோகம்.
12. டகர வரிசை எழுத்துகளில் ஒரு சொல் தொடங்கினால் அதுவும் தமிழில்லை.
எ.கா / டக்கர் டைம்.

Tuesday 28 March 2023


 

தர்மத்தின் வழி நேர்மையின் நெறி.

 தர்மத்தின் வழி நேர்மையின் நெறி.

தைரியம் தானாய் வரும்
நேர்மையாக வாழும் மனிதர் எவருக்கும் அஞ்சத் தேவையில்லை, போலியான மனிதர்களே .
நல்லவர் போல் நடிக்கின்றனர் நம்பியவர்களுக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றனர் .
அது போன்ற போலியான மனிதர்களே அச்சத்தில் வாழ்வார்கள்
நேர்மையான மனிதர்கள் அச்சத்தில் வாழ்வதில்லை.
நேர்மையான நல்ல மனிதர்களைத் தான் இறைவன் உற்றுப் பார்க்கிறார் .
நேர்மையாக வாழும் மனிதருக்கு சில காலம் கஷ்டமாகத் தெரியும், ஆனால் அவர்கள் மனதில் அச்சம் இருக்காது. காரணம் அவர்கள் தான் உண்மையில் எதிர்நீச்சல் போடக்கூடிய மனிதர்கள் நேர்மையுடன் இருப்பவர்கள்.
சில சமயங்களில் பல சங்கடங்களைச் சந்திக்கலாம் ஆனால் வீட்டுக்கும் நாட்டுக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையானவர்.
நேர்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அது போன்ற மனிதர்களை எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால் அதுபோன்ற மனிதர்களைத் தான் ஏமாளிகள் என்றும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் அப்பாவிகள் என்றும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் கூறுகின்றனர்.
அதற்காக வருந்தாமல் தன்னுடைய பாதையில் நம்பிக்கையுடன் நேர்மையாக கடந்து செல்ல வேண்டும். நேர்மை எனும் வழி சென்றால் எதிரில் வரும் மலை போன்ற கஷ்டங்களும் பனி போல் தீர்ந்து விடும்.
நேர்மை என்பது தர்மம் போன்றது அது மிகவும் சக்தி வாய்ந்தது, தர்மத்தை எவ்வாறு வெல்வது கடினமோ அவ்வாறே நேர்மையான மனிதர்களையும் வெல்வது கடினமாகும் அதற்குக் காரணம்
தர்மத்தின் வழியில் செல்லும் மனிதர்களுக்கும் நேர்மையாக வாழும் மனிதர்களுக்கும் இறைவன் அவர்களுக்குத் தெரியாமலேயே பாதுகாப்பாக இருக்கிறார்.
இதை உணர்ந்த மனிதர்கள் ஒருபோதும் தவறான வழியில் செல்வதில்லை, தங்கத்தை என்னதான் சுட்டெரித்தாலும் அது தன் நிறத்தையும் தன்மையையும் மாற்றிக் கொள்வதில்லை, சுடச் சுட சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது. அது போன்று தான் நேர்மையான நல்ல மனிதர்கள் எத்தனை கஷ்டங்களைக் கண்டாலும் அவர்களின் நேர்மையான நிலை தடுமாறுவதில்லை.
அதற்குக் காரணம் அவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள், அதனால் தன்னை நம்பிய மனிதர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதில்லை, அது போன்ற நல்ல மனிதர்களின் நாவில் வெளிப்படும் வாக்கானது சத்தியவாக்காக வெளிப்படுகிறது. அவர்கள் கூறும் வாக்கைப் பலிக்கச் செய்து இறைவன் நற்பெயரை ஏற்படுத்துகிறார்.
உண்மையில் சத்தியத்தையும் தருமத்தையும் கடைப்பிடித்து நேர்மையாக வாழும் மனிதர்களே இறைவனிடத்தில் நெருங்கிய தூரத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் அருகில் இருக்கும் இறைவன் அன்புடன் அரவணைத்துச் செல்கிறார். ஆகையால் அது போன்ற மனிதர்கள் எதையும் எளிதில் கடந்து செல்கின்றனர், யார் என்னதான் சொன்னாலும் சத்தியம் ஒருபோதும் பொய்யாவதில்லை, தர்மம் என்றும் தோற்றதாகச் சரித்திரம் இல்லை. தர்மத்தின் வழியில் செல்வோரையும் தர்மம் செய்பவரையும் எவராலும் வீழ்த்த முடிவதில்லை.
ஒரு சமயம் பாரத போரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கருணனை வீழ்த்த முயற்சித்தார் ஆனால் அவர் வீழ்த்தப்பட்ட போதிலும் அவர் உயிரைப் பறிக்க முடியவில்லை. காரணம் கர்ணன் செய்த தர்மம் அவர் உயிரை உடலில் இருந்து பறிக்க விடாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தது.
இதை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா முதியவர் வேடமிட்டு கர்ணனிடம் யாசகமாக தான் செய்த புண்ணிய பலனைத்தையும் பெற்றார். அதன் பின்னரே கர்ணனின் உயிரைப் பறிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தானம் என்பது என்றோ ஒரு நாள் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் கொடுப்பதாகும், தர்மம் என்பது யார் என்றும் எவர் என்றும் அறியாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுத்து உதவக் கூடியதாகும்
தானத்தை விட தர்மமே வலிமை மிக்கது, தரத்தில் சிறந்தது ஆகையால் தன்னால் இயன்ற தருமத்தைச் செய்யுங்கள், செய்த தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சக்தி மிக்க மனிதர்கள் யார் என்றால் சத்தியத்தின் வழியிலும் தர்மத்தின் வழியிலும் நேர்மையாக வாழும் மனிதரே
தரத்தில் சிறந்த மனிதராவார்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

பயனுள்ள அழகு குறிப்புகள் உங்களுக்காக

 பயனுள்ள அழகு குறிப்புகள் உங்களுக்காக ..!!!

1. ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.
2. முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
3. தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.
4. பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.
5. துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.
6. வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.
7. உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.
8. நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணெயை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்
9. பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.
10. முட்டையின் வெள்ளைகரு,தேன்,மாதுளை ஜூஸ் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் முகத்தில் பூசிவிட்டு முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.
11. பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.
12. சருமம் உலராமல் பளபளப்புடன் இருக்க, தினமும் பசும்பாலை தேய்த்துவிட்டு குளியுங்கள்.
13. .பாதாம் பருப்பு, பாலாடை, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகம் , கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி வந்தால் வறண்ட சருமம் மாறும்.
14. எலுமிச்சை பழச்சாறு,பன்னீர் மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
15. பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.
16. கொத்தமல்லி மற்றும் மஞ்சள் பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
17. ஒரு துண்டு வசம்பு எடுத்து திருநீற்றுப்பச்சிலை சாறு விட்டு அரைத்து தடவி வந்தால் முகப்பரு குறையும். சருமம் பளபளப்பாகும்.
18. பூந்திக் கொட்டையைக் தண்ணீரில் ஊற வைத்து அந்த நுரையைக் கொண்டு நகங்களை கழுவினால் நகங்கள் பளிச்சென்றும் சுத்தமாகவும் காணப்படும்.
19. பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வர சருமம் மென்மையாகும்.
20. சர்க்கரையுடன் சிறிது கிளிசரின் சேர்த்துக் தடவி வந்தால் உள்ளங்கை மென்மையாக மாறும்.
21. தாமரை, ரோஜா, ஆகிய மலர்களில் ஒன்றை எடுத்து அடிக்கடி கண்களில் ஒற்றிக் கொண்டால் கண் இமைகள் அழகுடன் காட்சியளிக்கும்.
22. முட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கங்கள் குறையும்.
23. எலுமிச்சை பழச்சாறுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
24. பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்து வந்தால் பொடுகு குறையும்.
25. தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து முகம் கழுவி வந்தால் தோல் சுருக்கம் குறைந்து பளபளப்பாகும்.
26. தயிரில் கசகசாவைச் சேர்த்து அரைத்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன்பாக பூசி வந்தால் முகம் பளப்பளப்பாகும்.
27. முட்டையின் வெள்ளை கருவை எடுத்து நன்றாக கலக்கி உச்சந்தலை மற்றும் முடியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.
28. நெல்லிக்காயை சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.
29. அதிமதுரத்தை பொடி செய்து அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் விட்டு கலக்கி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி வளரும். பொடுகு குறையும்.
30. பலாப்பழம் எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவு பெற்று சதை போட்டு இளமை கூடும்
31. சம அளவு நெல்லிக்காய் சாறு, பாதாம் எண்ணெய் எடுத்து அதில் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து இரவு தலையில் நன்றாக தேய்த்து காலையில் தலைக்கு குளித்து வந்தால் கூந்தல் கருப்பாகும்.
32. குங்குமப்பூவை பாலேட்டில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் எடுத்து நன்றாக பிசைந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டின் கருமை நிறம் மாறி உதடு சிவப்பாகும்.
33. ரோஸ்மேரி இலைகளை எடுத்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி பிறகு சிறிது நேரம் வைத்திருந்து வடிகட்டி இந்த நீரை கொண்டு தலையை அலசி வந்தால் முடி உதிர்வது குறையும்.
34.சோற்று கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கருவளையத்தின் மீது தடவினால் கருவளையம் குறையும்.
35. கேரட்டை நன்றாக துருவி போட்டு அதில் தேன் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
36.மருதோன்றி காயை அரைத்து நகத்தில் தடவி வந்தால் நகம் வளரும்.
37.சந்தனத்தை நன்றாக பொடியாக்கி அதனுடன் பன்னீர் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
38. வெள்ளரிக்காயை நன்கு மைய அரைத்து கரும்புள்ளிகள் மீது தடவி வைத்து நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
39. கசகசாவைச் சிறிது எடுத்து, பாலில் ஊறவைத்து அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு குறையும்.
40 செம்பருத்தி இலையை அரைத்து சீயக்காய்த் தூளுடன் சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வர தலையில் பொடுகு குறையும்.
41. மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சாற்றை, தலையில் தேய்த்தால் முடி உதிர்வது குறையும்.
42.தினமும் பசு வெண்ணெய்யுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் சாப்பிட்டு வந்தால் இளநரை குறையும்.
43. .ஆலிவ் எண்ணெய்யை தலையில் தேய்த்து குளித்து வந்தால் கூந்தல் மின்னும்.
44. தினமும் காலையில் தண்ணீரில் தேன் கலந்து குடித்து வந்தால்
உடல் பளபளப்பாகும்.
45. சிறுபயறு, கடலை மாவு, தேன் கலந்து, குளித்து வர உடல் அழகு பெறும்.
46.அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்களின் கடினத்தன்மை குறையும்.
47. ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைமுடிஉதிர்வது குறையும்.
48. தர்ப்பூசணி பழத்தின் அடியில் இருக்கும் வெள்ளை பகுதியினை கால்களுக்கு தேய்க்க கால்கள் மிருதுவாக மாறும்.
49. தயிர், முட்டை, எலுமிச்சை சாறு கலந்து தேய்த்துக் குளிக்க பொடுகு குறையும்.
50 திராட்சை சாற்றை மசாஜ் செய்ய கழுத்திலுள்ள கருமை குறைந்து, கழுத்து அழகாகும்.
51. பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர இதழ்கள் சிவக்கும்.
52. தர்பூசணி பழச்சாறு, பயித்தமாவு இரண்டையும் கலந்த கலவையை முகத்தில் பூசி வந்தால் முகம் புதுப்பொலிவு பெறும்.
53.எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பற்கள் பளிச்சென மாறும்.
54. தினமும் இரவில் புருவங்களில் ஆலிவ் எண்ணெயை தடவிக் கொண்டு படுத்தால் புருவங்கள் மிருதுவாகவும்,வசீகரமாகவும்இருக்கும்.
55. பாதாம் பருப்புகளை பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து கண்களைச் சுற்றி பேக் போடுவதால் கண்களில் உள்ள கருவளையம் மறையும்.
56. எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், முகத்தில் கரும்புள்ளிகள் குறையும்.
57. கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் கொண்ட கலவையை உதடு வெடிப்பின் மீது பூசி வந்தால் வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும்.
58. பாலாடை குங்குமப் பூ கலந்து கழுத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் சிறுசிறு கரும்புள்ளிகள் மறையும்.
59. பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகம் பிரகாசமாகும்.
60.மா மரத்தின் இலையை எடுத்து அதன் பாலைக் கால் வெடிப்பில் பூசி வந்தால் கால் வெடிப்பு குறையும்.
61. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.
62 நெல்லிக்காயை பாலில் அரைத்து பிழிந்து சாறு எடுத்து கொதிக்க வைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.
63. துளசி இலையுடன் கற்பூரம் சேர்த்து அரைத்து முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு குறையும்.
64. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்

Monday 27 March 2023

வாழிய பல்லாண்டு சோமு அவர்களுக்கு


 

வாழிய பல்லாண்டு லேனா சுப்பிரமணியன்


 

நாம் சரியாக இருப்போம்.

 நாம் சரியாக இருப்போம்.

துன்பத்திற்காக காரணம் ஆசைப்படுவது.
பெரும்பாலும் நேர்மையானவர்கள் தன்னைப்போல மற்றவர்களும் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற மனப்பக்குவத்தில் இருக்கிறார்கள்.
இது ஒரு நிறைவேறா ஆசை .
அதனால் அவர்கள் அதிகம் துன்பப்படுகிறார்கள்.
குரு ஒருவர் தன் மீது பற்றுள்ள சீடர்களை அழைத்து ஊரைச் சுற்றி வந்து காண்பதைக் கூறுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.
இரு சீடர்களும் குரு சொன்னபடியே சுற்றி வந்து குருவிடம் தான் கண்டதை விவரிக்கிறார்கள்.
முதல் சீடன் ஊரில் அனைவரும் பொய் கூறுகின்றனர்.
யாருக்கும் யாரும் உண்மையாக இல்லை ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்கின்றனர், கெட்டவர்கள் என்று கூறினார்.
இரண்டாவது சீடன் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் பிறர் துன்பங்களை மறக்க நல் வார்த்தைகளைக் கூறி அன்போடு அனைவரும் மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று குருவிடம் கூறுகிறார்.
இருவர் கூறியதையும் கேட்ட குரு
நாம் நினைப்பது போல் மக்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும் அதனால் நாம் துன்பப்படுவோம் என்று கூறினார்.
நான் நல்லவனாக இருந்தால் நம்மால் முடிந்த நல்லதையும் நேர்மையான செயல்களையும் செய்து விட்டு வாழ்க்கையில் கடந்து செல்ல வேண்டும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

ராதா தியாகராஜன் நினைவைப் போற்றிடுவோம்


 

உலகின் மிக உயரமான ரெயில் பாலத்தில் சோதனையோட்டம் வெற்றி: ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்முவில் பாயும் சீனாப் நதியின் குறுக்கே (பக்கல் - கௌரிக்கு) அமைக்கப்பட்டுள்ள இணைப்புப் பாலத்தில் ரெயில் சோதனை ஓட்டம் மார்ச் 21 ஆம் தேதியன்று வெற்றி கரமாக இயக்கப்பட்டது. 359 மீ.உயரத்தில் 1315 மீ. நீளத்தில் உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட் டுள்ள ரெயில் பாலம் இதுதான். 272 கிமீ தூரமுள்ள உதம்பூர் - ஶ்ரீநகர் - பாரமுல்லாவை இணைக்கிறது இப்பாலம். பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள், வியாபாரிகள் & இராணுவ வீரர்கள் எளிதாகச் சென்று வர இப்பாலம் பெரிதும் பயன்படும்.

இறையருள் நிலையானது.

 இறையருள் நிலையானது.

நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆசாமி, சரியான எடக்குமடக்குப் பேர் வழி. நாலு தெரு தள்ளி, ஒரு பூங்கா; அங்கேதான் நம்ம எடக்குமடக்கு தினமும் வாக்கிங் போவது வழக்கம்.
பூங்காவுக்கு அருகிலேயே, சிவ ஆலயம் ஒன்று பாழடைந்து கிடந்தது. விளக்கு ஏற்றக்கூட யாரும் வருவதில்லை. கோவில் குருக்கள் ஒருத்தர், தினமும் கொஞ்சம் நேரம் கோயிலைத் திறந்து வைப்பார்.
எடக்குமடக்கின் மனைவி, ''பூங்காவைச் சுத்தும்போது, அப்படியே அந்தக் கோயிலையும் தான் ரெண்டு சுத்து சுத்திட்டு வாங்களேன்'' என்பாள். உடனே எடக்கு மடக்கு, ''அந்த சிவனுக்குப் பவரே கிடையாது. பவர் இருந்தால், தன் கோயிலைப் பாழடைய விட்டிருப்பாரா'' என்று மடக்குவார்.
ஒருநாள் காலையில் வழக்கமாக பெரிய டம்ளரில் காபி எடுத்து வரும் எ-ம மனைவி, மிகச் சிறிய டம்ளரைக் கொண்டு வந்தாள். ''ஏன் ஸ்பூன்ல கொண்டு வரது தானே'' என்று எரிச்சலானார் எடக்கு.
''இது காபி இல்லை; நல்லெண்ணெய் வாய்ல புண்ணுன்னு சொன்னீங்களே அதான்.
நல்லெண்ணெயை அரை மணி நேரம் வாயிலே வெச்சிருந்து, பிறகு கொப்பளிச்சா, வாய் புண் குணமாகும்னு பத்திரிகையில படிச்சேன். நீங்க வாக்கிங் போகும் போது வாயில நல்லெண்ணெயை ஊத்திக்குங்க. வீட்டுக்கு வந்ததும் கொப்பளிச்சிடுங்க'' என்று புரோகிராம் போட்டுக் கொடுத்தாள் மனைவி.
ஆனால், சோதனையாக, எடக்கு வாயில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு தெருவில் இறங்கிய ஐந்தாவது நிமிஷம், அவருடைய ஆபீசர் எதிரே வந்தார். ''அடடே உன் வீட்டுக்குத்தான் வர்றேன்'' என்று ஸ்கூட்டரை நிறுத்தினார். வேறு வழியில்லாமல், எண்ணெயைத் துப்பிவிட்டு அவரிடம் பேசினார் எடக்கு. வீட்டுக்குப் போனதும், நடந்ததை மனைவியிடம் சொன்னார்.
அவள் விடுவாளா மறுநாள், எக்ஸ்ட்ராவாக ஒரு சின்ன எவர் சில்வர் தூக்கில் எண்ணெய் ஊற்றித் தந்தாள். ''வாக்கிங் போகும்போது துப்பும்படி ஆயிட்டா, இதை வாயில் ஊத்திக்குங்க'' என்றாள்.
தினமும் அவர் இப்படி எவர்சில்வர் தூக்கோடு நடந்து போவதை, அடுத்த தெருவில் உள்ள ஒரு பெண்மணி கவனித்துவிட்டு, ''தினமும் எண்ணெய் கொண்டு போறீங்களே, கோயிலுக்கா' என்று கேட்டாள்.
அவளிடம், தான் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்பளிப்பதை யெல்லாம் விளக்க விரும்பாமல், 'ஆமாம்' என்று தலையாட்டி வைத்தார் நம்மாள்.
மறுநாள்... அந்தப் பெண்மணியின் கையில் ஒரு சொம்பு எண்ணெய். ''தயவுசெஞ்சு இதையும் சேர்த்துக்கங்க'' என்று எண்ணெயை அவரது எவர்சில்வர் தூக்கில் ஊற்றினாள். இதே போலவே அடுத்தடுத்த நாளில் நிறையப் பேர் காத்திருந்து, எடக்குமடக்கின் தூக்கில் தங்கள் பங்காகக் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினார்கள்.
கோயிலுக்கு எண்ணெய் ஊற்றுவதை வேண்டாம் என்று சொல்ல மனமின்றி, அவரும் தட்டாமல் வாங்கிக் கோயிலுக்கு அந்த எண்ணெயைக் கொடுத்து வந்தார்.
நிறைய எண்ணெய் கிடைத்ததால், தினமும் கோயிலில் ஏராளமாக விளக்கேற்றி வைத்தார் குருக்கள். அதிகப்படியான எண்ணெயை விற்றுப் பிரசாதம் செய்து, வருபவர்களுக்கு விநியோகித்தார்.
பூங்கா கோயில் மாலை வேளையில் தீப ஒளியில் பிரகாசிக்க ஆரம்பித்தது.
காணிக்கைகள் ஏராளமாக வந்தன. கொஞ்ச நாளில் கோயில் புதுப்பிக்கப்பட்டுப் கும்பாபிஷேகமே நடந்தது.
எடக்குமடக்குவிடம் அவர் மனைவி சொன்னாள் '' அந்தச் சிவனுக்கு பவர் இல்லை; தன் கோயிலையே அவரால் கட்டிக்க முடியலே'னு சொன்னீங்களே, இப்ப பார்த்தீங்களா, உங்களைக்கொண்டே அதை நிறைவேத்திக்கிட்டார்.
எதை, எப்படி, எப்போது யாருக்குச் செய்ய வேண்டும் என்பதை தெய்வத்துக்கு நாம் சொல்லித்தர வேண்டியதில்லை.
ஏனென்றால் அனைத்து உலகத்துக்கும் தந்தை அவர் தானே.