Tuesday 19 May 2020

*ஜூன் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதி வரையில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்*

*ஜூன் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதி வரையில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்*
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனையில் ஈடுப்பட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்.
10 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஜூன் மாதம் 1 ஆம் தேதிக்கு பதில் ஜூன் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதி வரையில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தேர்வுகளை நடத்த அனைத்து ஏற்ப்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தேர்வு மையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஜூன் 15 மொழிபாடம், ஜூன் 17 ஆங்கிலம் , ஜூன் 19 கனிதம், ஜூன் 22 அறிவியல், ஜூன் 24 சமுக அறிவியல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 27 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு தேர்வு விடைதாள் திருத்தும் பணிகள் தொடரும் என்றும் அதன் தொடர்ச்சியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment