Thursday 31 December 2020

மனிதத்தேனீயின் தேன்துளி


 

விஸ்வநாத தாஸ் நினைவைப் போற்றுவோம்


 

தமிழுக்கும் தமிழர்களுக்கும் கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி வரிகள்.

 தமிழுக்கும் தமிழர்களுக்கும்

கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி வரிகள்.
“கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே..”
கண்ணதாசன் எழுதிய கடைசிப் பாடல் இதுதான் என்று இத்தனை நாள் எண்ணிக் கொண்டிருந்தேன்...
எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தேன்...!
ஆனால் இன்று கண்ணில் பட்ட ஒரு தகவல் , என் எண்ணம் தவறென எடுத்துக் காட்டியது..!.
சினிமாவுக்காக கண்ணதாசன் கடைசியாக எழுதியது அந்த “மூன்றாம் பிறை” பாடல்தான்...!
ஆனால் ..தமிழுக்காக ..தமிழர்களுக்காக கண்ணதாசன் எழுதிய கடைசிக் கவிதை...
இதோ..அது பற்றிய தகவல்...
உடல் நலமில்லாமல் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கண்ணதாசன்...
அந்த சமயத்தில் ..அமெரிக்காவில் வாழும் தமிழ் அன்பர்கள் , தங்கள் குழந்தைகளோடு கண்ணதாசனைக் காண வந்தார்களாம்...
அந்தக் குழந்தைகளோடு கண்ணதாசன் தமிழில் உரையாட ..அவருக்கு அதிர்ச்சி...!
வந்த எந்த தமிழ் குழந்தைக்கும் தமிழில் பேசத் தெரியவில்லை...!
கண்ணதாசன் அந்த அமெரிக்க தமிழர்களிடம் ஆழ்ந்த மன வருத்தத்துடன் கேட்டாராம்...
“தமிழர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தமிழை சொல்லித் தர வேண்டாமா..?”
இப்படிக் கேட்ட கண்ணதாசன் , அமெரிக்க மருத்துவமனையில் .. அந்த வேளையிலேயே எழுதிய அழகிய கவிதை ஒன்று...!
“மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -இங்கு
மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்
தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற
தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!”
# இதுவே கண்ணதாசனின் கடைசிக் கவிதை...!
# ஆம்...கண்ணதாசன் தமிழுக்கு , தமிழர்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமையை , கவிதையாய் எழுதி தன் கணக்கை முடித்துக் கொண்டு போய் விட்டார்...!
"அவன்தான் மனிதன்" படத்திற்காக கண்ணதாசன் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன...!
“கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா..
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று...“
நன்றி வெங்கட்

பாராட்டி மகிழ்வோம்.

 பாராட்டி மகிழ்வோம்.

உழைப்பின் விளைச்சல் உயர்வு
என்பதை உரக்கச் சொல்லும்
பால்வீ வீரப்பன்
சென்னை நகரத்தார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவராக நேற்று தேர்வு.
சென்னை பெருநகரத்தில் அரை நூற்றாண்டை எட்டிப் பிடிக்க உள்ள பால்வீ பர்னிச்சர் மற்றும் ஊட்டியில்
அருமையான
பெரிய அளவில் ரிசார்ட்ஸ் என நாளும் உழைப்பை மூலதனமாக்கி தொடர்ந்து நேர்த்தியாக உள்ள அன்புச் சகோதரர், நாட்டரசன்கோட்டை
பால்வீ வீரப்பன் அவர்கள் சென்னை நகரத்தார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவராக தேர்வானது அறிந்து மகிழ்ச்சி, பாராட்டுக்கள்.
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் நெறியாளர் இவர்.
எப்போதும் நேர்வழியும் நேர்த்தியான எண்ணமும் நிரந்தர உயர்வுக்கு வழி வகுக்கும்.
வாழிய இவர்கள் தலைமையில் உள்ள நிர்வாகிகள் பணி.
செயலாளர் சிடி. நாராயணன், பொருளாளர் ஏ. நடராஜன், செயற்குழு உறுப்பினர்கள்
எம் ஏ. அண்ணாமலை, முத்து சோலையப்பன், ராம்நாத் அருணாசலம், எல். ரவீந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும்
வாழ்த்துகள்
. - மனிதத்தேனீ


Wednesday 30 December 2020

வாழிய பல்லாண்டு

 வாழிய

பல்லாண்டு . .
இன்று பிறந்தநாள் கண்டு மகிழும் மதுரை நகைச்சுவை மன்றத்தின் நிறுவனர், மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர், என்னை எப்போதும் மதுரை நகைச்சுவை மன்றத்தின் நிரந்தரத் தலைவர் என மகிழ்வோடும் உள்ளன்போடும் அழைத்து மகிழும் அன்புச் சகோதரர்
டாக்டர் என். சேதுராமன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ



போராட்டமே வாழ்க்கை.

 போராட்டமே வாழ்க்கை.

வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும் . இன்பமோ துன்பமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழ வைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது...
சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா...? என்றால் அதுதான் இல்லை. மேலும் மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வைப் பறி கொடுக்கிறான்...
இவ்வுலகில் உள்ள மற்ற உயிரினங்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை...
காரணம்!, அவைகளுக்கு வாழ்க்கையின் முடிவைப் பற்றிய பயமில்லை. அந்த வகையில் அவைகளுக்கு அறியாமை ஒரு வரம்...
தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் வெற்றி முடியாதற்குக் காரணம், அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது...
அது என்ன...? தன்னம்பிக்கை, மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்...?
அப்படி ஒன்று இருக்கிறதா…? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையைப் பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மன உறுதியொன்று மட்டுமே தீர்வாக அமைகிறது...
ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொண்டவன் வெற்றி கொள்கிறான், கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்...
ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ள மாட்டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது...
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளைத் தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளைப் பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்...!
ஆனால்!, தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவு செய்து, தனக்கு சோகமான முடிவை தேடிக் கொள்கிறான்...
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். இன்பமும், துன்பமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள்...
பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது...
சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது...
ஆனால்!, இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகம் இல்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த ஆன்மீகமும் இவர்களைக் காப்பாற்றவில்லை..
ஆம் நண்பர்களே...!
வாழ்க்கை என்பதே ஒரு போராட்டமே...! போராட்டம் இல்லாமல், எதிலும் வெற்றி பெறுவது குதிரைக்கொம்பே...!
வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு. அதை நழுவ விடாதீர்கள். வாழ்க்கை என்பது ஒரு கடமை, அதை நிறைவேற்றுங்கள்...!!
வாழ்க்கை என்பது, ஓர் குறிக்கோள், அதைச் சாதியுங்கள். வாழ்க்கை என்பது ஒரு சோகம், அதைத் தாங்கிக் கொள்ளுங்கள்...!!!
அதை வென்று காட்டுங்கள். வாழ்க்கை என்பது ஒரு பயணம், அதை நடத்தி முடியுங்கள்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Tuesday 29 December 2020

அச்சகத் துறை அறிவுசார்ந்த துறை என்பதன் முன்னோடி திரு டி. சீனிவாசாச்சாரியார் .

 அச்சகத் துறை அறிவுசார்ந்த துறை என்பதன் முன்னோடி

திரு டி. சீனிவாசாச்சாரியார் .
வாழ்க்கையில் ஆர்வம் இருக்கும் வரை ஒருவருக்கு இறப்பில்லை என்பதற்கு சீனிவாசாச்சாரியாரின் வாழ்க்கை ஓர் உதாரணம்'பிரதமர் பாராட்டு..
சென்னை மந்தைவெளிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் டி.சீனிவாசாச்சாரியார் (வயது 95). தமிழ்மற்றும் சம்ஸ்கிருதம் இரண்டிலும்புலமை மிக்கவர். சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தின் அர்ச்சகராக பணிபுரிந்துள்ளார். ஆன்மிகம் தொடர்பாக 16 நூல்கள் எழுதியுள்ளார்.
மதுராந்தகம் சம்ஸ்கிருத கல்லூரியில் சிரோன்மணி பட்டம்பெற்ற இவர் சிறுவயது முதலேஅச்சகம் வைத்து நடத்தியுள்ளார். அச்சகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர், அகோபில மடத்தில் 42, 43-வதுஜீயர்களிடம் வேதாந்த, தர்ம சாஸ்திரங்கள், பாஞ்சராத்ர ஆகமங்களைக் கற்றுள்ளார்.
இந்நிலையில், 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் உரையாற்றும்போது, தமிழகத்தைச் சேர்ந்த சீனிவாசாச்சாரியார் தனது95 வயதிலும் கணினியில் தானேதட்டச்சு செய்து புத்தகம் எழுதுகிறார்.அவரது இளமை காலத்தில் கணினி இருந்திருக்காது. கல்லூரி நாட்களிலும் இல்லை. இளமைப் பருவத்தில் இருந்தது போலவே இப்போதும் அவரது மனதிலும் தன்னம்பிக்கையும் ஆர்வமும் இருக்கிறது. நம் வாழ்நாள் முழுவதும் ஆற்றல் நிரம்பியுள்ளது. வாழ்க்கையில் ஆர்வம் இருக்கும் வரை ஒருவருக்கு இறப்பில்லை என்பதற்கு சீனிவாசாச்சாரியாரின் வாழ்க்கை ஓர் உதாரணம்' என்றுகுறிப்பிட்டார்.
பிரதமர் பாராட்டு தெரிவித்தது குறித்து சீனிவாசாச்சாரியாரிடம் கேட்டபோது, 'பிரதமர் பாராட்டியது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவருக்கு என்னைப் பற்றி எப்படி தெரிந்ததுஎன்பது இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது.
உலகில் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடிக்கு எனது ஆசீர்வாதங்கள்.சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு பிரதமர் இதற்கு முன் இருந்ததில்லை.
ஆன்மீகம் தொடர்பாக எழுதி வருகிறேன். கடந்த 2000-ம் ஆண்டு கணினி பயிற்சி அதன்மூலமாக தானேதட்டச்சு செய்து எழுதி வருகிறேன். சிறுவயதில் அச்சகம் வைத்து நடத்தி வந்தேன். பின்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார்போல், கணினியில் தட்டச்சு செய்ய கற்றுக் கொண்டேன். கடந்த 2000-ம் ஆண்டு முதல் நானே தட்டச்சு செய்து வருகிறேன். இதுவரை 16 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். அவற்றில் பெரும்பாலான புத்தகங்கள் இந்து கோயில்கள் தொடர்பானவை' என்றார்.
தனது சம்ஸ்கிருத சேவைக்காக பாஞ்சராத்ர பஞ்சானனா, கைங்கர்ய மான், பாஞ்சராத்ர ஆகம மார்த்தாண்ட, அகோபில மடத்தின் ஆஸ்தான வித்வான், ஸ்மிருதி பாஸ்கரா, தர்மசாஸ்த்ர விஷாரதா, தர்மசாஸ்த்ர விஹக்‌ஷனா, வேதாந்த ஆகமவாசஸ்பதி, ராமானுஜ சேவா ரத்னா, நல்லோர் விருது, சென்னை சம்ஸ்கிருத அகாடமியின் வைஷ்ணவ ஆகம ரத்னா உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இன்றும் 30-க்கும்மேற்பட்ட சீடர்களுக்கு வேதாந் தம், பாஞ்சராத்ர வகுப்புகள் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ராஜப்பா தஞ்சை

ஆயிரம் முறை வீழ்ந்தாலும்

 ஆயிரம் முறை வீழ்ந்தாலும்

மீண்டு எழுவோம் . .
குருவிடம் வந்து சேர்ந்த புதிதில் சிஷ்யனுக்கு ஒரு பிரச்னை இருந்தது. எந்த ஒரு முக்கியமான பணியைச் செய்தாலும் முதல் முயற்சியிலேயே அதில் முழுமையான வெற்றி அவனுக்குக் கிடைப்பதில்லை.
அதை குருநாதர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், சிஷ்யனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. எப்படி அந்தச் சிக்கலில் இருந்து மீள்வது என ஒவ்வொரு முறையும் கவலையோடு தான் பணிகளை ஆரம்பிப்பான். பதட்டம் பற்றிக் கொள்ளும்.
பதறினால் சிதறத் தானே செய்யும். ஒருமுறை கூட முதல் முயற்சியிலேயே வெற்றியைச் சுவைத்ததில்லை அவன்.
ஒருசில நாட்கள் அவனைக் கவனித்து வந்த குரு, ஒருநாள் அவனை அழைத்துப் பேசினார்.
‘‘கிளி ஜோதிடர்களின் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் கிளிகள் சீட்டை எடுக்க வெளியே வந்தாலும், அவை தன் சிறகை விரித்துப் பறக்க முயற்சிப்பதில்லை. மனிதர்களைப் போல நடந்து தான் வெளியே வருகின்றன. திரும்பவும் நடந்தே கூண்டுக்குள் செல்கின்றன. இது எதனால் என்று தெரியுமா?’’ என்று கேட்டார் குரு.
ஓரிரு நொடிகள் யோசித்து விட்டு, ‘‘தெரியவில்லை குருவே’’ என்றான் சிஷ்யன்.
குரு பேசலானார்.. ‘‘சுதந்திரமாகப் பறந்து திரியும் கிளியைப் பிடித்தவுடன் முதலில் அதன் சிறகுகளை வெட்டியெடுத்து விடுவார்கள். சிறகிழந்த கிளியானது அதை உணராமல் பறக்க முயற்சிக்கும். ஆனால், அதனால் இயலாது. தனக்கு இறகுகள் இல்லை என்று கிளிக்குத் தெரியாது. மீண்டும் மீண்டும் பறக்க முயற்சிக்கும். ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகும்..’’. கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் சிஷ்யன்.
‘‘வெட்டப்பட்ட சிறகுகள் மறுபடியும் நாளடைவில் வளர்ந்து விடும். கிளியால் அப்போது பறக்க முடியும். ஆனால் அது பறக்க முயற்சிப்பதில்லை! தான் ஒவ்வொரு முறையும் பறக்க முயன்று அது பலிக்காததால், தனக்கு இப்போது பறக்கும் சக்தி இல்லை என்று அது தவறாக நம்பிக் கொள்ளும். சிறகை விரித்துப் பறக்கும் பழக்கத்தையே மறந்து போய் விடும்..’’.
குருவின் வார்த்தைகளைக் கேட்கக் கேட்க கிளிக்கும் தனக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன என்பது அரைகுறையாகப் புரிந்தது சிஷ்யனுக்கு. முழுமையாகப் புரியச் செய்தார் குரு.
‘‘எத்தனை முறை முயற்சி செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எத்தனை முறை தோல்வியடைகிறோம் என்பதும் முக்கியமல்ல. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் அடுத்த முறை வெற்றி கிடைக்கும் என நம்புவதும், அதே நம்பிக்கையுடன் விடாமுயற்சியைத் தொடர்வதும் தான் முக்கியமாகும்.
இத்தனை தடவைகள் தோற்றுப் போனோமே என்ற கவலையை மனதுக்குள் கொண்டு சென்றால், அதனால் பதட்டமே ஏற்படும். அடுத்த முயற்சியும் தோல்வியாக முடியவே வாய்ப்புகள் அதிகமாகும். வெற்றியைச் சந்திக்க வாய்ப்பு இருந்தும், நம்பிக்கை இன்மையால் முழு அளவில் முயற்சி செய்யாமல் தோற்றுப் போவோம்..’’ என்றார் குரு.
அதன் பின்னர் தோல்விகளைப் பொருட்படுத்தும் பழக்கம் தொலைந்து போனது சிஷ்யனிடம். என்ன ஆச்சர்யம்... முதல் முயற்சிகளிலேயே வெற்றிகள் அவனைத் தேடி வந்தன.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

நினைவைப் போற்றிடுவோம். . முதுபெரும் தமிழறிஞர், நெற்குப்பை முனைவர் தமிழண்ணல் அவர்களது ஐந்தாம் ஆண்டு நினைவு தினம். தமிழுணர்வு மேலோங்கிட நமது பணிகளைச் செய்திடுவோம். வாழிய அவர் புகழ். - மனிதத்தேனீ


 

Monday 28 December 2020

மாநகர் மதுரையில்புதிய உதயம்....

 மாநகர் மதுரையில்

புதிய உதயம்....
மதுரை பேலஸ் ரோடு நட்சத்திரா பிரிண்டர்ஸ் ( மல்டி கலர்) நிறுவனத்தில் இன்று புதிதாக பேன்சி திருமண அழைப்பிதழ் மற்றும் அனைத்து விதமான கார்டுகள் விற்பனைப் பிரிவு தொடக்க விழா நடைபெற்றது.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிட தெய்வநெறிக் கழகத் தலைவர் பூஜ்ய ஸ்ரீ சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி ஆசி வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
நிகழ்வில் மடோபா நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அச்சக நண்பர்கள், உறவினர்கள், பல்துறை நண்பர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
கடந்த 21 வருடங்களாக அச்சகத்துறையில் சிறப்பாகப் பணியாற்றிவரும் நிறுவனம் இன்று புதிய வணிகத்தில் தடம் பதிக்கின்றது.
அதன் உரிமையாளர் ஓய்வறியா உழைப்பாளி, தொடர் உழைப்பினால் உயர்ந்து வரும் அருமை இளவல்
பி. கிருஷ்ணகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் விழா ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.
வாழிய தொழில் மேன்மை.










நம்முடைய பிரச்சனை எல்லாம் பிரச்சனையே அல்ல.

 நம்முடைய பிரச்சனை எல்லாம் பிரச்சனையே அல்ல.

அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர், *’நான் கற்ற பாடம்’* என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதியுள்ளார்.
அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வேலைப் பளு அதிகம் இருந்த ஒரு நாள், வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ... அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தியிருக்கிறார்.
‘முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை (problem) தருகிறீர்களே? எப்படி என்னால் வேலை பார்க்க முடியும்?’ என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளியிருக்கிறார். அவர் பேசியதில் *’பிரச்சினை’* என்ற சொல் பல முறை உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னாராம்:
‘நீ பேசும் போது *பிரச்சினை*’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சினை என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? உனக்கு முதுகுத் தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது *பிரச்சினை.*
உன் வீடு எரிந்து போய், இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது *பிரச்சினை...* ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே *பிரச்சினை.*
இதுபோன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம். மற்றபடி நீ *பிரச்சினை* என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே *அசௌகரியங்கள் (inconveniences).*
இதுபோன்ற *அசௌகரியங்கள்* வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்தச் சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும். ஆனால் மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அவை, அற்ப விஷயங்களாகத் தோன்றும். இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது. நான் சொல்வதை நன்றாக நினைவு வைத்துக்கொள்.
*நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இதுபோன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது‘* என்று மிகவும் அமைதியாக அறிவுரை கூறியிருக்கிறார்.
அவர் சொன்னது மிகப் பெரிய பாடமாக எனக்கு இருந்தது. அன்றிலிருந்து நான் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும் போதெல்லாம் அது *உண்மையான பிரச்சினையா, இல்லை அப்போதைய அசௌகரியமா* என்று என்னையே கேட்டுக் கொள்ள ஆரம்பித்தேன். நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்றும் உண்மையில் அவை அவ்வளவு பெரிய விஷயங்கள் அல்ல என்றும் புரிய ஆரம்பித்தது.
*கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது"* என்று அனுபவப் பூர்வமாகச் சொல்லியிருந்தார்..
நாமும் நிதானமாக யோசிப்போம்..நமது பிரச்சினை உண்மையில் பிரச்சினை தானா, இல்லை தற்போதைய அசௌகரியமா என்று.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

அயோத்திச் சொத்து மீட்ப்பினைத் தொடர்ந்து அடுத்த மீட்பு காசியில் தொடங்கி விட்டது.

 அயோத்திச் சொத்து மீட்ப்பினைத் தொடர்ந்து அடுத்த மீட்பு காசியில் தொடங்கி விட்டது.

காசிச் சொத்துக்களை (மிகப் பெரிய சிக்ரா நந்தவனம் பகுதி) மீட்பதில் மின்னல்வேகம் எடுத்திட நமது தலைவர் வழக்கறிஞர்
பழ. ராமசாமி தலைமையில்
ஆக்கிரம்மிப்பாளருடன் சமரசம் பேசி தாமதமின்றி பல நூறு கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டெடுப்பதில் குழுவில் செல்வாக்கு மிக்க கோட்டையூர்
மு சொ. அழகப்பன், பணி நிறைவு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி அரிமளம் எஸ். முத்துக்குமார் தேர்வாகியுள்ளனர். மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக பள்ளத்தூர் டி. தேனப்பன், தேவகோட்டை எஸ். கதிரேசன், ஆத்தங்குடி என். நாச்சியப்பன் அவர்கள் இன்று ஒருமனதாகத் தேர்வானது அறிந்து மகிழ்ச்சி.
இது புதிய நம்பிக்கையை நடவு செய்கின்றது. இனி நமது எல்லா பலமும் களத்தில் முனைப்பு காணும்.
விரைவில் மீண்டும் நம்வசமாகும் நந்தவனம்.
காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் புதிய வரலாறு தொடங்கி விட்டது.
வாழிய மீட்புப் பணிகள்.
அயோத்தியில் மீட்புப் பணியில் கடுமையாக உழைத்த அண்ணன், காளையார்மங்களம்
கே என். சுப்பிரமணியன் (K N S) அவர்களுக்கு நமது சமூகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.
வாழிய பணிகள் - மனிதத்தேனீ

காலை 12 மணிக்கு நடைபெறும் விழா

 


பாராட்டி மகிழ்வோம் . .

 பாராட்டி மகிழ்வோம் . .

நோபல் பரிசு வாங்கப் போகும் தமிழ்ப்பெண்!
கற்பனையில் கூட எல்லைகளை நிர்ணயிக்க முடியாத அளவில் பறந்து விரிந்து கிடக்கும் பிரமாண்டமான பிரபஞ்சவெளி எண்ணற்ற ஆச்சரியங்களும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத புதிர்களும் நிறைந்தது. இந்த மர்ம தேசத்தில் இன்னும் முழுவதுமாக அவிழ்க்கப்படாத முடிச்சுகளில் ஒன்று "கருப்பு துளைகள்" என அறியப்பட்டிருக்கும் black holes.
பூமியிலிருந்து 1260 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளது இந்தக் கருந்துளை. அதாவது அங்கிருந்து புறப்பட்ட ஒளி நம்மை வந்து அடையச் சுமார் 1260 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்று அர்த்தம். சூரியன் பிறந்தே சுமார் 460 கோடி ஆண்டுகள்தாம் ஆகின்றன
இந்த கருப்புத் துளைகள் பற்றிய விண்ணியல் ஆராய்ச்சிகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடந்து கொண்டு வருகின்றன. இதில் ஒரு புதிய விஷயத்தைத் தனது ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்து உலகநாடுகளிலுள்ள விண்ணியல் விஞ்ஞானிகளை வியக்க வைத்திருக்கிறார் பிரியம்வதா என்னும்
இந்தியப் பெண் விஞ்ஞானி.
பிரியம்வதா என்னும் பிரியா டெல்லியில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தையார் வெங்கடேச நடராஜன் ஓர் எஞ்சினீயர். தாயார் லலிதா நடராஜன் ஒரு சமூகவியல் பட்டதாரி. இரு சகோதரருடன் பிறந்த பிரியா எல்லாருக்கும் மூத்தவர். மேற்படிப்புக்கு அமெரிக்கா போனவர். உலகப்புகழ் பெற்ற அமெரிக்க MIT பல்கலைக் கழகத்தில் விண்ணியலில் முதுகலை, முனைவர் பட்டங்கள் பெற்று தற்போது அமெரிக்க, யேல் பல்கலைக்கழகத்தில் விண்ணியல் துறையின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர். தனது ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர். டென்மார்க் நாட்டின் கியூபன் ஹோவன் விண்ணியல் பல்கலைகழகத்தில் சிறப்பு பேராசியராக அழைக்கப்பட்டிருப்பவர். டெல்லி பல்கலை கழகத்தின் வாழ்நாள் பேராசிரியராகவும் கௌரவிக்க பட்டிருப்பவர்,
உலக விண்ணியல் விஞ்ஞானிகள் பிரமித்து போகுமளவிற்கு இவர் சமீபத்தில் கண்டு பிடித்திருப்பது என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்ள கருப்பு துளைகளைப் பற்றி நாம் சற்று புரிந்து கொள்ள வேண்டும்.
விந்தைகள் நிறைந்த பேரண்டவெளியில் ஒரு பகுதி இந்த கருங்குழிகள் அல்லது கருந்துளைகள் (Black Hole) என்பன! இவை வலுவான ஈர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ளவை! இவை தாமும் ஒளிராது, தம் மீது விழும் ஒளியையும் பிரதிபலிக்காது! எனவே, கருந்துளையை நேரடியாகப் பார்க்க முடியாது.
நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் கருந்துளையை இனம் காண வானவியலாளர்கள் வேறு வழிகளைக் கண்டுள்ளனர். அதன் மிகக் கூடுதலான ஈர்ப்பு விசையின் காரணமாக, அதைச் சுற்றி இருக்கும் வான் முகில்கள், விண்மீன்களைப் பிடித்துக் கபளீகரம் செய்துவிடும். அவ்வாறு அருகில் உள்ள பொருள்களைக் கபளீகரம் செய்யும்போது அந்தப் பொருள்கள் மேலே எறிந்த கல் நேரே கீழே விழுவது போல நேரடியாகக் கருந்துளையில் விழாது. வாஷ்பேசினில் நீர் சுழன்று சுழன்று துளைக்குள் விழுவதுபோலக் கருந்துளையைச் சுற்றிச் சுற்றிப் பொருள்கள் விழும்.
இதன் சுற்றுப்பாதையில் இப்படிச் சுழன்று கொண்டிருக்கும் கோள்களின் வேகம், அவைகள் இருக்கும் நிலைகள் போன்றவற்றின் மூலம், இந்த கருந்துளைகளின் அமைப்பைக் கணக்கீடுகள் மூலம், எப்படியிருக்கும் எனக் கணித்திருக்கிறார்கள். வளரும் தொழில் நுட்பம் கைகொடுக்க, பெருமளவில் கணினிகள் மூலமும் ராட்சத டெலஸ்கோப்புகள் மூலமும் இந்தக் கணக்கீடுகளை உறுதி செய்திருக்கிறார்கள்.
இந்தக் கருந்துளைகள் இருக்கும் அடர்கருப்பு பகுதி, வாழ்நாள் முடிந்த பின் எரிந்துபோன நட்சத்திரங்களின் கூட்டம் என்றும். அவற்றுடன் புதிய எரிந்த நட்சத்திரங்கள் சேர்வதால் அவை வரம்பின்றி வளர்கின்றன என்றும் சொல்லப்பட்டது.
இந்தப் பின்னணியில் பிரியம்வதா கடந்த சில ஆண்டுகளில் , கருந்துளைகளை உருவாக்கும் அடிப்படையான அடர்கருப்பு பொருள்களின் (dark matter) இயல்புகளையும், கருந்துளைகள் உருவாகி வளர்வது குறித்தும் ஆராய்ந்து, கட்டுரைகள் தந்திருக்கிறார். "பலகாலமாக நம்பப் பட்டு வந்தது போல, இந்த கருங்குழிகள் இறந்த நட்சத்திரங்களின் தொகுப்பு இல்லை; அவை ஒரு வாயுவாக தானாகவேஉருவாகி மிக வேகமாக வளர்ந்து ஒரு கட்டத்தில் தன் வளர்ச்சியைத் தானே நிறுத்திக் கொண்டுவிடுகிறது: கருந்துளைகளுக்கும் வரம்பு, விளிம்பு உண்டு;" என்பது தான் இவர் கண்டுபிடித்து அறிவித்திருக்கும் விஷயம்.
இந்த முடிவு இப்போது விண்ணியல் விஞ்ஞானிகளுக்கு பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இது கரும் துளைகளை பற்றிய ஆராய்ச்சிகளை வேறு கோணத்திற்கு இட்டுச் செல்லப் போகிறது.
அவர் முதன்முதலாக கண்டுபிடித்து விஞ்ஞானிகளுக்கு அறிவித்திருக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு உலக அரங்கில் பிரமிப்பை உண்டாக்கி உள்ளது ! "ராமன் விளைவு", "சந்திரசேகர் வரையறை" என்பதைப் போல "பிரியா வரம்பு" என்பதும் பேசப்பட்டு வருகிறது.
பிரியம்வதாவின் இந்த அரிய ஆராய்ச்சிக்காக அவருக்கு பல நாடுகளின் நிறுவனங்களின் விருதுகளும் ஃபெலோஷிப்புகளும் வழங்கப்பட்டிருக்கிறது ஸ்வீடன் நாட்டில் வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த விருதை மிகவிரைவில் இவர் பெறுவார் என விஞ்ஞான உலகம் கணித்திருக்கிறது.
ஆண்டு தோறும் தவறாமல் பாரதிக்கு விழா எடுத்து அதில் அரிய சாதனைகள் செய்தவரைத் தேர்ந்தெடுத்து "பாரதி விருது" வழங்கும் வானவில் பண்பாட்டு கழகம் இந்த ஆண்டின் பாரதி விருதுக்குப் பெருமைக்குரிய இந்த தமிழ்ப்பெண்மணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
"வானை, கடல்மீன்களை அளப்போதோடு நின்றுவிடாமல் விண்ணியல் சாத்திரத்தில் தமிழ் மக்கள் தேர்ச்சி பெற்று அவர்கள் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்" என கனவுகண்டவன் பாரதி. அந்தக் கனவை மெய்ப்பித்திருக்கும் பிரியம்வதாவை, அந்த விருதுக்குத் தேர்வு செய்திருப்பது, மிகப்பொருத்தமானது.
விண்ணியல் விஞ்ஞானி பிரியம்வதா நடராஜன் அவரது சாதனைக்காகவும், இந்திய ஊடகங்களின் வெளிச்சம் இன்னும் விழாத இந்தப் பெருமைக்குரிய தமிழரைத் தேடிக் கண்டு பிடித்தற்காக வானவில் பண்பாட்டு கழக நிறுவனர் ரவி அவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
- Ramanan
நன்றி வெங்கட்ராமன் ராமநாதன்

கொடுப்பினை (ஆகூழ்) கொள்ளாதீர்கள்.

 கொடுப்பினை (ஆகூழ்) கொள்ளாதீர்கள்.

ஆகூழ், அதாவது 'அதிர்ஷ்டம்' என்பதற்கு என்ன பொருள் தெரியுமா...?, அதாவது திர்ஷ்டம் என்ற வடமொழிச் சொல்லுக்கு பார்வை என்பது பொருள்...
அதிர்ஷ்டம் என்றால் பார்வையின்மை, குருட்டுத்தனம் என்று பொருள்...
ஆகூழ் என்ற சொல்லின் பொருள் இப்படி இருக்க, பலரும் அதனைப் பயன்படுத்தித் தங்களை சோம்பேறியாக்கி வருகிறார்கள்…
அறிவினாலும், அறிவியலாலும் ஏற்றுக் கொள்ள முடியாததே மூடநம்பிக்கை ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்...
ஆனால்!, அதுவே அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் அது மூடநம்பிக்கையே...!
‘’அதிர்ஷ்டம்’’ என்னும் பெயரில் மக்களிடையே பரவியுள்ள மூடநம்பிக்கைகள் பெருமளவு காரணம் காட்டியே உழைக்காமல் சோம்பேறிகளாக நிறையப் பேர் உள்ளனர்...
அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தான். ஒரு நாள்!, தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது.
அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை...
அதனால்,
'அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகி விடுவேன்’ என்று நினைத்தான்...
அந்தக் காசைத் தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். அதைத் தன் மனைவியிடம் கொடுத்து இந்த சட்டைப் பையை பத்திரமாக வைத்திருக்கும்படி கூறினான்...
அன்று, அவனுக்கு மற்ற நாளை விட அதிக வருமானம் கிடைத்தது...
'எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான்.
அன்றிலிருந்து அவன் நாளும் மனைவியிடம் அந்த சட்டைப் பை வாங்கி காசை தொட்டுப் பார்த்துக் கொள்வான். வெளியே எடுக்க மாட்டான்...
சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.பல வருடங்களுக்குப் பின்,ஒரு நாள் தன் மனைவியிடம்,
''அந்தக் காசைப் பார்க்க வேண்டும் போலுள்ளது'' என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!, அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று...?’ என்று குழப்பத்துடன் பார்த்தான்...
அதற்கு, அவன் மனைவி கூறினாள்,
''என்னை மன்னியுங்கள். உங்கள் சட்டை தூசியாக இருக்கிறதே!, என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்து விட்டது. எவ்வளவோ நான் தேடியும் கிடைக்கவில்லை. அதனால் நான் தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்'' என்றாள்...
''இது எப்போது நடந்தது...?'' என்று கேட்டான்...
''அந்தக் காசு கிடைத்த மறுநாளே'' என்றாள்...
அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும் தான் எனக்கு வெற்றியை ஈட்டித் தந்தது, அந்த நாணயத்தால் அல்ல, என நினைத்தான். முன்பை விட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்...
அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள்.உங்களை நம்புங்கள்...!
விடா முயற்சியும், தன் நம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்...
நம் எல்லோரிடமும் தலைமைக் குணம் உண்டு. பொருளற்ற பயமும், அவநம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மையும் தான், நம்மை அடிமைகளாய் வைத்திருக்கிறது...
ஆம் நண்பர்களே...!
தயவுசெய்து உங்களது திறமையையும், உழைப்பையும் நம்புங்கள். அதைவிட அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள்...!
அந்த மூட நம்பிக்கை உங்களை எதிர்மறை குணம் உள்ளவராக மாற்றி விடும். நல்ல வாய்ப்புகளை நழுவ விடாமல் முழுமனதோடு உழைப்பவர்களையே வெற்றி தழுவும்...!!
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் உழைப்பை மட்டுமே நம்புங்கள், ''அதிர்ஷ்டத்தை'' நம்பி நாட்களை வீணடிக்க வேண்டாம், அச்சத்தைப் போக்குங்கள். ஆனந்தமாய் வாழுங்கள்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு .

 


வாழிய

பல்லாண்டு . .
இன்று அகவை 69 இல் தடம் பதிக்கும் ஓய்வறியா உழைப்பாளி, நேர்வழியில் பொருள் சேர்த்து அதனை வாரி வழங்கி வரும் நற்பண்பாளர், சென்னை முத்து பார்மசி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர், அண்ணன் மேலைச்சிவபுரி
ஏ. ஞானம் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

அழகிய மாலை வேளை . . . அருமை நண்பர், பேராற்றல் மிக்க கவிஞர், பொதுப் பணித் துறை உதவிச் செயற் பொறியாளர் நெல்லை ஜெயந்தா மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் பணி நிறைவு அண்ணன் எஸ். பெரியசாமி அவர்களுடன் மனிதத்தேனீ.


 

அமெரிக்க பல்கலை நுழைவு தேர்வில் 1600 க்கு 1600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த சென்னை மாணவர்..

 அமெரிக்க பல்கலை நுழைவு தேர்வில் 1600 க்கு 1600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த சென்னை மாணவர்..

வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் படிக்க ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தகுதித்தேர்வான சாட் தேர்வில், சென்னையை சேர்ந்த மாணவர் 1600 க்கு 1600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஏ.பி.எல். குளோபல் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் ஆரவ் அஹுஜா என்ற மாணவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதன்மூலம் உலகின் முன்னணி கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ள இவர், அமெரிக்காவின் மாஸசூட்டஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, யேல் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரிகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க இருக்கிறார்.
ஐந்தாண்டுகள் வரை செல்லக்கூடிய இந்த சாட் நுழைவுத் தேர்வை எழுதிய 50 லட்சம் பேரில் 500 பேர் மட்டுமே 1600 க்கு 1600 மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர்.அதில் நம் தமிழகத்தை சேர்ந்த மாணவரும் ஒருவர்.
உலக அளவில் நடக்கும் தேர்வுகளிலும் நமது மாணவர்கள் முதலிடம் பிடிக்கும் தகுதியுடையவர்களே..
ஆனால்..?
நமது அரசியல்வாதிகள் இவர்களை முன்னேற விடுவதில்லை என்பதே வேதனையான உண்மை.
வாழ்த்துக்கள் ஆரவ் அஹுஜா .