Wednesday 27 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு*
🗝️குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீரருந்தவும். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.
🗝️பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள்.
அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.
🗝️புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள்.
நச்சுக் கனிகளை புழு துளைக்காது.
🗝️பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூசிகள் உட்காராது.
🗝️முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம்.
மரம் செழிப்பாக வளரும்.
பாம்பு ஓய்வெடுக்கும் இடத்தில் உங்கள் வீட்டைக் கட்டுங்கள். பாம்புகள் குளுமையான இடங்களில் மட்டுமே ஓய்வெடுக்கும்.
🗝️பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை
தோண்டுங்கள்.
🗝️பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள்..
நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
🗝️அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.
🗝️மீன்களை போல அடிக்கடி நீரில் நீந்துங்கள்.
நீங்கள் பூமியில் நடக்கும் போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.
🗝️அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.
🗝️நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.

No comments:

Post a Comment