Tuesday 19 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*காலம் யாருக்காகவும் காத்திருக்காது...*
''கடல் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை '' என்பார்கள். யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் 'நேரம்'.
தாமதம் தவிர்த்தல் ஒரு தவம். மிக நல்ல பழக்கம். நேரம் தவறாமை என்பது, எவரை நோக்கி நீங்கள் போகிறீர்களோ… அவருக்கு நீங்கள் கொடுக்கிற மரியாதை, அவர் மீது நீங்கள் வைத்திருக்கிற மதிப்பு.
ஒருமுறை நெப்போலியன் தம்முடைய தளபதிகளை விருந்திற்கு அழைத்தார். குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்கள் வராததால் அவரே தனியாக அமர்ந்து உணவருந்த ஆரம்பித்து விட்டார். அவர் சாப்பிட்டு முடிக் கும் நேரத்தில், தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக அறையின் உள்ளே நுழைந்தனர். உடனே சாப்பிட்டு விட்டு எழுந்த நெப்போலியன், “தளபதிகளே! சாப்பிடும் நேரம் முடிந்து விட்டது. வாருங்கள், நாம் இனி ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் போருக்குச் செல்வோம்” என்றார். அப்புறமென்ன, அன்று முழுவதும் தளபதிகள் பட்டினிதான்.
'பங்சுவாலிடி' என்பது ஏதோ அலுவலக வேலைக்கு மட்டுமானதல்ல. குடும்பத்திலும், சமூகத்திலும் தினம் தினம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு செயல்தான். சரியான நேரத்துக்கு ஒரு மாத்திரை சாப்பிடுவது கூட இதன் ஒரு பாகம்தான்.
நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போலத் தோற்றமளித்தாலும், பாறையைப் பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு.
ஜப்பானில் நேரத்துக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார்கள் . ஜப்பானில் ரயில் 5 நிமிடம் தாமதமாக வந்தால் கூட பெரும் தவறாக எண்ணி விடுவார்கள். பயணிகளிடம் அதிகாரிகள் மன்னிப்பு கேட்பார்கள். ஒரு காகிதத்தில் விளக்கியும் apology (மன்னிப்பும்) கேட்பார்கள் .அவ்வளவு மதிப்பு நேரத்துக்கு அங்கு .
TIME MANAGEMENT' என்பது எப்போதும் அவசியமான ஒன்று .அதை சிறு வயது முதலே கற்பிப்பதுதான் வளரும் தலைமுறை வளம் பெரும் வழி

No comments:

Post a Comment