Friday 31 July 2020

இந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கைது..

இந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கைது..
இந்து கடவுள்களை அவதூறாக பேசிய வழக்கில் ஆபாசப்பட இயக்குனர் வேலு பிரபாகரனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தனர்.
இயக்குனர் வேலு பிரபாகரன் எப்போதும் வக்கிரமான, ஆபாசங்களை முன்வைத்தே படம் எடுப்பவன். அதன்மூலம் ஏதாவது சர்ச்சை ஏற்படாதா, அப்படியாவது படம் ஓடாதா என்று எதிர்பார்ப்பவன். இன்னும் சொல்லப்போனால், அவன் கதையை நம்புவதை விட சதையை நம்புபவன்.
இப்படியே தானும் ஒரு இயக்குனர் என்று சொல்லிக்கொண்டு சினிமாவில் ஓட்டிக் கொண்டு இருக்கிறான். ஈ.வெ.ரா., கொள்கையில் பிடிப்பு உள்ளவனாகவும் தன்னை காட்டிக் கொள்வான்.
மேலும், இந்து மத கடவுள்களையும், மத நம்பிக்கைகளையும் மட்டுமே எப்போதும் கேவலமாக பேசுபவன்.சமயம் கிடைக்கும்போதெல்லாம் இந்து மதத்தை பற்றி கேவலமாக பேசி வந்த இவன், கந்த சஷ்டி கவசத்தை இழிப்படுத்திய மூடர்க் கூட்டம் யு-டியூப் சேனலின் சுரேந்தரினை ஆதரித்தும், இந்து மதத்தை மீண்டும் கேவலமாக பேசியும் பேட்டி கொடுத்துள்ளான்.
இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் மகேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், 'யு-டியூப் சேனலில் ஒரு பேட்டியில் வேலு பிரபாகரன் இந்துக்கள் பற்றியும், இந்து மதம் பற்றியும் அவதூறாக பேசி வருகிறான். கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகவும் பேசி வருகிறான். அவன் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,' என்று அந்த புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.
இந்த மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், இயக்குனர் வேலு பிரபாகரனை கைது செய்தனர்.
ஈ.வெ.ரா., கொள்கையில் பிடிப்பு உள்ளவனாகவும் தன்னை காட்டிக் கொள்வான்.
புரட்சிகருத்துகளை கூறுவதாக சினிமாபடம் எடுத்த 70 வயதுவுடைய இவன் தனது படத்தில் நடித்த 35 வயது நடிகையை திருமணம் செய்து கொண்டு,அவனின் தலைவன் வழியை அப்படியே பின்பற்றியவன்.இதுதான் ஈ.வெ.ரா.கொள்கையோ..?
கடவுள் மறுப்பு கொள்கை உடையவன் என்று கூறிக் கொள்ளும் இவன் நாளைய மனிதன், அதிசயமனிதன் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகவும், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கி அனல் பறக்கும் வசனங்களை பேசி நடித்தவன். கடந்த சிலவருடங்களுக்கு முன்பு காதல் கதை என்ற வயது வந்தோருக்கான படத்தை தயாரித்து இயக்கினான் வேலுபிரபாகரன். உலகில் காதல் என்று எதுவுமே கிடையாது எல்லாமே உடல் சார்ந்த இனக்கவர்ச்சி மட்டுமே என்றும் அவன் கூறி வந்தான்.
இந்த நிலையில் தான் இயக்கிய காதல் கதை படத்தில் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக நடித்த ஷெர்லி என்ற நடிகையை காதலிப்பதாக கூறி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டான்.
ஏற்கனவே இவர்கள் இருவரும், லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இருவரும் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.
பெரியாரின் உண்மை தொண்டன் என்பதை நிரூபித்தவன்..அனைத்து விஷயத்திலும்..
நன்றி ராஜப்பா தஞ்சை
Chidhambharam Kannappan, Sankar Pandian and 6 others

பணிச்சுமையாம் மன அழுத்தமாம்...

பணிச்சுமையாம் மன அழுத்தமாம்...
கடுமையான பணி சுமையை தாங்க முடியவில்லை மன அழுத்தத்தை போக்கவே சொப்னா வீட்டிற்கு சென்றேன்: என்ஐஏ.விடம் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் வாக்குமூலம்..
திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ, சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சொப்னாவுடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்து என்ஐஏவிடம் சிவசங்கர் கூறியதாவது: தலைமை செயலகத்தில் பணி முடிய பெரும்பாலும் நள்ளிரவு ஆகிவிடும். அப்போது நான் கடும் மன அழுத்தத்தில் இருப்பேன்.
இந்த அழுத்தத்தை குறைப்பதற்காகவே சொப்னாவை பார்க்க அடிக்கடி சென்று வந்தேன். இதற்காகத்தான் தலைமை செயலகத்துக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவருக்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்தேன்.
சொப்னாவின் வீட்டுக்கு சென்று வருவதன் மூலம் மன அழுத்தம் பெருமளவு குறைந்தது. எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. சொப்னா வீட்டில் நடக்கும் மது விருந்திலும் கலந்துகொள்வேன். இதுவும் எனக்கு மகிழ்ச்சியை தந்தது. இந்த விருந்தில் வைத்து தான் சரித், சந்தீப்நாயருடன் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு முதலில் சொப்னாவை மட்டும் தான் தெரியும்.
அவரது கணவர் எனக்கு உறவினர் ஆவார். கேரள அரசில் எனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி என்னை அந்த கும்பல் சதியில் சிக்க வைத்து விட்டது. அதை புரிந்துகொள்வதில் நான் தவறு செய்துவிட்டேன். சொப்னாவுடன் வந்த கும்பல் தேச விரோத செயல்களில் ஈடுபட்டது குறித்து எதுவும் தெரியாது. நான் தேச விரோத செயல்கள் எதற்கும் துணை போகவில்லை. என்னை வழக்கில் சிக்க வைக்க சதி நடக்கிறது. சொப்னாவுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்னைகள் ஏற்பட்டது. இவ்வாறு அவன் கூறி உள்ளான்.
குறிப்பு;இவன் எல்லாம் ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி.?இவனது நடவடிக்கைகள் முதல்வருக்கு தெரியாமல் இருந்து இருக்குமா..?முதல்வருக்கும் பணிசுமையும் மன அழுத்தமும் இல்லாமலா இருந்து இருக்கும்..?
"படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான்,ஐயோவென்று போவான்."

கண.தியாகராஜன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.


வாழ்வின் சுவை

வாழ்வின் சுவை
எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிறோமா இல்லை எப்போதாவது மகிழ்ச்சியோடு இருக்கிறோமா.
நம்முடைய வாழ்க்கையைக் குறித்தும் வாழ்வது குறித்து நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது
மூன்று ஞானிகள் ஓரிடத்தில் ஒன்றாக அமர்ந்து இருந்தார்கள். ஒரு ஞானி கண்மூடி அமர்ந்திருப்பார் பேசமாட்டார். இரண்டாவது ஞானி கண்திறந்து அமைதியாக அமர்ந்திருப்பார் எவராவது ஏதாவது கேட்டால் பதில் சொல்வார். மூன்றாமவரோ சிரித்தபடி இருப்பார் மிக இயல்பாக இருப்பார் தாம் சொல்வதே சரி என்று எவரிடமும் வாதிட மாட்டார் ஆனால் முகத்தில் மாறாத சிரிப்பு.
ஒருநாள் அவர்களுக்கு முன்னாள் ஒரு தேவதை தோன்றியது. அதன் கையில் அழகான கிண்ணம். கிண்ணம் நிறைய அருமையான பழச்சாறு.
முதல் ஞானி கண் மூடி அமர்ந்திருந்தார் தேவதை ஒருத்தி வந்திருக்கிறாள் என்பதை தன் ஞானத்தால் அறிந்து கொண்டார். இரண்டாவது ஞானி தேவதையை பார்த்தார். அதன் கையில் இருந்த கிண்ணத்தையும் பார்த்தார் ஆனால் எதுவும் கேட்கவில்லை.
சிரித்தபடி அமர்ந்திருந்த மூன்றாவது ஞானியோ தேவதையை பார்த்து கேட்டார் தேவதையே கையில் என்ன கிண்ணம். அதில் என்ன இருக்கிறது?
தேவதை கூறியது ஐயா ஞானிகளே இந்த கிண்ணம் நிறைய *வாழ்க்கை என்கிற பழச்சாறு* நிரம்ப இருக்கிறது சுவைத்துப் பாருங்கள் என்றது.
கண் மூடியே அமர்ந்திருந்த முதல் ஞானி சட்டென்று பேசினார்
முதலில் இதை எடுத்துக் கொண்டு போய் விடு. இதன் வாடையே எனக்கு பிடிக்காது. வாழ்க்கை என்றாலே எத்தனை வேதனை இதல் பழச்சாராம் கொஞ்சம் அருந்தினாலும் போதும் மீண்டும் மீண்டும் நான் பிறந்து துன்பப்பட வேண்டும் போ போ போய் விடு என்றார்.
தேவதை சிரித்துக்கொண்டே இரண்டாவது ஞானியை பார்த்தது. நீங்களாவது சுவைத்துப் பாருங்கள் என்றது. இரண்டாவது ஞானி சொன்னார் என்ன இது அவர் நீ கொண்டு வந்த பழச்சாறு ஒரு துளியை கூட சுவைத்து பார்க்காமல் இப்படி சொல்லிவிட்டாரே நான் அப்படி இல்லை பொறு நான் சுவைத்து பார்த்து விட்டு சொல்கிறேன். தேவதை கொடுத்த பழச்சாற்றை
ஒரு வாய் குடித்தார். மறுநொடி அப்படியே துப்பி விட்டார். அப்பப்பா என்ன கசப்பு என்ன கசப்பு இதை எப்படி சுவைத்துக் குடிக்க சொல்கிறாய். அவர் சொன்னது சரிதான் போல இருக்கிறது வாழ்க்கை என்றாலே முடிவில் கசப்புதான் போலிருக்கிறது என்றார்.
இப்பொழுது தேவதை மூன்றாவது ஞானியை பார்த்தது. அவர் சிரித்தபடியே அமர்ந்து இருந்தார் அவர் முன் கிண்ணத்தை நீட்டியது எதுவும் பேசவில்லை.
ஞானியின் பார்த்தார் கிண்ணத்தை எடுத்தார் பழச்சாற்றை மடமடவென்று குடித்து விட்டு கிண்ணத்தை வைத்தார். அப்புறம் பரவசமும் மகிழ்ச்சியும் ஆனந்தமுமாக வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார்.
மற்ற இரண்டு ஞானிகளுக்கும் வியப்பு என்ன இது எந்தக் கருத்தையும் சொல்லாமல் நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கிறீர்களே என்றார்கள்.
அதற்கு மூன்றாவது ஞானி சொன்னார் கருத்து சொல்ல இதிலென்ன இருக்கிறது. வாழ்க்கை என்கிற பழச்சாற்றை அப்படியே குடித்து விட வேண்டியதுதானே. அப்போதுதான் அதன் முழு சுவையும் தெரியும் அந்த சுவையை நான் உங்களுக்கு எப்படி உணர்த்த முடியும். உங்களில் ஒருவர் ஒரு துளி பழச்சாற்றை கூட சுவைக்கவில்லை. இன்னொருவரோ ஒரு வாய் குடித்துவிட்டு முழு சாரமும் இப்படித்தான் இருக்கும் என்று முடிவு கட்டிவிட்டார். நான் முழுவதும் குடித்தேன் என்ன சுவை என்பது எனக்கு தானே தெரியும். நான் தானே அதை உணர்ந்தவர். நீங்கள் அதை உணர வேண்டுமென்றால் முதலில் பழச்சாற்றை முழுவதும் குடிக்க வேண்டும் என்றார்.
நம்மில் பல பேர் அந்த முதலிரண்டு ஞானிகளைப் போல தான் வாழ்க்கையை பார்க்கிறோம். எதையும் நாம் முழுமையாக அனுபவித்து பார்ப்பதில்லை. மகரயாழ் வாழ்க்கையை முழுமையாக அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்கிற பொழுது அதன் சுவையை நாம் அறிய முடியும் சொற்களால் விளக்க முடியாத அந்த அற்புதத்தை வாழ்ந்து தான் அனுபவிக்க முடியும்.
சுவாமி விவேகானந்தர் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார் *இந்த உலகம் நல்லதோ அல்லது கெட்டதோ அல்ல ஒவ்வொருவரும் தங்களுக்கான உலகத்தை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.* இது உண்மைதான் ஒவ்வொருவரும் அவரவருக்கான உலகத்தையும் வாழ்க்கையையும் அவர் அவர்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


வாழிய பல்லாண்டு. அகவை 85 கண்டு மகிழ்ந்த (29-07-2020) தமிழ் கூறும் நல்லுலகின் பண்பாட்டுப் பெட்டகம், அன்னைத் தமிழின் அருந் தவப் புதல்வர், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணியின் அருளுடன் சிறப்புடன் வாழ்ந்திட வணங்கி வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு. - மனிதத்தேனீ


வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம்
விவாகமாகி சுமங்கலியாக வாழும் பெண்களும், கன்னிப் பெண்களும், மகாவிஷ்ணுவின் தேவியும், பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியுமான இலட்சுமி தேவியின் அருள் வேண்டி அனுட்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும். ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர். கன்னிப்பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டி கைக்கொள்வர்.
இந்நாளில் வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து கலசம் ஒன்றில் லட்சுமியை வணங்கித் தொடங்குவர். கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு என்பவற்றை இட்டு கலசத்தைப் பட்டாடையால் அலங்கரித்து, தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன இலட்சுமியின் உருவச்சிலையை அல்லது படத்தை கலசத்திலுள்ள தேங்காயில் வைப்பர். மஞ்சள் சரட்டை குங்குமத்தில் வைத்துக் கலசத்தில் அணிந்து வரலட்சுமியைக் கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவர்.
தீப ஆராதனை செய்து இனிப்பான பலகாரங்களைப் படைப்பர். பின்னர் கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை விரதமிருந்தவர் கையில் கட்டுவர். பின்னர் படைக்கப்பட்ட பொருட்களுடன் தாம்பூலம், மஞ்சள், புடவை போன்றவற்றை சுமங்கலிகளுக்கு தானமாகக் கொடுத்து ஆசி பெற்று காலை முதல் உண்ணாநோன்பிருந்ததை முறித்து தாமும் உண்டு விரதத்தை நிறைவேற்றுவர்.
அன்று முழுவதும் அஷ்டலட்சுமி தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வர். மாலை வேளைகளில் உற்றார்,சுற்றார் வீடுகளுக்குச் சென்று ஒருவருக்கொருவர் தாம்பூலம் பெற்றுக்கொள்வர்.
தமிழ்நாடு, இலங்கை, ஆந்திரா,கர்நாடகா,மகாராஷ்ட்டிரா மற்றும் பல இடங்களில் இந்த பண்டிகை ஆத்மார்த்தமாகவும் நிறைவாகவும் கொண்டாடப்படுகிறது!
நன்றி கோனாபட்டு சுப்பு

அயோத்தியில் பூமி பூஜை...நியூயார்க் டைம் ஸ்கொயரில் காட்சி தரும் ஸ்ரீ ராமர் புகைப்படம்...வீடியோ...சிறப்பு ஏற்பாடு!!

அயோத்தியில் பூமி பூஜை...நியூயார்க் டைம் ஸ்கொயரில் காட்சி தரும் ஸ்ரீ ராமர் புகைப்படம்...வீடியோ...சிறப்பு ஏற்பாடு!!
வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது.நமது பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதை முன்னிட்டு நியூயார்க் நகரில் இருக்கும் டைம் ஸ்கொயர் பில்போர்டில் ராமரின் புகைப்படங்கள், 3டி படங்கள், வீடியோக்கள் ஆகியவை ஒளிபரப்பப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க இந்தியா பொது மக்கள் விவகாரத்துறை தலைவர் ஜகதீஷ் செவானி கூறுகையில், ''அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்கும் நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
சிறப்பு ஒளிபரப்புக்காக உலகிலேயே மிகப்பெரிய பில்போர்டு அமைக்கப்படுகிறது.
இந்த பில்போர்டின் நீளம் 17,000 சதுர அடியாக இருக்கும். குத்தகையில் பில்போர்டுகள் இந்த நிகழ்வுக்கு என்றே எடுக்கப்படுகிறது. எல்இடி வெளிச்சத்தில் ராமரின் புகைப்படங்கள் ஜொலிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தை ஆங்கிலத்திலும், இந்தியிலும் ஒளிபரப்பாகும். கடவுள் ராமரின் புகைப்படம் வீடியோவாகவும், 3டி படங்களாகவும், கோயிலின் கட்டமைப்பு, உள் கட்டமைப்பு ஆகியவையும், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் புகைப்படங்களும் ஒளிபரப்பப்படும். இதற்கென பல்வேறு பில்போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகில் இருக்கும் சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கியமானது டைம் ஸ்கொயர்.
இந்தியர்கள் அன்று டைம் ஸ்கொயரில் கூடி இந்த நிகழ்வை கண்டு களிப்பார்கள். இனிப்புகள் வழங்கப்படும். இந்துக்கள் அனைவருக்கும் இந்த நாள் கனவு நாள். இந்த நாளை இந்துக்களாகிய நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்.
இது வாழ்நாளில் ஒரு முறை,அல்லது ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை அல்ல,
இது மனிதகுல வாழ்க்கையில் ஒரு முறை வரும் ஒரு நிகழ்வு.
ராமருக்கான கோயில் கட்டுவதை இங்கு தவிர வேறு எங்கும் சிறப்பாகக் கொண்டாட முடியாது.பிரதமர் மோடியின் ஆட்சியில், உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களின் கனவான , அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது உண்மையாகவுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாள் இவ்வளவு விரைவாக வரும் என நாங்கள் நினைத்ததில்லை. பிரதமர் மோடியின் தலைமை காரணமாக, அந்த நாள் வந்திருக்கிறது.இதனை நாங்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாட விரும்புகிறோம்'. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி ராஜப்பா தஞ்சை

Thursday 30 July 2020

எதிர்க்கட்சி தலைவர் இடத்தில் இருப்பவரோ மீடியாக்களோ என்ன செய்திருக்கவேண்டும்?

எதிர்க்கட்சி தலைவர் இடத்தில் இருப்பவரோ மீடியாக்களோ என்ன செய்திருக்கவேண்டும்?
அப்பன் சாவுக்கு போவதற்கே இ-பாஸ் வாங்க லஞ்சம் குடுத்தவன். மனைவி பிரசவத்திற்கு போக பாஸ்கிடைக்காதவன்னு, பாதிக்கப்பட்ட, அத்தனை பேரையும் திரட்டி தினமும் அம்பலத்தில் ஏற்றி அரசின் யோக்கியதையை வெளுத்திருக்க வேண்டும்..
ஆனா எதிர்க்கட்சியே சாத்தான்குளம் உதயநிதின்னு டுவிஸ்ட் ஆயி நிக்குது, மீடியாக்கள் பத்தி சொல்லத் தேவையே இல்லை. ரஜினி வீட்டு வேலைக்காரன் தும்மினாக்கூட விவாதம் நடத்துறதுல மும்முரம்..
என் நண்பனின் தாயார் படுகொலையானார் மகாபலிபுரத்தில் இருக்கும் அவன் காஞ்சிபுரம் வருவதற்குள் படாதபாடு விட்டான்.. வீடியோவுல டெட்பாடி காட்டி போலீஸ்காரர் கெஞ்சி கதறி பல மணி நேரம் கழிச்சி வந்தான் ..எது, வெறும் 60 கிலோ மீட்டர்.
என் உறவினர் பையன் இறந்துவிட்டான். 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செய்யாரில் இருந்து அவனின் தாயாரை அழைத்துவர அனுமதி கேட்டு தாசில்தார் பின்னாடி மூன்று மணிநேரம் சுற்றினார்கள். செத்துப்போன புள்ளைக்காக அந்தம்மா அழுவாங்களா, இல்லை தாசில்தார் பின்னாடி அலைவாங்களா?
இது மாதிரி எத்தனை சம்பவங்கள்.. ஏராளமானோரின் கண்ணீரை பார்த்து நொந்து போய்தான் ஆரம்பத்தில் இருந்து கத்திக்கொண்டி ருக்கிறோம். ஆனால் இ-பாஸ் கொடுப்பதை கொள்ளையாகவே ஆக்கிக்கொண்டுள்ளனர் அதிகார வர்க்கம்.
இன்னும் தொற்று பரவல் அதிகமாகும்போது தாலுகா விட்டு தாலுகா போவதற்கும் இ-பாஸ் கொண்டுவருவார்கள் இந்த அறிவாளிகள் என்று நினைக்கிறோம்.
ஆனா பாருங்க எதிர்க்கட்சியும் மீடியாக்களும் எதுவுமே நடக்கா மாதிரி வேடிக்கை பார்ப்பாங்க..

கோவிட் மருத்துவ கிட் வீட்டில் தேவை:

கோவிட் மருத்துவ கிட் வீட்டில் தேவை:
1. பராசிட்டமால்
2. மவுத்வாஷ் மற்றும் கர்ஜனுக்கான பெட்டாடின்
3. வைட்டமின் சி மற்றும் டி 3
5. பி காம்ப்ளக்ஸ்
6. நீராவிக்கான நீராவி + காப்ஸ்யூல்கள்
7. ஆக்சிமீட்டர்
8. ஆக்ஸிஜன் சிலிண்டர் (அவசரத்திற்கு மட்டும்)
9. ஆரோக்கிய செட்டு பயன்பாடு
10. சுவாச பயிற்சிகள்
கோவிட் மூன்று நிலைகள்:
1. மூக்கில் மட்டுமே கோவிட் - மீட்பு நேரம் அரை நாள். (நீராவி உள்ளிழுத்தல்), வைட்டமின் சி பொதுவாக காய்ச்சல் இல்லை. அறிகுறி.
2. தொண்டையில் கோவிட் - தொண்டை புண், மீட்பு நேரம் 1 நாள் (சூடான நீர் கவசம், குடிக்க வெதுவெதுப்பான நீர், தற்காலிகமாக இருந்தால் பாராசிட்டமால். வைட்டமின் சி, பி.காம்ப்ளெக்ஸ். ஆண்டிபயாடிக் விட கடுமையானதாக இருந்தால்.
3. நுரையீரலில் கோவிட்- இருமல் மற்றும் மூச்சுத் திணறல் 4 முதல் 5 நாட்கள். (வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ், சுடு நீர் கர்ஜில், ஆக்ஸிமீட்டர், பாராசிட்டமால், சிலிண்டர் கடுமையானதாக இருந்தால், நிறைய திரவம் தேவை, ஆழமான சுவாச உடற்பயிற்சி.
மருத்துவமனையை அணுக வேண்டிய நிலை:
ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிக்கவும். இது 43 (சாதாரண 98-100) க்கு அருகில் சென்றால் உங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவை. வீட்டில் கிடைத்தால், வேறு எந்த மருத்துவமனையும் அனுமதிக்காது.
* ஆரோக்கியமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்! *
இந்தியாவில் உள்ள உங்கள் தொடர்புகளுக்கு தயவுசெய்து செல்லுங்கள். இது யாருக்கு உதவக்கூடும் என்று உங்களுக்குத் தெரியாது.
டாடா குழுமம் நல்ல முயற்சியைத் தொடங்கியுள்ளது, அவர்கள் அரட்டைகள் மூலம் ஆன்லைனில் இலவச மருத்துவர்கள் ஆலோசனையை வழங்குகிறார்கள். இந்த வசதி உங்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது, இதனால் நீங்கள் மருத்துவர்களுக்காக வெளியே செல்ல வேண்டியதில்லை, நீங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருப்பீர்கள்.
கீழே உள்ள இணைப்பு, இந்த வசதியின் பயனைப் பெற அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளுக்குள் இருந்து ஆலோசனை, நாங்கள் வீட்டிலேயே செய்யலாம்
தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளில் எடுக்கப்படும் மருந்துகள்
1. வைட்டமின் சி -1000
2. வைட்டமின் ஈ (இ)
3. (10 முதல் 11) மணி வரை, சூரிய ஒளியில் 15-20 நிமிடங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
4. ஒரு முறை முட்டை உணவு ..
5. நாங்கள் குறைந்தபட்சம் 7-8 மணி நேரம் ஓய்வெடுக்கிறோம் / தூங்குகிறோம்
6. நாம் தினமும் 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்கிறோம்
7. அனைத்து உணவுகளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக இல்லை).
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த மருத்துவமனையில் நாங்கள் செய்வது அவ்வளவுதான்
கொரோனா வைரஸின் pH 5.5 முதல் 8.5 வரை மாறுபடும் என்பதை நினைவில் கொள்க
எனவே, வைரஸை அகற்ற நாம் செய்ய வேண்டியது, வைரஸின் அமிலத்தன்மை அளவை விட அதிகமான கார உணவுகளை உட்கொள்வதுதான்.
போன்றவை:
வாழைப்பழங்கள்
பச்சை எலுமிச்சை - 9.9 பி.எச்
மஞ்சள் எலுமிச்சை - 8.2 பி.எச்
வெண்ணெய் - 15.6 பி.எச்
* பூண்டு - 13.2 பி.எச்
* மா - 8.7 பி.எச்
* டேன்ஜரின் - 8.5 பி.எச்
* அன்னாசிப்பழம் - 12.7 பி.எச்
* வாட்டர்கெஸ் - 22.7 பி.எச்
* ஆரஞ்சு - 9.2 பி.எச்
நீங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை எப்படி அறிவது?
1. தொண்டை அரிப்பு
2. உலர் தொண்டை
3. உலர் இருமல்
4. அதிக வெப்பநிலை
5. மூச்சுத் திணறல்
6. வாசனை இழப்பு ....
மற்றும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை நுரையீரலை அடைவதற்கு முன்பு ஆரம்பத்தில் வைரஸை நீக்குகிறது ...
இந்த தகவலை உங்களிடம் வைத்திருக்க வேண்டாம். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இதை வழங்கவும்.

மொத்தமா மண் அள்ளிப்போடுவது, இதுதானோ..

மொத்தமா மண் அள்ளிப்போடுவது, இதுதானோ..
தவறாக வழிநடத்தப்படும் எடப்பாடி பழனிச்சாமியால் தமிழ்நாட்டில் எந்த தொழிலும் முழுமையாக நடைபெறப்போவதில்லை.
இப்போதைக்கு எல்லாம் அரைகுறை.. நாலு பேரை வெச்சு வேலை வாங்க ஆயிரத்தெட்டு ரூல்ஸ். இதுக்கு எதுக்குடா செலவு பண்ணி நஷ்டப்படணும்னு பல தொழில்கள் நிறுத்தப்பட்டிருக்கு..
இதுவரை பொறுமைகாட்டிய உற்பத்தி துறையினர் உள்ளிட்டோர் கடுப்புக்கு போயிருப்பதை விரைவில் காணலாம்..
இன்னொரு பக்கம்...
வாகன ஓட்டுநர்கள்,
கட்டிட தொழிலாளர்கள்
தங்கும் விடுதி பணியாளர்கள்
சமையல்காரர்கள்
புகைப்பட கலைஞர்கள்
சுற்றுலாவை நம்பியிருப்பவர்கள்
இதுமாதிரி குறைந்தபட்சம் 50 தரப்பினர் இருப்பார்கள்..
இவர்களெல்லாம் என்ன கதி ஆனார்கள் என்று யோசித்தார்களா?
ஒரு, லாயரே தெருத்தெருவா டீ விக்கற அளவுக்கு நிலைமை..
ஆரம்பத்தில் நிலைமை நன்றாகத்தான் இருந்தது. இதே எடப்பாடி பழனிச்சாமிக்கு, சென்னையில் உடனே லாக் டவுனுக்குள் லாக் டவுன் என்று யாரோ ஒருத்தர் ஐடியா கொடுத்தார்.
அதை நம்பி, அவகாசமே கொடுக்காமல் சென்னையில் நாலு நாள் லாக் டவுன்.. விளைவு, மொத்தபேரும் கோயம்பேட்டிற்கு ஓடினார்கள்.
அங்கு ஆரம்பித்தது பிரச்சனை. தொற்று பரவல் வேகமானது. கோயம்பேட்டிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பறந்தார்கள் தமிழகம் முழுவதும் பரவியது.. லாக்டௌவுனுக்குள் லாக்டௌன் சாதித்த லட்சணம் அதுதான். சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி கதை...
முதலமைச்சர் பழனிச்சாமி தன் தலையில் மண்ணை அள்ளிக்கொட்டிக்கொள்வதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தமிழகத்தின் தலையில் கொட்டிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் வேதனை..

''உதவிக்கரம் நீட்டுவோம்''

''உதவிக்கரம் நீட்டுவோம்''
நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதாதா...?
எதற்காக மற்றொருவருக்கு உதவி செய்ய வேண்டும்...?
பிறருக்கு நன்மை செய்ய நாம் ஏன் கடமைப்பட்டுள்ளோம்...?
நாமும் நம் குடும்பமும் நலமாக இருந்தால் போதும் என்றே பலரும் கருதுகின்றனர்...!
இம்மண்ணில் வாழும் மானிடப் பிறவிகள் அனைவரும் மற்றொருவரைச் சார்ந்தே வாழ வேண்டும், இதில் எவரும் விதிவிலக்கு அல்ல...
நமக்கு மரம் உதவுகிறது நிழல் கொடுத்து…
புல்லாங்குழல் உதவுகிறது இசைக்குத் தன்னுயிர் கொடுத்து...
ஏணி கூட உதவுகிறது நம்மை உயரத்தில் ஏற்றி விட...
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்வது மனித இயல்பு, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழும் இயல்பே குடும்ப வாழ்க்கையாக உருவாகியுள்ளது...
இந்த உதவும் மனப்பான்மையானது குடும்ப வாழ்க்கையைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக நிலைத்திருக்க வேண்டும்...
ஆனால்! இன்றைய காலகட்டத்தில் உதவ வேண்டிய நேரத்தில், சிலர் மனிதாபிமானம் இல்லாமல் பணத்தை மட்டுமே பெரிதாகக் கருதுகிறார்கள்..
ஆயினும், ஒரு சிலர் சகோதரத்துவத்தோடு உதவி செய்பவர்களால் தான் இன்னமும் மனிதகுலம் உயிரோடு வாழ்கிறது...
மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.
ஏனெனில், நாம் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவி பெற்றே வாழ்கிறோம். எனவே, உதவி செய்து வாழ்தல் இன்றியமையாதது ஆகும்....
பிறர்க்கு உதவி செய்யாமல் சேர்த்து வைக்கும் பொருளால் பயன் எதுவும் விளைவதில்லை. அந்தப் பொருள் வீணாகத் தான் அழியும்...
ஏனென்றால் இந்த உலகில் மனிதன் நிலையாக
வாழ்வதில்லை. எனவே மனிதன் வாழும் காலத்திலேயே, தான் சேர்த்த அளவுக்கு அதிகமான பொருட்களை பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும்...
ஆம் நண்பர்களே...!
நம்மை நாடி உதவி கேட்டு வருகிறவர்களுக்கு இயன்றளவு உதவி செய்து வாழ்வது தான் நல்ல வாழ்க்கை...
அதுதான் உங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும்...!
அடுத்தவர் வாழ்விலும் ஒளியேற்றி வைக்கும்...!!
இயன்றளவு பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்...!!!
அடுத்தவருக்கு உதவி செய்தால் பின்னால் அது உங்களுக்கே திரும்பக் கிடைக்கும். நாம் செய்தது நமக்கே திரும்பி வரும் என்பது தான் இப்பேரண்டத்தின் விதி...!
இயன்றளவு உதவுவோம்...!
இல்லாதவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்...!!
இயலுமாயின் இறுதிவரை அவர்களின் கண்ணீரைத் துடைப்போம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


துன்பமே துன்பப்படுமாம்.

துன்பமே துன்பப்படுமாம்.
*யாருக்கு இல்லை துன்பம?
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் துன்பத்தை அனுபவிக்கின்றன* மனிதனில் பிச்சைக்காரன் முதல் அம்பானி வரை துன்பத்தை அனுபவிக்கிறான். அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப துன்பங்களை அனுபவிக்கிறோம்.
அப்படியெனில் இன்பம் நல்லதா? துன்பம் நல்லதா ? உண்மையில் ஒருவனுக்கு துன்பமே நல்லது. ஏனெனில் இன்பம ஒருவனை பலவீனன் ஆக்கும். மாறாக துன்பம ஒருவனை பலவானாக மாற்றும். புண்பட புண்பட மனம் பண்படும்.
பகவான் கிருஷ்ணர் குந்தியிடம் உனக்கு வேண்டியதை கேள் என்றார். அதற்கு குந்தி , " கிருஷ்ணா , எனக்கு எப்போதும் துன்பத்தை மட்டும் தா " என்றாள். கிருஷ்ணர் ஏன் என்று கேட்க அதற்கு குந்தி தேவி,"கிருஷணா , இன்பத்தில் நான் உன்னை மறந்து விடுவேன். ஆனால் துன்பத்தில் நான் உன்னை ஒரு போதும் மறப்பதில்லை" என்றாள். அதிக துன்பத்தை அனுபவித்தவர்களில் குந்தி , ஹரிசந்திரன் போன்றோர் முக்கியமானவர்கள்.
யக்‌ஷன் தருமனை பார்த்து கேட்கிறான்," இந்த உலகத்தில் மிகவும் அற்பமானது எது? ". அதற்கு தருமர் ," கவலைப் படுவதே இந்த உலகில் மிகவும் அற்பமானது. ஏனெனில் அதனால் ஒரு பயனும் இல்லை" என்றார்.
ஆக 'கவலை' என்ற 'வலை'யில் சிக்கி தவிக்காதீர்கள். நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதை மறவாமல், இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்து இறைவனை அடைய சிந்தித்து, பாடி , உணர்ந்து முயற்சி செய்யுங்கள்.
வள்ளுவர் கூறுகிறார் எவன் ஒருவன் துன்பத்தை கண்டு துன்பப் படுவதில்லையோ அவனைக் கண்டு அந்த துன்பமே துன்ப படுமாம்.

Wednesday 29 July 2020

சிறு தொழில் மற்றும் பல வணிகம் மிகவும் நலிவடைந்து வருகிறது. உரியவர்கள் கவனிக்க வேண்டும். துணிச்சலான ஆளுமை அவசரம் அவசியம்.


கடத்தல் தீவிரவாதம் கூட்டணி.

காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே மாறி,மாறி ஆட்சி செய்த ஒரே காரணத்தால்தான் கேரளா முன்னணி மாநிலமாக உள்ளதோ..?
கேரளாவில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் 149 பேர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம், வயநாடு,காசர்கோடு,மலப்புரம் உட்பட சில மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் உட்பட 24 பேர் கடந்த 2016ம் ஆண்டு சிரியா சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை உறுதிப்படுத்துவது போல், கேரளா மற்றும் கர்நாடகாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் அதிகளவில் செயல்பட்டு வருவதாக ஐநா அமைப்பு சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், மத்திய உளவுத்துறை இது தொடர்பான அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது. அதில், '2017 முதல் 2019 வரை கேரளாவை சேர்ந்த மேலும் 149 பேர், வெளிநாடுகளுக்கு சென்று ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.இவர்களுடன் கேரளாவை சேர்ந்த பலர் தொடர்பு வைத்துள்ளனர், என்று கூறப்பட்டுள்ளது.
'ஐஎஸ் இயக்கத்தில் இணைந்துள்ள 149 பேரும், காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், எர்ணாகுளம், இடுக்கி, கொல்லம், பாலக்காடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
இவர்களில் 32 பேர் வளைகுடா நாடுகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர்.
149 பேரில்,100 பேர் தங்களின் குடும்பத்துடன் சென்றுள்ளனர். இதனால், இக்குடும்பங்களை சேர்ந்த பெண்கள், சிறுவர்களும் தீவிரவாதிகளாக மாறி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
உலக நாடுகளில் தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது போல..?இந்தியாவில் தீவிரவாதிகளின் புகலிடமாக கேரள மாநிலம் உள்ளது.
காங்கிரஸ் கட்சியும்,கம்யூனிஸ்ட்டும் தொடர்ந்து மாறி,மாறி ஆட்சி செய்யும் ஒரே மாநிலம் கேரளாதான்.இவ்வளவு சின்ன மாநிலமான கேரளாவில்தான்,நமது நாட்டிலேயே,அதிகமான தீவிரவாதிகளும், தங்கம் கடத்தல் மற்றும் ஹவாலா மோசடி மன்னன்களும் அதிகம் உள்ள முன்னனணி மாநிலமாக கேரளா உள்ளது.
இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து,நமது நாட்டிற்க்கு எதிரான தேசதுரோகிகளைத்தான் வளர்த்துள்ளன. ஆதலால்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளமாநிலத்தை தேர்வு செய்ததும்,கேரள மக்கள் ராகுல்காந்தியை எம்.பி.யாக தேர்வு செய்ததும் காரணமோ?
அண்மையில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் இருந்துதான் அதிகமானவர்கள் ஐஎஸ் இயக்கத்தில் இணைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.
நமது தேசத்தின் சுதந்திரத்திற்காக,நமது முன்னோர்கள் பலர் இரத்தம் சிந்தி,உயிரைக்கொடுத்து தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி,இன்று நமது தேசத்திற்கு எதிரான,தேச துரோகிகளின் புகலிடமாக உள்ளது.