ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்...
இவ்வுலகில் அளவிடமுடியா எண்ணற்ற நிகழ்வுகள் ஆனந்தத்தை தருபவையாக அமைந்துள்ளது. ஆனந்தத்தின் எல்லை சந்தோஷம்! சந்தோஷம்! ஆனந்தம் நிரம்பிருக்கும் இடத்தில்தான் அன்பும் கருணையும் இருக்கும். பூவுலகில் எதையும் மென்மையாக கையாளமுடியும். அந்த மிருதுவான உணர்ச்சி ஆன்மாவிற்கு ஓர் புதிய உற்சாகத்தை அளிப்பதாக இருக்கக்கூடும். வளமுடன் வாழ்வது என்றால், ஆனந்தமாக வாழ்வது எனப்பொருள். வளமுடன் என்பது உங்களிடம் என்னென்ன உள்ளது என்பதில் இல்லை! எப்படி இருக்கின்றீர்கள் என்பதில்தான் இருக்கின்றது.
நம் எல்லாவகைச் செயல்களும் நமது ஆனந்தத்தைக் குறிவைத்தே! ஒவ்வொரு நாளும் படுக்கைக்குமுன் இன்று எவ்வளவு ஆனந்தத்தை அனுபவித்தீர்கள் என நினையுங்கள். ஏன் இன்று இல்லை. அல்லது நேற்றைய தினத்தைவிட எப்படி குறைந்தது என யோசியுங்கள். மகரயாழ் விடைகாணுங்கள். அடுத்தநாள் முழு ஆனந்தத்தை அடைய முற்படுங்கள். *ஆனந்தவாழ்வின் தாரகமந்திரம் இதுவே!*
ஓர் யோகிடம் மூன்று வரங்கள் பெற்றான் ஒருவன். அவைகளை ஒருமுறைதான் உபயோகிக்க வேண்டும் என்பது நிபந்தனை. அவன் எதை விரும்பினாலும் உடனே நடக்கும் என்பது வரம். வீட்டிற்குச் சென்றான். அன்று அவனுக்கும் அவன் மனைவிக்கும் கருத்து மோதல் அதிகமாயின. மனம் வெறுத்து இனி இவளுடன் வாழ்வது சரியில்லை என நினைத்தான். அவள் இறப்பதேமேல் என நினைத்தான். அந்த வரத்தின் படி அவள் இறந்துவிட்டாள். ஊரார் கூடி அவளின் பெருமைகளைப் பற்றி பேச தான் அவசரப்பட்டு விட்டோமோ எனநினைத்து வருந்தினான்.
அவள் மீண்டும் உயிருடன் வந்தால் போதும் என நினைத்தான். அப்படியே வரத்தின்படி அவள் உயிர் பிழைத்தாள். அப்போது இன்னும் ஒருமுறைதான் வரம் கேட்க வேணும் என்ற நினைவு வந்தது எதைக் கேட்பது, ஒன்னும் புரியவில்லை.
ஆனாலும் அவன் மனம் இறைவா, வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் கிடைக்க, வரம் எனக்குத் தா என்றான். இறைவன் சொன்னான் இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழக் கற்றுக்கொள். ஆனந்தத்துடன் வாழ்வாய் என்றார். அனைவரும் *போதும் என்பதே பொன் செயும் மருந்து* என எப்போதும் நினைவுகொண்டு ஆனந்தமாக வாழ்வோம்.
No comments:
Post a Comment