Friday 15 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தி.மு.க.,வை தெறிக்கவிடும் விகடன் கார்ட்டூன்... மது ஆலைகளை மூட முன்வருவாரா மு.க.ஸ்டாலின்..?
டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் திமுகவினர் நடத்தும் மதுபான கடைகள் மூலம் தான் டாஸ்மாக் கடைகளுக்கு மது விநியோகம் செய்யப்படுகிறது. அந்த ஆலைகளை மூட உத்தரவிடாமல் மு.க.ஸ்டாலின் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக போராடுவது முரணாக இருக்கிறது என விமர்சனம் எழுந்து வருகின்றன.
டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் விற்பனைகளில் மது ஆலைகளுக்கு 60 சதவிகித வருமானம் செல்கிறது. குறிப்பாக அந்த மது ஆலைகள் பெரும்பாலானவை திமுக விஐபிகளால் நடத்தப்பட்டு வருகிறது, என்ரிகா எண்டர்பிரைசஸ், மோகம் பிரீவேரீஸ், ஷிவா டிஸ்டல்லரீஸ், ப்ரீவேர்ஸ், எம்.பி டிஸ்டில்லரீஸ், சதர்ன் அக்ரிஃபுரேனிண்டஸ்ட்ரீஸ், மிடாஸ் கோல்டன் டிஸ்டல்லரீஸ், அக்கார்ட் பிரிவேர்ஸ், எஸ்.என்.ஜே டிஸ்டில்லரீஸ், கல்ஸ் டிஸிடல்லரீஸ், கோல்டன் வாட்ஸ், கல்ஸ் பேவரேஜ், ஆகிய மது ஆலைகளில், திமுக எம்.பி, டி.ஆர் பாலு, ஜெகத் ரட்சகன், ஜெயமுருகன் உள்ளிட்ட திமுகவினர் நடத்தும் ஆலைகளே அதிகம்.
ஆக, அவர்கள் நடத்தும் ஆலைகளை மூட உத்தரவிடாமல் டாஸ்மாக்கை மூடச்சொல்வது முரண்பாடு. திமுகவினர் நடத்தும் ஆலைகளை மூடினால் டாஸ்மாக்குக்கு வழங்கும் விநியோகம் குறையும். அதன் மூலம் சரக்கு விற்பனை குறையும். இதை செய்வாரா மு.க.ஸ்டாலின்? என பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதனை வலியுறுத்தும் விதமாக வார இதழான விகடனில் ஒரு கார்ட்டூன் வெளியாகி இருக்கிறது. அதில், மது பாட்டில் மீது ஏறி அமர்ந்து கொண்டு முக. ஸ்டாலின், கருப்பு கொடி பிடித்தபடி, ' ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு?'என கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மது பாட்டில் மீது அமர்ந்து இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு, அதனை விட்டுக் கொடுக்காமல், மதுக்கடைகளுக்கு எதிராக அவர் போராட்டம் நடத்தி வருகிறார் என்பதை உணர்த்தும் வகையில் அந்த கார்ட்டூன் கருத்தை வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில், மது ஆலைகளை மூட முன்வருவாரா மு.க.ஸ்டாலின்..? என்கிற கேள்வி தமிழகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.

No comments:

Post a Comment