Tuesday 30 August 2022

அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்

 அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம் ?

அர்த்தமுள்ளஇந்துமதம்...
கவியரசர் கண்ணதாசன்
அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ? பகுத்தறிவு வியாதிகள் கேட்பார்கள்.
நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல .
நம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ? அதற்குக் என்ன காரணம் ?
அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.
கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.
ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ? இல்லை !!!!
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.
அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.
நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)
நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.
அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.
சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது.
அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது.
அந்த Vibration பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.
பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுதமுடிவதில்லை அல்லவா ? அதைப்போன்று.
அதன்காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.
நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும்.
அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்...!
நன்றி கவியரசு கண்ணதாசன் முகநூல்

வீட்டு வரியை மிக அதிகமாக உயர்த்தி மக்கள் மீது அளவற்ற அதிகாரம் செலுத்தும் உள்ளாட்சி நிர்வாகம். நகர்புற மக்களை மதிக்கத் தவறிய அரசு. இது ஆளும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். முதல்வர் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். நூறு சதம் வரி உயர்வை நகர்புற மக்களால் ஏற்க முடியவில்லை. அரசு மக்கள் நிலையை மதிக்க வேண்டும்.

சென்னை அருகே 10ம் நூற்றாண்டை சேர்ந்த சோழ சக்கரவர்த்தி இராஜராஜ சோழனால் உருவாக்காப்பட்ட அற்புதமான சிவாலயம். ""ராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் ஆலயம். "" காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னையை அடுத்த ""ஒரகடம்""அருகே ""சிவபுரம்"" என்ற இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. முற்றிலும் கருங்கற்களால் அமைக்கப்பட்ட மிகப்பழமையான ஆலயம். முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இந்த ஆலயத் திருப்பணிகள் நிறைவுபெற்றது. இந்த ஆலயத்தின் உள்ளே அழகான கற் சிற்பங்கள் பார்ப்பவர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்துகிறது. இக்கோவில் மத்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. சென்னையில் வசிப்பவர்கள் அவசியம் வழிபாடு செய்யவேண்டிய அழகிய சிவனாலயம். அன்பே சிவம்!!!



 

#நீங்கள்_எதை_வேண்டுமானாலும்_சாப்பிடுங்கள்_ஏனென்றால்..

 #நீங்கள்_எதை_வேண்டுமானாலும்_சாப்பிடுங்கள்_ஏனென்றால்....

1. *டிரெட்மில்லை ( TreadMill )* கண்டுபிடித்தவர் *54 வயதில்* இறந்தார்.
2. *ஜிம்னாஸ்டிக்ஸ்* கண்டுபிடிப்பாளர் *57 வயதில்* இறந்தார்.
3. உலக *உடற்கட்டமைப்பு சாம்பியன் 41 வயதில்* இறந்தார்.
4. உலகின் சிறந்த *கால்பந்து வீரர் மரடோனா* தனது *60 வயதில்* காலமானார்.
ஆனால்...
ஆனால்...
5. *KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில்* தான் இறந்தார்.
6. *Nutella பிராண்ட்* கண்டுபிடிப்பாளர் *88 வயதில்* தான் இறந்தார்.
7. *சிகரெட் தயாரிப்பாளர் வின்ஸ்டன் 102 வயதில்* தான் இறந்தார்.
8. *அபின் கண்டுபிடிப்பாளர் 116 வயதில்* பூகம்பத்தில் இறந்தார்.
9. ஹென்னெஸியின் உலகப் புகழ்பெற்ற *பிராந்தி பிராண்டை* கண்டுபிடித்தவர் *98 வயதில்* இறந்தார்.
10. *MDH மசாலா* கொண்ட மனிதர் *97 ஆண்டுகள்* வாழ்ந்ததால் அதிக மசாலாப் பொருள்களையும் உண்ணுங்கள்.
பிறகு *உடற்பயிற்சி ஆயுளை நீட்டிக்கும்* என்ற முடிவுக்கு இந்த மருத்துவர்கள் எப்படி வந்தனர்...?
*முயல்* எப்பொழுதும் மேலேயும் கீழேயும் குதிக்கிறது, ஆனால் *2 வருடங்கள்* மட்டுமே உயிர் பிழைக்கிறது.
ஆனால் *உடற்பயிற்சி செய்யாத ஆமை 400 வருடங்கள்* உயிர் பிழைக்கிறது.
எனவே,
நீங்கள்_எதை_வேண்டுமானாலும்_சாப்பிடுங்கள்_ஆனால் மென்று மென்று உமிழ்நீருடன் சாப்பிடுங்கள்...
*நிறைய ஓய்வெடுங்கள்*...
*அமைதியாக இருங்கள்*...
*குளிர்ச்சியாக இருங்கள்*...
*பிடித்த உணவை நன்றாக சாப்பிடுங்கள்*...
*பிடித்த பாடல்களை எப்போதும் கேளுங்கள்*...
*முடிந்த வரை பிறருக்கு உதவுங்கள்*...
*உங்கள் வாழ்க்கையை முழுமையாக சந்தோஷமாக அனுபவியுங்கள்

இன்றைய எனது தந்தி டி.வி. நிகழ்ச்சியில் மனிதத்தேனீ குறித்து சிவல்புரியார்

உயர்வும் தாழ்வும்.

 உயர்வும் தாழ்வும்.

ஏற்றமும் இறக்கமும் நம் எல்லோரது வாழ்க்கையிலும் உண்டு.
என்ன, சிலருக்கு தங்கள் வாழ்க்கையின் முன் பகுதியிலும்
சிலருக்கு தங்கள் வாழ் நாட்களின் பிற்பகுதியிலும் ஏற்படுவது உண்டு.
நம்புங்கள்,
நமது நல்ல எண்ணங்கள்,செயல்களே நமது உயர்வையும் தாழ்வையும் தீர்மானிக்கிறது.
உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி சிந்தித்தால் நீங்கள் முன்னேற்றத்தை நோக்கியே செல்வீர்கள்.
அதுபோல மனநிறைவைப் பற்றி சிந்தித்தால் மனநிறைவை அடைவீர்கள்.
கஷ்டங்களைப் பற்றிச் சிந்தித்தால் கஷ்டத்தை நோக்கிச் செல்வீர்கள்.
முடிவு உங்கள் கையில், வாழ்க்கையில் நீங்கள் எதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதை முடிவெடுங்கள்.
ஏனெனில், வாழ்க்கையில் நமது ஏற்றமும் இறக்கமும் நம் எண்ணங்களாலேயே உருவாகின்றது.
*நமது எண்ணங்களும்,செயல்களும் நமது வாழ்க்கையை மேம்படுத்துவதோடு நம்மைச் சுற்றி உள்ள சமுதாயத்தையும் மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
இத்தகைய மனநிலை கொண்டோருக்கு திருப்தி,மனநிறைவு என்ற வாழ்க்கையில் நிறைவான நிலையை உலகம் வாரி வழங்கும் என்பது உண்மை.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


என்.எஸ்.கிருஷ்ணன் நினைவைப் போற்றுவோம்


 

வாழிய பல்லாண்டு


 

கண்டுபிடிப்புகளின் கதாநாயகன். கோயம்புத்தூரின் கணபதி R.கிருஷ்ணசாமி கவுண்டர்(RK) வெள்ளோடு சாத்தந்தை கூட்டம்.படிப்பால் தமிழ் பண்டிதர்.ஜிடி நாயுடுவுக்கு இணையாக பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்.அந்தக்காலத்தில் இருந்து இயற்கை விவசாயி இவரது விவசாய பண்ணை இயற்கை விவசாய ஆராய்ச்சி கூடம் போல இருக்கும்.அந்தக்காலத்திலேயே மரவள்ளி கிழங்கு சேலம் வியாபாரிகளிடமிருந்து நல்ல விலை கிடைக்க கோவையிலேயே சேகோ பேக்டரி அமைத்தவர்.மாட்டு வண்டியில் நடமாடும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தியவர்.இன்று ஏராளமான கிராமங்களில் பயன்படுத்தப்படும் கோபர் கேஸ் சாண எரிவாயுகலனை கண்டுபிடித்தவர் 50 ஆண்டுகளாக அதையே பயன்படுத்தியவர்.நிலக்கரி என்ஜினை கொண்டு லாரி பஸ்கள் இயக்கும் படி வடிவமைத்தவர்.நாம் தற்போது பயன்படுத்தும் மோரிஸ் வாழைப்பழங்களை அறிமுகப்படுத்தியவர்.ஜிடி நாயுடுவாலேயே சமாளிக்க முடியாத அளவுக்கு திறமையுடன் பஸ் போக்குவரத்து தொழிலை கோவையில் நடத்திக்காட்டியவர்.விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்தவர்,நடத்தியவர் விவசாயிகளுக்காகவும் கொங்கு வேளாளர்களுக்காகவும்,வேளாள வாலிபன்,ஏர் உழவன் போன்ற 4 இதழ்கள் நடத்திய பத்திரிக்கையாளர்.கோவை கணபதி யூனியன் சேர்மேனாக 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்.C.ராஜாஜியின் சுதந்திர கட்சியின் செயலாளர் அவிநாசி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாகவும், பின்னாளில் பிஜேபி மாநில விவசாய அணி தலைவர்,மாநிலத்துணைத் தலைவர்(1992-96)என்று பல்வேறு அரசியல் பொறுப்புகளையும் அலங்கரித்தவர்.C.ராஜாஜி,திரு.மோகன்தாஸ் கரம் காந்தி காலம் தொட்டு Dr.முரளி மனோகர் ஜோஷி,திரு.L.K.அத்வானி, இன்றைய பிரதமர் திரு.நரேந்திர மோடி வரை இவரது இல்லத்துக்கு வராத முதல்வர்கள் அரசியல்வாதிகள் இல்லை என்று சொல்லலாம். சிறந்த ஆன்மீகவாதி,சைவ உணவு பழக்கம் உடையவர்,எளிமை பணிவு நிறைந்தவர்.திருக்குறளை அனுதினமும் படிப்பவர்,வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுபவர்.எதிரிகளையும் நண்பர்களாக மாற்ற தெரிந்தவர்.இன்று இந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் ரூட்ஸ் நிறுவன தலைவர் திரு.K.K.ராமசாமி,போட்டோ சென்டர் உரிமையாளர் K.மருதாச்சலம் இருவரும் கணபதி R.கிருஷ்ணசாமி கவுண்டரின் மகன்கள்!!! நன்றி எஸ் வி பழனிச்சாமி


 

கவியரசு கண்ணதாசன் பாடல் துளிகள்.

 கவியரசு கண்ணதாசன் பாடல் துளிகள்.

(வேட்டைக்காரன்-படம்
கண்ணதாசன்-வரிகள்)
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா!?
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா!?
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
(தன்நம்பிக்கை எண்ணத்தோடு) - வீரா
" ராஜா மிக யோகசாலி. இதுதான் நான் எழுதும் கடைசி பாடல்" என்று உதவியாளர் கண்ணப்பனிடம் சொல்லி விட்டு வந்தாராம் கவிஞர். "" கண்ணே கலைமானே"" பாடல்🙏
சினிமாவிற்காக இந்த பாடல் எழுதினாலும் அவரது குழந்தைக்காக எழுதப்பட்டதாம்🙂
வாய் பேச முடியாத அக்காவின் மன ஆறுதலுக்காக தங்கை பாடுவதாக எழுதியிருந்த பாடலைத்தான் பின் நாளில் மாற்றி எழுதியிருந்தார் கவிஞர் --" மலர்ந்தும் மலராத"" பாடல் தான் அது🙏
அன்பு அண்ணன் தங்கைக்காக பாடுவது... "மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை"" வரிக்கு வரி இலக்கியச் சுவை.... அண்ணன் ஒரு கோவில் படம்🙏
அன்பு கணவனுக்காக பாடுவது.. " மல்லிகை என் மன்னன் மயங்கும்""-- தீர்க்க சுமங்கலி படம்🙏
அன்பு அண்ணனுக்காக தங்கை பாடுவது.."" அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ"..அத்தனையும் பாசமுள்ள வரிகள""🙏
அன்பு தம்பியை வளர்த்ததை நினைத்து அண்ணன் பாடுவது. "" அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்""-- ரா ர...படம்🙏
இளமை சுகமும் இனிமை கனவும் இருவர் நிலையும் ஒன்றே.
அருமையான
காதல் வரிகள். "" சிரித்து சிரித்து என்னை""--தாய் சொல்லைத் தட்டாதே.🙏
மின்னல் பாதி தென்றல் பாதி அவளை ஈன்றதோ....."" சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே""-- எ.வந்தாள் படம்🙏
"சிரிப்பு வருது சிரிப்பு வருது""... மனிதர்களின் மனநிலையை சித்தரிக்கும் அற்புதமான பாடல்""-- ஆண்டவன் கட்டளை🙏
பெண்கள் நாகரிகம் பற்றிய எளிய வரிகளில் "" பொம்பளை சிரிச்சா போச்சி"""-- சங்கே முழங்கு🙏
அதே தொணியில் மற்றொரு பாடல் "" சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா""-- தனிப்பிறவி🙏
நன்றி சாந்தாராம் மும்பை

Monday 29 August 2022

கண்டரமாணிக்கத்தில் கண்டனூர் பெருமாள் கோவிலார் வீடு என் எஸ்பி. அண்ணாமலை மகன் திருமணம். இன்று காலை கண்டரமாணிக்கத்தில் நடைபெற்ற அருமை நண்பர், கண்டனூர் பெருமாள் கோவிலார் வீடு என் எஸ்பி. அண்ணாமலை மகன் சுப்பிரமணியன் - சீதா திருமண விழாவில் மனிதத்தேனீ. அருகில் ஆர் எஸ் எஸ். தென் மாநிலங்களின் தலைவர், மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியின் மேனாள் முதல்வர், பேராசிரியர் வன்னியராஜன், கண்டனூர் ஆர்எம். கண்ணன், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் துணைத் தலைவர் எம். முருகப்பன், சகானா இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் சத்தியமூர்த்தி உள்ளனர். பெருந்திரளான அளவில் நகரத்தார்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்று வாழ்த்தினர். வாழிய மணமக்கள் - மனிதத்தேனீ





 

வாழிய மணமக்கள். இன்று காலை கீழச்சிவல்பட்டியில் நடைபெற்ற காரைக்குடி சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர், அரிமா மாவட்ட ஆலோசகர், நாச்சியாபுரம் எஸ். கண்ணப்பன் அவர்கள் மகன் அண்ணாமலை - தெய்வானை திருமண விழாவில் மனிதத்தேனீ. ஏராளமான நகரத்தார் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்று வாழ்த்தினர். வாழிய மணமக்கள் - மனிதத்தேனீ

 






தேவகோட்டையில் எங்கள் இல்லத் திருமணம். இன்று காலை தேவகோட்டையில் நடைபெற்ற எங்கள் பெரிய தகப்பனார் மெ. வ. வ. வள்ளியப்ப செட்டியார் மகன் சோமசுந்தரம் அவர்கள் மகள் விசாலாட்சி என்ற விஷாலி.-நாட்டரசன்கோட்டை நண்பர் வெ. ரமேஷ் மகன் ராமநாதன் திருமண விழாவில் மனிதத்தேனீ. அருகில் மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் முதுநிலைத் துணைத் தலைவர் பாகனேரி ஆர்எம். வயிரவன், எனது மூத்த அண்ணன் ஆர். விஸ்வநாதன், பெரிய தகப்பனார் மகன் அண்ணன் வ. நாராயணன் மற்றும் பல்வேறு பெருமக்கள் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர். வாழிய மணமக்கள் - மனிதத்தேனீ





 

எந்த பயமும் வேண்டாம்.

 எந்த பயமும் வேண்டாம்.

நமது குறைகளை மற்றவரிடம் சொல்லாமல்
அதைப்பற்றி பெரிதும் கவலைப்படாமல்
சில இடங்களிலிருந்து மெளனமாக அடியெடுத்து வைத்து நகர முடிந்தால்
அவரே அனுபவஸ்தர்.
வாழ்க்கையில் நம் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட
நம் காதுகள் கேட்ட பொய்களே அதிகம்.
தாமரை இலைத் தண்ணீர் போல்
அதிகம் இழையாமல் உறவுகளை கையாளக் கற்றுக்கொண்டாலே போதும்.
*வரம் தான் வாழ்க்கை*.
விரைவில் எல்லாம் சரியாகி விடும் என்பது
இப்போதைக்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே.
நன்றி மறந்து வாழ்வது நினைவின்றி வாழ்வதற்குச் சமம்.
சில குற்றங்களை மன்னிப்பதாலும்
சில குறைகளை மறப்பதாலும் தான்.
இன்னும் பலஉறவுகள் நீடிக்கின்றன.
உங்கள் வாழ்தலில் மகிழ்ச்சி வேண்டுமெனில்.
தேவையானதை தேடிச் செல்லாதீர்கள்.
உங்களிடம் இருக்கும் தேவையற்றதை விலக்குங்கள்.
எல்லோரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிறவன் கிட்ட
கொஞ்சம் பேசிப் பாருங்களேன்.
ஏதாவது துன்பத்தில் போராடிக்கிட்டு இருப்பான்.
நம் எதிர்காலத்தை நாமே உருவாக்குகிறோம்.
அதில் ஏதேனும் தவறானால் அதையே *விதி* என்கிறோம்.
ஒரு பலசாலி என்றுமே நம்புவது தன்னம்பிக்கையை மட்டுமே.
பாறை போல் உட்கார வேண்டாம்
கடிகாரம் போல வேலை செய்யுங்கள்.
இழந்த அனைத்தையும் மீட்டு விடலாம்
நம்பிக்கையை இழக்காதிருந்தால்.
தீமை செய்வதற்கு மட்டும் பயப்படுங்கள்
வேறு எந்தப் பயமும் உங்களுக்கு வேண்டாம்.
புத்திசாலித்தனமும், . தன்மானமும் ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டே இருக்கும்.
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒத்துப்போகாமல்
வாழ்க்கை நடத்த முடியாது.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


விநாயகர்

 விநாயகர். 3

விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார
முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை.
அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது.
ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல.
சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடலாம்.
பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்
சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.
ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.
விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.
தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.
கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.
ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ”சோமாஸ்கந்த வடிவம்” என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.
தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.
கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும்
த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும். துவாபர பாகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும்
கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.
பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது.
அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை..
முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா?
வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.
சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார்.
கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.
நன்றி அருண் சந்திரசேகரன்

உழைப்பால் உயர்ந்த உங்கள் காமராஜ் - மாலை முரசு மேலாளர் கே. தில்லையம்மாள் தம்பதியர் மகள் மணவிழா. இன்று காலை திருப்பரங்குன்றம் ஒக்கலிகர் மகாலில் நடைபெற்ற உங்கள் காமராஜ் ஸ்டூடியோ என். காமராஜ் - மதுரை மாலை முரசு மேலாளர் கே. தில்லையம்மாள் தம்பதியர் மகள் சுவேதா - சதீஷ்குமார் திருமண விழாவில் மனிதத்தேனீ. அருகில் அவரது சகோதரர் என். காசிராஜன், தினத்தந்தி மூத்த நிருபர் நீதிராஜன் உள்ளனர். வாழிய மணமக்கள் - மனிதத்தேனீ

 


வாழிய மணமக்கள்.

 வாழிய மணமக்கள்.

மாநகர் மதுரையில் கடந்த நாற்பது ஆண்டுகளாக இலக்கியம் மற்றும் சமூக சேவையை வாழ்நாள் வேள்வியாகச் செய்து வரும் அருமை நண்பர் தெற்கு மாசி வீதி மக்கள் நல இளைஞர் பேரவைத் தலைவர் எஸ்பி. முருகேசன் மகன்
விக்னேஷ்குமார் - அகிலாண்டேஸ்வரி
(மதுரை விராட்டிபத்து வி வி எம் திருமண மகாலில் இன்று இரவு நடைபெற்ற) திருமண வரவேற்பில் மனிதத்தேனீ வாழ்த்துரை வழங்கி மகிழ்ந்த தருணம்.
அருகில் அரிமா மாவட்ட ஆளுநர் தேர்வு பொறியாளர் கிரியேட்டிவ்
பி. ராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர் பி. தர்மராஜ், பொறியாளர் வெங்கட்ராமன், ஹாப்பி ஹோம் என். துரைசிங்,
பேராசிரியர் நன்மணி, கவிஞர் கோ உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர்.
இவரது சகோதரர்கள் அரிமா எஸ்பி. பாலசுப்பிரமணியன், எஸ்பி. மீனாட்சி சுந்தரம், எஸ்பி. ரமேஷ், கூட்டுக் குடும்ப வாழ்வின் முன்னோடிகள்.
பல்துறை மேன்மையாளர்கள்.
வளரட்டும் தலைமுறை - மனிதத்தேனீ





உண்மை , கைகளில் இதயம்...

 உண்மை , கைகளில் இதயம்...

அது நம்பமுடியாததாகத் தோன்றலாம்.
39 வயதான சிரித்த முகத்துடன் காணும் இந்த பிரிட்டிஷ் பெண் பெயர் சல்வா ஹுசைன்.
அவரது கைகளில் இருப்பது அவரது சொந்த இதயம் ..!
இதயம் இல்லாத ஒரு பெண் இவர், டாக்டர்கள் கொடுத்த செயற்கை இதயத்தை ஒரு பையில் வைத்து தன் கைகளிலும் தோள்களிலும் சுமந்து செல்கிறார். ஏழு கிலோகிராம் எடை கொண்ட பையில் மோட்டார், பேட்டரி, பம்பும் உள்ளது. மற்றும் உடலில் இரத்தத்தை செலுத்துவதற்கான குழாய்களும் இணைக்கப்பட்டுள்ளது.
இது உலகில் அரிதானது மற்றும் இங்கிலாந்தில் நடந்த ஒரே நிகழ்வு.
இவர் திருமணமானவர் இரு குழந்தைகளின் தாயும் ஆவார்.
வாழ்த்துக்கள்மா..

அமைதி எனும் ரகசியம்.

 அமைதி எனும் ரகசியம்.

தன்னைத் தோண்டுபவரையும் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்பவரையும் பொறுப்பதே தலையாய பண்பு என்கிறது, குறள்.
சுக்ரீவனின் நாட்டை அண்ணன் வாலி கவர்ந்து கொண்டமைக்காக, சுக்ரீவனும், வாலியும் சண்டையிடும்போது ராமன் அம்பினை செலுத்தி வாலியை கொல்லவில்லை. நீண்ட நேர சண்டைக்குப் பிறகும் வாலி மீது அம்பெய்யாதலால் பொறுமையிழந்த சுக்ரீவன் ராமனிடம், 'நீங்கள் என்னை ஏமாற்றிவீட்டீர்கள். சொல்லியபடி வாலியை நீங்கள் அம்பு எய்து கொல்லவில்லை' என்றான்.
நிதானமாகக் கேட்டுக்கொண்டு இருந்த ராமனிடமிருந்து இவ்வாறு பதில் வந்தது, 'நீங்கள் இருவரும் உடன் பிறந்தவராதலால் உடலும், முகமும் ஒன்றாகத் தெரிகிறது. எனவே என்னால் யார்? என்று தீர்மானித்து அம்பை குறி வைக்க இயலவில்லை. தவறாக உன் மீது அம்பு பாயக்கூடாது. எனவே இப்படிச் செய்யலாம்' என்ற ராமன்.
இருவரையும் வேறுபடுத்திக்காட்ட சுக்ரீவன் கழுத்தில் மாலையிட்டுக் கொண்டு வாலியுடன் சண்டையிட வேண்டும். மாலையில்லாதவன் வாலியாகி விடுவதால் என்னால் சரியாக அம்பை எய்து கொன்றுவிட முடியும் என்றதும், உண்மை நிலை அறிந்த சுக்ரீவன், ராமனின் கால்களில் விழுந்து வணங்கினான்.
*நம்முன் உள்ள பிரச்னைகள் பெரிதாகிவிடாமலிருக்க பேருதவி புரிவது நாம் காட்டும் பொறுமை தான்.*
ரயிலில் ஏறிய முன்பதிவு செய்திருந்த பயணி தன்னுடைய இடத்தின் எண்ணைச் சொல்லி ஏற்கனவே அதிலிருந்தவரை இறங்கச் சொல்லி விவாதம் செய்தார். அவரோ அமைதியாக இருந்து இது எனக்கு ஒதுக்கப்பட்டது என்றார். இவர் இந்த இடம் எனக்கு ஒதுக்கப்பட்டது என்று சண்டையிட்டதோடு தவறான வார்த்தைகளால் அவரைத் திட்டவும் செய்தார்.
இருவரது டிக்கட்டையும் வாங்கிப் பார்த்ததில் இரண்டிலும் ஒரே எண் இருந்தது.பின்னால் ரயிலில் ஏறியவர் செய்த தவறு இதுதான்.
அடுத்து வரவிருக்கின்ற ரயிலுக்குப் பதிலாக இந்த ரயிலில் ஏறியதோடு ஏற்கனவே உள்ளவரிடம் தேவையற்ற பிரச்னையும் செய்துவிட்டார்.
எனினும் முன்பிருந்தவர் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
"பதற்றமான சூழல் பற்றிக்கொண்ட போதும் அமைதியைக் காண்கின்றவன் வாழ்வின் ரகசியம் அறிந்தவன்" என்கிறது கீதை

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Saturday 27 August 2022

வாழ்வின் வசந்தம் நிலைத்திட.

 வாழ்வின் வசந்தம் நிலைத்திட.

நற்பண்புகளை வளர்த்துக் கொள்வது இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்திற்கு வாழ்க்கைக்குத் தேவையானது.
வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் இருந்து விடுபட பண்புகள் பற்றிய பதிவு.
இதனைப் படித்துப் பிடித்திருந்தால் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுங்கள் .
1. தினமும் காலையில் மலர்களைப் போல சிரித்த முகத்துடன் மலருங்கள் . பூத்துக் குலுங்கும் மலர்கள் இதழ்களை விரித்து புன்னகைப்பதைப் போல .
2. தெளிவான எண்ணங்களில் உயர்ந்த நோக்கத்தோடு சிந்தியுங்கள் . மலர்களின் வாசனையைப் போலவே எண்ணங்களில் வாசனையை உண்டாக்கி இந்த உலகில் மணக்கச் செய்யுங்கள் .
3. காலையில் பள்ளி அல்லது கல்லூரி அல்லது வேறு வேலைகளுக்குச் சென்றாலும் நேரத்திற்குப் புறப்பட்டு தயாராகுங்கள் .
4 .எல்லோரையும் நேசிப்பது சிரமம் . ஆனால் மலர்களிலே மல்லிகைக்கு தனி மணம் இருப்பதைப் போல தனித்துவமாய் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் .
5 . நல்லவர்களோடு நட்பாகப் பழகுங்கள் . பூவோடு சேர்ந்து நாறும் பயன்பெறும் அதுபோல நீங்களும் நல்லவர் ஆவீர்கள் .
6. காரணமே இல்லாமல் கோபப்படாதீர்கள் . மேகம் தோன்றாமல் பெய்வதில்லை . அதுபோல காரணம் எப்படிப்பட்டது என யோசித்து கோபம் கொள்ளுங்கள் .
7 . மற்றவர்கள் சொல்லும் கருத்துகள் சரியா ? எது சரி ? என்பதை ஆராய்ந்து முடிவெடுங்கள் .
8 . பலமுறை சிந்தித்து ஒருமுறை முடிவெடுங்கள் . ஒரு பூவிலே பல இதழ்கள் இருக்கும் மலரைப் போல பல வழிகளில் சிந்தியுங்கள் .
9 . பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது எனில் இருளை விரட்டும் நிலாவைப் போல பௌர்ணமியாய் ஒளிர்ந்து பயத்தை உதறி விடுங்கள் .
10 . நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் . நேராக வளரும் பாக்கு மரத்தைப் போன்ற உயர்ந்த நிலையை அடையுங்கள் .
11 . உண்மையையே எப்போதும் பேசுங்கள் . எங்கு சென்றாலும் பயமில்லை. பாலை நிலத்தில் வளரும் கள்ளிச் செடியைப் போல துணிந்து நில்லுங்கள் .
12 . மற்றவர்களின் கஷ்டத்தைப் பார்த்து புன்னகைக்காதீர்கள் . நமக்கு கஷ்டம் வந்தால் மட்டும் சிரிக்க வேண்டும் . சூரியன் வந்தால் மலரும் சூரிய காந்திப் பூவைப் போல ..
13 . எந்த செயலையும் நன்கு ஆலோசனை செய்த பிறகு முழு மனதுடன் உறுதியாகச் செயல்படுத்துங்கள் . காட்டுக்கே ராஜாவாக இருக்கும் சிங்கத்தை போல .
14 .எந்த ஒரு செயலையும் வெற்றி அடையுமாறு செய்ய வேண்டும் . அதற்கு ஏற்ற காலம் , இடம் , தன் ஆற்றல் கூடும் வரை குளக்கரையில் மீனுக்காக கொக்கு காத்திருப்பதைப் போல ஏற்ற காலம் வரும் வரை காத்திருங்கள் .
15 . கிடைத்த உணவை உண்டு திருப்தி அடையுங்கள் . நன்றாக பசி இருந்தும் உணவு கிடைக்கும் வரை பொறுத்திருங்கள் . நன்றியுள்ள ஜீவன் போல..
16 . உங்களது வேலைகளை பொறுமையாக முடித்து விடுங்கள் . தூக்கணாங்குருவி சிறுகச் சிறுக கூடு கட்டுவதைப் போல ....
17 . உங்களைவிட வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுங்கள் . எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களை ஏளனம் செய்யாதீர்கள் .
18 . தினமும் வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள் .
19 . இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் போதுமான நேரம் உறங்கி ஓய்வெடுங்கள் .உறங்கும் போது கவலைகளை மறந்து உறங்குங்கள் .
20 . உங்கள் உடலின் பாகங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் . ஒவ்வொரு பாகங்களின் மீதும் அக்கறை காட்டுங்கள் .
21 . மற்றவர்களுக்கு உதவி செய்து முடிந்தவரை பிரதிபலன் எதிர்பார்க்காமல் அக்கறை காட்டுங்கள் .
22 . ஒரு செயலுக்கு வெற்றியோ தெளிவான முடிவோ கிடைக்கவில்லை எனில் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு மறந்து விடுங்கள் . இறைவன் அருளால் கிடைக்கும்போது தானாக கிடைக்கும் என்று நம்புங்கள் .
23 . உங்களின் தேவைகள், வேலைகள் அன்றன்றே செய்து முடித்துவிட்டு , மண்ணிலே போட்ட விதை முளைக்கும் வரை காத்திருப்பது போல காத்திருங்கள் .
24 .நேரம் வாழ்க்கையில் பொன் போன்றது .அதைச் சரியாக பயன்படுத்த வேண்டும் .மழை பெய்யும் போது குடை பிடிப்பதைப் போல.
25 .எப்போதும் மனதில் நல்லதையே நினையுங்கள் நல்லதையே சொல்லுங்கள்.
நல்லதையே செய்யுங்கள்
நல்லதே நடக்கும் .