Friday 31 December 2021

மகிழ்ச்சியாக வாழ்ந்திடலாம் .

 மகிழ்ச்சியாக வாழ்ந்திடலாம் .

வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் முதலில் உங்கள் முன்னுரிமைகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு எது வேண்டாம்? என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம். நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்று பாருங்கள், அதனை நோக்கி வேலை செய்யுங்கள்.
உங்கள் திறமை, தகுதி, நீங்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல நிலைமை வழிக்கு வரும். எந்த விதமான வீட்டில் வாழ வேண்டும்,? எந்தவிதமான செயல் செய்ய வேண்டும்? என்று நினைப்பதை விட்டு விட்டு,
"நான் மற்றவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இருக்க விரும்புகிறேன், நலமாக, மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்" என்று சொல்லத் தொடங்குங்கள்.
மற்ற செயல்கள் இதைச் சுற்றி தானாகச் சீரடையும்.
நீங்கள் அன்றாடம் பத்து மைல் நடக்கலாம், ஒரு விலை உயர்ந்த கார் வைத்திருக்கலாம் அல்லது ஒரு சைக்கிளில் பவனி வரலாம் - அதுவல்ல முக்கியம்
உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வது,
அதன் ஒவ்வொரு அம்சத்தையும் அனுபவிப்பது அது தான் முக்கியம், இல்லையா?
மற்ற செயல்கள் எல்லாம் வசதிக்காக நாம் செய்து கொள்ளும் ஏற்பாடுகள் மட்டுமே.
இன்னொருவரை விட நன்றாய் வாழ்வதே நல்வாழ்வு என்று, அதைப் பற்றிப்
புரிந்து கொள்ளாதவர்கள் பலர் நினைக்கிறார்கள்.
இன்னொருவரை விட நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவது நல்வாழ்வு அல்ல,
அது ஒரு நோய்.உலகை இந்த நோய் மோசமாக பீடித்துள்ளது. வேறு யாரும் வைத்துக் கொள்ள முடியாது என்பதற்காகவே பல பொருட்களை வைத்துக் கொள்ள மக்கள் விரும்புகின்றனர்.
உலகில் இருப்பதிலேயே பெரிய வைரம் உங்களுக்கு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்,
எதுவும் தெரியாமல் அதைப் பார்த்தால் அது வெறும் கல். ஆனால், சந்தையிலோ அதற்குத் தெரிந்தோ,
தெரியாமலோ ஏகப்பட்ட கிராக்கி ஏற்படுத்தி விட்டோம், மதிப்பு கொடுத்து விட்டோம்
தெருவில் கிடக்கும் ஒரு சாதாரண கருங்கல்லை நீங்கள் கவனமாகப் பார்த்தால், அதுவும் அழகாகத் தான் இருக்கிறது. நிறைய கிடைப்பதால் அதற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டது.
உலகில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே வைரங்கள் கிடைக்கின்றன. எல்லோரும் வாங்கவும் முடியாது.
அதனால், அதைக் கழுத்தில், காதில், மூக்கில் அணிந்து கொள்கிறீர்கள். அது அழகாக இருப்பதால் அல்ல என்பதே யதார்த்தமான உண்மை.
வாழ்க்கை குறித்த தவறான கருத்துக்களால் மனித வாழ்வு விஷமாகிக் கொண்டிருக்கிறது.
இன்னொருவரை விட, நன்றாக இருக்க முயற்சி செய்து பலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றனர்.
இன்னொருவரை விட நன்றாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ மனிதர்கள் தங்கள் வாழ்வை வீணாக்கி இருக்கிறார்கள்.
உங்கள் வாழ்க்கையை அப்படி வீணாக்காதீர்கள்.
இன்னொருவரை விட நன்றாக இருக்க வேண்டும் என்பதையே நினைத்துக் கொண்டிருந்தால் உங்கள் முழுத் திறன் மலராது.
ஆம்.,நண்பர்களே
வாழ்க்கையில் உங்களுக்கு எது முன்னுரிமை என்று உறுதி செய்து கொண்ட பின், அதனை விட்டு விடுங்கள்.
உங்கள் முழுத் திறனோடு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள். என்ன நடக்க வேண்டுமோ, அது நிச்சயம் நடக்கும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

விஸ்வநாத தாஸ் நினைவைப் போற்றுவோம்


 

வளரட்டும் தலைமுறை.

 வளரட்டும் தலைமுறை.

நேற்று இரவு மதுரை பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டலில் நடைபெற்ற விஷால் புரமோட்டர்ஸ், விஷால் டி மால் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பேராற்றல் மிக்க விஷால் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அன்புச் சகோதரர்
ஆர். இளங்கோவன் - புவனேஸ்வரி தம்பதியரின் மூத்த மகன் ராஜா அவர்களின் புதல்வன் ருத்ரா முதல் ஆண்டு பிறந்தநாள் விழா நண்பர்களும் உறவினர்களும் என பெரும் திருவிழாவாக நடைபெற்றது.
மக்கள் வெள்ளத்தில் குழந்தை ருத்ராவை வாழ்த்தி மகிழ்ந்த மனிதத்தேனீ.
அருகில் காவல் துறை மேனாள் உயர் அதிகாரி குமாரவேல், எக்சலன்ட் ஹரிமாதவன்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்
கோ. தளபதி, அவர் மகன் அன்பு, பா ஜ க மேனாள் மாவட்ட தலைவர்கள் சசிராமன், ராஜரத்தினம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாநிலப் பொதுச் செயலாளர்
பி. வரதராஜன், ரஜினி மன்ற முன்னோடி வி கேஆர் சேகர், விருதுநகர் அரசு மருத்துமனையின் டீன் டாக்டர் சங்குமணி, செந்தூர் ஹோட்டல் பி. அழகர், அண்ணாமலையார் பில்டர்ஸ் உரிமையாளர் அழகப்பன் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பெருமக்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
வளரட்டும் தலைமுறை தொடரட்டும் பேராற்றல். வாழிய ருத்ரா.
















Thursday 30 December 2021

தினபூமி மதுரை 30.12.2021 பக்கம் 6


 

வாழிய பல்லாண்டு


 

பக்குவப்படுத்தும் பார்வை.

 பக்குவப்படுத்தும் பார்வை.

சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம். எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும். யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வரும். மனதுக்குள் தோற்றுவிட்டதுபோல் ஒரு வெறுமை உண்டாகும். அப்படியானால், மனச்சோர்வு என்ற எதிரியை உள்ளே அனுமதித்துவிட்டீர்கள் என்று பொருள்.
மனச்சோர்வு எதனால் வருகிறது அடிப்படையில் உங்களுக்கு என்ன நிகழ்கிறது? ஒருவர் தீக்குச்சி பற்றவில்லை என்றாலே துக்கமாகிவிடுவார். இன்னொருவர் வீடே தீப்பற்றி எரிந்தாலும், அலட்டிக் கொள்ள மாட்டார்.
நீங்கள் விரும்பியபடி யாரோ நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி எதுவோ நிகழவில்லை. ஆசைப்பட்டபடி வாழ்க்கை அமையவில்லை. சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், நீங்கள் தவிக்கிறீர்கள். அதை எதிர்க்கிறீர்கள். நீங்கள் மனச்சோர்வுடன் இருக்கும்போது எல்லாம், மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். உங்களுடன் உட்கார்ந்து மற்றவர்களும் அழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இரக்கத்தை யாசிக்கிறீர்கள்.
என்ன பைத்தியக்காரத்தனம் இது? உங்கள் விருப்பப்படி எல்லாம் உலகம் ஏன் நடக்க வேண்டும்? நீங்கள் விரும்பியபடியெல்லாம் தங்களை ஏன் மற்றவர்கள் ஏய்த்துக் கொள்ள வேண்டும்? அகங்காரம் எங்கே இருந்தாலும், அதற்கு அடி விழத்தான் செய்யும். அப்போது, மனச்சோர்வு முளைத்து எழும். அது உங்களைப் பற்றிய நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும். வெளியே இருந்து ஆயுதங்களால் தாக்குபவர்களைக் கூட சரியாகக் கையாண்டால், சமாளித்துவிடலாம்.
மனச்சோர்வு என்பது உள்ளிருந்து கொண்டே, கீறிக் கிழித்துக் குடைந்து உங்களை உபயோகமில்லாமல் அழித்துவிடும் விஷ ஆயுதம். உங்களை நீங்களே தாக்கி அழித்துக் கொள்வதைப் போன்ற முட்டாள்தனம் அது! எதை நினைத்தும் சும்மா வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதால், எந்தப் பலனும் இல்லை.
மனச்சோர்வு வரும்போதெல்லாம் மற்றவர்கள் மீது எரிச்சல் கொள்வதை நிறுத்திவிட்டு, அதற்குக் காரணம் நீங்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உலகத்தின் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் குறைகளை உணர்ந்து அவற்றை மாற்றிக் கொள்ளக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு இது என்று உணருங்கள். வலிகளும், வேதனைகளும் நிரம்பிய அனுபவங்களையே வாழ்க்கைப் பாடங்களாக ஏற்று, உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட வரம் இது!
எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டதால்தான் ஏமாற்றங்கள் என்பதை உணருங்கள். அகங்காரத்தை விட்டொழியுங்கள். மாற்றுக் கருத்துக்களையும் எதிர்க்காமல் ஏற்கப் பழகுங்கள். அவற்றையே உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி என்று திட்டமிடுங்கள். கிடைக்கும் அனுபவங்களை உங்களுக்குப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

ஞாயிற்றுக்கிழமை காலை குயின் மீரா இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற மதுரை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கூட்டமைப்பு நடத்திய முப்பெரும் விழாவில் மனிதத்தேனீ, பள்ளி சேர்மன் முனைவர் சி. சந்திரன், நிர்வாகி சி. அபிநவ் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள்.


 

நீந்த முடியாத மீன்களை நதி ஒதுக்கிவிடும்.

 நீந்த முடியாத மீன்களை

நதி ஒதுக்கிவிடும்.
விமர்சனம் தாண்டி உழைக்காத மனிதனை வெற்றி ஒதுக்கிவிடும்.
உண்மையான உழைப்பு இருந்தால் உலகையே நீங்கள் ஆளலாம், ஆனால் நல்ல மணமும் குணமும் இருந்தால் மட்டுமே நீங்கள் நல்ல உள்ளங்களில் வாழலாம்.
நீங்கள் உழைப்பதற்குத் தயாராக இருந்தால் கொடுப்பதற்கு இறைவன் தயாராக இருக்கிறார்.
உங்கள் உழைப்பு உங்கள் கௌரவத்தை வளர்க்கிறது. உங்கள் கௌரவம் உங்களை வளர்க்கிறது.
இரு மனதாய் செயல்பட்ட எந்த காரியமும் வெற்றி அடைந்ததில்லை, முழு மனதாய் செயல்பட்ட எந்த காரியமும் தோல்வி அடைந்ததில்லை.

Wednesday 29 December 2021

வாழிய மணமக்கள். இன்று காலை அமெரிக்கன் கல்லூரி ஜுப்ளி சாப்பெல் அரங்கில் நடைபெற்ற ஸ்ரீ ஹர்ஷினி ஹெர்பல்ஸ் மேலாளர் அருள் பிரபாகரன் மகள் எவாஞ்சலின் டேபோரா-அந்தோணி ஜான் திருமண விழாவில் மனிதத்தேனீ. வாழிய மணமக்கள் பல்லாண்டு.


 

தினபூமி மதுரை 29.12.2021 பக்கம் 6


 

பிழை சொல்லும் மேதாவிகள்.

 பிழை சொல்லும் மேதாவிகள்.

ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர்
அந்தத் தந்தையும் மகனும் சென்ற ரயில் பெட்டியில் கூட்டம் அதிகம் இல்லை.
அவர்களுக்கு முன்னே நாகரீகமாக உடையணிந்தவர்கள் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர்
வண்டியில் அமர்ந்திருந்த கிராமத்தைச் சேர்ந்தவரின் மகனுக்கு சுமார் இருபது வயதிருக்கும்.
நல்ல ஆரோக்யமாகவும் அழகாகவும் இருந்தான்.
இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் நட்புடன் சிரித்தான்.
அவர்கள் கையிலிருந்த அழகிய சூட்கேசைத் தடவிப் பார்த்தான்.
வண்டி புறப்பட்டவுடன் மகிழ்ச்சியுடன் இங்கும் அங்கும் மாறி மாறி அமர்ந்தான்.
தன் தந்தையிடம் மகிழ்ச்சியுடன்'
''அப்பா, கீழே மரமெல்லாம் எதிர்ப்பக்கம் ஓடுது" என்றும்,அப்பா, அப்பா, டேஷன்லே வண்டி நிக்குதுப்பா.
அப்பா எவ்வளோ பூ அங்கே அந்த மரத்துல இருக்குதுப்பா."என்றும் அவன் சிறு குழந்தை போல் மகிழ்ச்சிப் பெருக்கில் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தான்.
அவன் தந்தையும் அவனுடைய மகிழ்ச்சியில் பங்கெடுத்தவராய் அவனுடன் சேர்ந்து கொண்டார்,
இவர்கள் இருவரின் பேச்சையும் நடத்தையையும் பார்த்து அந்த நாகரீக மனிதர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
"பாவம் இவ்வளவு நன்றாக இருக்கும் பையனுக்கு மூளை வளர்ச்சி இல்லையே.
இந்தப் பையனை மருத்துவரிடம் காட்டி சரி செய்யாமல் அவனுடன் சேர்ந்து அவன் தந்தையும் அவனுக்குச் சரியாய் நடந்து கொள்கிறாரே . என்று சலித்துக் கொண்டனர்.
இவரது பேச்சைக் கேட்ட அந்த நாகரீக மனிதர்கள் பொறுக்க முடியாமல் அவரைப் பார்த்து,
'',அய்யா., இப்படி இருக்கிற பையனை டாக்டர் கிட்ட காட்டாமே இருக்கிறீர்களே." என்றார்கள்..
அந்தப் பையனின் தந்தை புன்னகை புரிந்தார்
"ஐயா, நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க. என் மவனுக்கு மூளை நல்லா இருக்குதுங்கோ.விவரம் தெரிஞ்ச நாளிலேயிருந்து அவனுக்குக் கண்பார்வை இல்லை..
போன மாசம் தான் இவனுக்கு கண் அறுவை முடிஞ்சுதுங்க.
உங்களைப் போல ஒரு புண்ணியவான் கண்தானம் செஞ்சதாலே இவனுக்குப் கண்பார்வை வந்திட்டுதுங்க.
அதனாலே எல்லாத்தையும் புதுசாப் பார்க்கற மகிழ்ச்சியில் அவன் பேசிட்டானுங்க.
நீங்க தப்பா எடுத்துக்காதீங்க." என்றார்.,
ஆம்..,நண்பர்களே
யாவற்றையும் மேம்போக்காக அறிந்து கொண்டு' மற்றவர்கள் மீது பிழை சொல்வதை தவிர்த்து யாவற்றையும் தீர விசாரித்து அறிவதே மேல்.
ஆம்., கண்ணால் பார்ப்பதும் பொய்,
காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரித்து அறிவதே மேல்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Tuesday 28 December 2021

மதுரைமணி 28.12.2021 பக்கம் 4


 

கவனிக்கவும் அனுபவிக்கவும் .

 கவனிக்கவும் அனுபவிக்கவும் .

ஒரு நாள், பேராசிரியர் ஒருவர் தனது வகுப்பறையில் நுழைந்து மாணவர்களை திடீர் தேர்வுக்குத் தயாராகும்படிக் கூறினார். மாணவர்கள் ஆர்வத்துடன் அவரவர் இடத்தில் காத்திருந்தனர்.
ஆசிரியர் கேள்வித்தாள்களை வழக்கம் போல அனைவருக்கும் கொடுத்தார். கேள்வித்தாளைப் பெற்ற அனைத்து மாணவர்களும் ஆச்சரியமடைந்தனர்
அதில் கேள்விகள் ஒன்றுமே இருக்கவில்லை; வெள்ளைக் காகிதத்தின் மையத்தில் ஒரு கருப்புப் புள்ளி மட்டுமே இருந்தது.
அனைத்து மாணவர்களின் முகத்திலும் வெளிப்பட்ட ஆச்சரியத்தைக் கண்ட பேராசிரியர், “நீங்கள் கேள்வித்தாளில் பார்ப்பதைப் பற்றி எழுத வேண்டும். இதையே நான்
எதிர்பார்க்கிறேன்” என்றார்.
குழப்பமடைந்த மாணவர்கள் தங்களின் முயற்சியைத் தொடங்கினர். தேர்வின் முடிவில், பேராசிரியர் எல்லோருடைய விடைத்தாளையும் பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு மாணவரின் உரையையும் உரத்த குரலில் வாசித்தார்.
விதிவிலக்கின்றி அனைவரும், தாளின் நடுப்பகுதியில் இருந்த கருப்புப் புள்ளி மற்றும் அதன் அமைப்பைப் பற்றி மட்டுமே விவரிக்க முயற்சித்து இருந்தனர்.
அனைத்து விளக்கங்களையும் படித்து முடிக்கும் பொழுது வகுப்பறை அமைதியாக இருந்தது. இப்போது பேராசிரியர், “இந்தப் பயிற்சி உங்களை சோதிப்பதற்காக அல்ல, சிந்திக்க வைப்பதற்காகவே நடத்தினேன்.
காகிதத்தின் வெள்ளைப் பகுதியைப் பற்றி எவருமே எழுதவில்லை. எல்லோரும் கருப்பு புள்ளியில் மட்டுமே கவனம் செலுத்தி இருக்கிறீர்கள்.
இதே தான் நம் வாழ்விலும் நடக்கிறது. நம் வாழ்வில், காகிதத்தின் வெள்ளை பகுதியைப் போல, நாம் கவனிக்கவும் அனுபவிக்கவும் நிறைய இருக்கிறது; ஆனால் நாம் எப்போதும் பிரச்சனைகளை மட்டுமே கவனிக்கிறோம்...
சுகாதாரக் கேடு,
பணப்பிரச்சனை, குடும்ப உறுப்பினரின் சிக்கல்கள், நட்பில் ஏமாற்றம் போன்றவற்றால் பாதிப்படைந்து அதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம்.
நம் வாழ்வில் உள்ள அனைத்தையும் ஒப்பிடும் போது கரும்புள்ளிகள் மிகவும் சிறியவையாகவே இருக்கின்றன,
ஆனால் அவைகளே நம் மனதை மாசு
படுத்துகின்றன. வாழ்வில் உள்ள கருப்பு புள்ளிகளில் இருந்து கவனத்தை விடுவித்துக் கொள்ளுங்கள் என்றார்.
ஆம் நண்பர்களே
ஒவ்வொரு நாளும், நம்மை நாம் புதுப்பித்துக் கொள்வதும், நம்மைச் சுற்றியிருக்கும் நட்புகளுக்கும், உறவுகளுக்கும் நம் வாழ்வின் ஆதாரத்தை வழங்குதலும் நம் கடமையாகும்.
எதிர்மறையான செயல்களில் கவனம் செலுத்துவதை விட வாழ்க்கையில் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான தருணங்களையே பார்க்க வேண்டும்.
வாழ்க்கையின் தேவையற்ற நிகழ்வுகளைச் சிந்தித்து நேரத்தை வீணாக்குவதால், வாழ்க்கையில் உண்மையான பல பேரின்பங்களை இழக்கிறோம்.
நாம் மகிழ்ச்சியாக இருந்து, அன்போடு வாழ்க்கையை
வாழ்வதில் கவனம் செலுத்துவதே வாழ்வதற்கான சிறந்த வழி.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

திருவிழா மாநகரில் திசை தோறும் திருக்கூட்டம்.

 மதுரை அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்

#அஷ்டமி_சப்பரம் தேர்த்திருவிழா
27.12.2021 திங்கள் கிழமை அதிகாலை ☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿
கடோரபாபி என்பவனுக்கு முக்தியளித்தலீலை
(சகலஜீவ ராசிகளுக்கும் படியளந்த லீலையாக சொல்வதும் உண்டு)
🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼
#Madhurai_Astami_Chaparam today 27.12.21 morning On Madhurai Sri #Meenakshi_Sundareswarar_Temple
🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼
மதுரை திருவிழா நகரம்
ஶ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் விழாக்களுக்கும் பஞ்சம் இல்லை. எல்லா சுபதினங்களிலும் நான்கு மாசி வீதிகள் ஆனந்தக்களைகட்டும்.
அந்தவகையில் மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக்குறிக்கும் நிகழ்ச்சியாகக் கருதப்படும் மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் இதுவும் ஒன்று #அஷ்டமி #சப்பரம் என்னும்
தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வெளிவீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் நிகழ்வாக திருவீதிஉலா வருவது வழக்கம்......
அதிகாலை 5.30 மணிக்கு கோயிலிலிருந்து சுவாமி,அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு வெளி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த தேர்சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வந்து.....
மீனாட்சி அம்மன் தேர்சப்பரத்தை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும்.
நான்கு வெளி வீதிகளிலும் வலம்வரும் தேர்சப்பரத்தை ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வர். மேலும், கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர். திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், அள்ள அள்ள அண்ணம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை.
இந்த நிகழ்வின் முக்கியமான வரலாறு.......
ஒரு நாள் சிவபெருமானும், உமாதேவியாரும் ஏகாந்தமாயிருக்கும் சமயம் தேவி தாய்மைக்கேயுரிய கவலையுடன், ‘ஏன் சுவாமி! இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறக்கும் வரை துன்பத்திற்கும், பாவத்திற்கும் ஆளாகும் நிலை மாற வழியில்லையா ?
பிறப்பு, இறப்பின்றி முக்தி அடையவும், பாவங்கள் நீங்கவும் ஒரு வழி சொல்லுங்கள்’ என்றாள்.......
அச்சமயம் உயிர்களுக்கெல்லாம் தந்தையான சிவபிரான் திருவாலவாய் எனப்படும் மதுரையின் சிறப்பை எடுத்துக் கூறியதோடு அஷ்டமி பிரதட்சிணம் பற்றியும் தேவிக்கு விரிவாக விளக்கினார். மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்கு இகபர துன்பம் நீங்கி முக்தி கிடப்பது உறுதி என்றும் கூறினார்......
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் திருமங்கலம் என்னும் ஒரு கிராமம் உள்ளது. அங்கு ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் வேத, வேதாந்த நூல்களைக் கற்று கரை கண்டவன். மிக்க அறிவாளி. கடவுள் பக்தி மிக்கவன். பிராமண நியதிகளிலிருந்து வழுவாது வாழ்ந்தவன். எனினும் அவன் மிகக் கொடியவன். பல தீய வழிகளில் பணம் சேர்ப்பவன். அவனைக் கண்டு மக்கள் அஞ்சி ஒதுங்கினர்.
அதே ஊரில் மற்றொரு பிராமணன் இருந்தான். அவன் கத்தரித் தோட்டம் வைத்து, அதில் விளையும் கத்தரிக் காய்களை விற்று வாழ்ந்து வந்தான். ஒரு நாள் கோயிலுக்கு சிவதரிசனம் செய்ய வந்த கத்தரிக்காய் பிராமணனை, பாவி பிராமணன் கண்டு அவனை வாயில் வந்த படியெல்லாம் பேசி, உதைத்து சுவாமி தரிசனம் செய்ய விடாது விரட்டி விட்டான். இதனால் மனம் நொந்த கத்தரிக்காய் பிராமணன் உடனே பாண்டிய ராஜனிடம் போய் முறையிட்டான். பாண்டிய மன்னன் உடன் அவனை அழைத்து கோபத்துடன் அவன் அப்படிச் செய்த காரணம் கேட்டான். உடன் பாபி, ‘அரசே, கத்தரிக்காய் மாமிசத்திற்கு ஒப்பானது. அதை உண்பது பாவம். ஆதலால், நான் அவனை ஆலயத்திற்கு வரவிடாது உதைத்து விரட்டினேன்’ என்றான். அதனைக் கேட்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அரசனோ இதற்கு எப்படித் தீர்வு கூறுவதென குழம்பி நின்றான். அச்சமயம் அகத்திய மாமுனிவர் அரசவைக்கு வந்தார்.
அவரை வணங்கி நின்ற பாண்டிய மன்னன், “ஹே! குருதேவா! கத்தரிக்காய் பற்றிய வரலாற்றைக் கூறியருளுக” என வேண்டினான். அகத்தியரும், ‘முன்னொரு காலத்தில் வார்த்தாகன் என்னும் பெயருடைய ஒருவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தான். அச்சமயம் வைகுண்டத்திலிருந்து கருடாரூடராக விஷ்ணு வந்தார். வார்த்தாகனோ விஷ்ணுவை கவனிக்காது சிவபூஜையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். விஷ்ணு கோபித்து வார்த்தாகனை கற்ப முடிவு வரையில் ஒரு செடியாக மாறும்படியும், அச்செடியில் உண்டாகும் காயும் சாப்பிட ஏற்றதாகாது என்றும் சாபமிட்டு மறைந்தார்.
வார்த்தாகனோ தனக்கு ஏற்பட்ட சாபத்திற்கு பயந்து மேலும் சிவ பூஜை, அர்ச்சனை செய்தான். சிவபெருமான் தரிசனமளித்து, “உன் பூஜையால் மகிழ்ந்தோம். ஸ்ரீ விஷ்ணுவின் சாபத்திற்கு அஞ்ச வேண்டாம். உனது நாமசம்பந்தமான வார்த்தாகச் செடியில் விளையும் காயானது பிராமணர் சாப்பிட ஏற்றது, உனது கறியின்றி எனக்குச் செய்யும் பூஜை ஏற்புடையதாகாது. என் அன்பர்களுக்கு நீ விருப்பமுடையவனாவாய்.” என வரமளித்தார்.
எனவே வார்த்தாகக் காயெனப்படும் கத்தரிக்காய் சாப்பிடுவது தவறல்ல” என்றுரைத்து அகத்தியர் காசிக்குப் புறப்பட்டார். (வார்த்தாகன் விஷ்ணுவை அவமதித்த காரணத்தாலேயே அவருக்குகந்த ஏகாதசி, துவாதசி நாட்களில் கத்தரிக்காய் சாப்பிடுவது பாவம் எனக் கூறப்படுகிறது)
உடன் பாண்டிய ராஜன் பாவியாகிய பிராமணனைச் சிறையிலடைத்ததோடு, கத்தரிக்காய் பிராமணனுக்கு தன, தான்யங்கள் கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தான். சிறையிலடைபட்ட பாவி அந்தணன் பசியால் வாடி சில நாளில் மரணமடைந்தான்.
மதுரையம்பதியில் மரணமடைந்ததால், அருகில் சிந்தாமணி எனும் கிராமத்தில் ஒரு இடையனுக்கு மகனாகப் பிறந்தான். முன்வினை காரணமாய் அவன் எப்பொழுதும் கொடிய செயல்களைச் செய்து கொண்டிருந்தான்.
அவன் முற்பிறவியில் சிறந்த சிவபக்தனாயிருந்த காரணம் பற்றி அவனுக்கு முக்தி கொடுக்க திருவுளம் கொண்டார் நம்ம சுந்தரேசப் பெருமான். மீனாட்சி தேவியை நோக்கி, ‘ஹே தேவி! பாவியாகிய அவ்விடையன் பல நற்காரியங்கள் செய்தவனாகையால் அவனுக்கு முக்தி கொடுக்க வேண்டும். நீ பசுவடிவம் எடுத்து அவன் தோட்டத்தில் பயிரை மேய்வது போலச் சென்றால், அவன் உன்னை அடிக்க துரத்தி வருவான். நீ இவ்வாலயத்தின் எல்லா வீதிகளையும் சுற்றி, நமது சன்னிதியருகில் வந்து அவனை இடபத்தின் பின் தள்ளிவிட்டு, பசுவுரு நீக்கி என்னருகில் வருவாய்’ என்று திருவாய் மலர்ந்தார்.
அன்னையும் சிவபிரான் ஆக்ஞைப்படி எல்லாம் செய்து முடித்தார். கீழே விழுந்தவுடன் இடையன் ஸ்தூல சரீரத்தை விட்டு சூக்கும சரீரத்துடன் தேவலோகம் சென்றான். அங்கு அவனுக்கு பார்வதி உடனுறை பரமேசுவரனாகக் காட்சி அளித்த எம்பெருமான்,
“உன்னால் செய்யப்பட்ட பாவங்கள் எல்லாம் என் கருணாசித்தத்தால் முற்றும் நீங்கி நீ சுத்தனாகி விட்டாய். இனி நீ கயிலையில் வசிப்பாய். உனக்கு முக்தி கொடுத்த இந்த அஷ்டமி திருநாளில் #மதுரை #பொற்றாமரைக் #குளத்தில் #நீராடி, நித்ய நியமங்களை நிறைவேற்றி, மனதில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசரை தியானித்து, ஸ்ரீபஞ்சாட்சர ஜபத்தை வாயினால் ஓதிக் கொண்டு......
மதுரையில் ஏழு வீதிகளை (வெளி வீதி, மாசிவீதி, ஆவணிவீதி,சித்திரை வீதி,ஆடி வீதி,சுவாமி சன்னதி 2 வீதி)
அனைத்து வீதிகளையும், பிரகாரங்களையும் வலம் வந்து, ஆலயத்திலுள்ள எழுந்தருளியுள்ள மூர்த்திகளையும் தரிசித்து, சந்நதியில் நமஸ்கரித்து, தங்கள் வீடு சென்று, தங்கள் வசதிக்கேற்ப நெய், தேன், தயிர் இவற்றோடு சிவபக்தர்களாகிய அந்தணருக்கு போஜனம் செய்வித்து, அவர்களது ஆசிகளைப் பெற்றால் அவர்களுக்கு முக்தியும், கைலாய வாசமும் கிட்டுவது உறுதி” என்றார்
எனவே, மார்கழி மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில் எவ்வூரில் இருப்பினும் அங்குள்ள சிவாலயத்தில் பிரதட்சிணம் செய்ய வேண்டும். இவ்வாறு பிரட்சிணம் செய்வதால் ஓர் அடிக்கு ஓர் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். வலம் வரும்போது எறும்புப் புற்றுகளுக்கு அரிசியிட வேண்டும். அவ்வாறு செய்தால் இலட்சம் பிராமணர்களுக்கு போஜனம் செய்த பலனை அடைவர். எவ்வளவு பாபம் செய்தவராயினும் அஷ்டமி பிரட்சிணத்தால் முக்தி அடைவர்.
மதுரையில் வாழ்வோர் கோயிலைச் சுற்றியுள்ள தைவீதி முதலாக ஏழு வீதிகளை வலம் வருதல் அவசியம். முடியாதவர் ஆடி வீதியையே ஏழுமுறை வலம் வர, ஏழு வீதியும் வலம் செய்த பயனை அடைவர்.
( மாசிவீதி மஹாத்மியம் )
யராவது ஒரு சைவ சந்யாசிக்காவது அன்னதானம் செய்வது நல்லது. மேற்கூறியவாறு எம்பெருமானாகிய சுந்தரேசர் தன் திருவாக்கினாலேயே அன்னை மீனாட்சி தேவியாருக்கு உரைத்ததாக ஸ்கந்த புராணம் உரைக்கிறது......