Monday 29 April 2024

மிதக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

 மிதக்கக் கற்றுக் கொள்ளுங்கள் .

_*கேள்விகள்*_
_*மதிக்கப்பட்டாலே போதும்*_
_*பதில்கள் கூட*_
_*அவசியமில்லை.*_
_*ஆகச் சிறந்த பக்குவம் என்பது..*_
_*வெற்றியின் போது*_
_*துள்ளாமலும்*_
_*தோல்வியின் போது*_
_*துவளாமலும்,*_
_*எதுவும்*_ _*நிரந்தரமில்லை*_
_*என உணர்தலே.*_
_*ஒருவருக்குக் குப்பையாகத் தெரியும் நீ மற்றவர்க்குப் பொக்கிஷமாகத் தெரிவாய்.*_
_*அது நீ இருக்கும் இடத்தைப் பொறுத்து.*_
சிறு சிறு செயல்களில்
கிடைக்கும் அனுபவங்களைக் கூட சிந்தையில் நீ சேகரித்து வை.
வாழ்வில் சிரமங்கள் ஏற்படும் போது அது சிறப்பாக வழி நடத்தும்.
ஒரு சிறு சறுக்கல் கூட
உங்களைக் கீழே தள்ளிவிட வாய்ப்பு உண்டு. ஆனால் மேலே செல்ல ஒரு பெரும் முயற்சி தேவை. ஆதலால் கவனமாய் இருங்கள்.
அனுபவம் என்பது
எதை எப்படிச் செய்ய வேண்டும், என்பதில் இல்லை. எதை, எப்படி, எப்போது, செய்யக் கூடாது என்பதிலே தான் இருக்கிறது.
எதுவாக இருந்தாலும் சரி மூழ்கி விடாதீர்கள்.
மிதக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
_*தீ என்றால்*_
_*சுடத்தான் செய்யும் ...*_
_*வாழ்கையும் அப்படியே...*_
_*உங்களுக்கு*_ _*ஒதுக்கப்படுவதும்*_
_*தீ தான்...*_
_*ஆனால் அது...*_
_*தீபமா....*_
_*தீப்பந்தமா ...*_
_*ஜோதியா ....*_
_*காட்டு தீயா ...*_
_*என்ற முடிவுகளை*_
_*எடுக்க காலம்*_
_*எப்போதும் உங்களைத்தான் தேர்ந்தெடுக்கிறது .*_
_*மிக உச்சிக்கு சென்றவன் தான்*_
_*பயத்தோடு வாழ்வான்....*_
_*தரையில் நடப்பவன்*_
_*தைரியமாகத் தான்*_
_*நடப்பான்.*_

மனிதத்தேனீயின் தேன்துளி


 

சிறந்தவர்கள்

 சிறந்தவர்கள் .

_*நம்பிக்கை என்பது*_
_*வெறும் சொல்*_
_*சார்ந்தது மட்டுமல்ல..*_
_*உங்கள்*_
_*நடவடிக்கைகளையும்*_
_*உங்கள் நேர்மையையும்*_
_*சார்ந்தது..*_
_*நம்பிக்கையுடன் நகர்வோம்.*_
_*வேண்டுதல்களைத் தவிர்த்து விட்டு..*_
_*வேண்ட நினைத்தக் காரியத்தை*_
_*செயலாற்ற நினைத்தாலே..*_
_*நாம் நினைத்தது நிறைவேற*_
_*வாய்ப்புகள் உண்டு.*_
*_பேராசை கொண்டவன்_*
*_உலகத்தையே பரிசாக கொடுத்தாலும்_*
*_திருப்தியடைய மாட்டான்_*
“குருவே வணக்கம்.
எனக்கு ஒரு பிரச்னை. நான் எது செய்தாலும் மற்றவர்கள் கிண்டலடிக்கிறார்கள்’ என்று சொன்னவனை
நிமிர்ந்து பார்த்தார் குரு.
“அதனாலென்ன, நீ அவர்களைப் பொருட்படுத்தாமல் காரியங்களை செய்ய வேண்டியதுதானே’
என்றார் குரு.
“என்னால் அப்படி இருக்க முடியவில்லை குருவே’என்று சொன்னவனுக்கு குரு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.
“ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸி ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள். டாக்ஸி டிரைவர் ஒரு வயதான சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்கு கிண்டல் புத்தி வந்துவிட்டது. அவர்கள் கேட்ட, படித்த சர்தார்ஜிகளைக் கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன. டிரைவரை வெறுப்பேற்ற வேண்டும் என்றபதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லிக் கொண்டே வந்தார்கள். ஆனால் அந்த சர்தார்ஜி டிரைவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
பல மணி நேரம் சுற்றிவிட்டு அவர்கள் இறங்கும் இடம் வந்தது. அதற்குள் ஏகப்பட்ட கிண்டல் அடித்துவிட்டனர்.
இளைஞர்கள் மீட்டரைப் பார்த்து காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி டிரைவர், அந்த இளைஞர்களிடம் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து, “தம்பி, எங்க சர்தார்ஜிகளை நிறைய கிண்டலடிச்சிங்க பரவாயில்லை. எனக்காக ஒரே ஒரு காரியம் பண்ணுங்க,
இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பாக்கிற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்குப் போடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்’ என்று சொல்லி போய்விட்டார்.
இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அந்த ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்துக் கொண்டு அவர்கள் போன இடமெல்லாம் பார்த்தார்கள்.
ஒரு இடத்தில் கூட பிச்சைக்கார சர்தார்ஜியைப் பார்க்க முடியவில்லை.
அவர்கள் டெல்லியைவிட்டு கிளம்பும் நாள் வந்தது. ரயில் நிலைய வாசலில் அந்த சர்தார்ஜி டிரைவரை சந்தித்தனர். அப்போது அவர் கேட்டார், “என்ன தம்பி, அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்குப்
பிச்சை போட்டிங்களா’ என்று.
இளைஞர்கள் “இல்லை’யென்று தலையசைத்தார்கள்.
“அதான் தம்பி சர்தார்ஜி. உலகம் முழுக்க எங்களை வச்சு ஜோக்கடிக்கிறாங்க. கேலி பண்றாங்க. ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்துறதில்ல. எங்களுக்குத் தெரிஞ்சதுல்லாம் உழைப்புதான்.
ரோட்டுக் கடை வைப்போம், லாரி ஓட்டுவோம், மூட்டை தூக்குவோம் ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம். டெல்லில நீங்க ஒரு பிச்சைக்கார சர்தார்ஜியைக் கூடப் பார்க்க முடியாது.’ என்று அந்த சர்தார்ஜி டிரைவர் சொன்னபோது இளைஞர்கள் கண்களில் பிரமிப்பு.’
இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்குப் புரிந்தது.
அப்போது குரு அவனுக்குச் சொன்னது
*அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி.*
*சிறந்த மனிதர்களாக*
*யாரும் பிறப்பதில்லை...*
*அவரவர் நடவடிக்கைகளே*
*அவர்களை*
*சிறந்தவர்களாக்குகிறது...*
_*நடக்கும் போது கிடைக்காத செறுப்பு படுக்கையில் கிடக்கும் போது கிடைத்தாலும் புண்ணியம் இல்லை.*_
_*தேவைப்படும்போது கிடைக்காத பணமும், பாசமும் கூட அப்படித்தான்.*_
_*செருப்பு தேயும் போது, கால் ஜாக்கிரதையாகி விட வேண்டும், வயது வளரும் போது பணச்சேமிப்பு பத்திரமாக இருக்க வேண்டும்.*_
_*பணம் ஆறாம் அறிவு போன்றது.*_
_*அதில்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும், நீங்கள் பயன்படுத்த முடியாது.*_
_*வருவாய்க்கு குறைவாக செலவு செய்ய நீங்கள் கற்றுக்கொண்டால் உங்களை விட பணக்காரர் எவருமில்லை.*_
_*நம் அணுகுமுறை சரியாக இருந்தால், நாம் நினைப்பது எளிதாக நிறைவேறும்.

உ.வே.சாமிநாதய்யர் நினைவைப் போற்றுவோம்


 

மனிதத்தேனீயின் தேன்துளி