Thursday 16 September 2021

வாழிய அண்ணன் க. ஜான்மோசஸ் நினைவுகள்.

 தமிழக மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் மாநில பொதுச் செயலாளர், பாரதி தேசியப் பேரவை நிறுவனர், மாநகர் மதுரையில் 365 நாட்களும் சுற்றிச் சுழன்று மக்கள் பணி மற்றும் சொற்பொழிவுகள் ஆற்றிய எனது அண்ணன்

க. ஜான்மோசஸ் அவர்களின் முதல் ஆண்டு நினைவைப் போற்றிடும் பிரமாண்ட நிகழ்வு
ஏராளமான நலத் திட்டங்களை வழங்கிடும் நிகழ்வாக துவரிமானில் இன்றிரவு நடைபெற்றது.
பங்கேற்று நினைவுப் பேருரை ஆற்றிய மனிதத்தேனீ, கிரம்மர் சுரேஷ், டாக்டர் இஸ்மாயில், வே. ந. கணேசன், மெகபூப்ஜான், அம்மாவாசி, ஜனதாதள முன்னோடிகள் செல்லப்பாண்டி, பாக்கியத் தேவர், கூடலிங்கம், நாகேந்திரன், முத்துச்சாமி, ரெங்கராஜ் உள்ளிட்டோர் மற்றும் கவிஞர்கள், நண்பர்கள், பேரப் பிள்ளைகள், வி ஜி பழனிக்குமார், வழக்கறிஞர் சி ஜே ராஜன், வைகை குயில், ஜெகநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் நினைவுகளைப் பகிர்ந்து பேசினர்.
மகன்கள் ராஜா, பாரத், இனியன் மற்றும் சின்மயா பைனான்ஸ் நிறுவன நண்பர்கள் விரிவான நெகிழ்வான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தனது நிலை உயர்ந்த போதும் தனது குடும்பத்தினர் அனைவரையம் அரவணைத்துச் செல்லும் பாங்கு
ஜெ. பாரத்திடம் வளரும் தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டும்.
வாழிய அண்ணன்
க. ஜான்மோசஸ் நினைவுகள்.







No comments:

Post a Comment