Wednesday 15 September 2021

நாணயம் நா நயம் தாரக மந்திரத்தை முன்னிறுத்திக் களம் காணும் கார் லேனா குழுவினர்

 நாணயம் நா நயம் தாரக மந்திரத்தை முன்னிறுத்திக் களம் காணும் கார் லேனா குழுவினர்

மதுரை நகரத்தார் முன்னோடிகளுடன் கலந்துரையாடல்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நமது மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடும் கார் லேனா என்ற ஏஎல். எஸ்பி. லெட்சுமணன் தலைமையிலான குழுவினர் பணிகளை ஒருங்கிணைத்திட மதுரையின் மூத்த முன்னோடிகள் சங்கமம் நேற்று இரவு மதுரை வாழ் நாட்டரசன்கோட்டை நகரத்தார் அமைப்பின் ஒருங்கிணைப்பில் அதன் அமைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
நன்று கருது என்ற தலைப்பில் மனிதத்தேனீ சிறப்புரை ஆற்றினார்.
வயிரவன் கோவில் தலைவர் கேஆர். மீனாட்சி சுந்தரம், பழமுதிர்ச் சோலை மேனாள் நிர்வாகி ஆர்எம். ஏகப்பன், உலகம்பட்டி எல். சிங்காரம் செட்டியார், வடக்கு நகரத்தார் சங்கத்தின் தலைவர் எஸ்பி எஸ் எஸ். சுப்பிரமணியன், அக்ரி சாத்தப்பன், வைரவிழா தலைவர் வி. சீனிவாசன், மதுரை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் தலைவர் சி. லெட்சுமணன், கே கே நகர் கற்பக விநாயகர் திருக்கோயில் நிர்வாகி நா. மீனாட்சி சுந்தரம்,மதுரை நகரத்தார் சங்கத்தின் முதுநிலைத் துணைத் தலைவர் ஆர்எம். வயிரவன், துணைத் தலைவர் எம். முருகப்பன், துணைச் செயலாளர் அப்பல்லோ ஒய். கார்த்திக், முன்னாள் நிர்வாகிகள், ஆர் எம். அருணாசலம், ஆர். கதிரேசன், எம். மணி, இளைஞர் சங்கத்தின் ஆரம்பகால முன்னோடி ஜி. உடையப்பன், பக்தி நெறி மன்ற நிர்வாகி நா. ராமநாதன், வேகுப்பட்டி சேகர், வேந்தன்பட்டி டி. சிங்காரம், தன வணிகன் மீனாட்சி சுந்தரம், அலவாக்கோட்டை பத்மநாபன் செட்டியார், கீழப்பூங்குடி சிங்காரம் செட்டியார்,
வேகுப்பட்டி காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திர பொது குழு உறுப்பினர் எஸ் கே சேகர் செட்டியார், கண்டரமாணிக்கம் ஆறுமுகம்
மற்றும் பலர் பங்கேற்று வாழ்த்தினர்.
மகளிர் சங்கத்தின் நிர்வாகிகள், இளைஞர் சங்கத்தின் மேனாள் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஏராளமான ஆச்சிமார்கள் உள்ளிட்ட இருநூறு பேர் பங்கேற்று பணிகள் குறித்து கலந்து பேசினர்.
நமது குழுவினரின் நீண்ட கால சமூகப் பணிகள், குடும்பப் பங்களிப்பு ஒட்டு மொத்த நகரத்தார்கள் அறிந்தது.
கடுகளவும் குற்றச் சாட்டு இல்லாத, நேர்மையான அர்ப்பணிப்புடன் கூடியது கார் லேனா குழு.
பணபலம், பரபரப்பு, மலிவான விளம்பரம், சினிமாத்தமான நையாண்டி இவற்றைப் புறந்தள்ளி நமது சிறந்த பணிகளால் வரலாற்று வெற்றியைப் பெற்றிடுவோம்.
நேர்மையுடன் - மனிதத்தேனீ







No comments:

Post a Comment