Saturday 25 September 2021

துளசியும் பெருமாளும்

 துளசியும் பெருமாளும்

🌿🙏*
👑பெருமாள் கோவிலில் துளசி வழிபடக் காரணமும்,துளசியின் அதி அற்புத சக்தியும்👑
🪴மகா விஷ்ணுவிற்கு உகந்த
பொருட்களில் முதலிடத்தில் இருப்பது துளசியாகும்.
🪴பெருமாள் கோவில்களிலும் துளசியை தனியாக பூஜையும் செய்வார்கள்.
🪴மேலும் பல்வேறு பிணிகளுக்கு
துளசி மிகச் சிறந்த மருந்தாகவும்
பயன்படுத்துகின்றனர்.
🪴துளசியின் வேறு பெயர்கள் பிருந்தா,
பிருந்தாவனி,
விஸ்வபாவனி,
புஷ்பசார,
நந்தினி,
கிருஷ்ண ஜீவனி,
விஸ்வ பூஜிதா.
🪴துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி.துளசியின் தாவரப்பெயர் சேக்ரட் பேசில் பிளான்ட்.
🪴துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.சங்காபிஷேகத்தில் துளசி சங்கு,
துளசி,
சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மகா ஞானியாகும் பாக்கியமும்,முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
🪴சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது.
🪴சிவபெருமானுக்கு பிடித்த அபிஷேகங்களில் உயர்ந்தது
சங்காபிஷேகம்.
🌱கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின்
அம்சமாக சுதர்மரும்,லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள்.இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள்.
🌱ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார்.
🌱இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க
வேண்டியதாயிற்று.
🌱அதே போல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள்.மாதவியின்
மகள் தான் துளசி.
🌱சங்கசூடனும்,துளசியும் திருமணம் செய்து
கொள்கிறார்கள்.பின்
கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும்,சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது.
🌱இதனால் சங்கசூடன் விஷ்ணுவுடனும்,துளசி
மகாலட்சுமியுடனும் மீண்டும் கலந்து விட்டார்கள்.
🌱இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும்,லட்சுமியும்
வாசம் செய்வதாக கூறப்படுகிறது.
🌱கிருஷ்ண பகவான் பாமா,ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். 🌱இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும்,ஆழமான பக்தியும்
கொண்டிருந்தாள்.அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து
வந்தாள்.
🌱ஆனால் பாமாவோ,விஷ்ணு தன்னை மார்பில் சுமந்திருப்பதாலும்,கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும்,தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமையாக்கி கொள்ள நினைத்தாள்.
🌱இதற்காக கண்ணனை,துலாபார தராசு தட்டின் ஒரு புறமும்,மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள்.ஆனால் தராசு சமமாகவில்லை. 🌱அப்போது அங்கு வந்த ருக்மணி,கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என
வருந்தி,கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்த போது தராசு சமமாகியது.
🌱கண்ணன் புன்முறுவலுடன்,நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும்.
🌱நான்,எனது என்ற அகந்தையை ஒழித்து,உண்மையான பக்தியுடன் என்னை சரணடைபவருக்கே நான்
சொந்தம்,என்றார்.
🌱தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து வணங்கினாள் பாமா.
🪴துளசியின் ஒரு இதழ்,பொன் பொருள் போன்றவற்றைவிட உயர்ந்தது என்பதை நிருபித்தார் கிருஷ்ணனர்.
🪴எனவே,தான் இவ்வளவு சிறப்பு வாய்ந்த
மகாலட்மியின் அம்சமான துளசியை உலகில் உள்ள அனைத்து பெருமாள்
திருக்கோவில்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வழிபடுகின்றனர்.
*🙏ௐ நமோ நாராயணா

No comments:

Post a Comment