கொடுப்பதில் பேரின்பம்.
தனக்கென ஒரு பழத்தைக் கூட மரம் வைத்துக் கொள்வது இல்லை. அதுபோல பிறருக்குக் கொடுத்து
உதவுவதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
பொருள் இல்லாதவனை உலகம் ஏழை என்று சொல்கிறது. அதிக ஆசை உள்ளவனே உண்மையில் ஏழை..
கைகள் இருப்பதே மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கே;.
நீங்கள் பட்டினியாய்க் கிடக்க நேர்ந்தாலும் பரவாயில்லை.
உங்களிடம் இருக்கும் ஒன்றை,
இல்லாதவர்களுக்கு அளித்து அதன் மூலம் நீங்கள் காணும் மகிழ்ச்சியும், திருப்தியும் மிகவும் உயர்ந்தது.
கொடுக்கும் சக்தி உள்ள மட்டும்
இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழுங்கள்..
குறிப்பிட்ட காலம் தான் உலகில் வாழப் போகிறோம்.அதற்குள் நாலு பேருக்காவது நன்மை செய்து விட்டுச் செல்வோம்..
ஆம்.,நண்பர்களே..,
பகிர்ந்து கொள்ளும் போது, துன்பங்கள் பாதியாகின்றன; இன்பங்கள் இரட்டிப்பாகின்றன.
இது ஒரு மாயக் கணக்கு. அன்பையும் மகிழ்ச்சியையும் பிறருக்கு அளித்துப் பாருங்கள்.
அதனால் உங்களுக்குக் கிடைக்கும் ஆனந்தம், வாழ்க்கையின் பொருளையே உங்களுக்குப் புதிதாகப் புரிய வைக்கும்.
No comments:
Post a Comment