Tuesday 14 September 2021

மனநிறைவே மகிழ்ச்சி.

 மனநிறைவே மகிழ்ச்சி.

இறைவன் எதையாவது ஒன்றை உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டால் அதை விடச் சிறந்த ஒன்றை கொடுத்தே தீருவான் என்பதை காலம் நிச்சயம் உனக்கு காட்டித்தரும்..
நம்பிக்கையோடு காத்திரு.
யாராவது ஒருவரிடம் உள்ளதொன்றைப் பார்த்து பொறாமைப்படாதே.. ஒருவேளை நீ அவருக்கு அது அருள் என்று நினைத்திருப்பாய்.. ஆனால் அதுவே அவருக்கு பெரும் சோதனையாக இருக்கும்.!
யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்காதே.. அது உன் நிம்மதியை தொலைக்க வைக்கும்.. காலம் அதன் கருமத்தை கச்சிதமாக செய்யும் வரை பார்த்துக் கொண்டிரு.!
நீ வாழ்வில் எதை இழந்தாலும் அதற்கு பதிலீடாக எதையாவது பெறுவாய்.. ஆனால் இறைவனின் மீதான நம்பிக்கையை நீ இழந்தாயேயானால் அதை ஈடு செய்ய உன்னால் எதையும் தேட முடியாது.!
எல்லா சூழ்நிலையும்
ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
ஓஹோ என்று வாழ்ந்து
ஒன்றுமில்லாமல் போனவர்களும் உண்டு.
ஒன்றுமில்லாமல் வாழ்ந்து
ஓஹோ வென்று போனவர்களும் உண்டு.
மற்றவர்களிடம் இருப்பதில் எவை என்னிடம் இல்லை என்று சிந்திப்பதை விட மற்றவர்களிடம் இல்லாதது எவை என்னிடம் உள்ளது என்று பட்டியலிட்டு மனநிறைவுடன் வாழுங்கள்.

No comments:

Post a Comment