Tuesday 14 September 2021

ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் மாநகர் மதுரையின் மகத்தான குழு கோட்டை அம்மன் அருள்பாலிக்கும் தேவகோட்டை மாநகரின் சமுதாயச் செம்மல்கள் சந்திப்பு.

 ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் மாநகர் மதுரையின் மகத்தான குழு கோட்டை அம்மன் அருள்பாலிக்கும் தேவகோட்டை மாநகரின் சமுதாயச் செம்மல்கள் சந்திப்பு.

நாணயம் நா நயம் என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தி களம் காணும் நாட்டரசன்கோட்டை கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன் தலைமையிலான குழுவினர் தேவகோட்டை நகரத்தார் கல்வி நிறுவனங்களில் பேராற்றல் மிக்க செயலாளராகப் பணியாற்றியவர், ரோட்டரி சங்கத்தின் மூத்த முன்னோடி, அறப்பணிகள் பல செய்த பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் மாமாங்கம் செந்தி என்ற ஏ. ராமநாதன் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற மகிழ்வான வேளை.
மற்றும் ஆன்மீகப் பணிச் செம்மல், துடிப்பான செயல்வீரர், அருமைத் தம்பி முத்து வீரப்பன் அவர்களைச் சந்தித்து பேராதரவினைப் பெற்ற இனிய தருணம்.
உடன் தேவகோட்டை வாலி இல்லம் ராம. மீனாட்சி சுந்தரம், தடம் மாறாத நண்பர் நலந்தா ஜம்புலிங்கம், அப்பல்லோ ஒய். கார்த்திக், போர்வெல் சொக்கலிங்கம்,கேட்டரிங் எஸ் எம் எம். கண்ணன் உள்ளனர்.
திருவிழா மாநகர் மதுரையில் வரலாற்றுத் திருப்பு முனையாக அமையும் இந்தக் களத்தில் மரபுவழியும் பண்பாடும் மேன்மை பெற்றிட பேராதரவு அளித்து வெற்றி பெறத் துணை நின்றிடுவோம்.
நேர்மையுடன் - மனிதத்தேனீ



No comments:

Post a Comment