Thursday 26 August 2021

எதுவும் கிடைக்குமென்று நினைத்து யாரும் பிறப்பதில்லை ..!

 எதுவும் கிடைக்குமென்று நினைத்து யாரும் பிறப்பதில்லை ..!

எதுவும் நிலைக்குமென்ற எண்ணத்தில் எதையும் செய்யவும் தேவையில்லை….!
யாராக இருந்தால் என்ன ..?
காணும் அந்த நேரம் உண்மையாய் இருந்துவிடுங்கள் ..!
கண்ணாடியைப் போல் பிம்பங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் .. !உள்வாங்கி விடாதீர்கள்.. !
ஒவ்வொன்றும் வாழ்க்கையின் தத்துவம் தான்.. !
எதற்காக நம்பவேண்டும் மற்றவர்களை .. !ஏமாறுவதற்காகத்தானே .. ?!
அதனால் நம்பிக்கை என்ற வார்த்தை உங்கள் மேல் மட்டும் ஆதிக்கம் செலுத்தட்டும்..!
உங்களை உங்களால் ஏமாற்ற முடியாதென்பதால் நம்பிக்கைக்கு மிகவும் பொருத்தமானவர் நீங்கள் மட்டும்தான்..!
மானிட நீதி அவரவருக்கான வாழ்வியல் வழிசார்ந்தே உருவாக்கப்பட்டிருக்கும் போது ..
அடுத்தவர் சொல்வதில் உனக்கான வாழ்க்கை இருந்துவிட சாத்தியமே இல்லையே .. !
விழிப்போடு நோக்கு ஒவ்வொரு விடியலையும்..! உனக்குள் விழித்திரு ஒவ்வொரு நொடியும்..!
வாழ்க்கை_என்பது
வேறல்ல_நீதான்..!

No comments:

Post a Comment