Saturday 14 August 2021

புதிய மதுரை ஆதினம் - பட்டம் ஏற்றார்.

 புதிய மதுரை ஆதினம் - பட்டம் ஏற்றார்.

உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதீனம் 292 ஆவது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறைவன் திருவடி அடைந்தார்கள.
இதையொட்டி அடுத்த மதுரை ஆதீனமாக 'ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்' இன்று காலை முறைப்படி பட்டம் ஏற்றார்கள்.
இன்று காலை மதுரை ஆதீனம் மடத்தில் மக்கள் மரியாதை செலுத்திட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை ஆதீனம் தற்போது மக்கள் ஆதீனமாக காட்சி தருகிறார்.
நமது கவியரசு நற்பணி மன்ற முன்னோடிகள் தியாக தீபம் அ. பாலு, பி. பன்னீர்செல்வம் ஆகியோருடன் வணங்கி வந்தோம். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment