Wednesday 18 August 2021

எளிய முறையில்

 எளிய முறையில்*

*சரணாகதி விளக்கம்*
மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை
மாட்டுக்கு
உயிர், அறிவு
இரண்டும் உண்டு
ஆனால்.....
*வண்டிக்காரன்*
உயிரில்லாத
வண்டியை....
அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..
எந்த இடம் செல்ல
வேண்டும்...
என்பதை தீர்மானித்து,
வண்டியை
செலுத்துவான்.
*எவ்வளவு தூரம்...*
*எவ்வளவு நேரம்...*
*எவ்வளவு பாரம்...*
அனைத்தையும்
*தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே*!
அறிவிருந்தும்.....
சுமப்பது தானாக இருந்தாலும்
மாட்டால்
ஒன்றும் செய்ய
இயலாது...
அதுபோல....
உடம்பு என்ற
ஜட வண்டியை
ஆத்மா, உயிர்
என்ற மாட்டுடன் பூட்டி
*இறைவன் என்ற வண்டிக்காரன்*
ஓட்டுகிறான்....
*அவனே தீர்மானிப்பவன்*
*அவன் இயக்குவான்..*
*மனிதன் இயங்குகிறான்*
👉 *எவ்வளவு காலம்..
👉எவ்வளவு நேரம்..
👉எவ்வளவு பாரம்..
*தீர்மானிப்பது இறைவனே*
இதுதான்
நமக்காக
இறைவன்
போட்டிருக்கும்
*டிசைன்..*!
இதுதான்
இறைவன் நமக்கு
தந்திருக்கும்
*அசைன்மென்ட்*..!
*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*
*இதை*
*உணராதவனுக்கு*
*அமைதி இல்லை*.
*இருக்கும் காலங்களில்*
*இனியது செய்வோமே*!.

No comments:

Post a Comment