Tuesday 10 August 2021

இறைவன் சக்தி குறித்து வாரியார் சுவாமி சொன்னது.

 இறைவன் சக்தி குறித்து

வாரியார் சுவாமி சொன்னது.
எல்லா இடத்திலும்தான் கடவுள் நிறைந்திருக்கிறார்...
என்று கூறுகிறிர்கள். அப்படி இருக்கும் கடவுளுக்கு எதற்காக, தனியாக ஒரு கோவில் கட்டிக் கும்பிடச் சொல்கிறிர்கள் ?' என்ற கேள்வி ஒருவரிடம் இருந்து எழுந்தது.
வாரியார் சுவாமிகள் : 'நீங்கள் இங்கு எந்த வாகனத்தில் வந்தீர்கள் ?'
கேள்வி கேட்டவர் : மிதி வண்டியில்...
சுவாமிகள் : நீங்கள் வீட்டுக்குப் போகும் போது, மிதிவண்டி டியூபிலிருக்கும் காற்றை வெளியேற்றி விட்டுச் செல்வீர்களா ?'
கேட்பவர் : அதெப்படி சுவாமி ? டியூபில் காற்று இல்லாமல் எவ்வாறு மிதிவண்டி ஓடும் ?
சுவாமிகள் : அதுதான் எல்லா இடங்களிலும் காற்று நிறைந்திருக்கிறதே ! டியூபில் காற்று இல்லாவிட்டால் என்ன ?'
மௌனமாக இருந்தவரிடம்...
சுவாமிகள் : எல்லா இடங்களிலும் காற்று நிறைந்திருந்தாலும், அதை ஒரு டியூபில் நிறைக்கும் போதுதான், மிதிவண்டியை நம்மால் இயக்க முடிகிறது. அதுபோல, எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும் 'இறைவனின் சக்தியை', ஒரு கோவிலில் ஸ்தாபிக்கும் போதுதான், அந்த சக்தியை நம்மால் உணர முடிகிறது என்றார்.
நன்றி கணேஷ் சுப்பு

No comments:

Post a Comment