Tuesday 17 August 2021

வாழிய பல்லாண்டு.

 வாழிய

பல்லாண்டு.
நாளெல்லாம் நல்ல தமிழில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் எளிதில் புரிந்திடும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றி அன்னைத் தமிழுக்கு அரும்பணி ஆற்றிவரும் அருமைத் தம்பி தேவகோட்டை நகைச்சுவை அரசு, நாட்டரசன்கோட்டை
எஸ். ராமநாதன்
நல்ல நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
பேச்சுலகில் இளம் வயதில் வரலாறு படைத்து வரும் இளவல், வழக்கறிஞர், ஆன்மீகச் சொற்பொழிவாளர், வர்ணனையாளர், நகைச் சுவை, பட்டி மன்ற நடுவர், பல்துறை நிகழ்வின் பாங்கான தொகுப்பாளர், பெற்றோரைப் போற்றி மகிழும் பிள்ளை என உயர்ந்து நிற்கும் தம்பி ராமநாதன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


No comments:

Post a Comment