Friday 13 August 2021

உண்மையால் விளையும் நன்மைகள்.

 உண்மையால் விளையும் நன்மைகள்.

குழந்தைகள் பொய் சொல்வது பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலைத் தரும்.
குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்ன செய்யலாம்..
அனைத்துபெ பெற்றோர்களும் தங்களது குழந்தை நல்ல குழந்தையாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
குழந்தைகள் செய்யும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலைத் தரும்.
அதில் ஒன்று பொய் சொல்வது.
குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம்
குழந்தைகளுக்கு கற்பனை உணர்வு இருப்பது சிறந்தது தான்.
ஆனால் நாம் இருக்கும் சூழ்நிலைக்கு எது ஏற்றது.
நமக்கு எது சாத்தியம், எது சாத்தியம் இல்லை என்ற உண்மைகளைப் புரிய வைக்க வேண்டியது அவசியம்.
பெற்றோர்கள் தங்களை அறியாமலேயே குழந்தைகளை பொய் சொல்லப் பழக்கப்படுத்துகிறார்கள்.
வீட்டில் இருந்து கொண்டே யாராவது கேட்டால் அப்பா இல்லை என்று சொல் என்று நீங்களே குழந்தைகளுக்குப் பொய் சொல்ல பழக்கப்படுத்தாதீர்கள்.
குழந்தைகள் முன் நீங்கள் யாரிடமும் பொய் சொல்ல வேண்டாம்.
அதைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
குழந்தைகள் பொய் சொன்னால், அதை மீண்டும் செய்யாமல் தடுக்க பெற்றோர்கள் அடிப்பது, சூடு வைப்பது போன்ற பெரிய தண்டணைகளைக் கொடுக்காதீர்கள்.
இது அவர்களது மனதில் பெரிய பயத்தை உண்டாக்கிவிடும். பின்னர் அவர்கள் பொய்யை நன்றாக சொல்லக் கற்றுக்கொள்வார்கள்.
குழந்தைகளுக்கு பொய் சொல்வதால் உண்டாகும் தீமைகளை சொல்லி அவர்களைப் பயப்படுத்த வேண்டாம்.
உண்மை சொல்வதால் விளையும் நன்மைகள் பற்றிக் கூறலாம். நீதிக் கதைகள் போன்றவற்றை கூறுங்கள்.
குழந்தைகளிடம் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என தொட்டதற்கு எல்லாம் தடை விதிக்க வேண்டாம்.
அவர்களுக்குக் கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள்.
அதிக தடைகளை விதிப்பதும், உத்தரவுகளைப் போடுவதும் அதை மீற வேண்டிய சூழ்நிலை வந்தால், குழந்தைகளைப் பொய் சொல்ல வைக்கும்.
குழந்தைகளுக்கு உண்மை சொல்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய திருக்குறள்கள் மற்றும் பழமொழிகளைச் சொல்லிக் கொடுங்கள்.
அவர்கள் நல்வழியில் செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகள் ஒரு தவறு செய்தது உங்களுக்குத் தெரிந்தால், அதை நேரடியாக சொல்லிப் புரிய வையுங்கள்.
அவர்களது வாயில் இருந்தே உண்மையை வர வைக்க வேண்டும் என்று சாமர்த்தியமான கேள்விகளைக் கேட்டு அடுக்கு அடுக்காகப் பொய் சொல்ல வைக்காதீர்கள்.
உங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்துவிட்டு உங்களிடம் உண்மையைக் கூறினால், செய்த தவறுக்காக அவருக்கு தண்டனை கொடுக்காதீர்கள்.
உண்மை சொன்னதற்காகப் பாராட்டுங்கள்.
அடுத்த முறை இது போன்ற தவறைச் செய்யக்கூடாது என்று மட்டும் கூறுங்கள், அதுவே போதுமானது.
நன்றி ஆர்எம்ஏ ராஜேஸ் கண்ணா

No comments:

Post a Comment