Thursday 29 February 2024

தேவையானது தேவையற்றது . .

 தேவையானது தேவையற்றது . .

*_உங்கள் வாழ்தலில்_*
*_மகிழ்ச்சி வேண்டுமெனில்.._*
*_தேவையானதை_*
*_தேடி செல்லாதீர்கள்..!_*
*_உங்களிடம் இருக்கும்_*
*_தேவையற்றதை விலக்குங்கள்..!!_*
சில சமயங்களில்
நாம பேசறதை காது குடுத்து கேட்க யாராவது இருக்க மாட்டாங்களான்னு ஏங்கியிருப்போம். அப்படி ஏங்கியவர்களுக்குத் தெரியும் நமக்குன்னு ஒருத்தவங்க இருக்குறதோட அருமை.
எதுனாலும் முதலில் அவங்களிடம் சொல்லி விடுவோம். சந்தோஷப்படுறதோ, அழறதோ முதலில் அந்த நபரிடம் பகிர்ந்து கொள்வோம். அது யாராக வேணுமோ இருக்கலாம், தோழியோ, தோழனோ, சொந்தமோ, பந்தமோ. ஆனால் அப்படி ஒரு நபர் நம் வாழ்வில் கிடைக்க குடுத்து வைத்திருக்க வேண்டும்.
இதை எதுக்காக இங்கே சொல்றேன்னா, சில பேர் பிரச்சனைகளை மனசிலேயே போட்டு வைச்சிப்பாங்க. வெளியில சொல்ல மாட்டாங்க. ஆனால் எல்லோர்கிட்டேயும் சிரிச்சி நல்லா பழகிட்டிருப்பாங்க.
நமக்கு என்னைக்கோ ஒரு நாள் அவங்க பிரச்சனை தெரிய வரும் போது ஆச்சர்யமாயிருக்கும். எப்படி இவ்வளவு கவலையை வைச்சிக்கிட்டு சிரிக்க முடிஞ்சுதுன்னு. அதைப்போல இருப்பவர்களை பார்க்கும் போது எனக்கு மன வேதனையாக இருக்கும். அதுவும் அவங்க நமக்கு தெரிஞ்சவங்களாயிருந்தால்
இன்னும் வேதனை.
ஏன்னா என்னைப் பொறுத்தவரைக்கும் ஒருத்தவங்களுக்கு நீங்க உதவி செய்யுறது முக்கியமில்லை. குறைந்தபட்சம் அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்டாலே போதுமானது. ஆறுதல் வார்த்தைகள் சொல்வதால் எவ்வளவு பெரிய வேதனையிருந்தாலும் அப்படியே பறந்துடும். இப்படி ஒருத்தவங்களுக்கு சப்போட்டிவாக இருப்பது ரொம்ப முக்கியம்ன்னு நான் நம்புறேன்.
நம்ம கஷ்டத்தை ஷேர் பண்ண கூட யாருமேயில்லையேன்னு வருந்தப்படும் போது கண்டிப்பா நியாபகம் வைச்சிக்கோங்க. நான் இருக்கேன். என்கிட்ட சொல்லலாம். நான் சப்போட்டிவாக இருக்கணும்னு நினைக்கிறேன். ரொம்ப நாளாவே இதை சொல்லனும்னு நினைச்சேன். இன்னைக்கு சொல்லிட்டேன். இப்படி சொல்லிப் பாருங்கள்.
*"நான் இருக்கேன்"* இந்த வார்த்தையை சோகமாக இருக்கும் யாரிடமாவது சொல்லி பாருங்களேன். உடனே அவங்க முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியும். நம்பிக்கை கொடுக்க கூடிய மந்திர வார்த்தை. எனவே நீங்களும் உங்களால முடிஞ்ச அளவு எத்தனை ஆயிரம் வாட்ஸ் பல்புகளை எரிய வைக்க முடியுமோ எரிய வைக்கலாம்.
வாழ்க்கையில்
வரும் ஒவ்வொரு நபரும்
ஒரு பாடத்தை கற்பித்து விட்டுத் தான் செல்கிறார்கள்.
உங்கள் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்காதீர்கள். அந்த வழியில் நீங்கள் செல்லப் போவதில்லை.
நீங்கள் கடக்கும் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். மறு நாளைப் பற்றிச் சிந்திக்காதீர்கள், அது விதியின்
கைகளில் உள்ளது.
மகிழ்ச்சியை
சேமித்து வைப்பதில் எந்தப் பயனும் இல்லை, அவ்வப்போது
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment