அழகானது வாழ்க்கை . .
_*உங்கள் மீது அன்பு வைத்திருப்பவர்களை*_
_*பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்...*_
_*பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்.*_
குரங்கை
குட்டிக்கரணம் அடிக்க வைத்து
கூத்தாடி என்பவர்.
சுற்றியுள்ள ஜனங்களின் கைத்தட்டல்களைப் பெறுவதற்கு
ஆவல் கொள்வது போன்றது அல்ல வாழ்க்கை.
அப்படி நினைத்துக் கொண்டிருந்தால்தான் சுற்றியுள்ள ஜனங்கள் நம்மைப் பார்த்து திருப்தியடைந்து பாராட்ட வேண்டும் என்று நினைப்பது.
"வாழ்க்கையில் 100% யாரையும்
திருப்தி பண்ண முடியாது"
காட்டாற்று வெள்ளம்
தன்னிச்சையாய் மேடுகளைக் கடந்து பள்ளங்களை நோக்கிப் பாய்வது போன்ற அழகானது வாழ்க்கை.
நமது சுயத்தோடு மகத்தான செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்.
சுற்றியுள்ள மனிதர்கள் அந்த காட்டாற்றை நோக்கி தனது தாகம் தீர்க்கவும் வரலாம். தனது உடலைச் சுத்தம் செய்யவும் வரலாம்.
வரட்டுமே அதனால் என்ன உலகுக்கு பயன் என்று நமது வாழ்க்கை இருந்துவிட்டுப் போகட்டுமே.
*திருப்தி என்பது நமக்கு நாமே அடைந்தால் போதும். *
*_வார்த்தையால் பேசுவதை விட_*
*_வாழ்ந்து காட்டுவதே சிறப்பு._*
*_தனியே நின்றாலும்_*
*_தன்மானத்தோடு_*
*_நிற்பதில் தவறில்லை._*
_*உங்களுக்கானது உங்களை வந்தடையும் எனவே பிறரின் வளர்ச்சியைக் கண்டு மகிழுங்கள், வாழ்த்துங்கள். விரைவில் நீங்களும் அந்த நிலையை அடைவீர்கள்.*_
_*தளராத நம்பிக்கை,
இடை விடாத முயற்சி
ஆகிய இரண்டையும் எப்போதும் வழித்துணையாகக் கொள்.*_
No comments:
Post a Comment