Monday 19 February 2024

தெளிவாக இருப்போம்.

 தெளிவாக இருப்போம்.

*_சிறந்த மனிதர்களாக_*
*_யாரும் பிறப்பதில்லை.......!!_*
*_அவரவர் நடவடிக்கைகளே_*
*_அவர்களைச்_*
*_சிறந்தவர்களாக்குகிறது.......!!_*
வாழ்க்கையில் வரும்
ஒவ்வொரு நபரும் ஒரு பாடத்தைக் கற்பித்து விட்டுத் தான் செல்கிறார்கள்.
உங்கள் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்காதீர்கள்.
அந்த வழியில் நீங்கள் செல்லப் போவதில்லை.
நீங்கள் கடக்கும்
ஒவ்வொரு நாளையும்
மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
மறு நாளைப் பற்றி சிந்திக்காதீர்கள் அது விதியின்
கைகளில் உள்ளது.
மகிழ்ச்சியைச் சேமித்து வைப்பதில் எந்தப் பயனும் இல்லை,
அவ்வப்போது
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
_*உங்கள் வீட்டுச் சுவற்றில் மாட்டியிருக்கும் மூதாதையரின் புகைப்படங்களைப் பாருங்கள்.*_
_*சற்று சிந்தித்துப் பாருங்கள் அவர்கள் என்ன எடுத்து சென்றார்கள் என்று.*_ _*அவர்கள் சென்ற பின் உங்கள் தினசரி*_
_*வேலைகளில் எது நின்று போனது என்று.*_
_*நம்மிடம் இல்லாததை தேடுகிறோம் என்ற பெயரில், இருப்பதையும் இழந்து விடுகிறோம்.*_
_*சிலவற்றை தெரிந்து கொண்டால் தெளிவாக இருப்பாய். பலவற்றை தெரியாமல் இருந்தால் நிம்மதியாய் இருப்பாய்.*_

No comments:

Post a Comment