புதுமணத் தம்பதியர்
திருநகர் ஸ்வீடு டிரஸ்ட் இல்லத்தில்
வாழ்த்துப் பெற்றனர்.
திருமண விழா மற்றும் மாலை நடைபெற்ற வரவேற்பு (பெண் அழைப்பு) சிறப்பாக (வருகை தந்து வாழ்த்திய 5500 பேர்) நடைபெற்றதன் மகிழ்வைப் பகிர்ந்து கொண்ட
மருமகள் ரா. நாச்சம்மை தேவி பூஜா
நேற்று இரவு திருநகரில் உள்ள அருமை நண்பர் கோவிந்தராஜ் ஈடுபாட்டுடன் மிகச் சிறப்பாக நடத்தும் ஸ்வீடு டிரஸ்ட் முதியோர் இல்லத்தில் உள்ள 36 பெருமக்களிடம் வாழ்த்துப் பெற்று இரவு சிறப்பு உணவும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
அருகில் அண்ணன் மகள்
விசாலாட்சி கண்ணன், மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம்.
புதுமணத் தம்பதியர் இன்று காலை சென்னை சென்று
நாளை மறுநாள் பெங்களூர் வழியாக மாலத்தீவு செல்கின்றனர்.
இறையருளுடன் எங்கள் பெற்றோர்கள் நல்லாசியுடன் இனிதே ஆனந்த வாழ்க்கை நடக்கின்றது.
No comments:
Post a Comment