Friday 9 February 2024

கற்களும் முட்களும் . .

 கற்களும் முட்களும் . .

வாழ்க்கையின்
பயணம் மிகவும் அழகானது.
அந்தப் பயணத்தில்
நாம் காலார நடந்து செல்கின்றோம். நம்முடைய விதிப்பயன் காரணமாக கற்களும் முட்களும் காலைப் பதம் பார்க்கலாம்.
புண்ணிய பலன்கள் எனும் பஞ்சுமெத்தை போன்ற பசுமையான புட்கள் நிறைந்த நடைபாதைகளும்
நாம் காணலாம்.
அனைத்தையும்
சிரித்துக்கொண்டு கடந்துவிடு.
நம்முடைய கஷ்டங்களையும் இன்பதோடு ஏற்றுக் கொள்ளப்
பழகி விடு.
துன்பம் தருவோரையும் சிரித்துக்கொண்டே
தாண்டிச் செல்லப் பழகிவிடு.
அப்போதுதான்
வாழ்க்கையில் வெற்றி காண முடியும்.
தெய்வங்கள் மனித அவதாரமாய் தோன்றி, நாம் வாழ்வதற்குப் பல உதாரணங்கள் எடுத்துக்காட்டுகள் இப்படித்தான் நமக்கு சொல்லிக் கொடுத்து இருப்பதை நாம் அறிவோம்.
தெய்வத்தின் சோதனை எனும் அனுபவத்தில் கிடைக்கும்
அமிர்தத்தை நாம் பெற்று, தள்ளாத வயதிலும் தளராத மனம் பெற்று, தெய்வத்தின் பாதத்தை
விடாமல் நாம் பற்றும் திடம்பெற்று வாழ்ந்திடுவோம்.

No comments:

Post a Comment