Tuesday 13 February 2024

பேராசிரியை திருமதி வள்ளியம்மை பழநியப்பன் அவர்களின் கருத்தாய்வு

 மனிதத் தேனீ

மகனின் திருமணநாளில்
அன்பளிப்பாக வழங்கிய
ஆனந்த அமுதம்
உண்மையிலேயே ஆனந்த அமுதமே. படிக்கும் போது ஆனந்தத்தையும், பயனைக் கருதும் போது அமுதத்தை உண்டது போலவும் அமையும் தொகுப்பு நூலுக்கு அருமையான பெயர் அமைத்தது பாராட்டிற்குரியது.
பெரியோர்களின் கருத்துக்களை எழுத்து மூலமாக த் தொகுத்து என்றும் அழியாச் செல்வமாக்கியது, வாசிப்பின் இன்றியமையாமை, செட்டிநாட்டுச் சிக்கனம், கொடை உள்ளம், இணக்கமான பேச்சு போன்ற வாழ்வுக்குத் தேவையான கட்டுரைகள், பெண்கள் மனம் குளிர தோத்திரப் பாடல்கள் அருமை.
இந்தப் பதிவு இந்த நூலைப் பெற்ற அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதற்காக பதிவு செய்யப்படுகிறது. மணமக்கள் மன மகிழ்வோடும் நலத்தோடும் எல்லோர் வாழ்த்திலும் வாழ வாழ்த்துக்கள்.
பேராசிரியை திருமதி வள்ளியம்மை பழநியப்பன் அவர்களின் கருத்தாய்வு


No comments:

Post a Comment