Wednesday 28 February 2024

மன நிறைவும் நிம்மதியும் . .

 மன நிறைவும் நிம்மதியும் . .

_*மற்றவர்களைப் பற்றிய பொய்யான குற்றச் சாட்டை இங்கும் அங்கும் பரப்ப வேண்டாம்.*_
_*அனுபவம் என்பது ஒரு நல்ல பள்ளிக் கூடம். அனுபவம் வெற்றி பெற வழி காட்டும்.*_
பத்தாயிரம் சம்பாதிக்குற
ஒரு நபரிடம் போய்க் கேளுங்கள்,
நீங்க வாழ்க்கையில் நிம்மதியா சந்தோஷமா இருக்கீங்களான்னு, இல்லைன்னு பதில் வரும். அவனுக்கு அங்கு தேவை பணமாக இருக்கும். நிறைய பணம் சம்பாதித்தால் நிம்மதியாக வாழலாம் என்ற நினைப்பிலேயே காலம் பூராவும் வாழுவான். இங்கு நிறைய பேர் அப்படித் தான் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவே ஒரு லட்சம்
சம்பாதிக்கும் ஒரு நபர் நிம்மதியாக இருப்பாரா என்று கேட்டால் அங்கேயும் நிம்மதி இருக்காது.
அவரால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்க முடியும். அவருடைய எல்லா ஆசைகளையும் பணத்தை வைத்து நிறைவேற்றிக் கொள்ளலாம்.
ஆனால் அதெல்லாம் நிலையான சந்தோஷத்தையும்
நிம்மதியையும்
தந்து விடுவதில்லை.
இங்கே வாழ்க்கையில்
நிம்மதி கிடைக்க
பணம் தான் முக்கிய தேவை என்ற எண்ணம் சுத்தப் பொய்.
அப்போ எது தான் நிம்மதியும் சந்தோஷமும் தரும்.
உங்க மனசுக்குள்ள ஒரு ஆசையிருக்கும். அது உங்களோட நார்மலான வாழ்க்கையில் இருந்து மாறுப்பட்டு இருக்கலாம். அதையெல்லாம் செஞ்சா மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு அதை மனசுலேயே மறைச்சி வைச்சி வாழ்ந்துக்கிட்டிருப்பீங்க.
உதாரணத்துக்கு
எனக்கு ஊர் ஊரா சுத்தணும்னு
ரொம்ப ஆசையிருக்கு.
ஒரு டீ கடை ஆரமிச்சி படிப் படியா டெவலப் ஆகணும்னு ஆசையிருக்கு.
ஒரு ஐ.டி வேலை பாக்குறவனுக்கு விவசாயம் பண்ணணும்னு ஆசையிருக்கலாம்.
இப்படி நமக்கு பிடிச்சதை செஞ்சி
அந்த லைப்பை வாழும் போது தான் நமக்கு மனநிறைவும் மனநிம்மதியும் கிடைக்கும்.
நீங்க தூங்கும் போது எந்த யோசனையும் கவலையும் நினைவில் வராமல் தூக்கம் வந்தால்
நீங்க மனநிறைவான
நிம்மதியான
வாழ்க்கை வாழறீங்கன்னு அர்த்தம்.
நீ புரிந்து கொண்டாய் என்பதற்காக உன்னுடன் இருக்கும் எல்லாரும் புரிந்து கொண்டார்கள் என்று அர்த்தமல்ல, இங்கு திறக்க முடியாத பூட்டுகள் பல இன்னும் இருக்கின்றன.
நேற்று தேவைப்பட்டார்கள் என்பவர்களை விட, நாளை தேவைப்படுவார்கள்
என்பவர்களுக்கே
இன்று முக்கியத்துவம் அதிகம்.
ஒருவரின் செயல் பிடிக்கவில்லை என்றால், அவர்களைப் பார்த்து கோபப்படுவதை விட
அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்துக் கொள்வதே நல்லது.
மனிதர்கள் கற்றுத்தரும்
பாடத்தை கற்றுக் கொண்டாலே வாழ்க்கையில் தேர்ச்சி அடைந்து விடலாம்.

No comments:

Post a Comment