Saturday 17 February 2024

அறிவைப் பெருக்கிடலாம் .

 அறிவைப் பெருக்கிடலாம் .

உன் வாழ்க்கை
சுமையாக இல்லாமல் இருக்க
நீ சிலரை மறந்து விடு, சிலரை மன்னித்து விடு, சிலரைக் கடந்துவிடு, யாரையும் தூக்கிச் சுமக்காதே, என்றும் சோகமே வாழ்க்கையாகாது,
அதுபோல் என்றும்
சுகமாகவே வாழ்ந்துவிடவும் முடியாது.
சிமிட்டும் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும்.
ஆயிரம் முறை சிந்தியுங்கள்
ஒருமுறை முடிவெடுங்கள்
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு,
முன்னேற துடிப்பதில்
ஆர்வமாய் இரு, முயற்சி செய்வதில் பிடிவாதக்காரனாய் இரு.
கர்வம் கொள்வதில்
கஞ்சனாக இரு, கவலை கொள்வதில் சோம்பேறியாக இரு,
கோபம் கொள்வதில் கருமியாக இரு.
கொஞ்சி பேசுவதில்
வள்ளலாக இரு, எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு, கேட்பவை எல்லாம் கிடைத்து விட்டால் வாழ்க்கையில் ரசனை இருக்காது.
கிடைத்தவை எல்லாம்
நிலைத்து விட்டால்
கேட்பதற்கு எதுவுமே இருக்காது.
ஒன்று நடப்பதைப்
புரிந்தவனாக இருக்க வேண்டும், இல்லையெனில் புரிந்து கொள்பவனாக இருக்க வேண்டும், இந்த இரண்டில் ஒன்றும் இல்லாதவன்
வாழ்வில் வெற்றி பெறுவது கடினம்.

No comments:

Post a Comment