Friday 16 February 2024

மனசாட்சிகள் .

 மனசாட்சிகள் .

_*மேன்மையான விஷயங்களைச் செய்வதால் விளையும்
உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போது வரையறையற்ற விதத்தில் உணர்வுறுநிலை விரிவடையும்.*_
_*அலை பாயும் கண்கள்*_
_*சாதாரணமாய் அடங்குவதில்லை*_
_*பேசிக்கொண்டிருக்கும் வார்த்தைகள்*_
_*சட்டென்று ஊமையாவதில்லை*_
_*தேடிக்கொண்டிருக்கும் மனங்கள்*_
_*தேடலை நிறுத்துவதில்லை*_
_*தொடரும் தேடல்கள் நம்மை*_
_*தொலைக்காமல் விடுவதில்லை*_
_*அடக்கம் இல்லா வாழ்க்கை*_
_*அமைதியைத் தருவதில்லை*_
_*துரத்தும் மனசாட்சிகள் நம்மை*_
_*கொல்லாமல் விடுவதில்லை*_
_*உண்மையில்லாத பொய்கள்*_
_*உறங்க விடுவதில்லை*_
_*கண்ணீரால் நம் பாவங்கள்*_
_*கழுவப் படுவதுமில்லை*_
_*நிமிர்ந்து நேர்மையாய் இருப்பதால்*_
_*புன்னகை பூக்கள்*_
_*பூக்காமலும் போவதில்லை*_

No comments:

Post a Comment